Saturday, October 12, 2013

டெங்குவை குணப்படுத்தும் ஆட்டுப்பால் goat milk is best for dengue

டெங்குவை குணப்படுத்தும் ஆட்டுப்பால்

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

புதுடெல்லி: அண்ணல் காந்தி குடித்ததெல்லாம்… ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க… இது பிரபல தமிழ் சினிமா பாடல் வரி. இந்த வரியை மெய்ப்பிக்கும் வகையில் டெல்லி மக்கள் இப்போது ஆட்டுப்பாலை விரும்பி குடிக்கின்றனர். மருத்துவ குணம் அதிகம் கொண்ட ஆட்டுபாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம் என்கின்றனர் டெல்லிவாசிகள். டெல்லியில் கடந்த ஜூலை மாதம் பருவமழை தொடங்கியது. இதனால் அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. கனமழை பெய்ததால் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. குளம் போல் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியானதால், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கிழக்கு டெல்லி பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி வரை 435 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இப்போது இந்த எண்ணிக்கை 617ஆக உயர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில் மருத்துவ குணம் கொண்ட ஆட்டுப்பால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் டெல்லியில் ஆட்டுப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு லிட்டர் வெள்ளாட்டு பால் 400க்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னர், விலை இருமடங்காகி 800க்கு விற்பனையானது. இப்போது ஒரு லிட்டர் ஆட்டுப்பால் 2500க்கு விற்பனையாகிறது.  அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆட்டுப்பாலுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. இதனால் இறைச்சி கூடங்களுக்கு ஆடுகள் கொண்டு செல்லப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திரிலோக்புரியில் உள்ள சிறுபான்மையினர் மேம்பாட்டு மையத்தின் தன்னார்வலர் சாந்தினி கூறுகையில், 'ஆட்டுப்பாலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மருத்துவ குணம் உள்ளது. இதனால் இந்த பாலை அருந்தும் போது டெங்கு காய்ச்சலை பரவாமல் தடுக்க முடியும். பப்பாளி இலையும் டெங்கு காய்ச்சல் குணமாக்கும்' என்றார். அதே பகுதியை சேர்ந்த தீபக் குமார் கூறியதாவது: 100 மில்லி லிட்டர் ஆட்டுப்பால் 400க்கு விற்பனை செய்யப்படுகிறது. மயூர் விகார் பகுதி&1, பட்பர்கான்ஜ், கணேஷ் நகர் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து போட்டி போட்டுக் கொண்டு மக்கள் ஆட்டுப்பாலை வாங்கி செல்கின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

The post டெங்குவை குணப்படுத்தும் ஆட்டுப்பால் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

மலட்டுத் தன்மையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்! Tamil sex news

மலட்டுத் தன்மையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

by Marikumar

மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம். ஒரு வருடம் முழுவதும் முயன்றும் கர்ப்பம் ஆகவில்லை என்றால் அதனை மலட்டுத் தன்மை என்று சொல்லலாம். அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாகவில்லை என்றால், அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல்லலாம். ஒரு பெண் கரு தரித்தாலும் கூட, அவளால் கருவை சுமக்க முடியவில்லை என்றாலும் அதனை மலட்டுத் தன்மை என கூறலாம்.

மலட்டுத் தன்மை என்றால் பிரச்சனையானது பெண்களிடம் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆண் பெண் என இருவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். இப்பிரச்சனை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஏற்படுகிறது. மற்றொரு பங்கு ஆண்களுக்கு ஏற்படுகிறது. கடைசி பங்கு ஆண் பெண் என இரண்டு பேருக்கும் தெரியாத காரணங்களால் ஏற்படுகிறது. இப்பொழுதெல்லாம் மலட்டுத் தன்மை பிரச்சனை பல பெண்களையும், ஆண்களையும் தாக்குகிறது. அதற்கு காரணம் நாம் வாழும் ஆரோக்கியமற்ற சூழலும், உணவும் என்று கூட சொல்லலாம்.

மலட்டுத் தன்மையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. அதைப் பார்ப்போம்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவசியம். அது கர்ப்பம் தரிக்க சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும். குழந்தை பெற்றெடுக்க திட்டம் போட்டிருந்தால், இது முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி நிதானமாக இருங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மேலும் நல்ல புத்தகங்களை படியுங்கள்.

மலட்டுத் தன்மை பெண்களிடம் இருந்தால், அதனை கண்டுபிடித்து குணப்படுத்துவது சுலபம். அதற்கு காரணம் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட அனைத்து காரணிகளும் பெரும்பாலும் அறியப்பட்டவை தான்.

எதை சாப்பிடுவதில்லை மற்றும் எதனை அதிகம் சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க தொடங்குங்கள். கர்ப்பமாக உதவும் அனைத்து உணவுகளையும் உண்ணுங்கள். மேலும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதே போல் கருவளம் மேம்பட உணவுகளை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு தோராயமாக 15%-18% காரணமாக இருப்பது குழாயில் நோய்கள் இருப்பதால் தான். ஃபாலோபியன் குழலில் ஏற்படும் அடைப்பு தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். அதற்கு சில சோதனைகள் செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதுக்கும் மலட்டுத் தன்மைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. உடல் வலிமை, எதிர்ப்பு சக்தி, தடுப்பாற்றல் மற்றும் ஹார்மோன் அளவுகள் எல்லாம் வாலிப வயதில் உச்சத்தில் இருக்கும். அதனால் இதனை முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உடலின் வலிமையானது வயது ஏற ஏற குறையத் தொடங்கும். அதனால் மலட்டுத் தன்மை சம்பந்தமான சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பிப்பது அவசியம்.

நல்ல தூக்கம் இல்லாமல் போவதற்கும், மலட்டுத் தன்மைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அடிக்கடி பார்ட்டிக்கு சென்று தூக்கத்தை இழப்பவரா? கவனமாக இருங்கள். இரவு வேளை நீண்ட நேரம் கண் விழித்திருந்தால், ஹார்மோன் அளவுகளில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்படும். அதனால் அது மலட்டுத் தன்மையை ஊக்குவிக்கும். போதிய தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் பல உடல்நல கோளாறுகளை சந்திக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவையில் முக்கியமான ஒன்று தான் மலட்டுத் தன்மை. இது மலட்டுத் தன்மைக்கு உறுதுணையாக, உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.

மலட்டுத் தன்மையை நீக்க அதன் காரணத்தை முதலில் கண்டறிந்து, பின் அதற்கான சிகிச்சைகளை முடிவு செய்ய வேண்டும். அதற்காக பல வல்லுனர்களின் அறிவுரையையும் பெற்றுக் கொள்ளலாம்.

பெரும்பாலும் நீக்குதல் வழிமுறையையே வல்லுனர்கள் பின்பற்றுவார்கள். கருமுட்டை வெளிப்படுதல் இயல்பாக உள்ளதா அல்லது நடப்பதே இல்லையா என்பதை கண்டறிவது தான் முதல் நடவடிக்கை. அதனை சோதிக்க கருமுட்டை வெளிப்படுதல் கருவியை கொண்டு உடல் வெப்ப நிலை மற்றும் சினையியக்குநீரின் அளவை பதிவு செய்து, இந்த பிரச்சனையை சோதித்து பார்ப்பார்கள். இது போக பல நிலை அல்ட்ரா ஒலி சோதனையும் நடத்தப்படும்.

ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை கண்டறிந்து, அதனை குணப்படுத்துவது என்பது கஷ்டமான ஒன்றாகும். விந்தணு எண்ணிக்கை, அதன் வீரியம் மற்றும் இதர கூறுகளை கண்டறிய விந்து மாதிரி ஆய்வக கூடத்தில் சோதனை செய்யப்படும். டெஸ்டோஸ்டிரோன் அளவை கண்டறிய ஹார்மோன் அளவுகளும் சோதனை செய்யப்படும். பிறப்புறுப்புகளில் கோளாறு, உடலுறவால் பரவும் வியாதிகள் (எஸ்.டீ.டி), பால்வினை நோய் (வீ.டி), பின்போக்கு விந்துதள்ளல் போன்ற வினையியல் பிரச்சனைகளும் சோதனை செய்யப்படும். இந்த முயற்சிகள் அனைத்தையும் எடுத்து, உங்கள் மனைவியை வெற்றிகரமாக கர்ப்பமாக்கி, உங்கள் குட்டி தேவதைக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்துங்கள்.

கணவன் மனைவி உறவுக்கு இடையே இறுக்கம் ஏற்பட்டாலும் கூட, மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக அது அமையும். அதனால் கணவன் மனைவி இரண்டு பேரும் பரஸ்பர அன்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களுக்குள் சண்டையோ எந்த வித உரசலோ இருக்கக் கூடாது. இந்த நேரத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக ஆதரவாக இருக்க வேண்டும். பொதுவாக பல உடல் வலிகளை அனுபவிக்க போவது மனைவி என்பதால், ஆண்களின் பொறுப்பு தான் கூடுகிறது. மலட்டுத் தன்மைக்காக ஐ.வி.எப். ப்ரெக்நென்சி சிகிச்சை எடுக்கும் போது பல சுற்றுக்கள் நடத்தப்படும். இதனால் பெண்கள் மீது அழுத்தம் போடப்படும்.

மலட்டுத் தன்மைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றால் ஒரு வித எரிச்சல் ஏற்படும். சில நேரம் அது ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாது. இதனால் இது மலட்டுத் தன்மையை பெரும்பாலும் தடுத்து பாதிப்பை ஏற்படுத்தும். மலட்டுத்தன்மை சிகிச்சைக்காக செல்லும் தம்பதிகளில் 10% பேர்களுக்கு மலட்டுத் தன்மைக்கான காரணம் என்னவென்று தெரிவதில்லை. இருப்பினும் மற்ற வியாதிகளை போல் இதையும் குணப்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Share |

Show commentsOpen link

Friday, October 11, 2013

ஜி மெயில் வளர்ந்ததுக்கு காரணங்கள்.... reason for gmail

ஜி மெயில் வளர்ந்ததுக்கு காரணங்கள்..

by Marikumar

மெயில் ஐ.டி இருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் உங்களுடைய அக்கவுன்ட் எதில் இருக்கிறது என்றால் ஜிமெயில் தான் பலருடைய பதிலாக இருக்கும் இது மட்டும் ஏன் மற்ற மெயில்களை விட இவ்வளவு பிரபலம் ஆகியிருக்குன்னு தெரியுமா பாஸ்?

இன்று மற்ற இமெயில் புரோகிராம் களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும் காப்பகம் ஆகும்.

இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. தனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.

ஜிமெயிலின் ஒரு சிறந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் (கொடவுண், கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெயிலைப் பயன் படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும்.

இந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மெயில்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கும் என்பதல்ல. அவற்றை அது விடவே விடாது; என்றும் விட்டு விடாது என்று எண்ண வேண்டாம். விவரங்களுக்கு மேலே படியுங்கள்.

இந்த ஆர்க்கிவ் பட்டனை உங்கள் ஜிமெயிலின் இன்பாக்ஸ் தோற்றத்தில் காணலாம். இதில் கிளிக் செய்தால் அது அப்போது கர்சர் உள்ள இமெயில் செய்தியை இன்பாக்ஸிலிருந்து எடுத்துவிடுகிறது.

அப்புறம் என்ன செய்கிறது? ஏன் எடுக்கிறது? இது உங்கள் இமெயில்களை ஒரு ஒழுங்கு செய்திடும் வேலை தான். நீங்கள் ஆச்சரியப் படலாம். இன்பாக்ஸிலிருந்து எடுக்கப்பட்ட இமெயில் எங்கு செல்கிறது என்று பார்க்க விரும்பலாம்.ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இது நீங்கள் அந்த இமெயில் செய்திக்கு ஏதேனும் லேபிள் பெயர் தந்திருக் கிறீர்களா என்பதைப் பொறுத்து உள்ளது. நீங்கள் அதற்கு லேபிள் கொடுத்திருந்தால் அது அந்த லேபிளுக்கான பாக்ஸிற்குச் செல்கிறது. இதனை ஆல் மெயில் பிரிவிலும் (All Mail) பார்க்கலாம்.

இதனைக் கொஞ்சம் இன்னும் பின்னோக்கிச் சென்று விளக்கமாகப் பார்க்கலாம். உங்கள் ஜிமெயிலுக்கு ஒரு இமெயில் செய்தி வந்தவுடன் அது தானாகவே இன்பாக்ஸ் லேபிலை வாங்கி கொண்டு இன்பாக்ஸ் பிரிவில் வைக்கப்படுகிறது. இதனுடைய லேபிளை மாற்றாதவரை அது வேறு எந்த பிரிவிற்கும் மாற்றப்படுவதில்லை.

இதற்கு ஒரு லேபிள் தராமல் ஆர்க்கிவ் பட்டன் அழுத்தி ஆர்க்கிவ் பிரிவிற்கு அனுப்பினால் ஆல் மெயில் வியூவில் மெசேஜிற்கு அடுத்தபடியாக "Inbox" என்று இருப்பதைக் காணலாம். இது எதற்காக என்றால் உங்களின் அனைத்து மெயில்களையும் நீங்கள் அவை எங்கிருந்து வந்தவை என்று பார்ப்பதற்காக. அதே நேரத்தில் அவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படுகின்றன.

இதனை இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாட்டினைச் சோதித்துப் பார்க்கவும் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன் பாக்ஸ் சென்று ஏதேனும் ஒரு இமெயில் மெசேஜைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு லேபில் கொடுக்கவும். ஆனால் ஆர்க்கிவ் செய்திட வேண்டாம்.

இனி நீங்கள் கொடுத்த லேபில் வியூ சென்று அங்கு உள்ள பட்டியலில் இந்த இமெயில் செய்தி இடம் பெற்றிருப்பதனைக் காணுங்கள். இங்கு நீங்கள் கொடுத்த லேபிலும் முதலிலேயே அதற்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபிலும் காட்டப்படுவதனைக் காணலாம். இவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படும்.

இப்போது மீண்டும் இன் பாக்ஸ் சென்று இன்னொரு மெசேஜைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதற்கு ஒரு லேபில் அமைத்து ஆர்க்கிவ் பட்டனையும் அழுத்தி ஆர்க்கிவ் செய்திடுங்கள். அடுத்து லேபில் வியூவில் சென்று பார்த்தால் நீங்கள் அதற்குக் கொடுத்த லேபில் இருக்கும். ஆனால் இன்பாக்ஸ் லேபில் இருக்காது.

ஒரு மெசேஜை ஆர்க்கிவ் செய்திடுகையில் அந்த இமெயில் செய்திக்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபில் நீக்கப்படுகிறது.இதனால் இந்த இமெயில் மெசேஜ் இன்பாக்ஸில் தொடர்ந்து காட்டப்பட மாட்டாது. நீங்கள் தான் அதனை கொடவுணில் போட்டுவிட்டீர்களே. அப்படியானால் ஆர்க்கிவ் செய்ததை மீண்டும் மீட்டு இன்பாக்ஸ் கொண்டு வர முடியாதா? கொண்டு வந்து அதற்கு வேறு ஒரு லேபில் வழங்க முடியாதா? என்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. தாராளமாகக் கொண்டு வரலாம். ஆர்க்கிவ் சென்று மீட்க விரும்பும் மெசேஜில் கர்சரைக் கொண்டு செல்லவும்.

அங்கு More Actions என்று ஒரு லிங்க் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உள்ள Move to Inbox என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் அந்த மெசேஜிற்குச் செய்ததெல்லாம் மீண்டும் ரிவர்ஸ் ஆகி அந்த மெசேஜ் இன்பாக்ஸிற்குச் சென்றுவிடும். ஆர்க்கிவ் பட்டன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட சில இமெயில்களை எடுத்துச் சென்று தனியே பிரித்து வைக்க முடிகிறது. முயற்சி செய்து பார்த்தால் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.
Share |

Show commentsOpen link

Thursday, October 10, 2013

கமல்ஹாசன்- kamala hasan special report

கமல்ஹாசன்- கடவுளா?? மிருகமா???

by thenuraj
New Tamil

இந்திய சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்ற ஒரு நடிகருக்கு தவிர்க்க முடியாத இடம் ஒன்று உள்ளது. தமிழ் ரசிகனின் ரசனையை வேறு தளத்துக்கு எடுத்து சென்றதில், சென்றுகொண்டு இருபதில் கமல் மாதிரி ஒரு கலைஞனை இது வரை நான் கண்டது இல்லை. SMS படத்துல சந்தானம் சொல்லற மாதிரி "நல்லவங்க கருத்து ரீச் ஆகும், ஆனா என்ன கொஞ்சம் லேட்டா ரீச் ஆகும்"..... கமல் படம் கண்டிப்பா மக்களை ரீச் ஆகும், என்ன ரொம்ப ரொம்ப லேட்டா KTV முலமா ரீச் ஆகும். அன்பே சிவம், குணா போன்ற படங்களை லேட் ரீச்க்கு நல்ல உதாரணமாக சொல்லாம்.

KTVயில ஓடுன நாட்கள் கூட இந்த படங்கள் தியேட்டரில் ஓடவில்லை. ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல நல்ல திரைப்படங்கள் தர வேண்டும் என்ற எண்ணத்தை கமல் ஒருபொழுதும் மாற்றி கொண்டதே இல்லை. சினிமாவில் சம்பாரித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்யும் சில மனிதர்களில் கமலும் ஒருவர். கமல் அளவுக்கு எந்த நடிகருக்கும் படங்கள் ப்ளாப் ஆனது கிடையாது. மாபெரும் பொருட்செலவில் கமல் எடுத்த சில படங்கள் அதள பாதாளத்தில் விழுந்து உள்ளன உ.தா: ஆளவந்தான். சில படங்கள் வெறும் ரெண்டே நாள் மட்டும் ஓடி வரலாற்று சாதனை புரிந்து உள்ளன. உ.தா: மும்பை எக்ஸ்பிரஸ்.இப்படியாக நிறைய நல்ல/கெட்ட விஷயங்கள் கமலை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.


கமல் செய்யாத சாதனைகளே கிடையாது. சில சாதனைகள் இதோ:

• நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். களத்தூர் கண்ணம்மா, மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படங்களுக்காக தேசிய விருது பெற்றார். விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் விருதுகள் சிறந்த படத்திற்கான விருதுகள் தரப்பட்டது.

• இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.- இந்திய சினிமா வரலாற்றிலேயே 18 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே நடிகர். திலீப் குமாரே 14 பிலிம்பேர் விருதுகள் தான் வாங்கியிருக்கிறார்.

• இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

• கமல்ஹாசன் இந்தியாவில் குடிமகன்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே 4வது சிறந்த விருதான பத்மஸ்ரீ பெற்றிருக்கிறார்.

• கமல்ஹாசனுக்கு அவர் செய்யும் கலைசேவைகளுக்காக சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் "டாக்டர்" பட்டம் கையளிக்கப் பட்டது.

• கமல்ஹாசனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இதுவரை 450 மில்லியனுக்கும் மேற்பட்ட வர்த்தகம் செய்திருக்கிறது.தான் சினிமாவில் சம்பாத்திதை சினிமாவிலே முதலீடு செய்யும் ஒரு சிலரில் கமலும் ஒருவர்.

• இரண்டுமுறை ஆந்திர அரசின் மாநில விருதைப் பெற்றவர் டாக்டர் கமல்ஹாசன்.

• 8 முறை தமிழக அரசின் மாநில விருதைப் பெற்று சாதனை புரிந்தவர் கமல்ஹாசன்.

• கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கலைமாமணி பட்டமும் வழங்கி கவுரவித்திருக்கிறது.

• சென்னை ரோட்டரி சங்கமும் கமல்ஹாசனுக்கு "சிறந்த மனிதர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

இவ்வளவு சாதனைகள் நிகழ்த்திய பிறகும், இத்தனை விருதுகள் வாங்கி குவித்த பிறகும் இணையத்தில் கமல் மீது நிறைய குற்றச்சாற்று வைக்க படுவதை பார்கிறேன். அவர் பாமர ரசிகனுக்கு புரியாத மாதிரி படம் எடுக்கிறார் என்பது முதல் குற்றச்சாற்று. ஹே ராம்: புரியாத படத்திற்கு நல்ல உதாரணம். அப்புறம் ஆங்கில படங்களில் இருந்து காப்பி அடிக்கிறார் என்று. கமல் காப்பி அடிப்பதை எப்பொழுதும் மறுத்ததும் கிடையாது, அதை ஆமோதித்ததும் கிடையாது. அவர் காப்பி அடித்தது/தழுவி எடுத்த என்று சொல்லப்படுகிற சில படங்களை பற்றி கீழே குடுத்து உள்ளேன். கமல் தன் கலை பயணத்தில் ஆங்கில படங்களை தழுவி தமிழில் எடுத்த படங்கள் இதோ:

Witness (1985) : Indiana Jones புகழ் ஹாரிசன் ஃபோர்டு நடித்த இந்த படத்தில் ஒரு கொலை நடந்து விடும், அந்த கொலைக்கு சாட்சி 8 வயது சிறுவன். ஹீரோ ஃபோர்டு போலீஸ் அதிகாரி. சிறுவனின் சாட்சியை வைத்து ஃபோர்டு கொலையாளியை பிடிப்பது தான் படத்தின் கதை. படம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

இதே போன்ற ப்ளாட் கொண்ட படம் சூரசம்ஹாரம். கமல் இதில் போலீஸ் ஆக நடித்து இருப்பார். நிழல்கள் ரவியின் கொலையை நேரில் பார்த்த சாட்சி ஒரு சிறுவன். அந்த சிறுவனின் உதவியால் கமல் கொலைகாரர்களை பிடிக்கும் படி கதை அமைக்க பட்டு இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த கமல் படங்களில் இதுவும் ஒன்று. வெளியான ஆண்டு 1988.

She-Devil (1989) : குண்டாய் இருக்கும் மாணவி, வழி தவறி வேறு ஒரு பெண்ணின் பின்னல் போகும் தன் கணவனை பழிக்கு பழி வாங்குவது தான் கதை.

சதிலீலாவதி She-Devil-ளின் தழுவல் என்று சொல்லலாம். இந்த படத்தில் கமலின் ஆஸ்தான செகண்ட் ஹீரோ ரமேஷ் அரவிந்த் நடித்து இருப்பார். குண்டாய் இருக்கும் கதாநாயகி கல்பனா, வழி தவறி போகும் தன் கணவனை தன் வழிக்கு கொண்டு வருவது தான் சதிலீலாவதி. கமல் இதில் கோவை சரளாவுடன் நடித்து புரட்சி செய்து இருப்பார். படம் வெளியான ஆண்டு 1995.

The Bachelor (1999): ஹீரோ கல்யாணமே வேண்டாம் என்று இருக்கும் ஒரு பிரம்மச்சாரி, தன் தாத்தாவின் $100 மில்லியன் சொத்தை அடைய வேண்டும் என்றால் தனது 30 ஆவது பிறந்தநாளில் மாலை 6:05 மணிக்குள் திருமணம் செய்து இருக்க வேண்டும். ஹீரோவின் 30 ஆவது பிறந்த நாள் நாளை மறுநாள். ஹீரோவிடம் இருப்பதோ ஒரே நாள், இந்த ஒரு நாளில் அவன் தன் முன்னாள் காதலியை கை பிடித்தானா என்பதை மிகவும் நகைச்சுவை உடன் சொன்ன படம் தான் The Bachelor.

இதே போன்ற கதை அமைப்பு கொண்ட படம் "பம்மல் கே. சம்பந்தம்-(2002). தன் தாத்தாவின் மேன்ஷன் கமலுக்கு வர வேண்டும் என்றால் குறிபிட்ட நேரத்துக்குள் கமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இந்த கான்செப்ட்-ஐ மட்டும் எடுத்து கொண்டு கமல் குடுத்த படம் தான் பம்மல் கே. மௌலி இதை டைரக்ட் செய்து இருப்பார்.

Nine to Five (1980) : முன்று கதாநாயகிகள் சப்ஜெக்ட். அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் மேனேஜர் ஒரு சபலிஸ்ட். தனக்கு கீழே வேலை செய்யும் பெண் ஊழியர்கள்யிடம் தவறாக நடக்க முயற்சி செய்பவன். தனக்கு ஒத்துழைப்பு அளிக்காத பெண் ஊழியர்களை காரணமே இல்லாமல் வேலையை விட்டு நீக்கி விடுவான். முன்று கதாநாயகிகள் ஒன்று சேர்ந்து சபலிஸ்ட் மேனேஜர் குடுக்கும் செக்ஷுவல் தொல்லைகளில் இருந்து தப்பித்து தங்கள் அலுவலகத்தில் உள்ள மற்ற பெண்களையும் எப்படி காப்ற்றுகிறார்கள் என்பதை மிகவும் நகைச்சுவை உடன் சொன்ன படம் தான் Nine to Five.

இதே கதையை கொண்டு கமல் தயாரித்த படம் தான் "மகளிர் மட்டும்". ரேவதி, ஊர்வசி, மற்றும் ரோகினி கதாநாயகிகளாக நடித்த இந்த படத்தில் நாசர் சபலிஸ்ட் மேனேஜர் ஆக நடித்து இருப்பார். கமல் கெஸ்ட் ரோல் வேறு செய்து இருப்பார். படம் வெளி வந்த ஆண்டு 1994.


Show commentsOpen link

Wednesday, October 9, 2013

மரணமடைவது எப்போது என்பதை எதிர்வுகூறும் கைக்கடிகாரம் special watch

மரணமடைவது எப்போது என்பதை எதிர்வுகூறும் கைக்கடிகாரம்

by Marikumar

ஒருவர் எப்­போது மர­ண­ம­டைவார் என்­பதை அவர் மர­ண­ம­டையும் நேரத்­திற்கு நெருங்­கிய செக்கன் வரை எதிர்வு கூறக்­கூ­டிய கைக்­க­டி­கா­ர­மொன்றை சுவீடன் நாட்டு கண்­டு­பி­டிப்­பாளர் ஒருவர் உரு­வாக்­கி­யுள்ளார்.

பிரெடிக் கொல்டிங் என்­ப­வரால் கண்­டு ­பிடிக்­கப்­பட்­டுள்ள இந்த கைக்­க­டி­காரம் 'மரண கைக்­க­டி­காரம்' என அழைக்­கப்­ப­டு­கின்­றது.

இந்தக் கைக்­க­டி­காரம் மர­ண­ம­டையப் போகும் நேரத்தை கணித்­துக்­ கூ­று­வது மட்­டு­மல்­லாது மர­ண­மாகும் கணத்தை எண்­ணவும் ஆரம்­பிக்­கி­றது.

மேற்­படி கைக்கடி­காரம் அதனை அணிந்­துள்­ள­வரின் வயது, மருத்­துவ பிரச்­சி­னைகள் மற்றும் புகைப்­பி­டித்தல் பழக்­கங்கள் என்­பன தொடர்­பானஒரு தொகை கேள்­வி­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

அந்தக் கேள்­விகள் அனைத்­துக்கும் பயன்­பாட்­டாளர் பதி­ல­ளித்­ததும் அது அத்­த­க­வல்­களை பகுப்­பாய்வு செய்து அவர் மர­ண­ம­டையும் தரு­ணத்தை கணக்­கிட்டு எண்ண ஆரம்­பிக்­கி­றது.

இந்த ரிக்கர் கைக்­க­டி­கா­ரத்தின் விலை 59 அமெ­ரிக்க டொல­ராகும்.

இந்த கைக்­க­டி­கா­ர­மா­னது எஞ்சியுள்ள வாழ்வின் அளவை அறிந்து அதனை பயனுள்ளதாக வாழ பயன்பாட் டாளர்களுக்கு உதவும் என பிரெடிக் கூறுகிறார்.
Share |

Show commentsOpen link

தினம் ஒரு தகவல்:ஆண்மையும், மாரடைப்பும்… daily news about heart attack

தினம் ஒரு தகவல்:ஆண்மையும், மாரடைப்பும்…

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

ஒரு ஆணுக்கு ஆண்மையை கொடுக்கும் ஹார்மோன் டெஸ்ட்ரோஜன். அவனுக்கு உடல் வலிமையையும் அதுதான் கொடுக்கிறது. மிகுந்த உடல் வலிமை, நீண்ட காலம் வரை இனப்பெருக்கம் செய்யும் திறன் ஆகியவை ஆண்களுக்கு கிடைத்த பலம். பெண்களுக்கு அவை இல்லை.

ஆனால் குறைந்த ஆயுள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவை ஆண்களின் 2 பெரிய பலவீனங்கள். டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் ஆணுக்கு உடல் வலிமையை கொடுக்கும் அதே நேரம் இருதயத்துக்கு வந்து செல்லும் அனைத்து ரத்தக்குழாய்களிலும் அடைப்பை ஏற்படுத்தும் ஒரு பொருளை உருவாக்கி விடுகிறது.

எச்.டி.எல். என்ற அதிக திறனுடைய லிப்போ புரதம், கொழுப்பு பொருட்களை கட்டுப்படுத்தி ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரி செய்து கல்லீரலையும் நல்ல நிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

மனித ரத்தத்தில் இந்த லிப்போ புரதத்தை உண்டாக்க உதவும் ஒரு தூண்டு சக்தி டெஸ்ட்ரோஜனுக்கு இல்லை. மாறாக இந்த தூண்டும் திறன் பெண்களுக்கு பெண்மையைத்தரும் ஈஸ்ட்ரோஜனுக்கு உண்டு. இதனால்தான் மாரடைப்பு என்ற பேரிழப்பு ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதிக ரத்த அழுத்தமும், கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பும் பெண்களுக்கு மிகவும் குறைவு.

உடல் வலிமை என்பதும் எதிர்ப்பு சக்தி என்பதும் வேறுபட்டவை. வலிமை என்பது ஆண்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெண்களுக்கும் இயற்கையாகவே அமைந்த வரப்பிரசாதம்.

தற்போது உடல் உழைப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் கொழுப்பு சக்தி அதிகமாக உடலில் சேர்ந்து மாரடைப்பு வருவதற்காக வாய்ப்பை அதிகரிக்கிறது.

மாரடைப்பு வரும் வாய்ப்பு இயற்கையாகவே ஆண்களுக்கு அதிகம் இருப்பதால்தான், நாள்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அத்துடன் காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. இது மாரடைப்பில் இருந்து ஓரளவு நம்மைக் காப்பாற்றும்.

The post தினம் ஒரு தகவல்:ஆண்மையும், மாரடைப்பும்… appeared first on   is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

சொர்க்கம் என்பது.... sorkkam tamil kavithai

சொர்க்கம் என்பது....
By kavitha

சொர்க்கம்
என்பது
தூரம்
என நினைத்தேன்
அது
தவறாய்ப்
போனது
நீ
என்னருகில்
இருப்பதால்.....!!
Show commentsOpen link

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இனி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு செய்யலாம் Indians abroad can too file under RTI act

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இனி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு செய்யலாம் Indians abroad can too file under RTI act

Tamil NewsToday, 20:40

புதுடெல்லி, அக்.10-

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்த இந்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை பெற சிக்கல் நீடித்து வந்தது.

விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்துவதிலும் தெளிவான நடைமுறை நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை. இந்த முறையை நிவர்த்தி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது முன்வந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 176 இந்திய உயர் தூதரகங்களின் மூலம் எலக்ட்ரானிக் இண்டியன் போஸ்டல் எனப்படும் மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக தகவலுக்கான கட்டணத்தை செலுத்தி மனுதாரர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு இனி விண்ணப்பிக்கலாம்.

இதற்கென உருவாக்கப்பட்டுள்ள www.epostoffice.gov.in அல்லது www.indiapost.gov.in என்ற இணைய தளங்களில் மனுதாரர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதுமானது என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
...
Show commentsOpen link

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன ! Cancer news

உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் தான் – குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன !!
by admin
ekuruvi.com is Tamil news, Tamil culture, செய்திகள் ...Today, 08:35

உடல் உறுப்புகள் அனைத்தையும் சீரழிக்கும் தன்மை புற்றுநோய்க்கு உண்டு என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர் டாக்டர் ராஜா. புற்றுநோய் அறிகுறிகள், அவற்றின் தன்மை குறித்து இதோ அவரே விளக்குகிறார்… புற்றுநோயின் பாதிப்பு வயிறு, தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்… என அனைத்து உறுப்பிலும் ஏற்படும். இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் சொல்லாம்.

அவை புற்றுநோய் பாதிக்கும் உறுப்பை பொறுத்து அமையும். குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கம். இது மட்டுமே காரணி என்று சொல்ல முடியாது. மரபணு, பரம்பரை… என பல அம்சங்கள் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்களாய் இருக்கின்றன. பொதுவாவே புற்றுநோய் பாதிப்பை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருந்து மாத்திரைகள் கொண்டே குணப்படுத்த முடியும்.

ஆனால் நோய் முற்றிய நிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும் போது குணப்படுத்தும் சாத்தியம் மிகவும் குறைவு. காரணம் குடல் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். ஆனால் இந்த பிரச்னை மிகவும் சாதாரணமானது. வயிற்று பிரச்னை இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால், டாக்டரின் ஆலோசனை பெற தவறிவிடுகிறார்கள். காலம் கடந்த பிறகு புற்றுநோய் கண்டறிந்தால், அந்த கட்டத்தில் மருந்து மாத்திரையில் இதனை கட்டுப்படுத்த முடியாது.

அறுவை சிகிச்சை ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி மூலம் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். குடல் புற்றுநோய் பொதுவான பெயர் என்றாலும் அவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எல்லாருக்கும் அவரவர் உடல் நிலை, மரபணுக்கு ஏற்ப நோய் கிருமிகள் மாறுபடும். இருப்பினும் தற்போது மருந்து மாத்திரை, ரேடியேஷன், கீமோதெரபி என ஒரே மாதிரியான சிகிச்சை முறைகளை கடைப்பிடித்து வருகிறோம்.

அதே சமயம் நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் மற்றும் சிகிச்சை முறையில் சில மாற்றங்கள் ஏற்படுமே தவிர ஒவ்வொருவருக்கும் தனித்தனி மாத்திரைகளை கொடுக்க முடியாது. ஆனால் இன்னும் பத்தாண்டுகளில் மருத்துவ துறையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.புற்றுநோயை ஆரம்ப காலத்தில் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான விஷயம்.

அதற்கு காரணம் நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றை நாம் அலட்சியப்படுத்து விடுகிறோம். நோய் கிருமிகள் உடலில் பரவிய பிறகு டாக்டரின் உதவியை நாடி செல்கிறோம். குடல் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். மலம் கழிக்கும் போது ரத்தப்போக்கு இருக்கும். மலச்சிக்கல், மலம் கழிக்கும் போது வலி, திடீரென்று உடல் எடை குறைதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம்.  இவ்வாறு அவர் கூறினார்.

The post உங்கள் உடல் நலம் உங்கள் கைகளில் தான் – குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Tuesday, October 8, 2013

மெல்ல மெல்ல உயிர் குடிக்கும் உயிர் கொல்லி smoking is very dangarous

மெல்ல மெல்ல உயிர் குடிக்கும் உயிர் கொல்லி

by Marikumar

புகைத்­த­லினால் 8 விநாடிக்கு ஒருவர் இறக்­கிறார். உலகில் 10 இல் ஒரு­வ­ரது வாழ்க்கை முடிய புகை­யி­லையே காரணம். உலக அளவில் புகை­யி­லையின் விற்­பனை ஒரு நிமி­டத்­திற்கு ஒரு கோடிக்கும் அதிகம். தின­சரி விற்­பனை 1500 கோடி­யாகும்

மனி­த­ராகப் பிறந்த ஒவ்­வொ­ரு­வருனுக்கும் இறப்பு என்­பது நிச்­சயம் வந்தே தீரும். அதனை அனை­வரும் சந்­தித்தே ஆக­வேண்டும். இதுவே உலக நியதி. எனினும் பலர் வீணாக தமது உயிரை மாய்த்­துக்­கொள்­கின்­றனர். புகைப்­பி­டிக்கும் பழக்­கத்­திற்கு அடி­மை­யா­கி­விடும் ஒரு­வரும் கூட அணு­வ­ணு­வாக தனது உயிரை இவ்­வாறே மாய்த்­துக்­கொள்­கிறார். இதுவும் ஒரு வகையில் தற்­கொலை என்று தான் கூற­வேண்டும்.

இலங்­கையில் புகைத்தல் கார­ண­மாக ஒரு நாளில் மட்டும் 54 பேர் மர­ண­ம­டை­வ­தாக சுகா­தார அமைச்­சினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வு ஒன்று குறிப்­பி­டு­கின்­றது. மேலும் வருடம் ஒன்­றிற்கு 20 ஆயிரம் பேர் வரை­யானோர் உயி­ரி­ழப்­பதா­கவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. புகைத்­த­லுக்­காக நாள் ஒன்­றுக்கு 210 மில்­லியன் ரூபா செல­வி­டப்படுகிறது. அதே­வேளை புகைத்­த­லினால் ஏற்­படும் நோய்­க­ளுக்கு வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளுக்­காக 12,000 மில்­லியன் ரூபா செல­வி­டப்­ப­டு­கி­றது. இவ்­வ­ளவு பெருந்தொ­கை­யான பணத்­தினை பாழாக்கி மர­ணத்தை கொள்­வ­னவு செய்ய வேண்­டுமா? என்ற கேள்வி சமூ­கத்தில் எழு­கி­றது.

நோயற்ற ஆரோக்­கியமான சமூ­கத்தை உரு­வாக்­க புகை­யிலை மற்றும் அது சார்ந்த பொருட்­களில் சிக்கித் தவிக்கும் சமூ­கத்தை எச்­ச­ரித்து துரத்­தி­ய­டிக்க வேண்டும். அதற்­காக ஆரோக்­கிய வாழ்வை விரும்பும் ஒவ்­வொரு மனி­தனும் தமது பங்­க­ளிப்பை வழங்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.

புகை­யிலை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டிய ஒன்று என்­பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடி­யாது. அதனால் ஏற்­படும் விளை­வு­க­ளையும், பாதிப்­பு­க­ளையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புகை­யி­லை­யையும், அது­சார்ந்த பொருட்­க­ளையும் தடை செய்­தி­ருக்­கின்­றன. அத்­தோடு பொது இடங்­களில் புகை பிடிப்­ப­தையும் தடை செய்­தி­ருக்­கின்­றன.

உலகம் முழு­வ­திலும் உள்ள பல நாடு­களில் பொது இடங்­களில் புகை பிடித்தல் தடை செய்­யப்­பட்­டுள்­ளமை சட்­ட­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. மீறிப் பொது இடங்­களில் புகை பிடிப்­போ­ருக்கு தண்­ட­னை­களும் அப­ரா­தங்­களும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

அயர்­லாந்தில் மூவா­யிரம் யூரோ அப­ரா­தமும், ஸம்­பி­யாவில் இரண்டு ஆண்­டுகள் சிறைத் தண்­ட­னையும், இஸ்­ரேலில் 1400 டொலர் அப­ரா­தமும் விதிக்­கப்­ப­டு­கின்­றன.

மேலும் இந்­தி­யாவில் 5 வரு­டங்­க­ளுக்கு முன்னர் பொது இடங்­களில் புகை பிடிக்கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 2010 ஆம் ஆண்டு முதல் இலங்­கை­யிலும் இத்­தடைச் சட்டம் அமுலில் இருந்து வரு­கின்­றது. மேலும் சட்­டத்தை மீறு­வோ­ருக்கு தண்­ட­னை­களும் அப­ரா­தங்­களும் விதிக்­கப்­பட்டும் வரு­கின்­ற­ன. எனினும் இம் முறைமை எவ்­வ­ளவு தூரம் மக்­களால் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது என்­பதும் , மீறு­வோ­ருக்­கான தகுந்த தண்­ட­னை­களும் அப­ரா­தங்­களும் விதிக்­கப்­ப­டு­கின்­றன என்­பதும் கேள்­வியே!

ஆண்டு தோறும் மே 31 அன்று சர்­வ­தேச புகை­யிலை எதிர்ப்பு தினம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

புகை­யிலைப் பொருட்­களில் அடங்­கி­யுள்ள நச்­சுப்­பொ­ருட்கள் நிக்­கோட்டின், எத்தனோல், நெப்­தி­லோமின் ஹைட்­ரஜன் சயனைட், பைரி, கார்பன் மோனாக்­ஸைடு, அமோ­னியா, கேட்­மியம், பெரோ­னியம், வினைல் குளொரைட் தார், கரி­ய­மில வாயு உள்­ளிட்ட பல இர­சா­ய­னப்­பொ­ருட்கள் சிக­ரெட்டில் அடங்­கி­யுள்­ளன. இவை அனைத்தும் மனி­தனின் உடல் ஆரோக்­கி­யத்தை அசைத்துப் பார்க்கக் கூடிய ஏன் அவன் உயி­ரையே பறிக்கக் கூடிய நச்­சுப்­பொ­ருட்­க­ளாகும்.

பல அதிர்ச்­சி­க­ர­மான

புள்­ளி­வி­ப­ரங்கள்:

நானூறு ஆண்­டு­க­ளுக்கு முன் போர்த்­துக்­கீ­ஸரால் இந்­தி­யாவில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட புகை­யி­லையின் கோரப்­பி­டியில் 11 கோடி இந்­தி­யர்கள் சிக்கித் தவிக்­கின்­றார்கள்.

ஆண்டு தோறும் புகைத்­த­லினால் சாம்­ப­ரா­கு­வோரின் எண்­ணிக்கை 10 ஆயிரம் கோடியைத் தாண்டி விட்­டது.

சிகரெட் மனி­தனைச் சாம்­ப­ராக்­கு­கிற கொள்­ளிக்­கட்டை என்­பது தெளி­வாகத் தெரிந்­தி­ருந்தும் தங்­களின் வாழ்­வையும், பணத்­தையும், உடல் ஆரேக்­கி­யத்­தையும் இழந்து வரு­கி­றார்கள் சிகரெட் பிரி­யர்கள். .

உலக சுகா­தார அமைப்பு உலகில் உள்ள ஆண்­களில் மூன்றில் ஒரு பங்­கி­ன­ருக்கு புகை­பி­டிக்கும் பழக்கம் இருக்­கி­றது என்றும் , இரு­பதாம் நூற்­றாண்டில் இந்த புகை­யிலை பத்து கோடி பேரின் உயிரைப் பறித்­தி­ருக்­கி­றது என்றும் இரு­பத்தோராம் நூற்­றாண்டில் நூறு கோடி பேரின் உயிரை பறிக்க இருக்­கி­றது என்ற தக­வ­லையும் தந்து நம் எல்­லோ­ரையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கு­கி­றது.

ஆண்டு தோறும் 90 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மானோர் மார­டைப்­பினால் இறக்­கின்­றனர். அவர்­களில் அதி­க­மானோர் புகை ­பி­டிப்­ப­தனால் இறக்­கின்­றனர் என்­கி­றது இன்­னொரு அதிர்ச்சித் தகவல்.

புகைத்­த­லினால் 8 விநாடிக்கு ஒருவர் இறக்­கிறார்.

உலகில் 10 இல் ஒரு­வ­ரது வாழ்க்கை முடிய புகை­யி­லையே காரணம்.

உலக அளவில் புகை­யி­லையின் விற்­பனை ஒரு நிமி­டத்­திற்கு ஒரு கோடிக்கும் அதிகம். தின­சரி விற்­பனை 1500 கோடி­யாகும்.

புகை­யிலைப் பொருட்­க­ளினால்

ஏற்­படும் அபா­ய­க­ர­மான

விளை­வு­களும் பாதிப்­பு­க்களும்

புகைப்­பி­டிப்­ப­வர்­க­ளுக்கு ஏற்­படும் நோய்­களில் மிக முக்­கி­ய­மா­னவை மார­டைப்பு, காசநோய், ஆஸ்­துமா, புற்­றுநோய், முடி உதிர்தல், கண் பார்வைக் கோளாறு, தோலில் சுருக்கம் விழுந்து முதிய தோற்றம் ஏற்­ப­டுதல், தோல் புற்று நோய், காது கேளாமை, பல் சொத்தை, நெஞ்சில் சளி, எலும்பு முறிவு நோய், இதயக் கோளாறு, வயிற்­றுப்புண், விரல்­களில் நிறம் மாறுதல், சோரி­யாஸிஸ் என்னும் தோல் நோய், ஆணாக இருப்பின் விந்­த­ணுக்கள் குறைந்து குழந்தைப் பேற்­றின்மை, பெண்­ணாக இருப்பின் மலட்டுத் தன்மை கர்ப்­பப்பை புற்று நோய், போன்ற பல ஆபத்­தான நோய்கள் ஏற்­ப­டு­வ­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

வீண்-­ வி­ரயம்:

28 ரூபா பணத்­தைக்­கொண்டு எந்த விதத்­திலும் நன்­மை­ய­ளிக்­காத, தீமையைத் தரக் கூடிய சிக­ரெட்டொன்றை வாங்கி ஊதித் தள்­ளு­வ­தென்­பது வீண் விரயச் செல­வாகும்.

ஒரு சிக­ரெட்டின் விலை 28 ரூபா­வாயின் ஒருவன் சரா­ச­ரி­யாகக் குறைந்­தது ஒரு நாளைக்கு 5 சிகரெட் புகைப்­ப­தாக இருந்தால்..

ஒரு நாளைக்கு - 140 ரூபா

ஒரு வாரத்­துக்கு - 980 ரூபா

ஒரு மாதத்­திற்கு - 4,200 ரூபா

ஒரு வரு­டத்­திற்கு - 50,400 ரூபா

பத்து வரு­டங்­க­ளுக்கு - 504,000 ரூபா

இவ்­வா­றான வீண் விர­யங்­களைத் தவிர்ப்­ப­தனால் குடும்­பஸ்தர் ஒருவர் தனது பிள்­ளை­க­ளுக்கு நல்­ல­தொரு கல்­வியை வழங்கி அத­னூ­டாக அவர்­க­ளுக்கு சிறந்த எதிர்­கா­லத்தை வழங்­க­மு­டி­யு­மல்­லவா?

சிகரெட் புகைப்­பவர் விடும் புகை­யினால் அவர் பாதிப்­ப­டை­வ­துடன் அவரைச் சூழ­­வுள்­ள­வர்­களும் பாதிப்­பிற்­குள்­ளா­கின்­றனர். இதனால் சம்­பந்­தப்­பட்­டவர் பாதிக்­கப்­ப­டு­வதை விட அவர் விடும் புகையை சுவா­சிப்­பவர் அதிகம் பாதிக்­கப்­ப­டு­கிறார் என்று மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

நவீன மனிதன் ஆரோக்­கி­யத்தில் அலட்­சியம் காட்­டு­கிறான். அவ­னுக்கு எவ்­வ­ளவோ அருட்­கொ­டைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றில் ஒன்று உடல் நலம். உடல் நலத்தில் மனி­தர்­களில் பெரும்­பா­லானோர் அலட்­சி­ய­மா­கவே இருக்­கின்­றனர். உடல் நலத்தைப் பேணாமல் நோய்த்­தாக்­கத்­திற்கு உள்­ளா­னதன் பின்னர் அவற்­றி­லி­ருந்து குணம் பெற பற்­பல மருத்­துவ சிகிச்சைக­ளையும் அதற்­கான .முயற்­சி­க­ளையும் நாடி மருத்­து­வர்­க­ளிடம் விரை­கின்­றனர்.

புகை பிடிக்க வேண்டும் என்று தோன்றும் போது கோது­மையை வாயில் போட்டு மெல்­லலாம், அல்­லது சூரிய காந்தி விதை­களை மெல்­லலாம், அல்­லது சூயிங்கம் போன்ற மாற்று ஏற்­பா­டு­களை கையாளும் போது புகை­யி­லையை விட்டும் முற்­றி­லு­மாக நம்மால் ஒதுங்க முடியும்.

புகை­யி­லையும், அது சார்ந்த பொருட்­களும் மனித சமூ­கத்­திற்கு எவ்­வி­தத்­திலும் பயன்­களைத் தரு­கின்ற பொருட்­க­ளல்ல. மாறாக மனித சமூ­கத்தை அழிக்­க­வல்­லவை என்­பதும் மேற்­கூ­றப்­பட்ட தக­வல்­க­ளி­லி­ருந்து தெளி­வாகத் தெரிந்து கொள்ள முடி­கின்­றது.

எனவே எமது அர­சாங்கம் தீவிர முயற்­சி­களை மேற்­கொண்டு புகை­யி­லை­யையும், அது­சார்ந்த பொருட்­க­ளையும் முற்­றி­லு­மாகத் தடை செய்­ய­வேண்டும்.

இவ்­வாறு கடு­மை­யான பாதிப்­புக்­களை உடல் ரீதி­யா­கவும் உள­வியல் ரீதி­யா­கவும் உங்­க­ளுக்கு ஏற்­ப­டுத்தும் இந்த புகைத்தல் பழக்கம் உங்­க­ளுக்கு தேவை தானா என்­பதை நீங்கள் தான் முடிவு செய்­து­கொள்ள வேண்டும்.

நீங்கள் புகைப்­பி­டிக்கும் பழக்கம் உள்ள ஒரு­வ­ராயின், நான் புகைத்­த­லுக்கு அடிமையாகி விட்டேனே என்றோ, என்னால் இத்தீய பழக்கத்தை கைவிட முடியுமா அல்லது முடியவில்லை என்றோ வீணாக மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

மாற்றம் குறித்த சிந்தனையையும், அச்சிந்தனையின் வழியாக உலகில் மாற்றத்தையும் கொண்டு வரக் கூடிய ஆற்றல் மனிதர்களிடம் மாத்திரமே இருக்கின்றது.

எனவே, நீங்கள் நினைத்தால் இத்­தீய புகைப்­ப­ழக்­கத்தை கைவிட முடியும். ஒவ்­வொரு முறையும் சிக­ரெட்­டுக்கு வைக்கும் நெருப்பு உங்கள் வாழ்க்­கைக்கும் சேர்த்தே வைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றது என்­பதை ஒரு நாளும் மறந்து விடாதீர்கள்.

மன திடகாத்திரத்துடன் ஒரு முடிவுக்கு வாருங்கள். இன்றே, இப்பொழுதே, இந்நொடியிலேயே இந்தப் பத்தியை வாசித்து முடியும் இத்தருணமே என்னால் புகைக்காமல் இருக்க முடியும் என உறுதி கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் முடியும்.

எப்.ப(f)ஸ்னா
Share |

Show commentsOpen link

உங்க பாஸ்வேர்டை கண்டு பிடித்து விட்டேன். எப்படி?… how to maintain password

உங்க பாஸ்வேர்டை கண்டு பிடித்து விட்டேன். எப்படி?…

by abtamil

பாஸ்வேர்டுகள் பெரும்பாலும் பெயர், காதலியின் பெயர், திருமணம் ஆகிவிட்டால் மனைவி, குழந்தைகள் பெயர், பிறந்த தேதி அல்லது கம்ப்யூட்டர் கீ-போர்டில் இருக்கும் வரிசையான எண்கள், மானிட்டரில் இருக்கும் எழுத்துக்கள் என பெரும்பாலான நபர்களின் பாஸ்வேர்டுகளாக இருக்கின்றன.

சமீபத்தில் வங்கி கணக்கில் இருந்த பணம் காணாமல் போனதும், வெளிநாட்டிலிருந்து கொள்ளையர்கள் பணத்தை திருடியதும் அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து காவல் துறையினரும், வங்கிகளும் ஏ.டி.எம். கார்டின் பாஸ்வேர்டை மாற்றும்படி சொன்னார்கள்.
இப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த பாஸ்வேர்டை ஏனோ தானோ என வைத்துக் கொள்ளவதினால் சைபர் கொள்ளையர்களுக்கு மிகவும் வசதியாக போய்விடுகிறது. சுலபமாக கணித்து கொள்ளையர்கள் பணத்தை திருடுவதற்கு நாமே வழி வகுத்துக் கொடுப்பதாக தான் பலரும் சுலபமான பாஸ்வேர்டை பயன்படுத்துகிறோம்.
இன்னும் சொல்லப்போனால் வங்கி ஏ.டி.எம். கார்டு செயல்படுத்த கொடுத்த முதல் பாஸ்வேர்டையே இன்னும் மாற்றாமல் வைத்திருப்பவர்கள் ஏராளம். பணத்தை முன்பு கையில் எடுத்துச் செல்லும்போது எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தோமோ அதே போல் நவீனமயமானதும் வங்கி பார்த்துக் கொள்ளும் என இருக்காமல் நம்மால் முடிந்தளவிற்கு பாதுகாப்பாக இருப்பது நமது பணத்திற்கு பாதுகாப்பு.
இப்படி உலகெங்கும் பாஸ்வேர்டு பயன்படுத்துவர்கள் இந்த 2011-ம் ஆண்டில் உபயோகப்படுத்திய மோசமான பாஸ்வேர்டுகளை பட்டியலிட்டிருக்கிறது ஸ்பிளாஷ் டேட்டா எனும் கணினி செக்யூரிட்டி நிறுவனம். அந்த பட்டியலில் முதல் பத்து இடங்களை பிடித்த மோசமான பாஸ்வேர்டுகளின் வரிசை இதோ:
1. password�
2. 123456�
3.12345678�
4. qwerty�
5. abc123�
6. monkey�
7. 1234567�
8. letmein�
9. trustno1
10. dragon
மறந்துவிடும் என்பதால் சுலபமான பாஸ்வேர்டு வைத்துக்கொள்வது, எழுதி வைத்துக் கொள்வது, செல்போனில் குறித்து வைத்துக் கொள்வது, பொது இடங்களில் சத்தமாக போனிலோ, நேரிலோ பாஸ்வேர்டை மற்றவர்களிடம் சொல்வது போன்றவற்றை தவிர்க்கவும். அடுத்தவர்கள் யூகிக்க முடியாத அதே நேரத்தில் நமக்கும் ஞாபகத்திற்கு இருக்கும் வகையில் பாஸ்வேர்டை உபயோகித்து கொள்ளவும்.
உதாரணமாக, உங்களுக்கு மறக்கமுடியாத தேதி, இடம், உங்கள் அம்மா, அப்பா பெயரின் இடையிலிருக்கும் நான்கு எழுத்துக்கள் என பாஸ்வேர்டை வைத்துக் கொள்ளுங்கள். இனியாவது மாற்றுவீர்களா உங்கள் பாஸ்வேர்டை?
Show commentsOpen link

ஆண்(கணவன்), பெண்(மனைவி) குடும்ப மகிழ்வைப் பெருக்க… happy family

ஆண்(கணவன்), பெண்(மனைவி) குடும்ப மகிழ்வைப் பெருக்க…

by yarlpavanan

விட்டில் மகிழ்ச்சி வெள்ளம் முட்டி மோத ஆண்(கணவன்), பெண்(மனைவி) உறவிலும் மகிழ்ச்சி இருக்க வேண்டும். அதாவது கருத்து முரண்பாடுகள், சிறு சிறு முறுகல்கள், விருப்பு வெறுப்புகள் பேணாமை எனப் பல குறுக்கே வந்து நின்று மகிழ்ச்சியைக் கெடுக்கின்றதே! உங்கள் கருத்து, உங்கள் தீர்வு, உங்கள் தெரிவு ஒவ்வொரு குடும்ப மகிழ்வுக்கும் உதவுமென நம்புகிறேன்.

1 – ஒருவருக்கு ஒருவர் விருப்பு வெறுப்புகளை மதித்தால் போதுமே!
2 – கருத்து முரண்பாடுகளைக் களைந்து பொது உடன்பாட்டிற்கு வரலாமே!
3 – கோபம் வந்தால் தண்ணீர் குடிக்கலாமே, அதற்காக மோதல், முறுகல் வேண்டாம்.
4 – ஒருவர் தலைமையை ஒருவர் ஏற்றால் நலமே!
5 – ஒருவருக்கு ஒருவர் மதியுரைஞர்(ஆலோசர்) ஆகலாமே!
6 – குடும்ப மகிழ்வுக்கு ஏற்றுக்கொள்ளும் உள(மன)ப்பாங்கு ஒருவொருவருக்கும் வேண்டுமே!
7 – உளவியல் நோக்கில் பார்த்தால் மேற்கூறிய எல்லாமே தேவை.

சரி! ஆண்(கணவன்), பெண்(மனைவி) குடும்ப மகிழ்வைப் பெருக்க; நீங்கள் கூறும் மதியுரை என்ன?

Show commentsOpen link

ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று அரசு சொல்லக்கூடாது adhar card is not nessasary

ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று அரசு சொல்லக்கூடாது ; கோர்ட்
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today, 16:39

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை திட்டம் முழுமையாக அனைவருக்கும் வழங்காத பட்சத்தில் பொதுமக்களை கட்டாயம் என்று சிரமப்படுத்தக்கூடாது என்று அறிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உறுதியாக உள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஆர்வலர் அருணா ராய் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படாது என்று கோர்ட் உறுதி அளித்தது. மத்திய அரசும் அதனை ஏற்று கொண்டது. ஆனால் இந்த அட்டை தொடர்பாக சிறிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்று மத்திய அரசும், மத்திய எண்ணெய் , காஸ் உள்ளிட்ட பொது துறை நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதிகள் இதனை ஏற்க இன்று மறுத்து விட்டனர்.

அதாவது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானியம் சரியான நபருக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் அட்டை அவசியம் என்று கருதுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யாரும் பாதிக்கக்கூடாது :

இதற்கு நீதிபதிகள் அளித்த பதிலில்; ஆதார் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்கி முடிப்பதற்கு பல ஆண்டுகள் காலம் பிடிக்கும். பலரும் பெறாமல் இருக்கும் இந்த நேரத்தில் ஆதார் அட்டையை அரசு எந்தவொரு விஷயத்திற்கும் கட்டாயம் என்று அறிவிக்க கூடாது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் இந்த கார்டு இல்லை என்பதால் யாரும் பாதிக்கக்கூடாது என்பது கோர்ட் கருதுகிறது என்று தெரிவித்தனர். கோர்ட் தனது உத்தரவில் மாறாது என்றும் தெரிவித்தனர். அவசர வழக்காக வேண்டுமானால் விசாரிக்க தயார் என்று நீதிபதிகள் ஏற்று கொண்டனர்.

குளறுபடிகள் நடக்க வாய்ப்பு : மனுதாரர் தரப்பில் , ஏற்கனவே பல்வேறு மோசடிகள், பயங்கரவாதிகள் பிரச்சனை இருக்கும்போது தனியார் இந்த பணியில் ஈடுபட்டுள்ளது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்றும், இதில் குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோர்ட்டில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

பல ஆயிரம் கோடிகளை விழுங்கியது:

பல ஆயிரம் கோடி செலவில் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கென பல மைங்களில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஆதார் அடையாள அட்டை வாங்க பலரும் பல மாதிரியான சிரமத்தை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக அடையாள அட்டைக்கு பதிவு செய்ய செல்லும்போதே உங்களிடம் ரேசன்கார்டு இருக்கிறதா, வாக்காளர் அட்டை இருக்கிறதா, சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகை சீட்டு இருக்கிறதா , தற்போது எந்த முகவரியில் இருக்கிறீர்கள், இப்படி பல கேள்விகள் கேட்டு பலரும் அவதிக்குள்ளாயினர். மேலும் இதற்கான புகைப்படம் எடுக்கும் நேரத்தில் கடும் கூட்டத்தில் பலரும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ஆதார் அடையாள அட்டையின் முக்கிய நோக்கம் என்ன, எதற்கு இதனை பயன்படுத்தலாம், இந்த இடங்களில் இதற்கான முக்கியத்துவம் உண்டு என்று எந்தவொரு அதிகாரப்பூர்வ தெளிவான அறிவிப்பை வெளியிடாமல் மத்திய அரசு இருந்து வந்தது. இதற்கிடையில சில மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தது. தமிழக அரசை பொறுத்தவரையில் தாங்களும் ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்கிறோம் என அது ஒரு பக்கம் புகைப்படம் எடுக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது.

ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் : இதற்கிடையில் ஆதார் அடையாள அட்டை ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

The post ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று அரசு சொல்லக்கூடாது ; கோர்ட் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

பித்த வெடிப்புக்கு piththa vedippu tamil maruthuvam

பித்த வெடிப்புக்கு

by Marikumar

ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து பூசவும். வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்த வெடிப்பு நீங்கும்.சுண்ணாம்பு, விளக்கெண்ணை சம அளவு எடுத்து வெடிப்பில் தடவவும்.வெடிப்புகளில் வேப்பிலை, மஞ்சள் அரைத்துப்போட்டுவரவும். மருதாணி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் விரைவில் குணமாகும்
Share |

Show commentsOpen link

அஜித்தின் ’ஆட்டம்’ தீபாவளிக்கு முன்பே ஆரம்பம்! Ajith aarambam release before diwali

அஜித்தின் 'ஆட்டம்' தீபாவளிக்கு முன்பே ஆரம்பம்!

by admin
TamilSpyYesterday,

அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்திருக்கும் 'ஆரம்பம்' திரைப்படம் வருகிற தீபாவளியன்று உலகமெங்கும் ரிலீஸாவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆரம்பம் திரைப்படம் ரிலீஸாகும் அதே நாளன்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி காஜல் நடித்திருக்கும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' திரைப்படமும் ரிலீஸாகிறது.

தங்கள் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஆரம்பம் முதலே தமிழகத்தின் முக்கியமான தியேட்டர்கள் பலவற்றை புக் செய்துவிட்டது. அஜித் திரைப்படத்திற்கு எப்போதுமே இருக்கும் ஓபனிங்கை தவறவிட மனமில்லாத ஆரம்பம் டீம் தீபாவளிக்கு முன்னதாகவே ஆரம்பம் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

ஆரம்பம் திரைப்படம் பெரும்பாலும் அக்டோபர் 31-ஆம் தேதி ரிலீஸாகலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. விஷ்ணுவர்தநஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ஆரம்பம் திரைப்படம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே ரிலீஸாகி ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றுவிட்டால் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்திற்கு நெருக்கடிகள் ஏற்படலாம் என்கிறது கோடம்பாக்கம்.

Show commentsOpen link

Monday, October 7, 2013

சர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..! Indian education system

சர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

by பாட்டு ரசிகன்
பரவசப்படுத்தும் சிரிப்பு

உலக­ளவில் நடத்­தப்­பட்ட பல்க­லைக்­க­ழகங்களின் தரவ­ரிசை பட்­டி­யலில், 200 பல்க­லைக்­க­ழ­கங்களின் பெயர்களில், நம் இந்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பெயர், ஒன்று கூட இடம்பெற­வில்லை. எப்­படி, தர­வ­ரி­சைப்­பட்­டி­யலை பட்­டியல் இடு­கின்­றனர்? 

பல்­க­லைக்­க­ழ­கத்தில் பணி­யாற்றும் ஆசி­ரி­யர்­களின் தகுதி. உல­க­ளவில் புகழ் பெற்­றுள்ள இதழ்­களில், அவர்கள் எழு­திய கட்­டுரை. அக்­கட்­­­­­டு­­­­­ரை­கள், உல­க­ளவு அறி­ஞர்­களால் அங்­கீ­கரிக்­கப்­பட்­டவை. புதிய கண்­டு­பி­டிப்­பு­களின் ஆய்வு அறிக்கை. அப்­பல்­கலைக் கழ­கத்தில் பயிலும், அன்­னிய நாட்டு மாண­வர்­களின் எண்­ணிக்கை. இந்த வகை தகு­தியை வைத்து, தர­வ­ரிசை நிர்­ண­யிக்­கப்­பட்­டன. 

சுதந்­திரம் பெற்று, 66 ஆண்டு கடந்தும், இன்னும் மர­ணப்­ப­டுக்­கை­யி­லி­ருந்து கல்வி எழ அடம்­பி­டிக்கக் ­காரணம், நாம் கல்­வியை போதிக்கக் கூடிய சரி­யான ஆசி­ரியர்­களை தேர்வு செய்­ய­வில்லை என்­பதும், நம்­ கல்வி முறை அறிவை துாண்டும் வித­மாக இல்­லாமல், பியூன் வேலைக்கு தகு­தி­யான முறையில் உள்­ளது என்­பதை மறுப்­ப­­­­­தற்கு இல்லை. 



உல­க­கெங்கும், ஒரு ஆசி­ரி­யருக்கு, 20 மாணவர் என்ற விகிதம் உள்­ளது. ஆனால், இங்கு ஆசி­ரி­ய­ருக்கு, 80 என்ற விகி­தத்தில், 1:80 நிலையில் உள்­ளது. இது தவிர பெரும்­பா­லான கல்­விக்­கூ­டங்­களில், கட்­டட அமைப்பு, விளை­யா­டுத்­திடல், சுகா­தார வசதி, குடிநீர், நுாலகம் ேபான்­றவை இல்லை.

அடிப்­படை கல்­வியை ஒழுங்­கான முறையில் அளிக்­காத ­போது, இவர்கள் பல்­க­லைக்­க­ழ­கத்தில் என்ன சாதித்து விட­மு­டியும்? ஆசி­ரியர் தகுதி தேர்வு, எப்­படி நடத்­தப்­ப­டு­கி­­­­­றது இங்கே? ஒருவர் அப்­பட்­டத்­திற்­கான தகுதி ­இருக்­கி­றதோ, இல்­­­­­லையோ கையில், பி.ஏ., – எம்.ஏ., – ­எம்.எஸ்சி., என்ற பட்­டத்­துடன், பி.எட்., பட்­டத்­தையும் சேர்த்து சுமக்­கிறோம்.

அரசு இப்­ப­டிப்­பட்ட பட்­டங்­களை நம்­பாமல், அரசு எதற்கும் பயன்­ப­டாத தேர்வு முறையை புகுத்தி, 'மம்தா பானர்­ஜியின் தாயார் பெயர் என்ன?' என்ற கேள்­விக்கு யார் சரி­யாக பதிலை அளிக்­கின்றனரோ, அவர்களையே அதி­புத்­தி­சா­லி­க­ளாக நினைத்து, அவர்­க­ளிடம் மாண­வர்­களை ஒப்­ப­டைத்தால், மாணவர் எப்­படி உருப்­ப­டுவர்? 


கடந்த, 1948ல் நம் நாட்டைப் போலவே, நம் எதிரி நாடான சீனா இருந்­தது. ஆனால், அந்­நாட்டில் இயங்கும் பல்­க­லைக்­க­ழ­கங்கள் முதல் பத்து இடத்தில் இடம் பெற்­ற­தற்கு என்ன காரணம்? அங்கு, தாய்­மொ­ழி­யா­கிய சீன மொழி­யையே ஆரம்ப கல்வியில் துவங்கி, பல்கலைக்கழகம் வரை படித்து, படிப்பின் தன்­மையை புரிந்து கொண்டு, அவர்கள் நம்மை விட எல்லா வகை­யிலும் முன்­னேற்றம் கண்­டுள்­ளனர்! 

இங்கே படிக்கும் பாடமே எது­வுமே புரி­தல்­ப­டாத மனப்­பாடம் செய்து, செய்த மனப்­பா­டத்தை அப்­ப­டியே ஒரு­வரி பிறழாமல் எழுதி விடுவர். ஒரு வாரம் கழித்து அப்­பா­டத்தை பற்றி கேட்டால் கையை பிசைந்து நிற்பர். எம்.பில்., – பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சிக் கட்­டு­ரைகள், யாரோ ஒருவர் எழுதி தர, அவ­ரிடம் ஒரு குறிப்­பிட்ட பட்­டத்­திற்கு, பணம் கை மாறி­ய­வுடன், அம்­மா­ணவன் இப்­பட்­டத்­திற்கு தகுதியானவர் என்று இங்குள்ள கீழ்தரமான நிலையை அறிந்த பிரான்ஸ் போன்ற நாடுகள், நம் நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்கள் அளிக்கும் முனைவர் பட்­டத்தை துாக்கி குப்­பையில் போட்டு விடுகின்றன. 

நம் ஆசி­ரி­யர்­களில், 100க்கு, 90 பேர் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தகு­தியே இல்­லா­த­வர்கள் என்­பதை உறு­தி­யாக அறி­யலாம். மாத ஊதியம் மட்டும் இவர்­க­ளுக்கு, 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் வரை அரசு கொட்டி அழு­கி­றது. உடல் ஊன­முற்­ற­வனை, ராணுவ வீர­ராக தேர்வு செய்து, லடாக் பகு­தியில் பாது­காப்­பிற்கு நிறுத்­து­வது எப்­படி முட்­டாள்­த­ன­மா­னதோ, அதே போல் தான், ஆசி­ரி­ய­ராக தேர்வு செய்யும் தேர்வு முறையும். 

சீனர்கள் நமக்கு எதி­ரி­யாக இருக்­கலாம். ஆனால், அவர்­க­ளிடம், பால பாடம் படித்து, நம் கல்­வி­யா­ளர்கள் கல்­வி­மு­றையை மாற்­றினால் நல்­லது. இல்­லையேல், ஏட்டு சுரைக்காய் கறிக்கு உத­வாத நிலையில் நம் கல்­வியை சமா­தியில் அடக்கம் செய்­யலாம்.
Show commentsOpen link

கணினியை பார்க்கும் கண்களுக்கு ஆலோசனைகள்! Eyes tips for computer users

கணினியை பார்க்கும் கண்களுக்கு ஆலோசனைகள்!

by தமிழ் உலகம்
தமிழ் உலகம்

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

கண்களை பாதுகாக்க:

1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.
2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.
4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.
7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.
8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.
9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.
11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.
12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.
13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.
14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.

18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

www.tamilinternational.co.cc

Show commentsOpen link

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்! How to reduce stomach

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!
by பாட்டு ரசிகன்

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!!

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
Show commentsOpen link

இப்படி ஒரு காதலி கிடைத்தால் my lover

இப்படி ஒரு காதலி கிடைத்தால் அவளை நிச்சயம் இழந்துவிடாதீர்கள்..
by abtamil

1) உங்களை சந்திக்க நீண்ட தூரம் பயணம் செய்து கால் வலிக்க அவள் காத்திருப்பாள்
2) அவள் மீது தவறே இல்லாவிட்டாலும் உங்களுடன் சமாதானம் ஆக அடிக்கடி மன்னிப்பு கேட்பாள்.

3) உங்கள் வார்த்தை தரும் வலியில் கண்ணீர் வடிந்தாலும் அடுத்தகனமே புன்னகையில் அதை மறைத்திடுவாள் .

4) நீங்கள் எத்தனை முறை காயப்படுத்தி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் உங்கள் மீது கொண்ட நேசம் மட்டும் குறையாமல் பார்த்துக் கொள்வாள்.

5) இருவரும் விவாதிக்கும் விடயத்தில் அவள் சொல்லும் கருத்து சரியாக இருக்கும் போதிலும் விவாதத்தை தொடராமல் முடிக்கவே முயற்சி செய்வாள் உங்கள் உறவு முறிந்து போகாமல் இருக்க.

6)சிறு சிறு குறும்புகள் செய்தேனும் உங்களை சிரிக்க வைக்க முயற்சிப்பாள்.நீங்கள் அவளுக்கு எத்தனை முக்கியமானவர் என்பதை அடிக்கடி உறுதி செய்வாள்.

7)நீங்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தில் அவள் கவலையாக இருந்தால் , அதைப் பகிர்ந்து உங்கள் சந்தோசம் கெட்டு விடக் கூடாதென்று கவலைகளைக் கண்ணில் மறைப்பாள்.

8)உங்களின் ஒரு சில முரட்டு குணங்கள் அவளை பாதித்தாலும் உங்களை விட்டு விலகும் எண்ணம் இல்லாதவளாய் இருப்பாள்.

9)உங்கள் குடும்பத்திலும் நண்பர் வட்டத்திலும் நீங்கள் மதிப்போரையும் நேசிப்போரையும் அவளும் நேசிப்பாள்.

10)நீங்கள் தொலைப் பேசியில் அழைக்காவிட்டாலும் அவள் அழைப்புக்கு பதிலளிக்கா விட்டாலும் , அதற்கு நீங்கள் தரும் விளக்கத்தையும் உங்கள் சூழ்நிலையையும் புரிந்துக் கொள்வாள்.

Show commentsOpen link

முன்னாள் சிநேகிதிகள் girl friends tamil kavithai

முன்னாள் சிநேகிதிகள்

by (babujcr)

போன வருடம்
பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன
தோழி ஒருத்திக்கு
இந்த பிறந்த நாளில்
இருக்கேனா... செத்தேனா?
எனத் தெரியவில்லை.

அடுத்த கவிதைத் தொகுப்பின்
முதல் பிரதி
தனக்கே வேண்டுமெனச் சொன்ன
முப்பது தோழிகளின் புதிய எண்களும்
என்னிடம் இல்லை.

மூன்று வேளைகளும்
சாப்பிட்டாயா? என
குறுந்தகவலில் குடைச்சல் தந்த
தோழியின் அலைபேசிக்கு
அழைக்கிறபோதெல்லாம்
அணைத்துவைக்கப்பட்டிருப்பதாகச்
சொல்லப்படுகிறது.

என் மகளைத் தன் மகனுக்குக்
கேட்பேன் எனச் சொன்ன
தோழி ஒருத்தி
அவள் திருமணத்துக்கே
என்னை அழைக்கவில்லை.

திருமணத்துக்குப் பிறகு
தற்செயலாகச் சந்தித்த
தருணமொன்றில் தோழி ஒருத்தியிடம்
கோபித்துக்கொண்டேன்
அவளோ
\'அவர் சரி, அத்தை - மாமாவிடம்
சிநேகிதன் ஒருவன் இருந்தானென
எப்படிச் சொல்வது?\' என்றாள்.
இருந்தானில் இறந்துபோயிருந்தது
எங்கள் நட்பு!
Show commentsOpen link

Johnson & Johnson products ignore ! ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்!


எச்சரிக்கை தகவல்..! நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும். ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது

. கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.

 இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள். 

பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்! 

Caution : Please share it friends.... Johnson & Johnson baby products have been trusted and used by people for long time as the best baby products, but its found that these products are so dangerous that cause allergy, asthma, cancer and even sudden death in some cases. After a case been filed by the kerala food safety, they have added a warning in their label stating "keep away from children to avoid accidental inhalation". that itself shows the toxicity of these products. World Health Organisation advice'd to avoid these products. The inhumanity thing is that Johnson & Johnson itself manufactures medicines for the allergy and side effects caused by their baby products. Friends be allert and avoid Johnson & Johnson Products... Share it with Everyone you care... -

Sunday, October 6, 2013

ஆண்களும் , பெண்களும் அப்படி என்ன தான் பேசுகிறார்கள் பேஸ்புக்கில் !! Facebook girls and boys news

ஆண்களும் , பெண்களும் அப்படி என்ன தான் பேசுகிறார்கள் பேஸ்புக்கில் !!

by adminTamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

சமூக வலை என்ற ஒன்று உருவான பின்னர் அங்கு நடக்கும் கூத்துக்களும், உரையாடல்களையும் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்குமளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அதே வேளையில் நாள் முழுவதும் சமூக வலையில் நேரம் தொலைக்கும் பலர் அப்படி அங்கு என்ன தான் பேசுகிறார்கள் என்ற கேள்வியும் சிலரின் மண்டையைக் குடைய ஆரம்பித்துள்ளது .

இப்படியான கேள்விகள் எழுந்ததால் தானோ என்னவோ , அமெரிக்கா இதையும் விட்டு வைக்காமல் இதிலும் ஆராய்ச்சி  செய்யத் தொடங்கி விட்டது. புதிய அமெரிக்க ஆய்வின் படி பேஸ்புக்கினை அதிகம் பயன்படுத்தும் ஆண்களும் , பெண்களும் தங்களின் தற்போதைய நிலையை பகிர்ந்து கொள்ள 700 மில்லியனுக்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான வார்த்தைகள், சொற்றொடர்கள் மற்றும் தலைப்புக்களையே பயன்படுத்துகின்றனர் என்பது தெரிய வருகிறது.

இந்த ஆய்விற்காக பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  உளவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் சுமார் 75,000 அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் நிலைமையைப் பகிர்ந்து கொள்ள பயன்படுத்தும் வார்த்தைகளை அவர்களின் செக்ஸ், வயது, மற்றும் எண்ணங்கள் போன்றான பல்வேறு ஆளுமை வகைகளின் படி வேறுபடுத்திப் பார்த்து சிலவற்றைக் கண்டுபிடித்துள்ளனராம்.

இந்தக் கண்டுபிடிப்புக்களின் படி பார்த்தால் ஆண்கள் விளையாட்டு, வீடியோ கேம்ஸ் மற்றும் அரசியலில் அதிக கவனம் செலுத்துவதாகவும் பெண்கள் எப்போதும் தங்களின் தலைமுடி , அழகு மற்றும் ஷாப்பிங் சமாச்சாரங்கள் குறித்து அதிகம் கதைப்பதாகவும் தெரிகிறது.

அழகு சாதனப் பொருட்களை விற்று வரும் கனடாவில் உள்ள நம் வர்த்தகர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி  பேஸ்புக் மூலமாக குறிப்பாக குருவி போன்ற தமிழ் மக்கள் அதிகம் வந்து குவியும் இணையதளங்களில் உங்களை விற்பனைப் பொருட்களை விளம்பரம் செய்து கொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல் பெண்கள் அதிகம் பேஸ்புக்கில் முணுமுணுக்கும் விடயம் தங்கள் கணவன் அல்லது காதலன் பற்றியதாகத்தான் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. பொதுவாக பிறரை அதிகம் திட்டுவதையும் , வசை பாடுவதையும் பேஸ்புக்கில் ஆண்கள் பலர் தங்கள் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

பேஸ்புக் பயன்படுத்தும் இளையோர்கள் அதிகமாக அவர்களுடைய பாடசாலை அல்லது பிரபல அறிவியல் செய்திகளைப் பேச , குடும்பங்கள் பற்றி பேசுவதில் அக்கறை செளுத்துகின்றனறாம். மிகக் குறைவான வீதத்தினர் மட்டுமே தங்கள் வேலை, பீர் மற்றும் திருமணங்கள் பற்றி பேஸ்புக்கில் பேசுகின்றனர் என்பதும் இந்த ஆராயச்சியில் வெளி வந்துள்ள விடயங்கள்.

காலங்காலமாக தொன்று தொட்டு பெண்கள் ஒன்றாக கூடும் இடங்களில் அழகு பற்றிய சமாச்சாரங்களைப் பேசுவதும், ஆண்கள் அரசியல் பேசுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதானே. இதற்கு ஒரு  ஆராய்ச்சி தேவையா என்பது தான் குருவியாரின் கேள்வி. பேசாமல் அமெரிக்கா இது போன்ற ஆராயச்சிக்குப் பதிலாக பேஸ்புக்கில் பெண் போர்வையில் ஒளிந்துள்ள ஆண்கள் எத்தனை, ஆண் போர்வையில் ஒளிந்துள்ள பெண்கள் எத்தனை பேர் என்ற ஆராய்ச்சியில் இறங்கியிருந்தால் போலிகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்திருக்கும்.

The post ஆண்களும் , பெண்களும் அப்படி என்ன தான் பேசுகிறார்கள் பேஸ்புக்கில் !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

‘தல’யின் அதிரடி பேட்டி! Ajith special press meet

'தல'யின் அதிரடி பேட்டி!

by abtamil
Tamil newsYesterday,
தல'தீபாவளியாக இந்த வருடம் அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

அதைத் தொடர்ந்து வீரம் திரைப்படம் பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்கவுள்ளது.

அதற்கான விருவிருப் பணிகளில் பிஸியாகயிருந்தவரிடம் கேள்விகளை சரவெடியாக விரித்ததும் தனது ஸ்டைலில் வெடித்த பதில்களின் சிதறல் இங்கே.

கேள்வி: உங்களது ஆரம்பம், வீரம் படங்களின் கதாபாத்திம் குறித்து?

பதில்: நான் ஆரம்பம் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறேன். பில்லா, மங்கத்தா படத்தில் பார்த்த ஸ்டைலிஷ் அஜித்தை இப்படத்திலும் நீங்கள் பார்க்கலாம்.

ஆனால் வீரம் முற்றிலும் மாறுபட்டது. இதில் எனக்கு கிராமத்து கதாபாத்திரம்.

கேள்வி: இதுவரை நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம்?

பதில்: நான் ஒரு நடிகன், சம்பளம் கொடுக்கிறார்கள் நடிக்கிறேன், இதுவரை காதல், இளமை, மற்றும் வயது முதிர்ந்தவன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.

எப்போதும் திரைக்கதையையே நம்புவேன், ஆனால் எல்லா நேரத்திலும் கதை சாதகமாக அமைவதில்லை. சில நேரங்களில் இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப நடித்துக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

மொத்தத்தில் இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரும் ஒருங்கிணைந்தால் ஒரு நல்ல படத்தினை தர முடியும்.

கேள்வி: நீங்கள் இயக்குனரின் நடிகரா?

பதில்: ஒரு நடிகரின் திறமையை வெளிகொண்டு வருபவர் இயக்குனர், ஆனால், படங்களில் நடிக்கும்போது நாம் சில கருத்துக்களை சொல்லலாம்.

ஆனால், இயக்குனரின் படைப்பாற்றல் மீது உரிமை மீறாமல் நமது திறமையை வளர்த்துக்கொள்வதே சிறந்தது.

கேள்வி: இதுவரை நடித்ததில் உங்களுக்கு திருப்தி அளித்த கதாபாத்திரம்?

 

பதில்: என்னுடைய இளம் வயதில் காதல் ததும்பும் ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடித்தேன்.

பின்பு ஏற்கும் கதாபாத்திரங்களில் என்னுடைய தோற்றத்திற்கு தகுந்தவாறு கதாபாத்திரங்களை தெரிவு செய்தேன், மங்காத்தா, பில்லா போன்ற படங்களில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றினேன்.

அதில் நடித்ததால் ஆரம்பம் படத்திலும் இந்த கெட்டப்பை தொடர்ந்துள்ளேன்.

கேள்வி: உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் ஆக்ஷ்ன் காட்சிகளில் நடிப்பதற்கு அதிரடியாக களமிறங்குகிறீர்களே?

பதில்: விபத்து மற்றும் உடல்நல பாதிப்பு நம்முடைய வேலையில் ஒரு பாதி. அப்படி உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் எனக்கு நல்ல மருத்துவர்கள் உள்ளார்கள் அவர்கள் வெகுவிரைவில் எனது உடல்நலனை சரிசெய்து விடுவார்கள்.

தற்போதுள்ள ரசிகர்கள் ஆக்ஷ்ன் காட்சிகளை விரும்பி பார்க்கிறார்கள், என்னுடைய படத்தினை பார்க்க வரும் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்க கூடாது என்பதற்காக எனது கடமையை செய்கிறேன்.

கேள்வி: டிரைவிங்கில் வேகம் மற்றும் பாதுகாப்பை விரும்புகிறீர்களே ஏன் இந்த வினோதமான முயற்சி?

பதில்: நான் 18 வயது முதல் கார் மற்றும் பைக் பந்தயங்களில் பங்கேற்று வருகிறேன். நான் எச்சரிக்கையுடன் வேகத்தை விரும்பும் ஒரு பந்தயக்காரன். இப்போதும் வாகனம் ஒட்டும்போது ஹெல்மெட், க்ளவ்ஸ் போன்றவற்றை பயன்படுத்தியே எனது பயணத்தை தொடங்குவேன்.

கேள்வி: நடிப்பு, ரேசிங் தவிர 'தல'யின் சாய்ஸ்?

பதில்: நான் வெளிநாட்டிற்கு சென்று 6 மாதங்கள் ஏரோ மாடலிங் படித்தது சிறந்ததாக கருதுகிறேன். ஏனெனில் எனது அடுத்த சாய்ஸ் ஏரோ மாடலிங் ஆனால் சில காரணங்களால் பிரைவேட் பைலட் உரிமம் வாங்க முடியவில்லை.

மேலும் புகைப்படத்திலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது, ஆனால் சில வணிக காரணங்களுக்காக அதனை செய்யாமல் இருக்கிறேன்.

Show commentsOpen link

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts