Saturday, September 14, 2013

நீங்கள் சாப்பிடுவது உணவா? விஷமா?? Tamil topic no 14092013

நீங்கள் சாப்பிடுவது உணவா? விஷமா??

நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. நம்மவர்களின் மரபணுக்கள்தான் (Genes) காரணம்; நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே; உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது என்றெல்லாம் பட்டிமன்ற பாணியில் அவை விவாதிக்கப்படுகின்றன. இதில், 'அரிசியை மையப்படுத்திய நம் உணவுப் பழக்கமே உண்மையான காரணம்' என்பதும் முக்கியமாக பேசப்படுகிறது!

இத்தகைய சூழலில்… 'சர்க்கரை நோய்க்கும் அரிசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று சமீப காலம் வரை பெரும்பாலான டாக்டர்கள் (சர்க்கரை நோய் நிபுணர்கள் உட்பட) உறுதியாக சொல்லிக் கொண்டிருந்த வாதம்… தற்போது முற்றாக உடைபட்டு போயிருக்கிறது.

ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என்பதை கணக்கிடுவதற்கு 'கிளைசீமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index)என்று பெயர். சுருக்கமாக 'ஜிஐ' (GI). சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் 'ஜிஐ' 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்திருக்கிறார்கள்.

100-70 வரை 'ஜிஐ' உள்ள உணவுகளை, 'அதிக ஜிஐ' என்றும், 70-55 வரையிலான உணவுகளை 'நடுத்தர ஜிஐ' என்றும், 55-க்கு கீழே உள்ள உணவுகளை, 'குறைந்த ஜிஐ' என்றும் அழைக்கிறோம்.அதிக 'ஜிஐ' உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகி, சீக்கிரம் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீக்கிரம் அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கு மூலகாரணமாக அமைகின்றன. குறைந்த 'ஜிஐ' உணவுகள், மெதுவாக ஜீரணமாகி, மெதுவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துகின்றன. ஆகவே, 70-க்கும் மேல் 'ஜிஐ' உள்ள உணவுகள் ஆபத்தானவை. 55-க்குக் கீழ் உள்ள உணவுகளே பாதுகாப்பானவை.அப்படியானால், நாம் உண்ணும் உணவின் 'ஜிஐ' எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதானே!

அதற்கான பட்டியலை கீழே கொடுத்திருக்கிறோம… பார்த்துக் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளில், ஒவ்வொரு உணவுப் பண்டத்தின் கவரிலும் 'ஜிஐ' அளவு குறிப்பிட வேண்டும் என்று சட்டமே வந்துவிட்டது.இதில் நாம் கவனிக்க வேண்டியது – கைக்குத்தல் அரிசியின் ஜிஐ, 50 என்பதுதான். குட்டைரக பொன்னி போன்றவற்றின் 'ஜிஐ' அளவு மிகவும் அதிகம் – 75.

நீளரக அரிசிகளின் (சம்பா, பாசுமதி) 'ஜிஐ' இடைப்பட்ட ரகம்: 56 – 58. ஆக, பாசுமதி அரிசி சாப்பிடும் வடநாட்டவர்களைவிட, பொன்னி அரிசி சாப்பிடும் நம்மவர்கள் சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்! இத்தனை நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் 'பொன்னி அரிசிதான் வேண்டும்' என்கிற உங்களின் பிடிவாதம் சரியா… இல்லையா… என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

'சர்க்கரையைக் கணக்கிடுவதற்கு, உணவுப் பண்டங்களின் 'ஜிஐ' மட்டுமல்லாமல்… சாப்பிடும் உணவின் மொத்த அளவும் (Quantity)கூட கணக்கிடப்படுவது முக்கியம்' என்கிற கருத்தும் உண்டு. இதை 'கிளைசீமிக் லோடு' (Glycemic Load)என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக 'ஜிஎல்' (GL) நம் உணவில் பொதுவாக மாவுச்சத்து 50%, கொழுப்புச் சத்து 30%, புரதச்சத்து 20% இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்கள் உணவில் மாவுச்சத்து 75% இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படியானால், நம்முடைய 'குளுக்கோஸ் சுமை' அதிகம்தானே? அதிக 'ஜிஐ' இருக்கும்போது, அதிக 'ஜிஎல்'லும் சேர்ந்தால், சர்க்கரை நோயின் வாய்ப்பு அதிகம் என்பதில் என்ன ஆச்சர்யம்?

மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமான 'அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகம்' (American Diabetes Association)'எந்த மாவுப்பொருளைச் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமில்லை – எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்' என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதுதான் உலகெங்கும் உள்ள டாக்டர்கள், 'அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடி சம்பந்தமில்லை' என்று சமீப காலம் வரை அடித்துச் சொன்னதற்குக் காரணம்.

இதை உடைத்துப் போட்டிருப்பது… அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் கடந்த 22 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் மக்களிடம் நடத்திய ஆராய்ச்சி முடிவு.

ஸ்ரீவித்யா

ஆந்தைரிப்போர்ட்டர்
Share |

Show commentsOpen link

தமிழா! தமிழா! Thamila thamila

தமிழா! தமிழா!
by (SENTHIL KUMAR J)

RSS 2.0 - News UpdatesToday,

தமிழா தமிழா தமிழ் நாட்டில் 
வாழும் தமிழா !
நம் வீரம் எங்கே ? 
தன்மானம் எங்கே ?

நம் கலை எங்கே ?
கலாச்சாரம்தான் எங்கே ?
நம் பண்பாடு எங்கே ?
பயணம்தான் எங்கே ?

இறந்தும் இலக்கணமாய் திகழ்கிறான்
இலங்கை தமிழன் 
\"தமிழுக்கும் தமிழனுக்கும்\" !

ஆங்கிலத்தில் பேசுவதையே 
அலாதியாகக் கொண்டு 
ஆங்கிலத்தில் பேசியபடியே 
தமிழ் மொழியையே கொள்கிறான் 
தமிழ் நாட்டில் உள்ள தமிழன்  !

வறுமையில் நாம் வாழ 
நம் வறுமையில் பலர் வாழ 
அதை எண்ணி எண்ணி - தினமும் 
இங்கே இளைத்தோமே தோழனே !

என்று இந்த நிலை மாறும் 
என்று எண்ணி ஏங்காதே !
என்னால் இந்த நிலை மாறும் 
நாளை வரும் சந்ததிகள் 
யாவும் நலம் காணும் !
என்று சொல்லி புறப்படு
புது புரட்சி செய்வோம் தோழனே !

உன்னால் முடியும் தோழா !
என்னால் முடியும் தோழா !
நம்மால் முடியும் தோழா !
நாளை உலகை நலம்பெற செய்வோம் 
வா வா என் தோழா !

வந்தோரை வாழ வைக்க 
நம் வாழ்வை தாரை வார்த்தோம் !
அன்றோடு நம் தரத்தை 
நாம் இழந்து விட்டோமே !

இழந்ததை எல்லாம் மீட்க்க 
இழக்கம் கொண்டு போரிட்டோம் !
இருந்தாலும் இன்றுவரை இழப்பை 
தவிர வேறொன்றும் மிச்சமில்லை !

இங்கே ஒரு பெண் ( சோனியா )   
செய்த சூழ்ச்சி !
அங்கே நாம் கண்டோம் 
பல பெண்கள்
கற்பை இழந்த காட்சி !

இங்கே ஒரு நரி (கருணாநிதி)  
செய்த சூழ்ச்சி 
அங்கே நாம் கண்டோம் 
லட்சம் பேர் மாண்ட காட்சி !

லட்சம் பேர் இறந்தாலும் 
லட்சியவாதிகளை எல்லாம் இழந்தாலும் !
ஈழ தமிழன் விடுதலை என்றும் இறவாது !
லட்சியாதை அடையும் வரை 
ஓயமாட்டோம் என்று சொல் 
வீரத் தமிழனே !

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது tamil news 1

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது

by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,

புதுமணத்தம்பதிகள் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்பது இன்றுவரை நடைமுறையில் உள்ள வழக்கம். ராமரின் குலகுருவான வசிஷ்டரின் மனைவி அருந்ததி. இவர்கள் மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். இதன் விளைவாக இவர்கள் வானமண்டலத்தில் நட்சத்திரங்களாக ஒளிரும் பேறு பெற்றனர். இவர்களைப் போல் மணமக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது ஆன்மிக காரணம்.
இதையே அறிவியல் ரீதியாகவும் பார்க்கலாம். புராணங்களில் "சப்தரிஷி மண்டலம்' என்று சொல்வார்கள். "சப்தம்' என்றால் "ஏழு'. ஏழு முக்கிய ரிஷிகள் ஒன்றாக இணைந்து நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள். . இந்த ஏழு நட்சத்திரங்களில் நான்கு, நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும்.
மற்ற மூன்றும் "பட்டம்' போல இருக்கும்.

இந்த பட்டத்தின் வாலில், நடுவில் இருப்பது வசிஷ்ட நட்சத்திரம் என்னும் "மிசார்'.

அதை ஒட்டி மெல்லியதாக இருப்பது அருந்ததி என்னும் "அல்கார்'. இந்த இரு நட்சத்திரங்களும் ஒரே ஈர்ப்பு மையத்துடன் சுழல்பவை.
அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்புடையவை.

இந்த நட்சத்திரங்களைப் போல, புதுமணத்தம்பதிகளும் ஒருவருக்கொருவர் ஈர்ப்புத்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது அருந்ததி பார்ப்பதின் தத்துவம். அன்றைய தினம் டெலஸ்கோப் போன்ற எந்த நவீன வசதியும் இல்லாமலே, இதையெல்லாம் எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ நம் முன்னோர்கள்!

courtesy;''dinamalar

Show commentsOpen link

வேண்டும் வேண்டும் அ ஆ இ ஈ tamil kavi

வேண்டும் வேண்டும் அ ஆ இ ஈ ..............

அ     அனைவருக்கும்  அடிப்படை தேவை 
         கட்டாயம் வேண்டும் வேண்டும்...,

ஆ    ஆயுத பூஜையில் தட்டு நெல்லில்
         கை பிடித்து  \"அ\" போட ஆசான் 
         அனைவருக்கும் கிடைக்க 
         வேண்டும் வேண்டும்...,

இ     இரவும் பகலும் நித்தம் நித்தம் 
         உழைக்கும் குணம் அனைவருக்கும்
         வேண்டும் வேண்டும்...,
         
ஈ     ஈ, எறும்பு கூட துன்பம் 
        இழைக்கா  குணம் அனைவருக்கும்
         வேண்டும் வேண்டும்...,
         
உ    உழைப்புக்கு ஏற்ற ஊதியம் 
        அனைவருக்கும் கிடைக்க 
         வேண்டும் வேண்டும்...,

ஊ    ஊசி போடும் மருத்துவர் வரை 
         உணவு   உருவாக்கும் விவசாயி 
         வரை உண்மையாய் கலப்படம் இல்லாமல் 
         வேண்டும் வேண்டும்...,

எ     எறும்பு போல  ஊறி கல்லான 
         கஷ்டத்தை கரைக்கும் தன்னம்பிக்கை 
        அனைவருக்கும்  வேண்டும் வேண்டும்...,

        எழுத்து  போன்ற  வலைத்தளம் 
        நிறைய  நிறைய 
        வேண்டும் வேண்டும்...,

ஏ    ஏணி படிக்கட்டாய் முன்னேறும் 
       எண்ணம் அனைவருக்கும்  
      வேண்டும் வேண்டும்...,

Show commentsOpen link

திருநெல்வேலி குசும்பு tirunelveli

திருநெல்வேலி குசும்பு

கட்டபொம்மன் திருநேவெலி க்காரன். உங்க எல்லாத்துக்கும் தெரியும்.. அப்படின்னா உன்மையா கட்டபொம்மன் எப்படி வசனம் பேசிருப்பாரு.... (கற்பனதான் - வீரத்தோட கோபத்தோட பேசுற வார்த்தைகள் இது எங்க ஊர்ல இது சாதாரண வார்த்தகள்தான் தப்பா நினைக்காதீங்க))

க.பொ.. : எல அங்க என்ன கூவ மாரி நிக்க.. எவம்ல நீ...

ஜாக்‌ஷன் : நான் ஜாக்‌ஷன் துரை.

க.பொ. : அது என்ன எழவோ.. ஆமா எதுக்குல வந்த.??

ஜாக்‌ஷன் : வரி.. வாங்கறதுக்கு....

க.பொ. : என்னது வரி வாங்க வந்தியா.. எலே சவத்து மூதி, வயக்காட்டுக்கு வந்தியா லே, வெள்ளாம பண்ணியா லே, எரும மாட்டு பயல நாலு மாடாவது மேச்சியால, இல்ல நாத்து நட்டியா லே, கள புடுங்கினாலே, இல்ல இங்கன சாணி பொறுக்கிட்டு அலயற பொண்டு புள்ளயளுக்கு மஞ்ச கிஞ்ச அறச்சி கொடுத்தியா லே,

எல நீ யேன் ஆத்தா வயித்தலயா பொறந்த பொருக்கி பயல, எல நீ யேன் மாமனால, இல்ல மச்சானா எலே மானங்கெட்ட பெயல, நீ யேன் பங்காளியால, செத்த மூதி ராந்த கல்லு கூவ, பிச்சகார பயல யார்டல கேக்க வரி, எதுக்குல கேக்க கிஸ்தி, நான் உங்கிட்ட சிட்ட வட்டிக்கால துட்டு எடுத்துருக்கேன் எங்கிட்ட வந்து வட்டி கேக்க நாரப்பயல. உங்கப்பன்ட போய் கேளுல வட்டி, மரியாதயா இங்கிட்டு இருந்து ஓடிப்பொயிரு இல்ல கதவிடுக்குல வச்சி கோழி தலைய நசுக்குற மாரி நசுக்கிடுவேன் ரஸ்கல்..

ஜாக்‌ஷன் : பின்னங்கால் பெடரில அடிக்க ஓடுறார்..

Share

Friday, September 13, 2013

விடா முயற்சி.......வெற்றி நிச்சயம்....! Tamil kavithaigal

விடா முயற்சி.......வெற்றி நிச்சயம்....!

வேர்களின் விடாமுயற்சி 
பூக்களை தந்தது.........! - இதை மனம் 

விளங்கிய  விடாமுயற்சி 
வெற்றியைத் தந்தது...! 

ஆன்மீகத்தின் விடாமுயற்சி 
ஆன்மாவைக் கண்டது....! 

அறிவியலின் விடாமுயற்சி 
ஆண்டவனுக்கும் உயிர்கொடுக்க முயலுது.......

ஆண்களின் உடலில் வளரும் முடிகளை நீக்க சில வழிகள்!!!

ஆண்களின் உடலில் வளரும் முடிகளை நீக்க சில வழிகள்!!!
by Marikumar

ஆண் பெண் செக்ஸ்: சில டிப்ஸ்Today,

முடி என்பது அழகின் அம்சமாக அமைகிறது. ஆனால் அது ஒழுங்காக பராமரித்தால் மட்டுமே அழகு நிலைக்கும். அதனால் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு காலத்தில் உடம்பில் உள்ள முடியை பெண்கள் மட்டுமே நீக்கி கொண்டிருந்தனர். அது ஆணாக இருப்பின், அவர் ஒரு நீச்சல் வீரர் அல்லது தடகள விளையாட்டாளராக இருந்தால் மட்டுமே முடிகளை நீக்கி வந்தனர். மற்ற ஆண்கள் எல்லாம் செய்யவேமாட்டார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது.

இன்று பல ஆண்கள் பெண்களை போல் உடம்பில் உள்ள முடிகளை எடுத்து, வழுவழுப்பான முடிகள் அற்ற உடலை பெற ஆசைப்படுகின்றனர். ஆனால் அவைகளை முழுமையாக நீக்க அவர்கள் நினைப்பதில்லை. மாறாக முதுகு, மார்பு, கால்கள் மற்றும் கைகளில் உள்ள ரோமத்தின் நீளத்தை குறைக்க ஆசைப்படுகின்றனர்.

அதில் நீங்களும் ஒருவரா? உங்களுக்காக நாங்கள் ஒரு 6 வழிமுறைகளை பற்றி விளக்கியுள்ளோம். அவற்றைப் படித்து பின்பற்றுங்கள்.

வேக்சிங் அல்லது சுகரிங்

முடிகளை நீக்குதல் என்றால் பல பேருக்கு முதலில் மனதில் உதிப்பது வேக்சிங் தான். அதனுடன் சேர்ந்து நினைவுக்கு வருவது அதில் ஏற்பட போகும் வலியும் கூட. கண்டிப்பாக அது சுகமான அனுபவமாக இருக்காது, அதற்காக அது ஒன்றும் அவ்வளவு வேதனையையும் தராது. இருப்பினும். இது முடியை அதன் வேரிலிருந்து நீக்குவதால். இது சிறந்த வழிமுறையாக திகழ்கிறது. அதற்கு முடியை எடுக்க விரும்பும் இடத்தில் சூடான மெழுகை ஊற்றி, அதன் மீது ஒரு துணியை போட்டு நன்றாக தேய்த்து எடுத்தால், கையோடு முடிகளையும் நீக்கிவிடும். சுகரிங் என்பதும் வேக்சிங் போலத் தான். ஆனால் இதில் சர்க்கரை பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை, எலுமிச்சை, தண்ணீர் மற்றும் சிட்ரிக் அமிலம் கொண்டு பேஸ்ட் தயார் செய்யப்படுகிறது. இந்த வழிமுறைகளை திரும்ப திரும்ப பின்பற்றினால், முடிகளின் அடர்த்தி குறைந்து வேர்களும் வலுவிழந்து போகும்.

ஷேவிங்

ஆண்களில் பெரும்பாலானோர் சீரான முறையில் ஷேவிங் செய்வதுண்டு அல்லது வாழ்க்கையில் ஒரு கட்டம் வரை அதனை செய்திருக்கலாம். உடலில் உள்ள முடியை நீக்க மிகவும் எளிய வழியாக ஷேவிங் செய்வது இருக்கிறது. உடம்பில் உள்ள எந்த பகுதியாக இருந்தாலும் சரி, அங்குள்ள ரோமங்களின் மீது ஷேவிங் க்ரீமை தடவி, ரேசரை வைத்து முடிகளை நீக்கி விடலாம். கண்டிப்பாக முடிகளை நீக்கும் வழிமுறைகளில் ஷேவிங்கிற்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் ஷேவிங் செய்வதற்கு முன்பாக, ஷேவ் செய்ய வேண்டிய இடத்தை தண்ணீரில் நன்றாக நனைத்துக் கொள்ளவும். ஏனெனில் அது சரும துவாரங்களை திறக்க உதவும். மேலும் ஷேவ் செய்ய நல்ல தரமுள்ள ரேசர் மற்றும் ஷேவிங் க்ரீமை பயன்படுத்துங்கள். முக்கியமாக, முடி எந்த திசையில் வளர்கிறதோ, அந்த திசையை நோக்கி தான் ஷேவ் செய்ய வேண்டும்.

எலெக்ட்ரிக்கல் ட்ரிம்மிங்

மிகவும் நுட்பமான முறையில் உடலில் உள்ள முடிகளை பராமரிக்க எலெக்ட்ரிக்கல் ட்ரிம்மரை பயன்படுத்துங்கள். உடலில் உள்ள ரோமங்களை புதிதாக எடுக்க தொடங்கியவர்களுக்கு, இந்த முறை பெரிதும் கை கொடுக்கும். இது ரேசரை போல் இல்லாமல், பாதுக்காப்பாகவும் எரிச்சலுமின்றி இருக்கும். மேலும் முடியின் நீளம் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை இதனை கொண்டு சுலபமாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது கண்டிப்பாக வழுவழுப்பான சருமத்தை ஏற்படுத்தி கொடுக்காது. இது மென்மையான தேகம் உடையவர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த வழிமுறை.

முடிகளை நீக்கும் க்ரீம்

முடிகளை நீக்கும் க்ரீம்களை டெபிலாடோரீஸ் என்றும் அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான முடிகளை வலியில்லாமல் நீக்கும் வழி தான் இது. அதற்கு முடிகளை நீக்க வேண்டிய இடத்தில், இந்த க்ரீமை தடவி, 15-20 நிமிடங்கள் வரை தடவி, அதை அப்படியே விட்டு விட வேண்டும். இது முடியின் வேரில் உள்ள புரதத்தை நீக்கி, முடியை சுலபமாக நீக்கிவிடும். இருப்பினும் இவ்வகை கிரீம்கள் சருமத்தில் கடுமையாக நடந்து கொள்ளும். மேலும் அடர்த்தியான முடிகள் இருக்கும் இடத்தில், இது வேலை செய்யாது.

ஒரு அறிவுரை- இந்த க்ரீமை பயன்படுத்தும் முன், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று, அந்த க்ரீமுடன் வரும் துண்டு வெளியீட்டில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பின் உடலில் ஒரு இடத்தில் கொஞ்சமாக தடவி, உங்களுக்கு இது ஒத்துக் கொள்கிறதா என்பதை பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

லேசர் முறையில் முடி நீக்குதல்

லேசர் முறையில் முடியை நீக்கும் முறைக்கு. உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை ஒப்புதல் சான்று அளித்துள்ளது. இந்த முறைப்படி முடி நீக்கும் இடத்தில் லேசர் கதிர்கள் பாய்ச்சப்படும். இது மயிர்ப்புடைப்பை சூடாக்கி. அந்த இடத்தில் முடி வளர்வதை நிறுத்திவிடும். இந்த சிகிச்சையின் பலன், உங்கள் சரும நிறம் மற்றும் முடியின் நிறத்தை பொறுத்து மாறுபடும். அதனால் இந்த சிகிச்சைக்கு ஒத்து வருவீர்களா என்பதை முதலில் சோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை, முடிகளின் அடர்த்தி மற்றும் தரத்தை நிரந்தரமாக குறைப்பதால், இது விலை உயர்ந்த வழிமுறையாகும். மேலும் முடி நீக்கும் அனைத்து வழிமுறைகளுக்கும் இது தாயாக விளங்குகிறது. உடலில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் முடிகளை நீக்க வேண்டுமானால், லேசர் முறையை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் உடலில் சில பகுதிகளில் மட்டும் முடியை நீக்க வேண்டுமானால், வேக்சிங் முறையே சிறந்தது.

எலெக்ட்ரோலிசிஸ்

இந்த முறைப்படி, ஒரு சிறிய மெலிதான ஊசியை கொண்டு, ஒவ்வொரு மயிர்த்தண்டிலும் நுழைத்து, ஒவ்வொரு மயிர்ப்பைக்கும் சிறிய அதிர்ச்சி அளிக்கப்படும். அதனால் முடி வளர உதவி செய்யும் அணுக்கள் அழிந்துவிடும். இந்த அணுக்கள் போய்விட்டால், இனி நிரந்தரமாக உங்களுக்கு அந்த இடத்தில் முடி வளராது. இதுவும் ஒரு நிரந்தர தீர்வாக அமையும். ஆனால் இதற்கு உத்தரவாதம் கிடையாது. மேலும் இதன் பலன் ஒவ்வொரு நபரை பொறுத்து மாறுபடும். நெற்றிப் பொட்டில் வளரும் ரோமம், கழுத்தின் பின் வளரும் ரோமம் மற்றும் இங்கும் அங்கும் வளர்ந்திருக்கும் முடிகளை நீக்க, இந்த முறை சிறந்ததாகும். இது விலை உயர்ந்த முறை மட்டுமல்லாது, அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும். அதற்கு காரணம் உடலில் உள்ள ஒட்டு மொத்த முடியை நீக்க ஒரு வருடம் கூட ஆகலாம்.

ஆகவே, எந்த வழிமுறை உங்களுக்கு தோதாக அமையும் என்பதை நன்கு ஆராய்ந்து அதனை தேர்ந்தெடுங்கள்.

Thursday, September 12, 2013

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்..? Answer my questions

நான் கேக்கிற கேள்விக்கு பதிலை சொல்லுங்க பார்க்கலாம்..??
by Marikumar
ஆண் பெண் செக்ஸ்: சில டிப்ஸ்
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…)
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???
4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ??
5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா??
6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே… பரிசுனாலே அது இலவசம் தாணே…. இல்லயா??
9. Numberஐ ஏன் ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ??
11. இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க….???
12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்றானுங்களே… நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்… இல்லையா ???
14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிறுசா இருக்குறவங்கள விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
மக்களே விடை தெரிஞ்சவங்க எனக்கு கொஞ்சம் சொல்லுங்க… உங்களுக்கு புண்ணியமா போகும்….
இணையத்திலிருந்து பெறப்பட்டது

திருமண மலர்கள் தருவாயா tamil padal varigal

தமிழால் இணைவோம்:
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடி மேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அது தான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என் போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக் கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொலுசுயிடும் ஓசை கேட்டே
மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களை தான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

இனிய இரவு வணக்கம் நண்பர்களே!

இந்தியர்களுக்கு நன்மை penefit for indians


பேஸ்புக்கில் வலம் வரும் ஒரு நகைச்சுவை துணுக்கு உங்கள் பார்வைக்கு....

சோனியா மன்மோகன்சிங் சிதம்பரம் மூவரும் விமானத்தில் செல்லும்போது

சோனியா ஒரு நூறு ரூபாயை கிழே போட்டு நான் ஒரு ஏழை இந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.

அடுத்து மன்மோகன் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கிழே போட்டு நான் இரண்டு ஏழை  இந்தியர்களுக்கு  நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.

அடுத்து நம்ப சித்து நூறு ஒரு ருபாய் காசுகளை கிழே போட்டு நான் நூறு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.

அபோது விமான ஒட்டி சொன்னார் இப்போ உங்க மூவரையும் கிழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார்.

**************விளம்பரம்*****************

Wednesday, September 11, 2013

வாழ்வில் ரொம்ப கஷ்டம்.. ஆன விஷயங்கள்

ஸ்ஸ் ஸப்பா... வாழ்வில் ரொம்ப கஷ்டம்..  ஆன விஷயங்கள்

1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது.

2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாறியே பாவனை பண்றது.

3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்தறிப்பது.

4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது.

5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது.

6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது.

7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது.

8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது.

9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரைநாள் இருப்பது.

10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது.

-ஆதிரா.

மஞ்சள் துணிப்பை Message from தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்:
மஞ்சள் துணிப்பை :

சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பை, பழையது ஆன பின்பு தூக்கி போட்டாலும் மக்கிவிடும். மாசு ஏற்படுத்தாது. அதிக எடை தாங்கும் பை.

நெகிழிப் பை :

சுற்று சுழலுக்கு தீங்கு விளைவிக்கு, மக்கவே மக்காது, பூமிக்கு அடியில் நீரை விடாமல் தடுத்து விடும், அதிக எடை பொருட்கள் வைத்தால் அந்துவிடும்.

மஞ்சள் பையை தூக்கிகொண்டு வெளியே சென்றால் கேவலமாக பார்கிறார்கள். சுற்று சூழலிற்கு தீங்கு விளைவிக்கு நெகிழிப் பையை தூக்கிகொண்டு போக நீயே வெட்கப் படவில்லை, நம் சுற்று சூழலிற்கு தீங்கு விளைவிக்காத மஞ்சள் பையை தூக்கிக்கொண்டு போக நான் ஏன் வெட்கம் பட வேண்டும்?

இனிமே யாரது மஞ்ச பைய பத்தி கேவலமா பேசுனா செவுல்லையே ஒன்னு குடுங்க...

#நந்தமீனாள்
மதுரை.

தமிழால் இணைவோம்

(Sent via Seesmic http://www.hootsuite.com)

ஆண்மையை அதிகரிக்க 10 மிகசிறந்த இயற்கை உணவுகள் 10 best natural foods to increase masculinity

For many people in today's period of fertility is a problem due to the problem of unhealthy lifestyle, food habits and customs because of some.

More ankalu fertility problem is not only for women. The problem with this model is a women's only good enough to eat the right foods, and men should take only a few foods and activities.

If this kind of problem, we immediately went to the doctor holding the correct solution. But what is it that goes further treatment, eat a few meals to come. The solution to this problem can be seen through the foods.

 ஆண்மையை அதிகரிக்க 10 மிகசிறந்த இயற்கை உணவுகள் 


இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். 

Tuesday, September 10, 2013

மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் mana azhutham

மன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள்

மனிதனுக்கு 'மன அழுத்தம் ' என்னும்
வியாதி தான் கொடிய வியாதி.
அது சப்தமில்லாமல் நம்மை கொஞ்சம்
கொஞ்சமாக உயிரை எடுக்கும்.
அதை மனிதனை அளிக்கும் 'எமன் '
என்று கூட சொல்லலாம். அது எதனால்
வருகின்றது மற்றும் அதற்க்கான
தீர்வுகளைப் பார்ப்போம்.

வரும் காரணம் : 1
மனதில் 'தாழ்வு மனப்பான்மை '
மேலோங்கி நிர்ப்பது. தான் மற்றவர்களைக்
காட்டிலும் எல்லாவிதத்திலும்
குறைந்தவன்
அல்லது தனக்கு மதிப்பு ஏதுமில்லை என்
ஒரு உணர்வு.

அதன் தீர்வு : 1
இப்போது இருக்கும்
நிலைமையை மட்டும்
வைத்து எண்ணிக்கொண்டு இருக்காதே!
உனது வாழ்க்கையைவிட மோசமாக
உள்ள, சாவின் விளிம்பில்
நின்றுகொண்டிருக்கும்
கோடிகணக்கான மக்களின்
வாழ்கையை ஒருமுறை பார்.
அவர்களே நம்பிக்கையோடு காலம்
தள்ளுகின்றபோது உன்னால்
வாழமுடியாதா!
தாழ்வு மனப்பான்மையை உன்
மனதிலிருந்து அகற்றிவிடு. உன்
வாழ்கையை உயர்த்த வரும் உழைப்பு,
முயற்சி என்கிற அழகிய தங்க ரதம்
உன்பக்கத்தில் நிற்கிறது.
உனது தாழ்வு மனப்பன்மையை தூக்கி எற
அந்த ரத்தத்தில்
ஏறிக்கொண்டு வீறுநடை போடு. அதில்
உன்னைபோன்று பாதித்தவர்களை ஏற்றிக்க
அவர்களுக்கு புது தெம்பு கொடு.
இன்றிருக்கும்
நிலைமை நிரந்தரமானவை அல்ல.
மாறக்கூடியவை. மன மகிழ்ச்சி கொள்.
அனைத்தும் சரியாகிவிடும்.

வரும் காரணம் : 2
வாழ்வில் எவ்வித பிடிப்புமில்லாமல்
வீணான கற்பனைகள்,
எண்ணங்களை வளர்த்து கொண்டு 'தன்னம்பி
இருப்பது.

அதன் தீர்வு : 2
அதற்கு காரணம் 'பயம் ' தான்.
யாரைக்கண்டும் பயப்பட தேவையில்லை!
அவர்களும் உன்னைப்போன்ற மனிதர்கள்.
அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள்
கிடையாது. அவர்களுக்கென்று தனிப்பட
விதத்தில் 'பலம்' தனியாக இருப்பதில்லை.
உன்னாலும் பலம் பெறமுடியும்.
அதற்கு 'தன்னம்பிக்கை ' கொள். உன்
வாழ்வில் பிடிப்பு தானாக வரும்.

வரும் காரணம் : 3
பிறர் சுட்டெரிக்கும் வார்த்தைகளால்
பேசி அவமதிப்பது.
கௌரவத்தை குலைப்பது, உண்மைக்குப்
புறம்பாக
பழிகளை சுமத்துவது போன்றவற்றை பெ
எண்ணி மனதளவில் வருந்திக்
கொண்டிருப்பது.

அதன் தீர்வு : 3
வாழ்கையில்
முன்னேறும்போது 'விமர்ச்சனங்கள்' வரத்
தான் செய்யும். அதைப்பற்றி அதிகம்
கவலை படாமல் ,
உதறிதள்ளி விட்டு உன்னுடைய
குறிக்கோளை நோக்கி பயணம்
செய்துகொண்டிரு. அப்போது தான்
அவைகள் உன் காதில்விழாது.
வெற்றி உனதே!

வரும் காரணம் : 4
தொழில்களில் அல்லது வேலையில்
முடிவு எடுக்கமுடியாமல்
திணறுவது, செய்யும் காரியத்தில்
முழு ஈடுபாடு செலுத்த முடியாமல்
கவனக் குறைவாக செயல படுவது,
மறதியின் காரணமாக பல பிரச்சனைகள்
உருவாவது.

அதன் தீர்வு : 4
முடிவு இடிப்பது, வேலையில்
கவனக்குறைவு, மறதி ஆகியவற்றிக்குக்
காரணம் மனம் ஒருமுகப்
படுத்தமுடியாமல் இருப்பது.
அதை களைவதற்கு தியானப்
பயிற்சி சிறிதளவு தினமும் மேற்க்
கொள்ளுங்கள். நாளடைவில்
அனைத்திலும் தேர்ச்சி பெறுவீகள்.

வரும் காரணம் : 5
சில நேரத்தில் வழக்கமாக இருக்கும்
சூழ்நிலைகள் பதிலாக புதிய
சூழ்நிலைக்கு மாறும் போது ,
அதை சமாளிக்க வழி தெரியாமல்
திணறுவது, புதிய உணவு மற்றும்
உறவுகளில் மாற்றங்கள், தூங்கும்
நேரத்தில் பெரிய
மாறுதல்களை எதிர்கொள்ள முடியாமல்
திண்டாடுவது.

அதன் தீர்வு : 5
எவருக்குமே சூழ்நிலைகள்
மாறும்போது அனைத்துமே புதியதா
கூச்சமாகவும், யாரிடத்தில் என்ன
கேட்பது என்று குழம்புவதும் , தான்
மட்டும் தனியாக இருப்பது போன்ற
பிரமையும் உண்டாகும். அந்த
சமயங்களில், தான் மட்டுமே அதிகமாக
கஷ்டப்படுவது போலவும்
ஒரு உணர்வு உண்டாகும். ஆனால் பழகப்
பழக அந்த சூழ்நிலைகள்
உங்களுக்கு பிடிக்கத் துவங்கிவிடும்.
அதுவரை பொறுமையுடன்
மாற்றத்திற்கேற்ப
அனுசரித்து நடந்து கொண்டால் அந்த
சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக
மாறிவிடும்.
ஆத்திரப்பட்டு அப்போது சட்டுபுட்டென்ற
முடிவு எடுத்துவிடக்கூடாது.
அப்படி எடுக்கும் முடிவு சரியாக
இருக்காது. பொறுமை கொள்.
உனக்கேற்றவாறு சூழ்நிலைகள் மாறும்.

வரும் காரணம் : 6
வேலை, வேலை என்று ஓய்வில்லாமல் ,
மனதிற்கு சிறிதளவு கூட
ஓய்வு கொடுக்காமல் இருப்பதும்,
பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல்
கலங்கி நிற்பது.

அதன் தீர்வு : 6
'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'
என்பது சரிதான். ஆனால் உடலை,
மனதை வருத்திக்கொண்டு உடல்
ஆரோக்கியம் இழந்துவிடக்கூடாது.
வேலைக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
அதில் தவறில்லை. ஆனால் அதுவே பல
புது பிரச்சனைக்கு வழிவகுக்கக்
கூடாது. உடல், மனதிற்கு கட்டாயம்
நிம்மதியான ஓய்வு தேவை.
அது தூங்குவதால்
மட்டுமே சாத்தியமாகும். அதற்காக
ஒரு நாள் பிக்னிக், வெளி,
உள்நாடு சுற்றுப் பயணம்
மேற்கொள்வதால் மனதில் உற்சாகமும்,
உடலில் புத்துணர்ச்சியும் உண்டாகும்.
பிரச்சனையினால் ஏற்படும் கலக்கம்
மறைந்து அதை எதிர்கொள்ளும்
மனவலிமை கிடைக்கின்றது.

வரும் காரணம் : 7
தோல்விகளையே நினைத்துக்கொண்ட
ு மனச்சோர்வையும், மன
உறுதியையும் இழத்தல்.

அதன் தீர்வு : 7
'தோல்வி' என்பது ஒரு பனிப்பாறை.
வெப்பம் தாக்காத வரையில் அதன்
உறுதி 'டைட்டானிக்' போன்ற
மிகப்பெரிய
கப்பலையே கவிழ்த்து விடுமளவிற்கு வ
ஆனால் முயற்சி மற்றும் கடின
உழைப்பு என்னும் வெப்பம்
அதன்மீது படும்போது , அந்த
மலை போன்ற பனிப்பாறை உருகி இருந்த
இடம் தெரியாமல் மறைந்து விடும்.
ஆகையால் தோல்வி ஏற்படும்
போது உழைப்பையும்,
முயற்சியையும் விட்டுவிடக்
கூடாது.

வரும் காரணம் : 8
அன்பு உள்ளங்களை எதிர்பாராமல்
இழக்கும்போது அதனால்
தற்கொலை பற்றிய
எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும்
போதும் ….

அதன் தீர்வு : 8
எதிர்பாராமல்
அன்புள்ளங்களை இழக்கும்போது மாமதி
பூகம்பங்கள், எரிமலை மற்றும்
சுனாமி போன்ற ஆபத்தான உணர்வுகள்
ஓங்கி வரும். உன்
மனஉறுதி கொண்டு பூகம்பத்தை நிறுத்
அன்பு , சாந்தம், இரக்க
குணத்தை அதிகரித்து எரிமலையை கு
செய்.
தன்னம்பிக்கை கொண்டு சுனாமி அலைக
நீ நினைப்பது இனி நடக்கும்.

வரும் காரணம் : 9
பிறர் உதவியால் எளிதாக தீர்க்கும்
பிரச்சனைகளை மனதிலே அடக்கிக்
கொண்டு , பிறரிடம் அந்த
பிரச்சனை மற்றும்
உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல்
இருப்பது….

அதன் தீர்வு : 9
நீங்கள் எதிர்கொள்ளும்
பிரச்சனை உங்களுக்குப் புதிதாக
இருக்கலாம். ஆனால்
அதே பிரச்சனையை எதிர்கொண்டு சிலர்
எளிதாக தீர்த்து வெற்றி கண்டிருப்பார்கள
். அவர்களிடம்
பிரச்னையை பகிர்ந்துகொண்டு
அதன்படி நடந்தால் கை மேல் பலன்
கிடைக்கும். அப்படிப்பட்ட நபர்களின்
நன்பகத்தன்மையை கண்டிப்பாக
உறுதி செய்துகொள்ளவேண்டும்.

வரும் காரணம் : 10
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்
ஏற்படும் தொந்தரவினால் எப்போதும்
அழுவது.

அதன் தீர்வு : 10
தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான
சிகிச்சையினை உடனடியாக
மேற்கொண்டு அதன்படி நடப்பது.
உடற்ப்பயிற்சி, தியானம், யோகா மற்றும்
உங்களுக்கு பிடித்த
விளையாட்டுகளில்
ஈடுபடுவது போன்றவற்றில் கவனம்
செலுத்தும்போது உங்கள் உடல் மற்றும்
மனம் புதிய பலம் பெரும்.

வரும் காரணம் : 11
தான் நினைத்தது நடக்காமல் இருக்கும்
சமயத்தில் ஆவேசமும், எரிச்சலும்
அதிகரிக்கும் போது….

அதன் தீர்வு : 11
எந்த ஒரு காரியம் நடக்கவேண்டுமென்
றால் காலமும், நேரமும் கை கூடும்
வரை காத்திருக்க வேண்டும்.
பொறுமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கொண்டிருக்கும்
குறிக்கோளை அடைவீர்கள்.

வரும் காரணம் : 12
நேரம் காலம் தெரியாமல் செல்போன்
அழைப்புகள் வருவது..

அதன் தீர்வு : 12
செல்போன்
அழைப்புகளை ஒரு குறிப்பிட்ட
நேரத்தில் மட்டும்
ஏற்றுக்கொண்டு பதிலளியுங்கள். மற்ற
நேரத்தில் 'சைலன்ட் மோட் ' இல்
வைத்துக்கொள்ள முயலுங்கள்.
'தலை போகும் காரியத்திற்கு ' மட்டும்
மதிப்பு கொடுங்கள். நல்லதே நடக்கும்
என்று எப்போதும்
நம்பிக்கை கொள்ளுங்கள்.
மன அழுத்தம் என்பது மனதில் ஏற்பட்ட
காயங்களை அடிக்கடி நினைவுகளின்
மூலம் வெளிக்கொண்டு வந்து, அதன்
மூலம் வீணான கற்பனைகளை வளர்த்து,
விபரீத எண்ணங்களை உருவாக்கி,
ஆபத்தான செயலில் முடிவது.
மன அழுத்தத்தின் வேகம் அசுர வேகம்.
எதையும் சிந்திக்காமல் ,
சூழ்நிலைகளை மறக்கச்
செய்து ஆபத்தான முடிவெடுக்கும்
ஆற்றல் கொண்டது.
பொதுவாக மன அழுத்தத்தை தடுக்க ,
எதையுமே திட்டமிட்டுச் செய்யுங்கள்.
அதனால் செயல்களை செய்வதற்கு அதிக
நேரம் கிடைக்கும் . நிதானமாக ,
நினைத்த நேரத்தில் வெற்றிகரமாக
செய்துவிடலாம்.
திட்டமிடுவோம்!
மன அழுத்தம் ஏற்படுவதை தடுப்போம் !

வியாபார தந்திரம் sales technique for profit

பழம் பெருமை! / வியாபார காந்தம் !

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம்
செய்யும் முதியவர் ஒருவர், அந்தப்
பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார்.
'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!'
என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.
எவரும் பழம் வாங்க முன்வரவில்லை.
சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர்
கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன்
பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள்
பத்து ரூபாய்!' என்று கூவினான்.
அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர்
அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!'
என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல்
போகவே, கீழே இறங்கி விட்டார்.
அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்'
என்று கூவியபடி அந்தப் பேருந்தில்
ஏறிய இளைஞன்,
ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின்
விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக்
காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.
முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த
இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம்
இல்லையே! அவனுக்குப் போட்டியாக
நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய்
என்று விற்றால்தானே உங்களுக்கு விற்ப
அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த
விலைக்கு பழங்களை வாங்கி,
லாபத்தைக் குறைத்து அதிக
விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!"
என்று தனது ஆலோசனைகளை அள்ளி வி
முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன்
என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.
'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்...
சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம
சனத்துக்கு மனசு வராது. அதனால் நான்,
'ஐந்து பழம்
பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப்
போவேன். அப்புறமா, 'ஆறு பழம்
பத்து ரூபாய்'னு அவன்
வந்து சொன்னதும்...
'அடடே லாபமா இருக்கே'னு சனங்க
சட்டுன்னு வாங்கிடுவாங்க.
அவன்தான்யா நிசமான வியாபாரி.
சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான்
என்னை முன்னாடி அனுப்புறான்!''
என்றார் முதியவர்.

Monday, September 9, 2013

Ovvoru pookkalume solkirathe ஒவ்வொரு பூக்களுமே tamil paadal varigal

தமிழால் இணைவோம்:
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம்முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா.
துக்கம் இல்லை என்ன தோழா
ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு

இனிய இரவு வணக்கம் நண்பர்களே!

(Sent via Seesmic http://www.hootsuite.com)

Sunday, September 8, 2013

சவூதி அரேபியாவில் பணியாற்றும் சொந்தங்களுக்கு Southi arabia friends family

தமிழால் இணைவோம்:
சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களா நீங்கள்? பத்திரமா பாத்துக்கங்க...

வளைகுடா வாழ் குறிப்பாக சவூதி அரேபியாவில் பணியாற்றும் சொந்தங்களுக்கு! உங்களுக்குத் தெரியுமா?

சவூதி அரேபியாவின் தட்ப வெட்ப சீதோசன நிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்களா?

இந்த ஆண்டு குறிப்பாக கடந்த சில மாதங்களில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உடன் களப்பணியாற்றிய சகோதரர்கள் என்று அதிகமான பேர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போய் உள்ளனர்.

ஒவ்வொருவரும் மரணத்தை சுகித்தே தீருவோம் என்பது இயற்கை.

சவூதி அரேபியாவில் 5 ஆண்டுகள் அதையும் தாண்டி 10 ஆண்டுகள் பணியாற்றுபவர்களா நீங்கள்? என்றால் உங்கள் இதயத்தை பத்திரமா பாத்துக்கங்க...

உங்கள் உடல் நலனை மாதம் ஒரு முறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

சவூதியின் தட்பவெட்ப நிலைப்படி காற்றில் ஈரப்பதம் குறைவு, அடுத்ததாக காற்றில் பிராண வாயும் குறைவு அதன் காரணமாக அதிகமானவர்களுக்கு அலர்ஜி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

சாப்பிடும் உணவு வகைகளில் அதிகமாக பதப்படுத்தப்பட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள் இதனால் நீண்ட காலம் சவூதியில் பணியாற்றியவர்களுக்கு கொலஸ்ட்ரால், ரத்தக் கொதிப்பு, சுகர் என்று எதாவது ஒன்று அன்பளிப்பாகக் கிடைத்திருக்கும்.

இதை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காமல் இருந்துவிட்டு பாதிப்பின் கடைசியில் கவனிக்கும் போது அந்த நோய் தனது வீரியத்தோடு எல்லையை தாண்டியிருக்கும்.

சகோதரர்களே! வெளிநாட்டில் வேலை செய்யும் அனைவரும் எதாவது ஒரு வகையில் மன இருக்கத்துடனேயே இருக்கிறார்கள் ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் அதுவும் குடும்பத்துடன் இருப்பவர்களாக இருக்கும்.

பிரச்சனைகளின் போது இருக்கமான மனநிலையிலிருந்து விடுபட முயற்சியுங்கள். அந்த பிரச்சனையை மறந்து அடுத்த வேலையில் கவனம் செலுத்துங்கள்.

மன இருக்கத்தின் போது உடனே தொழுகையை நாடுங்கள்... உங்கள் மனதில் உள்ள குறைகளை சுமைகளை இறைவனிடம் கேளுங்கள் முறையிடுங்கள். மனச்சுமையிலிருந்து விடுதலை பெறுங்கள்...

உங்களை நம்பி உங்கள் உறவுகள் காத்திருக்கின்றன.

மாதம் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்து உங்களின் உடல் நலனை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உணவு பழக்கவழக்கங்களில் கட்டுபாடு வைத்துக் கொள்ளுங்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

பரக்கத் நிறைந்த பேரிச்சை, ஆலிவ், தேன் போன்ற உணவுகள் தாராளமாக கிடைக்கும் நாடு இது அவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

via; ரொம்ப நல்லவன்

Visit our Page -► தமிழால் இணைவோம்

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா தமிழ் - Tamil mgr song lyrics

தமிழ் - Tamil:
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா (சின்னப்)
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா சின்னப்

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி (ஆசை)

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி-உன் (நரம்) சின்னப்

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா (மனிதனாக)
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா (வளர்ந்து)

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா! (தனி)
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா!

வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!-சின்னப்
✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரைப்படம் : அரசிளங்குமரி
பாடியவர்: டி எம் சௌந்திரராஜன்
எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசையமைத்தவர்: ஜி .ராமனாதன்.
காணொளி வடிவில் http://www.youtube.com/watch?v=-Zjv1Lu22hE
✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎

#தமிழ் #தமிழ்மொழி #Tamil
✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎ ✍ ✎

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts