Saturday, October 5, 2013

இன்டர்நெட் இப்படிதான் இயங்குகிறது how to work internet

இன்டர்நெட் இப்படிதான் இயங்குகிறது

by Marikumar

இன்றைய உலகில் இன்டர்நெட் பற்றி தெரியாதவர்களே இல்லை என்று கூறலாம் நண்பரே அந்த அளவுக்கு அது பிரபலம். எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.

தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது.

இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.

நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது.

இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும்.

இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது.

முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன.
இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது.

ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு.

ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன. Thatstamil
Share |

Show commentsOpen link

பென்டிரைவை சாவியாக பயன்படுத்தலாம்...! Pen drive key

பென்டிரைவை சாவியாக பயன்படுத்தலாம்...!

by Marikumar

இன்றைய காலத்தில் கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருப்பது தான் யு.எஸ்.பி டிரைவ் எனப்படும் பென்டிரைவ் நண்பரே.
உங்கள் கம்ப்யூட்டரைத் திறக்கும் திறவு கோலாக அல்லது மந்திரக் கோலாக, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம். பிரிடேட்டர் (Predator) என அழைக்கப்படும் புரோகிராம் இதற்கு உதவுகிறது.

இது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதுவரை நீங்கள் பாஸ்வேர்ட் கொடுப்பதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக, பூட்டியும் திறந்தும் வைத்திடும் பணியை மேற்கொள்பவராக இருந்தால், இந்த வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம். சினிமாவில் வரும் ரகசிய போலீஸ் மாதிரி, யு.எஸ்.பி. ட்ரைவினைப் பயன்படுத்தலாம்.

இதனை, யு.எஸ்.பி. போர்ட்டில் நுழைத்தால் மட்டுமே, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம். எடுத்துவிட்டால் பயன்படுத்த இயலாது.
இந்த யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் இல்லாமல், யாரேனும் உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முயற்சித்தால், அனுமதி இல்லை (Access Denied) என்ற செய்தியைப் பெறுவார்கள். உங்கள் ப்ளாஷ் ட்ரைவினை, கம்ப்யூட்டரின் திறவு கோலாக மாற்ற, கீழ்க் குறித்துள்ள செயல்முறைகளின்படி செயல்படவும்.

முதலில் இணையத்தில் இருந்து , Predator என்ற புரோகிராமினை டவுண்லோட் செய்திடவும். தொடர்ந்து கம்ப்யூட்டரில் அதனை இன்ஸ்டால் செய்திடவும். இந்த புரோகிராமை Predator என்று கூகுளில் டைப் செய்தாலே போதும் டவுன் லோட் லிங்க் உங்களுக்கு எளிதாக கிடைக்கும்.

பிரிடேட்டர் புரோகிராம் இயங்கத் தொடங்கியவுடன், ப்ளாஷ் ட்ரைவினை, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கவும். இதனால், உங்கள் கம்ப்யூட்டரின் ட்ரைவில் உள்ள எதுவும் மாற்றி அமைக்கப்படமாட்டாது.

எனவே பயப்படாமல், இதனைப் பயன்படுத்தவும். இதனை இணைத்தவுடன், டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்குபடி உங்களைக் கேட்கும். ஓகே கொடுத்து தொடரவும்.

இப்போது Preferences என்று ஒரு விண்டோ கிடைக்கும். இதில் உள்ள சில முக்கிய செட்டிங்ஸ் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். "New password" என்ற பீல்டில் பாதுகாப்பான, யாரும் எளிதில் கண்டு கொள்ள முடியாத பாஸ்வேர்ட் ஒன்றைக் கொடுக்கவும்.

இங்கு கிடைக்கும் Always Required என்ற பாக்ஸில், டிக் அடையாளம் ஏற்படுத்தினால், பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரைத் திறக்க, உங்களிடம் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
இறுதியாக, Flash Drives என்ற பிரிவில், சரியான யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினைத் தேர்ந்தெடுக்கவும். இதனை முடித்த பின்னர், "Create key" என்பதில் கிளிக் செய்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.

இப்போது பிரிடேட்டர் புரோகிராம் முடிக்கப்படும். இது முடிந்தவுடன், டாஸ்க் பாரில் உள்ள பிரிடேட்டர் புரோகிராமின் ஐகானை அழுத்தவும். சில விநாடிகள் கழிந்த பின்னர், அந்த ஐகான் பச்சை நிறத்தில் மாறும். இதன் மூலம், பிரிடேட்டர் இயங்கத் தொடங்கியது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு 30 விநாடிகளுக்கொருமுறை, பிரிடேட்டர் உங்களுடைய ப்ளாஷ் ட்ரைவ் ப்ளக் செய்யப்பட்டுள்ளதா எனச் சோதனையிடும். இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் குறைந்து, இயக்கம் நின்றுவிடும்.
 பிரிடேட்டர் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்த, டாஸ்க் பார் மெனுவில், "Pause monitoring" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டிருக்கையில், யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அதனை நீங்கள் கம்ப்யூட்டர் இயக்கு கையில் டாஸ்க் பார் மெனுவில் உள்ள "View log" மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இது மட்டுமின்றி, நீங்கள் பிரிடேட்டர் தரும் இணைய தளம் சென்றால், அதில் ஒவ்வொரு முறை யாரேனும் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க முயன்று தோல்வி அடைந்தால், அதனை எத்தனை நிமிடங்களுக்கொருமுறை ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம் என்பதனை செட் செய்வதற்கான புரோகிராம் வழி தரப்பட்டிருக்கும்.

இதில் என்ன பிரச்னை என்றால், பிரிடேட்டர் யு.எஸ்.பி. ட்ரைவ் இயங்கவென, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவினை நீங்கள் பயன்படுத்திய நிலையிலேயே வைக்க வேண்டும்.

மற்ற யு.எஸ்.பி ட்ரைவ்கள் பயன்படுத்துவதில் ஒன்றைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும். அல்லது, ஒன்றில் இணைப்பு கொடுத்து, பல யு.எஸ்.பி. ட்ரைவ்களைப் பெறும் இணைப்பு ஒன்றை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
Share |

Show commentsOpen link

இன்டர்நெட் திடீர்னு கட் ஆயிடுச்சுனா.... break internet

இன்டர்நெட் திடீர்னு கட் ஆயிடுச்சுனா....

by Marikumar

இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது மக்களுக்கு அத்தியாவசிய தேவையாகிவிட்டது என்றே கூறலாம். தற்போது கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால், இணைய இணைப்பு திடீர் திடீர் என விட்டுப் போவது, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை ஆகிறது. குறிப்பாக கம்பி வழி இணைப்பு கொண்டோருக்கு இது தொடர்ந்து வரும் பயமுறுத்தலாகவே உள்ளது. இணைய இணைப்பு இல்லாமல் போவது என்பது, நமக்கு தும்மல் வருவது போல ஆகிவிட்டது.

தும்மலையாவது ஒரு சில காரணங்களுக்காகக் கட்டாயம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் இன்டர்நெட் இணைப்பு எப்போது கட் ஆகும்; மீண்டும் எப்போது வரும் எனச் சொல்ல முடியாது. பொதுவாக இது போல கட் ஆனால், உடனே கம்ப்யூட்டரை ரீபூட் செய்து பார்க்கிறோம்.
நமக்கு இன்டர்நெட் சர்வீஸ் வசதி தரும் நிறுவனத்தைத் திட்டித் தீர்க்கிறோம். கட்டிய காசு தீர்ந்தவுடன் முதலில் இந்த நிறுவனத்தை முடித்து , வேறு ஒரு நிறுவனத்தின் சேவைக்கு மாற்றினால் தான் நிம்மதி என்கிறோம். இருப்பினும் கீழ்க்காணும் விஷயங் களையும் செய்து பார்க்கலாமே

1. வேறு எதனையும் செய்வதற்கு முன்னால், உங்கள் மோடத்தினை மீண்டும் ரீபூட் செய்திடுங்கள். ஒன்றுமில்லை, அதற்கு வரும் மின்சக்தியை நிறுத்தி சில நொடிகள் கழித்து மீண்டும் ஆன் செய்திடுங்கள். பின் உங்கள் ரௌட்டரை ஆன் செய்திடுங்கள்.

இவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துவோரே அதிகம். அவர்கள் அதனை மட்டும் ரீபூட் செய்தால் போதும்.

2. உங்களுக்கு ரௌட்டர் வழி இணைப்பு இல்லை என்றால் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். அதன் பின் கேபிள் மோடத்தினை பூட் செய்திடுங்கள்.

3. மோடத்தில் விளக்குகள் எரிந்து டேட்டா பரிமாற்ற விளக்குகள் சிமிட்டத் தொடங்கினால் இன்டர்நெட் இணைப்பு வந்துவிட்டது என்று பொருள். அனைத்து விளக்குகளும் எரியவில்லை என்றால் உங்கள் இணைப்பிற்கான கேபிள்கள் அனைத்தும் சரியாகப் பொருத்தப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள்.

அதன் பின் உங்களுக்கு இணைப்பு தந்துள்ள நிறுவனத்தின் கஸ்டமர் சர்வீஸ் எண்ணுக்கு போன் செய்திடுங்கள். அதற்கு முன் அவரிடம், எது போன்ற குறை என்று சொல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் குறையினைத் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

4. புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறந்து கொள்ளுங்கள். பின் www.dinamalar.com என்று தள முகவரி கொடுத்துப் பாருங்கள். தினமலர் வெப்சைட் கிடைத்தால், நல்லது. இல்லை என்றால் தொடர்ந்து அடுத்து தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளுங்கள்.

5. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில், ரன் பாக்ஸில் cmd என டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் மானிட்டர் திரையில், கறுப்பு பாக்ஸில் டாஸ் இயக்கம் கிடைக்கும். அங்கு துடிக்கும் கர்சரில் Ipconfig /all என டைப் செய்திடுங்கள்.
உங்களுடைய default gateway மற்றும் DNS servers அறிந்து கொள்ளுங்கள். பின் இவற்றிற்கு கட்டளை கொடுத்துப் பாருங்கள். பதில் கிடைக்கிறதா?

6. இவை அனைத்தும் உங்கள் இணைப்பைத் தராவிட்டால், traceroute எனக் கொடுத்துப் பார்த்தால் எங்கு பிரச்சினை ஏற்பட்டு இணைப்பு அறுந்து போகிறது என்று தெரியும். traceroute என்பது ஒரு கட்டளைச் சொல். உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் ஒரு பாக்கெட்டாக எங்கெங்கு செல்கின்றன என்று காட்டச் சொல்லும் ஒரு கட்டளை. traceroute எனக் கொடுத்து பின் ஒரு ஸ்பேஸ் கொடுத்து உங்களுக்குச் சிக்கலைத் தரும் தளத்தின் முழு முகவரியைத் தர வேண்டும்.

பொதுவாக ஒரு தளம் கிடைக்கவில்லை என்றால் இது போல traceroute மற்றும் ping கட்டளைகள் கொடுத்துப் பார்த்துவிட்டுப் பின் இன்டர்நெட் சேவை தரும் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். முதலில் உங்கள் யூசர் நேம் கொடுக்கவும். அவர்கள் உங்கள் அக்கவுண்ட்டினைச் சார்ந்த மேலும் சில தகவல்களை உறுதி செய்வார்கள்.

அவர்கள் கூறும் செயல்பாடுகளையும் பொறுமையாக மேற்கொண்டு, பதில் கொடுங்கள். நிறுவனத்தின் சர்வரில் பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனே அதனை உங்களுக்குத் தெரிவித்து, உங்கள் குறை எந்த எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எத்தனை மணி நேரத்திற்குள் அது சரி செய்யப்படும் எனவும் கூறுவார்கள்.

பொறுமையாகக் காத்திருக்கவும். தொடர்ந்து சரி ஆகவில்லை என்றால், மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தினைத் தொடர்பு கொண்டு நினைவு படுத்தவும். நிச்சயம் இணைப்பு சரி செய்யப்படும்.
Share |

Show commentsOpen link

Friday, October 4, 2013

வெப் மெயில் பற்றி தெரியுமா? Offline email

வெப் மெயில் பற்றி தெரியுமா?
by Marikumar

இன்று இணையத்தில் உள்ள அனைவரிடமும் உள்ளது சோஷியல் மீடியா அக்கவுன்டும், மெயில் அக்கவுன்டும் தான். முதலில் ஹாட் மெயில் இதனைத் தொடங்கி வைத்தது. பின்னர் யாஹூ, ஜிமெயில் என இது தொடர்ந்தது. தற்போது இந்த வகையில் ஜிமெயில் மிக அதிகமான வாடிக்கையாளர்களுடன் முன்னணியில் இயங்கி வருகிறது. மின் அஞ்சல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளையும் தந்து வருகிறது.

வெப் மெயில் எனப்படும் இணைய தளத்திலேயே நம் அஞ்சல் பயன்பாட்டினைக் கொள்வது நமக்குப் பல வழிகளில் பயனைத் தருகிறது. இவற்றை எந்த இடத்திலும், எந்த கம்ப்யூட்டர் மூலமாகவும் அணுகலாம்.

தற்போது கம்ப்யூட்டர் மட்டுமின்றி, ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு இதற்குக் கட்டாயமாக வேண்டும். ஆனால், இது மட்டுமின்றி, இன்னும் சில கூடுதல் வசதிகளையும் இந்த வெப் மெயில் தளங்கள் கொண்டுள்ளன. இவை குறித்து இங்குகாணலாம்.

நீங்கள் எந்த வெப் மெயில் பயன்படுத்துபவராக இருந்தாலும் இந்த வசதிகள் தரப்படுகின்றன. இவற்றை நீங்கள் உங்கள் விருப்பப்படி பயன்படுத்தலாம் நண்பரே.

வெப் மெயிலை நாம் பெற, அது தரும் தளத்தினை இணையம் மூலமாகவே தான் அணுக முடியும். ஆனால், இப்போது, சில மாற்றங்கள் செய்து, இணைய இணைப்பு இல்லாத போதும் அணுகலாம்.

அது எப்படி சாத்தியமாகிறது என்பதனைக் காணலாம். ஜிமெயில் பயனாளர்கள், இதுவரை கூகுள் குரோம் பிரவுசர் பயன்படுத்தாதவராக இருந்தால், இந்த வசதியினைப் பெற குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும். இதுவும் இலவசமே.

பின், இந்த பிரவுசர் மூலம், குரோம் வெப் ஸ்டோரை அணுக வேண்டும். இங்கு ஆப்லைன் கூகுள் மெயில் அப்ளிகேஷன் (Offline Google Mail app) என்னும் புரோகிராமினைப் பெற வேண்டும். இதற்கு இந்த ஸ்டோர் தளத்தில் Add to Chrome என்னும் பட்டனில் கிளிக் செய்திட வேண்டும்.

தொடர்ந்து, நீல நிறத்தில் Offline Google Mail என்னும் பட்டன் Chrome's Apps என்பதன் கீழ் அமைக்கப்படும். (பிரவுசரில் புதிய டேப் ஒன்றினைத் திறந்து, கீழாக உள்ள Apps லிங்க்கில் கிளிக் செய்திடவும்.)

இந்த ஐகானில் கிளிக் செய்து 'Allow offline mail' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Continue என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், உங்கள் ஆன்லைன் ஜிமெயில் இன்பாக்ஸின் ஒரு காப்பி உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்படுத்தப்படும்.

நீங்கள் மின் அஞ்சல் செய்தி ஒன்று அனுப்ப வேண்டும் எனில், இன்டர்நெட் இணைப்பு இல்லாத போதும் "அனுப்பலாம்'. நீங்கள் "அனுப்பிய' செய்திகள், இன்டர்நெட் இணைப்பு பெற்றவுடன் அனுப்பப்படும். இந்த Offline Google Mail ஏற்பாட்டினை உங்கள் சொந்த பெர்சனல் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமே ஏற்படுத்தவும். வேறு கம்ப்யூட்டர் எனில் மற்றவர்கள் உங்கள் செய்திகளைக் காண நேரிடும்.

விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் மற்றும் யாஹூ மெயில் ஆகியவற்றிற்கும் இதே போன்று இமெயில் புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்திடலாம்.

புதிய சோதனை முயற்சிகள்:

ஜிமெயில் செயல்பாட்டின் வெற்றிக்கு மூல காரணமாக இருப்பது அதன் Labs என்னும் அம்சமாகும். இது ஒரு தனித்தளமாகும். இங்கு புதிய வசதிகள் அனைத்தும் சோதித்துப் பார்க்க நமக்குக் கிடைக்கும். தன் மற்ற பிரிவிற்கான சோதனைச்சாலைப் பிரிவுகளை, கூகுள் மூடிவிட்டது.

ஆனால், கூகுள் மெயிலுக்கு மட்டும் இந்த Labs வசதி தொடர்ந்து கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்த, வழக்கம் போல ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழையவும். பின்னர், வலது மேல் மூலையில் உள்ள சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்த பக்கத்தில் கிடைக்கும் Labs லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

உடன் 'Some crazy experimental stuff' என்ற பக்கம் கிடைக்கும். இங்கு மின் அஞ்சலுக்குள்ளாகவே, கூகுள் மேப் பயன்படுத்திப் பார்க்கும் சோதனை முன் தோற்றம் பெறலாம். நமக்குத் தேவையான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இன்பாக்ஸ்களை உருவாக்கி சோதனை செய்து பார்க்கலாம்.

டெம்ப்ளேட் ஏற்படுத்தி, அவற்றிலிருந்து மின் அஞ்சல்களை அமைத்துப் பார்க்கலாம். இந்த சோதனை சாலையில் என்ன முயற்சிகளை மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த ஆப்ஷன் முன் உள்ள Enable என்பதனைக் கிளிக் செய்து, இந்த சோதனை முயற்சிகளை மேற்கொள்ளவும்.

மெயில் வடிகட்டி ஏற்படுத்த:

ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹு மெயில் பயனாளர்கள், தங்களுக்கு வரும் அஞ்சல் செய்திகளை, வடிகட்டிப் பிரித்துப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நம் இன்பாக்ஸ், பேஸ்புக் அறிவிப்பு, நியூஸ் லெட்டர் மற்றும் இது போன்ற தேவையற்ற மெயில்களால், மிகப் பெரிதாகக் காட்சி அளிக்காது. இவற்றை எல்லாம், அதன் பொருள் அடிப்படையில், இன்பாக்ஸ்களை அமைத்துப் பிரித்து அமைக்கலாம்.

மெயில்களை வடிகட்ட, பலவகை அடிப்படைகளை அமைக்கலாம். மெயில்களை அனுப்புபவர்களின் பெயர்கள், சப்ஜெக்ட் பீல்டில் உள்ள சொற்கள், செய்தியில் உள்ள சில சொற்கள், செய்திகளுடன் இணைப்பு உள்ளவை மற்றும் இல்லாதவை எனப் பலவகைகளில் மெயில்களை வடி கட்டிப் போல்டர்களாகப் பிரிக்கலாம்.

ஜிமெயிலில் வடி கட்டி அமைக்க, வலது மேல் மூலையில் உள்ள சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து click Filters மற்றும் Create New Filter ஆகியவற்றில் கிளிக் செய்திடவும்.

ஹாட்மெயில் தளத்தில், Options கிளிக் செய்து More Options என்பதனைத் தேர்ந்தெடுத்து, Rules for sorting new messages' என்பதில் கிளிக் செய்திடவும். இவற்றின் மூலம் மெயில்களைப் பிரித்திடலாம்.

பின்னர் New என்பதில் கிளிக் செய்து பிரிவுகளை அமைக்கவும். யாஹூ மெயில் தளத்தில், Options கிளிக் செய்து, Mail Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இடது பக்கம் உள்ள மெனுவில் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில் Add என்பதனைக் கிளிக் செய்து பில்டர்களை அமைக்கவும்.

தானாக இன்பாக்ஸ் சுத்தம் செய்திட

ஹாட் மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம், வடி கட்டிகளுக்கு மேலாகச் செயல்படும் வகையில், Sweep என்னும் டூலைத் தருகின்றன. இந்த டூல், இன்பாக்ஸை, சுத்தமாகவும், ஓர் ஒழுங்கு முறையோடும் வைத்திருக்க உதவுகிறது.

குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து வந்த ஒரு மெயிலைத் தேர்ந்தெடுத்து, இந்த டூல் மூலம், அவர் அனுப்பியுள்ள அனைத்து மெயில்களையும் அழிக்கலாம். இந்த டூலைப் பயன்படுத்தும் வழிகளை நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். ஸ்வீப் டூலைப் பயன்படுத்த, ஏதேனும் ஒரு இமெயிலை அடுத்துள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

பின்னர், மேலாக உள்ள டூல் பாரில் கிடைக்கும் ஸ்வீப் பட்டன் அருகே உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், உங்களுக்குத் தேவையான செயல்பாட்டினைத் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளலாம்.

புதிய இமெயில் அக்கவுண்ட்கள் உருவாக்கவும்

நாம் அன்றாடம் செல்லும் பல இடங்களில், நம்மைப் பற்றிய தகவல்களைக் கேட்டு வாங்குகின்றனர். இந்த தகவல்களில், மின் அஞ்சல் முகவரியும் ஒன்றாக உள்ளது. இங்கெல்லாம், நீங்கள் வழக்கமாகப்பயன்படுத்தும் மின் அஞ்சல் முகவரியினைத் தருவதைத் தவிர்க்கலாம்.

இதற்கு பெரும்பாலான இமெயில் சர்வர்கள், மாற்று (alias) இமெயில் முகவரிகளை அமைத்துக் கொள்ள வசதி தருகின்றன. இந்த மாற்று இமெயில் முகவரிகளை, இது போன்ற வர்த்தக மையங்களில் பயன்படுத்தலாம். பின்னர், இது போன்ற அஞ்சல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட போல்டருக்கு, வடி கட்டிகள் மூலம் திருப்பி விடலாம்.

எடுத்துக்காட்டாக, ஹாட் மெயில் தளத்தில், மவுஸ் பாய்ண்ட்டரை, இடது பக்கம் உள்ள இன்பாக்ஸ் தலைப்பின் வலது பக்கம் கொண்டு சென்று, சிறிய சக்கர ஐகான் மீது கிளிக் செய்திடவும். இங்கு Create a Hotmail alias என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு தரப்பட்டுள்ள பாக்ஸில், புதிய மின் அஞ்சல் முகவரியினை டைப் செய்திடவும். செய்த பின்னர், 'Create a Hotmail alias' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

யாஹூ மெயிலில், மேலாக இடது புறம் உள்ள உங்கள் யூசர் பெயரில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் Account Info என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், Manage Your Aliases என்பதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர், Add an Alias என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஜிமெயில் தளத்தில், மாற்று யூசர் பெயரை, உடனடியாக, எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். நம் இமெயில் முகவரியில் ஒரு ('+') அடையாளத்தை இணைத்து, அதனைத் தொடர்ந்து இன்னொரு சொல்லை இணைத்து, புதிய மாற்று இமெயில் முகவரியை உருவாக்கலாம்.

பாதுகாப்பாக அக்கவுண்ட் செயல்பாடு

மற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது இன்டர்நெட் மைய கம்ப்யூட்டர் என எதத்துவதாக இருந்தால், உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர்டுக்குப் பதிலாக, குறியீடுகளைப் பயன்படுத்தலாம். இதற்கு, நீங்கள் உங்கள் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஹாட் மெயில் அல்லது அவுட்லுக் டாட் காம் தளங்களில், வழக்கம் போல, உங்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திடவும். வலது மேல் மூலையில் உள்ள, உங்கள் யூசர் பெயரில் கிளிக் செய்திடவும். இங்கு Accountஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து 'Edit security info' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் படிவத்தில், உங்கள் மொபைல் போன் எண் உட்பட, அனைத்து தகவல்களையும் பதிந்திடவும்.

இந்த பாதுகாப்பு நிலையை, அடுத்து வரும் நிகழ்வுகளிலும் பயன்படுத்த, ஹாட் மெயில் லாக் இன் திரையில், 'Get a single use code to sign in with' என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து உங்கள் மொபைல் போனுக்கு லாக் இன் குறியீடு ஒன்று தரப்படும். இது ஒரு டெக்ஸ்ட் மெசேஜாக மொபைல் போனுக்கு வரும். இதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஜிமெயில் இதே போன்ற ஒரு சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில், ஜிமெயில் (http://mail.google.com) தளத்திற்குச் செல்லவும். பின் வழக்கம் போல உங்கள் அக்கவுண்ட் லாக் இன் செய்திடவும். உங்கள் இமெயில் முகவரியில் கிளிக் செய்து, கிடைக்கும் விண்டோவில் Account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு இடது பக்கம் காணப்படும் Security என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் '2step verification' என்ற தலைப்பில் கிடைக்கும் Edit என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து, நீல நிறத்தில் உள்ள Start Setup என்ற பட்டனில் கிளிக் செய்து, அடுத்தடுத்து கேட்பவற்றைத் தரவும்.

அடுத்து நீங்கள் வேறு ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில் ஜிமெயில் தளத்தை அணுகுகையில், கூகுள் மெயில் தளம், உங்கள் மொபைல் போனுக்கு குறியீடு ஒன்றை அனுப்பும். இதனை உங்கள் பாஸ்வேர்டுடன் இணைத்துத் தர வேண்டும்.

Thatstamil
Share |

Show commentsOpen link

துவைக்கவே வேண்டாம் தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி dont wash your clothes

துவைக்கவே வேண்டாம் தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today

கான்சாஸ் : எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்லை. துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது.
குடும்பஸ்தர்கள் ஒவ்வொருவருக்கும் துணி துவைப்பது என்பது மிகவும் கஷ்டமான வேலைகளில் ஒன்றாக உள்ளது. கிராமங்களில் பரவாயில்லை. ஆறு, குளத்தில் துவைத்து விடுவார்கள். நகரத்திலோ வாஷிங் மெஷினே கதி.

இது போன்ற புலம்பல் ஆசாமிகளுக்காக தன்னாலேயே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. ரொம்பவும் சந்தோஷப்படாதீங்க… இந்த துணி வந்துள்ளது இங்கல்ல… அமெரிக்காவில்… அமெரிக்க ராணுவத்தில்  '' யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட், இன்ஜினியரிங் சென்டர்'' என்ற ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானி தாவுரங் என்பவர் புதிய வகை துணி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 5 செட் யூனிபார்ம் வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என்று பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் உடுப்புகளை பணியிடங்களில் துவைத்துக் கொள்ள வசதிகள் இருப்பதில்லை. இதனால் பல வீரர்கள் அழுக்குத் துணியோடு இருக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இதையடுத்து ராணுவ வீரர்களுக்கு துவைக்க வேண்டிய அவசியம் இல்லாத துணியை கண்டறிந்தால் என்ன என்ற சிந்தனை தாவுரங்குக்கு ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான் துவைக்காத துணி.

இவர் கண்டறிந்துள்ள இந்த புதிய வகை துணியில் ''ஓம்னி போபிக் கோட்டிங்'' என்ற வகை ரசாயன பூச்சு கலந்து நெய்யப்பட்டுள்ளது. இந்த பூச்சு பூசப்பட்ட துணியில் தயாரிக்கப்பட்ட ராணுவ சீருடையை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தினாலும் அழுக்கு ஆகாது. மேலும் கிரீஸ், சேறு போன்ற கறைகள் பட்டாலும், சீருடையை கழட்டி உதறினால் அதுவும் போய்விடும். அதே போல உடம்பில் எந்த மட்டமான துர்நாற்றம் இருந்தாலும் அதுவும் சீருடையில் காட்டாது. சீருடை நறுமணத்தோடு இருக்கும்.

புதிய வகை துணி குறித்து தாவுரங் கூறியதாவது: போர்க் கள முனையில் இருக்கும் எங்கள் வீரர்களுக்கு முகாம் அலுவலகங்களில் துணி துவைப்பதற்காக இயந்திர வசதிகள் உள்ளன. ஆனால் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் துணி துவைப்பதற்காக வர இயலாது. ராணுவப்பணி என்பது மிகவும் கடுமையானது. அவர்கள் இங்கு வந்து செல்வதை தவிர்க்கும் வகையில் புதிய ரக துணி கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயன கலவையால் உடல் நலத்துக்கு எவ்வித பிரச்னையும் வராது. புதிய ரக துணியில் தைக்கப்பட்ட சீருடைகள் கான்சாஸ் மாகாணம் போர்ட் ரெய்லி என்ற பணியிடத்தில் உள்ள வீரர்களுக்கு சோதனை முறையில் கொடுத்து அணிவித்தோம். எவ்வித பிரச்னையும் இல்லை. இந்த துணியானது தனக்குத்தானே சுத்தம் செய்து கொள்ளும் வகையில் அதாவது கழட்டி உதறினால், துவைத்தது போன்ற புத்துணர்வோடு சீருடை காணப்படும் என்றார்.

The post துவைக்கவே வேண்டாம் தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

ரொம்ப மோசமான பாஸ்போர்ட் பாக். பாஸ்போர்ட்தானாம்.. pakistan passport

ரொம்ப மோசமான பாஸ்போர்ட் பாக். பாஸ்போர்ட்தானாம்..

by Marikumar

இருப்பதிலேயே மோசமான பாஸ்போர்ட்கள் என்ற பெயரை பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட்கள் பெற்றுள்ளன. சோமாலியாவை விட பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் மோசமாம். ஹென்லி அண்ட் பார்ட்ர்னர்ஸ் என்ற நிறுவனம் இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ள ஒருவர், உலக நாடுகளில் 32 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும். அதேசமயம், இந்திய பாஸ்போர்ட்கள் கெளரவமான நிலையிலேயே உள்ளன. அதாவது விசா இல்லாமல் 52 நாடுகளுக்கு ஒரு இந்தியர் செல்ல முடியும்.

ஆப்கானிஸ்தான் நிலைமை இன்னும் மோசம். ஆப்கானிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தால் 28 நாடுகளுக்கு மட்டும்தான் விசா இல்லாமல் போக முடியும்.

பாகிஸ்தான், சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மோசமான பாஸ்போர்ட்கள் கொண்ட நாடுகள் வரிசையில் கடைசி நிலையில் உள்ளன.

பின்லாந்து, ஸ்வீடன், இங்கிலாந்துதான் பெஸ்ட்: இந்த வரிசையி்ல பின்லாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதே போல ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருந்தால் உலக அளவில் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்.

அமெரிக்க பாஸ்போர்ட்கள் இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளன. அவர்கள் 172 நாடுகள் வரை விசா இல்லாமல் போக முடியுமாம்.
Share |

Show commentsOpen link

ரோஜா உதடுகளை பெற! Rose lips

ரோஜா உதடுகளை பெற!!
Tamil NewsToday, 05:30

உதடுகள் அழகாக ரோஜா போன்ற  சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள்,ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்.

உதடு வெடிப்புக்கு: சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

ரோஜாப்பூவின் இதழ்களை எடுத்து காய்க்காத பசும்பாலில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து நன்றாக பிசைந்து அதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சி, உதடு வெடிப்பு குறைந்து உதடு சிவப்பாகும்.
...
Show commentsOpen link

Thursday, October 3, 2013

எந்த காரணத்தைக் கொண்டும் காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வரவே கூடாது: வைகோ பேச்சு Vaiko speech Congress don not come rule

எந்த காரணத்தைக் கொண்டும் காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வரவே கூடாது: வைகோ பேச்சு Vaiko speech Congress don not come rule 

மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சி பயணம் என்ற பெயரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திறந்த வேனில் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
நேற்று மாலை வைகோ ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் பேசினார். கணேச மூர்த்தி எம்.பி. தலைமை தாங்கினார்.

விண்டோஸில் மறைந்திருக்கும் டூல்கள்.... windows tools

விண்டோஸில் மறைந்திருக்கும் டூல்கள்....
by Marikumar

தற்போது நாம் அதிகம் பயன்படுத்தும் ஓ.எஸ் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 தான் இதுதான் மக்களுக்கு மிகவும் யூஸர் பிரண்ட்லியாக இருக்கிறது.மேலும், நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள்.

சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம்.

இவற்றில் பல டூல்ஸ்களை, அவற்றின் பெயர் தெரிந்தாலே, அவற்றைக் கொண்டு இயக்கலாம். டூல்ஸ் புரோகிராமின் பெயரைத் தேடி அறிந்து, அதனை டைப் செய்து, என்டர் தட்டினால், உடன் அந்த டூல்ஸ் நம் பயன்பாட்டிற்கு வந்து நிற்கும்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், சர்ச் ஸ்கிரீனில், முதலில் Settings வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும். இவற்றில் சில பயனுள்ள டூல்ஸ்களைப் பார்க்கலாம்.

விண்டோஸ் மெமரி டயக்னாஸ்டிக் (Windows Memory Diagnostic): இதனை இயக்கினால், அது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரின் மெமரியைச் சோதனையிட்டு, அதில் பிழைகள் இருந்தால், எடுத்துக் காட்டும். எனவே, கம்ப்யூட்டரில் உள்ள மெமரி குறித்துச் சோதனையிட, வேறு ஒரு புரோகிராம் தேவையில்லை. விண்டோஸ் தரும் இந்த டூலையே பயன்படுத்தலாம்.

ரிசோர்ஸ் மானிட்டர் (Resource Monitor): கம்ப்யூட்டரின் பல்வேறு பகுதிகளின் செயல் திறனை அறிந்து கொள்ள இந்த டூலைப் பயன்படுத்தலாம். சிபியு, டிஸ்க், நெட்வொர்க் மற்றும் மெமரி கிராபிக்ஸ் என அனைத்து பிரிவுகளின் திறனை அளக்கிறது.

ஒவ்வொரு திறனுக்குமான செயல்பாட்டு புள்ளி விபரங்களை எடுத்துத் தருகிறது. எனவே, இதன் மூலம், எந்த புரோகிராம், நம் கம்ப்யூட்டரின் டிஸ்க்கினை அல்லது நெட்வொர்க்கினை மிகவும் அதிகமாகப் பயன்படுத்துகிறது என அறியலாம்.

எந்த செயல்பாடு, இன்டர்நெட் இணைப்புடன், அல்லது வேறு இணைக்கப்பட்டுள்ள சாதனங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது என்பதனை அறியலாம். டாஸ்க் மானேஜர் புரோகிராம் தன் செயல்பாட்டில் அதிகமான தகவல்களைத் தருவதனைக் காட்டிலும், இந்த புரோகிராம் தருகிறது.

டாஸ்க் மானேஜர் புரோகிராமினை இயக்கி, அதில் உள்ள Performance டேப்பினை கிளிக் செய்து, பின்னர் இதில் கிடைக்கும் Resource Monitor ஐ இயக்க வேண்டும். ஸ்டார்ட் மெனுவில் அல்லது ஸ்டார்ட் ஸ்கிரீனில், தேடல் கட்டத்தில் Resource Monitor என்று டைப் செய்தும் இதனைப் பெறலாம்.

பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): பெர்பார்மன்ஸ் மானிட்டர் டூல், பல்வேறு செயல்பாடுகள் குறித்த விபரங்களைத் தேடித் தரும். குறிப்பிட்ட கால நேரத்தில் கம்ப்யூட்டர் புரோகிராம்களின் செயல்பாட்டில் உள்ள வேறுபாட்டினை இதன் மூலம் அறியலாம்.

மேலே சொல்லப்பட்ட பெர்பார்மன்ஸ் மானிட்டர் என்பது, மைக்ரோசாப்ட் மேனேஜ்மெண்ட் கன்சோல் டூல்ஸ் (Microsoft Management Console (MMC) என்ற தொகுப்பின் ஒரு பகுதி தான். பெரும்பாலான இது போன்ற டூல்ஸ்களை, Administrative Tools போல்டரில் பெறலாம் அல்லது, Computer Management என்ற அப்ளிகேஷனைத் திறந்தும் பெறலாம்.

காலத்தில் செய்யப்பட வேண்டியவை என்று அடையாளம் தரப்பட்ட பணிகளைக் காண்பதற்கும், அவற்றை செட் செய்வதற்கும் இந்த டூல் பயன்படுகிறது. நாம் வரையறை செய்திடும் பணிகளோடும், சிஸ்டம் செட் செய்து அமைத்திடும் பணிகளையும் காலத்தே செயல்படுத்தும்.

சிஸ்டத்தில் ஏற்படும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் காட்டும். சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யப்படும் நிகழ்வுகளிலிருந்து, அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிராஷ் ஆவதிலிருந்து, புளு ஸ்கிரீன் ஆப் டெத் நிகழ்வு வரை அனைத்தையும் பட்டியலிட்டு தரும்.

உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், பங்கிடப்பட்ட போல்டர்களைக் காட்டும் ஒரு இன்டர்பேஸ். எந்த எந்த போல்டர்கள், உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் பங்கிடப்படுகின்றன என்பதனைக் காட்டும் ஒரு டூல்.

உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை நாம் தெரிந்து கொள்ளப் பயன்படும் டூல். இதன் மூலம் அவற்றைச் செயலிழக்கவும் செய்திடலாம். புரோகிராம்களின் ட்ரைவர்களை செயல்படும்படி அமைக்கலாம்.

டிஸ்க்கினைப் பிரித்துக் கையாளும் பார்ட்டிஷன் மேனேஜர் டூல். டிஸ்க் இடத்தைப் பிரிக்க, வேறு ஒரு தர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை இல்லை. இதனையே பயன்படுத்தலாம்.

Services:

விண்டோஸ் இயக்கத்தில், பின்புலத்தில் மேற்கொள்ளப்படும் வேலைகளைக் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த நமக்கு உதவிடும் டூல். Administrative Tools போல்டரில், மற்ற பயன்பாட்டு புரோகிராம்களும் கிடைக்கின்றன. விண்டோஸ் பயர்வால் போன்ற பாதுகாப்பு தரும் புரோகிராம்கள் உட்பட பல புரோகிராம்கள் உள்ளன.

User Accounts: விண்டோஸ் சிஸ்டத்தில், வழக்கமான இன்டர்பேஸ் மூலம் கிடைக்காத, யூசர் அக்கவுண்ட்ஸ் குறித்த விபரங்களை, இந்த மறைத்து வைக்கப்பட்டுள்ள User Accounts டூல் தருகிறது. இதனைத் திறக்க, WinKey+R கீகளை அழுத்தி ரன் டயலாக் கட்டம் பெறவும். netplwiz அல்லது control user passwords2 என டைப் செய்து, என்டர் தட்டவும். இந்த டூல் கிடைக்கும் விண்டோவிலேயே, Local Users and Groups டூலை இயக்கத்திற்குக் கொண்டு வர ஷார்ட் கட் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், விண்டோஸ் நிர்வகித்திட பல டூல்கள் கிடைக்கும்.

மற்ற டூல்களைப் போல, இது மறைத்து வைக்கப்பட்ட டூல் அல்ல. ஆனால், விண்டோஸ் பயன்படுத்துவோர் பலரும் இதனை அறிந்திருப்பது இல்லை. உங்கள் கம்ப்யூட்டரில் அழிக்கப்பட வேண்டிய பைல்களை இது கண்டறியும். தற்காலிக பைல்கள், பழைய சிஸ்டம் ரெஸ்டோர் நிலைகள், விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்கள் மேம்படுத்தப்படுகையில், விடப்பட்ட தேவையற்ற பைல்களை இது கண்டறிந்து காட்டும்.

PC Cleaning Utility புரோகிராம் செய்திடும் அனைத்து பணிகளையும் இது செய்திடும். இது இலவசமாக விண்டோஸ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. டிஸ்க்கினை கிளீன் செய்யத் தொடங்கி, நம்மிடம் பணம் பறிக்கும் வேலையினை இது மேற்கொள்ளாது.

நம்மில் பலரும் சிகிளீனர் புரோகிராமினைப் பயன்படுத்துகிறோம். அதே வேலையினை விண்டோஸ் சிஸ்டத்தில் இலவசமாக இணைந்தே வழங்கப் படும் டிஸ்க் கிளீன் அப் புரோகிராம் செய்கிறது. ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் Disk Cleanup என டைப் செய்து இதனைப் பெறலாம்.

ரிஜிஸ்ட்ரி எடிட்டர். நம்மில் பலரும் அறிந்த ஒரு டூல். மைக்ரோசாப்ட் இதனை மறைத்தே வைத்துள்ளது. regedit என டைப் செய்து இதனைப் பெறலாம். இதனைக் கையாள்வதில் கவனம் தேவை. எதற்கும், இதனைத் திறக்கும் முன், இதன் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

மிக அருமையான ஒரு புரோகிராம் டூல். விண்டோஸ் இயக்கத்தின் போது, என்ன என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், எந்த எந்த புரோகிராம்களை இயக்க வேண்டும், இயங்கி வரும் எந்த புரோகிராம்களை நீக்க வேண்டும் என நாம் முடிவு செய்வதனை இதன் மூலம் நிறைவேற்றலாம். ஸ்டார்ட் மெனுவில் msconfig என டைப் செய்து இதனைப் பெறலாம்.

System Information: இதனை இயக்கும் கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களையும் இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். கம்ப்யூட்டர் மாடல் எண் என்ன என்பதிலிருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள டிவிடி ராம் சாதனம் எந்த மாடலைச் சேர்ந்தது என்பது வரை அறிந்து கொள்ளலாம். இப்படியே அனைத்து இயக்கங்கள் குறித்தும் தகவல்களை இதன் மூலம் பெறலாம்.

மேலே சொல்லப்பட்ட பல பயன்பாட்டு டூல் சாதனங்கள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம், நாம் எப்போதாவது, நம் தேவைகளுக்கு இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share |

Show commentsOpen link

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 5–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் Dussehra festival 5th day kodiyettam

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 5–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் Dussehra festival 5th day kodiyettam

Tamil NewsToday, 05:30

உடன்குடி.அக்.3–

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டுவார்கள். அதன்பின் தனக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்வார்கள்.

விழாவையொட்டி 5–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை தினசரி நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருள்வார்.

வேடம் அணிந்த பக்தர்கள் தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், கரகம், காவடி, குறவன், குறத்தி மற்றும் கிராமிய கலைகள், டிஸ்கோ ஆகியன இணைத்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி காணிக்கை பெறுவார்கள். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தசரா திருவிழா களை கட்டும்.

விழாவின் முக்கிய நாளான 14ம் தேதி திங்கட்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்குவார்கள்.நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி வேடம் அணிந்த பக்தர்கள் அம்மனை அணிவகுத்து செல்வார்கள். பின்பு கடற்கரையில் சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து மறுநாள் அக்டோபர் 15ம் தேதி செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெருவீதி உலா சென்று மாலை சுமார் 5 மணி அளவில் கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்படும்.தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் நெல்லை அன்புமணி , தக்காரும் உதவி ஆணையருமான செல்லத்துரை, நிர்வாக அதிகாரி சங்கர் செய்து வருகின்றனர்.

...
Show commentsOpen link

பிரபாகரன்…தலைவராக சிறந்த ரோல்மாடல்! - பிரகாஷ்ராஜ் actor prakashraj son

பிரபாகரன்…தலைவராக சிறந்த ரோல்மாடல்! எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை! பிரகாஷ்ராஜ்

by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today,

என் மகன் உயிரோடு இருந்திருந்தால், விடுதலைப்புலி பிரபாகரனை அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டியிருப்பேன்'னு சொல்லியிருக்கீங்க. பிரபாகரன் மீதான விமர்சனங்களை தாண்டியும் அவரை அவ்வளவு பிடிக்குமா?"

பிரபாகரன் மேல் எனக்கு எந்த விமர்சனமும் இல்லைனு சொல்லமாட்டேன். அதே நேரம், விமர்சனம் இல்லாமல் யாருமே இருக்க முடியாது.

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்த காந்திமீதுகூட விமர்சனங்களை அடுக்கின ஆளுங்கதான் நாம்.

ஆனா, விமர்சனங்களையும் தாண்டி கருத்து வேறுபாடுகளையும் கடந்து, யார் மக்களுக்கு உண்மையா இருந்திருக்காங்களோ, அவங்கதான் தலைவர்கள்.

தன் போராட்டத்துக்கும் தன்னை நம்பிய மக்களுக்கும், உண்மையாவும் நேர்மையாவும் பிரபாகரன் நடந்துக்கிட்டார்னு நான் நம்புறேன்.

போரில் தன் மகனைப் பலி கொடுத்ததில் தொடங்கி நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும்.

பிரபாகரனின் ஆளுமை, கம்பீரம், மக்கள் மீது அக்கறை, இலட்சியத்துக்கு உயிரையும் தரும் அர்ப்பணிப்பு… இது எல்லாமே எனக்குப் பிடிச்ச விஷயங்கள்.

ஒரு தலைவனா பிரபாகரனை 'ரோல்மாடலா' சுட்டிக்காட்டுறதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!"

இவ்வாறு விகடன் மேடைக்கு வழங்கிய பதில்களில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

The post பிரபாகரன்…தலைவராக சிறந்த ரோல்மாடல்! எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை! பிரகாஷ்ராஜ் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Wednesday, October 2, 2013

பகிருங்கள்... உதவுங்கள் ... please help share your friends

பகிருங்கள்... உதவுங்கள் ...
by Marikumar

சுதா.... அன்பு தோழி.. பழைய அலுவலக நண்பணின் மனைவியும் கூட .. புன்னகை பூ ..ஓயாமல் சிரிப்பவள்.. எப்போது சென்றாலும் சாப்பாட்டில் அன்பையும் சேர்த்து சமைத்து பரிமாறுபவள்... எனக்கொரு பிரச்சினை வந்த போது சளைக்காமல் போனில் , நேரில் என ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தவள்... அவளுக்கும் கணவனுக்கும் ஏதோ மனஸ்தாபம் வந்தபோது இரு வருடமாக என்னிடம் என் நண்பனை குறை கூற பயந்து தன்னை ஒளித்து கொண்ட நாகரீகம் தெரிந்தவள் ...

இத்தனை நாளுக்கு பின் என் நண்பனிடமிருந்து போன்.. சுதா மிகவும் கவலைக்கிடம் என்று செய்தி வர ஓடோடி சென்றோம்... புன்னகை அழகி இருபத்தெட்டு வயது பெண் பத்துவயது பெண் போன்ற உருவில் ஒரேயடியாக உருமாறி கட்டிலோடு ஓட்டிக்கிடந்தாள்... இரண்டு சிறுநீரகமும் பழுது அடைந்து விட்டது ... டாக்டர்கள் கை விரிக்க அரசு மருத்துவமனையின் ஒரு மூலையில் கிடந்தாள் ...

நெஞ்சே வெடித்து விட்டது .. மனது பெரும்பாரமாகிவிட்டது .. அப்பாவி பெண்ணுக்கு கடவுள் தந்த பரிசை காணும்போது கடவுளையே திட்ட தோணுகிறது .... இன்னமும் பாதி நேரம் நினைவில்லாமல் இருப்பவள் நினைவு திரும்பியவுடன் நம்பிக்கையோடு சொல்கிறாள்...

" சாகவெல்லாம் மாட்டேண்டா... கண்டிப்பா திரும்ப வருவேன் " எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்.. ஆனால் அவள் உடல்நிலை மிக கவலைக்கிடம் ... நம்பிக்கையே நல்லது... எறும்புக்கும் வாழ்வு உள்ளது என்பதை அவளுக்கு நாம் கொஞ்சமாவது கருணை காட்டலாமே...

பிளீஸ் நண்பர்களே.. அவளுக்கு சிறுநீரகம் தர ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிரார், அதற்க்கான செலவுகள் சுமார் பத்து லட்சம் போல ஆகுமாம் ..எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்துவிட்டு வந்தோம் ...

எத்தனையோ நண்பர்கள் எவ்வள்வோ செலவு செய்கிறோம்.. ஒவ்வொருவரும் ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் கூட அவள் உயிர் பிழைப்பாள். உங்களால் முடிந்தவர்கள் அவள் அக்கவுண்டுக்கு சிறு தொகை அனுப்பி உதவுங்கள்..

நன்றி உள்ளங்களே.. எல்லோரும் வேண்டுங்கள் .. மனிதனே தெய்வம்.. அவனை விட உதவ தெய்வம் யாருமில்லை. அன்பே சிவம்..

Name : D.Sudha

Her account no : 170901000005513

Bank : Indian Overseas Bank ( Rathinapuri branch, Coimbatore )

IFSC code : IOBA0001709 Contact : Aasaithambi (HUsband),

Ph: 9894135368 Mr. Aasai thambi H/O Sudha, 28, Krishnaraj Colony, Siddha Thottam, Ganapathy, Coimbatore - 6410066

Hospital Name: Sthyam Kidney care center

Hospital Phone: 0422 2400401

தமிழால் இணைவோம்

Nagaraj Sweet

Source: Facebook
Share |

Show commentsOpen link

போலீசிடம் ஆபாசமாக பேசிய 5 பேர் கைது sexy talk with police

போன் செய்து போலீசிடம் ஆபாசமாக பேசிய 5 பேர் கைது
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today

காஜியாபாத்: போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு, அடிக்கடி தேவையற்ற அழைப்புகளை மர்ம நகர்கள் செய்து வந்தனர். அதில் பேசியவர்கள், பணியில் இருந்த பெண் மற்றும் ஆண் போலீசாரிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்தனர். இதுபற்றி கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் பெண் மற்றும் ஆண் போலீசார், உயரதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசிய மர்ம நபர்களை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி அழைப்பில் வந்த எண்களை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த எண்களை வைத்து 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காஜியாபாத்தை சேர்ந்த இவர்களது பெயர் சத்வீர், ரமேஷ், அஜய், சதாப் மற்றும் ராகுல் என்பது தெரியவந்தது. பிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post போன் செய்து போலீசிடம் ஆபாசமாக பேசிய 5 பேர் கைது appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

விண்டோஸ் 7 சில தகவல்கள்... windows 7 tips

விண்டோஸ் 7 சில தகவல்கள்....
by Marikumar

தற்போதும் அதிக யூஸர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஓ.எஸ் எது என்றால் அது விண்டோஸ் 7 என்றே கூறலாம்.மேலும், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம்.

நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை.

விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க chr, iTunes இயக்க it) என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.

ஒரு சிடி அல்லது டிவிடி திரைப்பட சிடியைப் போட்டவுடன், அது இயங்கத் தொடங்கு கிறது. அது ஏன்? என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? விண்டோஸ் ஆட்டோ பிளே (Windows Auto Play) என்ற செயல்பாடு இதனை இயக்குகிறது. இந்த இயக்கம் எந்த சிடிக்கும் பொருந்தும். அது பைல்கள் அல்லது புரோகிராம்கள் இருப்பதாக இருந்தாலும் இதே போலச் செயல்படும்.

இதனை நம் விருப்பப்படியும் மாற்றி அமைக்கலாம். இதற்கு முதலில் Control Panel> AutoPlay எனச் செல்லவும். இங்கு சிடி, டிவிடி, கேமரா, ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்தை இணைத்தாலும் அதனை எப்படி இயக்க வேண்டும், இணைத்தவுடனா அல்லது நாம் விரும்பும் போதா என செட் செய்திடலாம்.

மாறா நிலையில், விண்டோஸ் 7 சிஸ்டம், திறக்கப் பட்டிருக்கும் விண்டோ ஒன்றை நீங்கள் ஓர் ஓரத்திற்கு இழுத்துச் சென்றால், விண்டோ வினைச் சுருக்கி ஓரத்தில் அமைக்கும்; மேலாக இழுத்தால், திரை முழுமையும் கிடைக்கும்.

வேறு வகையில் திரையில் பாதியாக அமைக்கும். பல விண்டோக் களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்த வாறே இயக்க எண்ணுபவர்களுக்கு இந்த செயல்பாடு உதவக் கூடியதாகவே உள்ளது. ஆனாலும், பலருக்கு இது எரிச்சலைத் தரும்.

இந்தச் செயல்பாட்டினை நிறுத்த எண்ணுவார்கள். இதனை நிறுத்த, Control Panel, Ease of Access Center சென்று, Make the mouse easier to use என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

விண்டோஸ் இயக்கம் அல்லது தினந்தோறும் நீங்கள் பயன் படுத்தும் ஒரு அப்ளிகேஷன் இயங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா? விண்டோஸ் 7 இயக்கத்தில் இதனைப் புதிய ஒரு வழியில் சரி செய்திடலாம். வழக்கமான உங்கள் யூசர் அக்கவுண்ட் விடுத்து, தனியாக ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து, அந்த பயனாளராக இந்த அப்ளிகேஷன்களை இயக்கிப் பார்க்கவும். இந்த வழியில் மீண்டும் பிரச்னைகள் வருகின்றனவா எனக் கண்காணிக்கவும்.

இந்த அக்கவுண்ட்டில் பிரச்னைகள் இல்லை என்றால், பிரச்னைகள் சிஸ்டத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை என்று பொருளாகிறது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததில், அல்லது செட்டிங்ஸ் அமைப்பதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நேர்ந்திருக்கலாம். இரண்டு அக்கவுண்ட்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டால், அப்ளிகேஷன் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

பைல்களின் துணைப் பெயர், நீங்கள் எத்தகைய பைலைத் தேடுகிறீர்கள் அல்லது தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் காட்டும். .doc என்பது வேர்ட் பைலின் துணைப் பெயர். ஒரு டிஜிட்டல் போட்டோ .jpg என்ற துணைப் பெயரினைக் கொண்டுள்ளது.

இப்போது வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களின் துணைப் பெயரை மறைத்துக் காட்டுகிறது. ஆனால், இந்த பெயர் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், விண்டோஸ் எக்ஸ்பு ளோரரை இயக்குங்கள்.

பின்னர் Organize, Folder and search options எனச் செல்லுங்கள். இங்கு View டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்பதற்கு முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், தொடக்கத்தில் கீ போர்டில் டைப் செய்கையில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் விரல்கள் ட்ரேக் பேடைத் தொட்டு விட்டால், உடன் கர்சர் எங்காவது சென்று நிற்கும். டைப் செய்வது எல்லாம் வேண்டாத இடத்தில் டைப் ஆகும். ட்ரேக் பேடில் விரல் அல்லது உள்ளங்கைப் பாகம் படாமல் டைப் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இந்த சிரமத்தை TouchpadPal 1.2 என்ற புரோகிராம் நீக்குகிறது. இதனைhttp://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டால், பிரச்னை தீரும். இது தானாகவே இயங்கி, நீங்கள் கீ போர்டில் டைப் செய்கையில், ட்ரேக் பேடின் செயலாக்கத்தினை நிறுத்திவிடும்.
Share |

Show commentsOpen link

Tuesday, October 1, 2013

விரதம் ஏன் எது எப்படி எப்போது? Eat Stop Eat Fasting Tips

விரதம் ஏன் எது எப்படி எப்போது?

by smahi
New Tamil
விரதம் ஏன் எது எப்படி எப்போது?

Eat-Stop-Eat-Fasting-Tips

வயிறு நிறைந்திருக்கும்போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம்' என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை. எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை. ஆனாலும், பெண்கள் தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.

விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு.... இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது... இப்படி விரதங்கள் பல விதம். ஏன் விரதமிருக்க வேண்டும்? எது சரியான விரதம்? யாரெல்லாம் விரதமிருக்கலாம்? விரதமிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? விரிவாகப் பேசுகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சந்திரன்.

''நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும். தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம். இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.

இது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. நடிகைகள், மாடல் போன்றவர்கள், போட்டோ ஷூட்டுக்கு முன்னால், 3 நாள்களுக்கு பழ விரதம்தான் இருப்பார்கள். அதன் விளைவாக அவர்களது முகத்தில் பொலிவு கூடும். உடலில் தண்ணீர் தேக்கம் இருக்காது என்பதே காரணம்.

கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது. இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள். வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.

விரதத்தை முடிக்கும் போது பழரசம் குடிப்பது ஏன்?

சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் உண்ணா விரதமிருக்கும் போது, கடைசியில் பழச்சாறு குடித்து, அதை முடிப்பதைப் பார்த்திருக்கிறோம். அது ஏன் தெரியுமா? பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது. நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது. பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட. விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.

விரதமிருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை?

செரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும். பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. செரிமானத்துக்கு மெனக்கெடுவதைத் தவிர்த்து, உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு சக்தி மேம்படும். விரத நாள்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக்
கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.

விரதம் இருந்தால் உடல் இளைக்குமா?

விரதமிருக்கும் போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், அப்பளம், காரசார புளியோதரை, காரக்குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச் சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அவற்றில் உள்ள உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான் காட்டும். ஆனால், அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது!

விரதத்தை முடித்து விட்டு விருந்து சாப்பிடலாமா?

அது அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த கலோரி உணவுகளை உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை முடித்த பிறகும், மிதமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.

யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது?

குழந்தைகள், டைப் 1 நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள்... தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்டோர்...

நன்றி - குங்குமம் தோழி

Attached Images
Eat-Stop-Eat-Fasting-Tips.jpg (29.0 KB)
Show commentsOpen link

நரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்… gray hair tips

நரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா? இதோ சில சூப்பர் டிப்ஸ்…

by abtamil

பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.

ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பிக்கையுடன் முடியை சரியாக பராமரித்து வந்தால், நிச்சயம் முடியை கருமையாக்க முடியும்.

இங்கு அத்தகைய நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் நரை முடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இஞ்சி

நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

செம்பருத்தி

வாரத்திற்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

தேங்காய் எண்ணெய்

சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

ஹென்னா/மருதாணி

பொடி விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கெட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.

கறிவேப்பிலை

நிபுணர்கள் கூட, நரைமுடியைப் போக்கக்கூடிய பொருட்களில் கறிவேப்பிலை மிகவும் சிறந்தது என்று பரிந்துரைக்கின்றனர். அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலையை குளிக்கும் நீரில் போட்டு, அந்த நீரில் தினமும் கூந்தலை அலச வேண்டும்.

தயிர்

தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும்.

வெங்காயம்

வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

மிளகு

நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் ஊற்றி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும்.

நெல்லிக்காய்

கூந்தலை கருமையாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் நெல்லிக்காய். எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலோ அல்லது நெல்லிக்காய் எண்ணெயை தலைக்கு தடவி வந்தாலோ, நரைமுடியில் இருந்து விடுதலைப் பெறலாம்.

ப்ளாக் டீ/காபி

ப்ளாக் டீ/காபி கூட நரைமுடிக்கு நல்ல நிவாரணி. அதற்கு ப்ளாக் டீ/காபியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூந்தலில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

 

Show commentsOpen link

பாசம் என்பது நம்பிக்கை....love is trust

பாசம் என்பது நம்பிக்கை....love is trust

by naliniselva

ஆகாயத்தில் பரந்துகொண்டிடிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரிய தொடங்கியது

பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது

ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப்போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார்

இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ?

குழந்தை சொன்னது ..

எங்க அப்பா தான் இந்த விமானத்தின் பைலட் அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எனக்கு தெரியும் ..

பெண்பிள்ளையை பெற்ற அப்பாவுக்கு தான் தெரியும் மகளுடைய பாசம்

பாசம் என்பது நம்பிக்கை....love is trust

Show commentsOpen link

பக்கவாத நோய் பற்றி பக்கா ரிப்போர்ட்! Pakkavaatham

பக்கவாத நோய் பற்றி பக்கா ரிப்போர்ட்!

by Marikumar

உலகிலே மிக அதிக அளவு மக்களை ஊனமாக்குவது..! வருடத்திற்கு ஆறு கோடி மக்களை உலகம் முழுக்க படுக்கையில் தள்ளி, முடக்கிப் போடுவது..! வருடத்திற்கு ஒன்றரை கோடி மக்களை உலகம் முழுக்க பலிவாங்கிக் கொண்டிருப்பது..! எந்த நோய் தெரியுமா? ப்ரெயின் அட்டாக் எனப்படும் பக்கவாத நோய்!!

உலகம் முழுக்க 6 வினாடிக்கு ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால், இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிக மிக அவசியம். நடை பயிலும் குழந்தை முதல், நடக்க தள்ளாடும் தாத்தா வரை யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கலாம்.
sep 26 - Brain attack.2
மின்னல்போல் திடீரென்று இந்த நோய் மனித மூளையை தாக்குவதால் ப்ரெயின் அட்டாக் என்கிறோம். பக்கவாதம் நரம்பியல் சார்ந்த நோய். நரம்புகள் மூளையிலும், தண்டுவடத்திலும் ஆரம்பித்து தசைகளை இயக்குகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்தாலோ, அந்த ரத்தக் குழாய்கள் வெடித்தாலோ ப்ரெயின் அட்டாக் ஏற்படும்.

அப்போது மூளையின் எந்த பகுதிக்கு ரத்த ஓட்டம் குறையுமோ அந்தப் பகுதி பாதிக்கப்படும். உடனடியாக கவனிக்காவிட்டால் உடலின் ஒரு பகுதி செயலிழந்துபோகும். பக்கவாதத்தால் உடல் செயலிழந்துபோவதை தடுக்க முடியுமா? – முடியும்.

வாய்கோணுதல், வார்த்தைகள் குளறுதல், நடையில் தள்ளாட்டம், தடுமாற்றம், கை-கால் தூக்கமுடியாத நிலை, கை-கால்கள் உணர்ச்சியற்று மரத்துபோதல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட நாலரை மணி நேரத்திற்குள் நோயாளியை அதற்குரிய மருத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றால் பக்கவாத செயலிழப்பை தடுத்திட முடியும்.

மேற்கண்ட அறிகுறிகளை கொண்ட நோயாளிக்கு மூளையில் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய உடனடியாக அவருக்கு சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்யப்படும்.

கண்டறிந்து மூளைக்கு செல்லும் குழாயில் ரத்தம் உறைந்திருந்தால் அதை சரிசெய்வதற்கான ஊசியும், ரத்தக் குழாய் வெடித்திருந்தால் அதை ஒட்டி சரிசெய்யும் தன்மை கொண்ட ஊசி மருந்தையும் செலுத்தவேண்டும். அறிகுறிகள் தென்பட்ட நாலரை மணி நேரத்திற்குள் பாதிப்பை கண்டறிந்து, சிகிச்சை செய்யாவிட்டால், பக்கவாத பாதிப்பு உடலின் ஒரு பகுதி இயக்கத்தையே முடக்கிவிடும்.

பாதிக்கப்பட்ட மூளைப்பகுதியை மீண்டும் சரி செய்ய இயலாது என்பதால், முடங்கிப் போகும் உடல் பகுதியை மீண்டும் சீராக்கும் வாய்ப்பு குறைவு. இந்தியாவில் பெரும்பாலான நோயாளிகள் பக்கவாதத்திற்கான அறிகுறி தென்பட்ட பின்பு, ஒரு மணி நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம், நமது டாக்டர் மாலையில்தான் வருவார்.

அதுவரை காத்திருக்கலாம் என்று நினைத்து அமைதியாகி, நாலரை மணி நேரத்திற்குள் சிகிச்சையை பெறாமல் தவிர்த்துவிடுகிறார்கள். அதனால் பாதிப்பு அதிகமாகிவிடுகிறது. பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்?

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மது அருந்துதல், புகைபிடித்தல், உடல் குண்டாக இருத்தல், தேவையற்ற கொழுப்பு அதிகமாக இருத்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும். பாரம்பரியமும் ஓரளவுக்கு காரணமாக இருக்கிறது. உடற்பயிற்சியின்மை, மனஅழுத்தம், ஓய்வின்மை போன்றவைகளும் இதற்கு காரணமாகும்.

அதனால் பக்கவாதத்தை லைப் ஸ்டைல் நோய் என்று கூறுகிறோம். இந்த நோய் அதிகமாக ஆண்களைத்தான் தாக்கும் என்ற பொது வான கருத்து உள்ளது. ஆனால், பெண்கள்தான் அதிக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மாதவிலக்கு நின்றுபோகும் மெனோ பாஸ் காலம் வரை பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு நன்றாக இருக்கும். அந்த காலகட்டத்திற்கு பிறகு பெருவாரியான பெண்களை பக்கவாதம் தாக்குகிறது.

அதனால் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுக்க இந்த நிலைதான் நீடிக்கிறது. முன்பெல்லாம் பக்கவாதம் போன்ற நோய்கள் 40 வயதிற்கு மேல்தான் வரும் என்ற நிலை இருந்தது. இப்போது இளைஞர்களும் இந்த நோயால் தாக்கப்படுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், உணவுப் பழக்கம்.

எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். ஜங்க் புட்ஸ், பாஸ்ட் புட்ஸ் போன்றவைகளை விரும்பி சாப்பிட்டு, உடற் பயிற்சியும் உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பதால் உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகமாகிறது. குண்டாகிறார்கள். பக்கவாதத்தை தடுக்க விரும்புகிறவர்கள் உணவு பழக்கத்தை சரிசெய்யவேண்டும்.

நிறைய தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் பருகினால் மூளைக்கு அதிக ரத்தம் செல்லும். ரத்த அழுத்தம் அதிகரிப்பதும் ஆபத்து. ரத்த அழுத்தம் அதிகரித்தால் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் வெடிக்கும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை நோயையும் எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.

பக்கவாத தாக்குதல் ஏற்படக்கூடாது என்று கருதும் பெற்றோர் முறையான உணவு, உடற்பயிற்சி, நோய்க்கட்டுப்பாடு போன்றவைக ளை கடைப்பிடிக்கும் அதே நேரத்தில், தங்களது வாரிசுகளை சிறுவயதில் இருந்தே முறையான உணவுப் பழக்கம், நன்றாக வியர்க்கும் அளவுக்கு விளையாடுதல் போன்றவைகளில் ஈடுபடுத்தவேண்டும்.

சிறுவயதில் இருந்தே வாழ்வியல் முறைகளை செம்மையாக கடைபிடித்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க முடியும். மது பழக்கமும் பக்கவாதத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. குடிப்பவர்களால் பெரும்பாலும் மது அளவை கட்டுப்படுத்த முடிவதில்லை.

வாரத்திற்கு ஒருமுறை, மாத்திற்கு ஒருமுறை என்பது போன்ற கட்டுப்பாடுகளை அவர்கள் மீறிவிடுவது, இந்த நோய்க்கு காரணமாக அமைகிறது. பள்ளிப்பருவம், கல்லூரிப் பருவத்திலே குடிப்பழக்கம் வந்துவிட்டால் எதிர்காலத்தில் அனேகமாக அவர்கள் பக்கவாத தாக்குதலுக்கு உள்ளாகிவிடுவார்கள். மது அருந்தும் பழக்கம் இருந்தால் இப்போதே கைவிட்டுவிடுங்கள்.

மற்ற நோய் பாதிப்புகளுக்கும்- பக்கவாத நோய் பாதிப்பிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மற்ற நோய்களின் தாக்குதலுக்கு உள்ளான நோயாளி, சிகிச்சை எடுத்துக்கொண்டே தனது அன்றாட வேலைகளை ஓரளவாவது பார்ப்பார். அதனால் அவருக்கு உடல் இயக்கம் இருக்கும். பக்கவாத நோயாளி படுத்தபடுக்கையாகிவிடுவார். அவரால் உடற்பயிற்சி செய்ய முடியாது.

கொழுப்பு குறையாது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவைகளையும் கட்டுக்குள் கொண்டுவருவது கடினம். ஓடி ஆடி வேலை பார்த்த அவர் படுக்கையில் முடங்கும்போது சாப்பிடுவது மட்டுமே அவரது பொழுதுபோக்குபோல் ஆகிவிடும். வீட்டிலும் நோயாளி என்று நிறைய உணவுகளை வழங்குவார்கள்.

அதனால் உடலில் இருக்கும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதற்கு பதில் அதிகரித்துவிடும். பக்கவாத தாக்குதல் ஏற்படுகிறவர்களில் 6 சதவீதம் பேருக்கு மாரடைப்பும் சேர்ந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இருவிதமான சிகிச்சைகளையும் உடனே வழங்கவேண்டும். சிறுமூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது, பக்கவாத தாக்குதலில் அபாயகரமானதாகும்.

இந்த பாதிப்பிற்குள்ளா கிறவர்களில் 85 சதவீதம்பேர் கோமா அல்லது மூச்சு நின்றுபோய் இறந்துவிடுவார்கள். பொதுவாக தூக்கத்திலே ஒருவர் இறந்துபோய்விட்டால் அவரது உயிர் பிரியக் காரணம், மாரடைப்பு என்பார்கள். சிறுமூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும், தூக்கத்திலே உயிர் பிரிந்துவிடுவது உண்டு.

சிறுமூளை பாதிப்பை சரிசெய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்போதுதான் அவரை மூளைச்சாவு அடைந்தவராக அறிவிக்கிறார்கள். இப்போது கருவில் இருக்கும் சிசுவை ஆராய்ந்து, எதிர்காலத்தில் அதற்கு ஏற்பட இருக்கும் ஒரு சில நோய்களை முத லிலே கண்டறிந்துவிடலாம். பக்கவாதம் மல்ட்டி பேக்டராக இருப்பதால், அதற்கு ஏராளமான ஜீன்கள் காரணமாக இருக்கின்றன.

அதனால் சிசுவிலே, எதிர்காலத்தில் பக்கவாதம் வருமா என்று கண்டறிய இயலாது. பிறந்த பின்பு, சிறுவயது பருவத்தில் இருந்தே குழந்தைகளின் உணவு, உடற்பயிற்சி போன்றவைகளில் அக்கறை கொண்டு வளர்த்தால் பக்கவாத பாதிப்பில் இருந்து குழந்தைகளை காக்கலாம். டீன் ஏஜ் மற்றும் நடுத்தர வயதினரும் சரியான வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து, விழிப்புடன் இருந்தால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

கவனமாக இருந்தும் பக்கவாத பாதிப்புகள் வந்துவிட்டால் அடுத்த நாலரை மணி நேரத்திற்குள் தீவிர சிகிச்சைக்கு உள்படுத்தி காப்பாற்றுவதே சிறந்த வழி.

கட்டுரை: பேராசிரியர் எம்.ஆர். சிவகுமார் M.D.,D.M.,FRCP,
(பக்கவாதநோய் சிறப்பு மருத்துவர்)
சென்னை-10.

ஆந்தைரிப்போர்ட்டர்
Share |

Show commentsOpen link

பிரதமரை கேலி செய்வது நாங்கள் அல்ல; ராகுல் காந்தி தான் சோனியாவுக்கு ராஜ்நாத் சிங் பதில் Congress vice president made fun of PM Rajnath

பிரதமரை கேலி செய்வது நாங்கள் அல்ல; ராகுல் காந்தி தான் சோனியாவுக்கு ராஜ்நாத் சிங் பதில் Congress vice president made fun of PM Rajnath

Tamil NewsToday,

கொல்கத்தா, அக். 1-

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதாவை கடுமையாக சாடினார். காங்கிரஸ் கட்சியைப் பற்றியும், பிரதமரைப் பற்றியும் கேலி கிண்டல் செய்து பேசுவதாகவும், எந்த கட்சியைப் பார்த்தும் காங்கிரஸ் பயப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்துள்ள பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

'பிரதமரை பா.ஜனதா கேலி செய்கிறது. ஆனால், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பிரதமரின் பின்னால் நிற்கிறது' என்று சோனியா வெளியிட்ட அறிக்கையை படித்தேன். ஆனால் பிரதமரை நாங்கள் கேலி செய்யவில்லை, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்திதான் கேலி செய்துள்ளார்.

பிரதமரை பா.ஜனதா அவமதிக்கவில்லை. பிரதமரின் மரியாதை பற்றி சோனியா கவலைப்பட்டால், அவர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை பதவி விலகச் சொல்ல வேண்டும். அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லவேண்டும்.

தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு எங்கள் கட்சி ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எங்கள் தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் ஏற்கனவே ஜனாதிபதியை சந்தித்து, அவசர சட்டத்தில் கையெழுத்திடக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனறு நானும் கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
...
Show commentsOpen link

அலுவலகத்திற்கு செல்லும் போது நிச்சயம் அணியக் கூடாதவைகள் tamil ladies at office room

அலுவலகத்திற்கு செல்லும் போது நிச்சயம் அணியக் கூடாதவைகள்

by Marikumar

எந்த ஒரு அலு­வ­ல­கத்­திற்கும் விதி­மு­றைகள் இருக்கும். அந்த விதி­மு­றை­களில் ஒன்று தான் ஆடை குறி­யீடு. பெண்­களை எடுத்துக் கொண்டால், அவர்­க­ளுக்கு நிறைய நவ­நா­க­ரி­க­மான உடைகள் உள்­ளன.

அந்த உடைகள் அனைத்தும் வெளி­யி­டங்­க­ளுக்கு செல்லும் போது உடுத்­து­வ­தற்கு பொருத்­த­மாக இருக்­குமே தவிர, அலு­வ­ல­கத்­திற்கு ஏற்­றது அல்ல. இப்­போது அலு­வ­ல­கத்­திற்கு செல்லும் போது, பெண்கள் நிச்­சயம் அணி­யக்­கூ­டாத உடை­களை பார்க்­கலாம்.

• ஒவ்­வொரு அலு­வ­ல­கத்­திலும் நிச்­சயம் ஒரு நாளா­வது இயல்­பான ஆடை­களை அணிந்து வரலாம். அப்­படி இயல்­பான ஆடைகள் என்று வரும் போது ஜீன்ஸ் மற்றும் .டொப்ஸ் அணி­யலாம். ஆனால் டொப்ஸில் ஒற்றைத் தோள்­பட்டை கொண்ட உடையை, அலு­வ­ல­கத்­திற்கு செல்லும் போது அறவே தவிர்க்க வேண்டும்.

• அலு­வ­ல­கத்­திற்கு பெண்கள் சிறிய பாவா­டை­களை அணிந்து செல்­வது சாதா­ரணம் தான். ஆனால், அந்த சிறிய பாவா­டையில் பென்சில் கட் கொண்ட பாவாடை தான் சாதா­ர­ணமே தவிர, மற்­ற­வை­களை அணி­யக்­கூ­டாது.

• பொது­வாக அலு­வ­ல­கத்­திற்கு ஜீன்ஸ் அணிந்து செல்­லலாம். ஆனால் ஆங்­காங்கு கிழிந்து இருக்கும் ஜீன்ஸை அணிந்து செல்­வது தவறு.

• லேஸ் கொண்ட ஆடை­களை அணிந்து வரு­வதும் நாக­ரி­க­மற்ற செயல். எனவே அலு­வ­ல­கத்­திற்கு, இத்­த­கைய லேஸ் கொண்ட ஆடை­களை அணி­வதை தவிர்க்க வேண்டும்.

• ஆழ­மான கழுத்து கொண்ட ஆடை­களை அறவே தவிர்க்க வேண்டும்.

மேலே கூறிய இந்த வகை­யான ஆடைகளை அலு­வ­ல­கத்­திற்கு அணிந்து செல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லையெனில் உங்களை பற்றிய தவறான எண்ணம் அனைவரிடத்திலும் ஏற்பட வழிவகுக்கும்.
Share |

Show commentsOpen link

Sunday, September 29, 2013

அஜித் இன் வீரம் திரைப்பட கதை இது தான்! Ajith veeram movie review

அஜித் இன் வீரம் திரைப்பட கதை இது தான்!

by abtamil
Tamil newsToday,

அஜித்தின் ஆரம்பம் கிராண்ட் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் அஜித்தின் அடுத்த படமான வீரம் விறுவிறுவென வளர்ந்து வருகிறது.

இந்தப் படத்திற்காக ஒடிஷா, ஆந்திரா பார்டரில், ரெயில்வே டிராக்கில் சீட்டு நுனிக்கு நகர்த்தும் த்ரில்லர் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாம்.

வரும் ஷெட்யூல்கள் கேரளா, மற்றும் பொள்ளாட்சியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் கதை என்னவென்பது கோடி காட்டப்பட்டுள்ளது.

கிராமம் ஒன்றில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகைமைதான் மையக்கருவாம். இதில் ஒருகுடும்பத்தின் மூத்த மகன் ரோல் அஜித்திற்கு. பிரதீப் ராவத் வில்லன்.

அஜித்திற்கு ஜோடி தமன்னா,. அஜித்தின் தம்பியாக வித்தார்த் நடிக்கிறார். காமெடி ஏரியாவை சந்தானம் கவனித்துக் கொள்கிறார்.

படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.

 

Show commentsOpen link

ஆரோக்கியமான முறையில் அழகாக ஜொலிக்க சில சூப்பர் டிப்ஸ்! Beauty tips for all in tamil

ஆரோக்கியமான முறையில் அழகாக ஜொலிக்க சில சூப்பர் டிப்ஸ்!!!

by Marikumar

என்றென்றைக்கும் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் மனதில் குடிக்கொண்டிருக்கும் கனவாகும். சருமத்தையும், தலை முடியையும் உடலுடன் சேர்த்து முறையாக பராமரித்தால், அழகும் தோற்றமும் பலமடங்கு கூடும். அழகு மேம்பட பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூட அதற்கு பாடுபடுவது இயல்பாக நடப்பது தான். இன்றைய காலகட்டத்தில் சந்தையில் பல அழகு சாதனங்கள் குவிந்துவிட்டன. ஆனால் அவைகளை பல பொருட்களில் இரசாயனங்கள் கலந்துள்ளதால், அவை ஆரோக்கியத்தை பாதித்துவிடும். அப்படி ஆரோக்கியம் கெட்டுப் போகாமல் இருக்க இயற்கை முறையை தேர்ந்தெடுங்கள்.

அழகான சருமத்தை பெறுவதற்கு பணத்தையும், நேரத்தையும் தண்ணீரை போல் செலவளிப்பவர்கள் பலர் உண்டு. அதில் சிலர் பயன் பெறுவார்கள், சிலர் எந்த பயனும் அடைவதில்லை. சில முயற்சி தவறான விளைவுகளை கூட ஏற்படுத்திவிடுவதுண்டு. இவ்வகை எதிர்மறையான விளைவுகள் மற்றும் பண விரயத்தை தவிர்க்க இயற்கை வழிகளை கையாண்டு உடலையும் சருமத்தையும் பாதுகாத்திடுங்கள்.

அதற்கு நாங்கள் கூறும் டிப்ஸ்களை பின்பற்றி, உங்கள் அழகை மெருகேற்றி, கண்ணாடி முன் நின்று, உங்கள் மேல் நீங்களே காதலில் விழுந்து கொள்ளுங்கள்.

உடலில் உள்ள இறந்த உயிரணுக்களை நீக்கவும், அவை மீண்டும் வராமல் இருக்கவும், சீரான முறையில் உடலை ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் இயற்கையான ஸ்க்ரப் வேண்டுமென்றால், தேன் மற்றும் சர்க்கரையை கலந்து அதனை பயன்படுத்துங்கள்.

தினமும் 8 முதல் 10 டம்பளர் வரை தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். இது உடல் வறட்சியைத் தடுத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

உடலில் வியர்வை அதிகளவில் வெளிவருகிறதா? அப்படியானால் தினமும் இரண்டு முறையாவது குளியுங்கள். நன்றாக குளித்தால், உங்களை குளிர்ச்சியுடன் வைத்து, ஆரோக்கியமாக இருக்கச் செய்யும். முக்கியமாக குளித்த பின், லூசான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். அது சருமத்தை சுலபமாக மூச்சு விட வைக்கும்.

அதிகமாகும் வெப்பமும், மாசும் தலை முடியை வெகுவாக பாதிக்கும். முடியை நல்ல விதமாக பராமரிக்க, உங்கள் வசதிக்கேற்ப நல்ல ஷாம்புவைப் பயன்படுத்துங்கள். முடிக்கு ஷாம்பு போடும் போது, கொஞ்சம் பேக்கிங் சோடாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது தலையில் பதிந்திருக்கும் அழுக்கையும், மாசுவையும் நீக்கிடும்.

வாழ்க்கையில் எப்போதும் பின்பற்ற வேண்டியது ஒன்று இருக்கிறது என்றால், அது தினமும் ஒரு நல்ல சன் ஸ்க்ரீனை பயன்படுத்துவது தான். அதிலும் சரும வகையை பொறுத்து, அதற்கேற்ப ஒரு நல்ல சன் ஸ்க்ரீனைப் பயன்படுத்தினால், அலர்ஜி மற்றும் சரும சிராய்ப்புகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

எப்போதும் காற்றோட்டமுள்ள ஷூக்களை அணியுங்கள். அது பாதங்களுக்கு முறையான காற்று சுற்றோட்டத்தை அளிக்கும். அதனால் பாதங்களில் இருந்து, வாடை அடிக்காமலும், பூஞ்சை தொற்றுகள் உருவாகாமலும் இருக்கும்.

தயிர் உட்கொள்வதை அதிகரித்தால், சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், வயதாவதையும் தாமதப்படுத்தும். மேலும் தயிரை சருமம் மற்றும் தலையில் தடவி வந்தால், வெப்பத்தால் பாதிப்படைந்த இடங்களை வழுவழுப்பாக மாற்றலாம்.

நீங்கள் ரேசர் பயன்படுத்துபவரா? அப்படியானால் அதனை கைகள் மற்றும் கால்களில் பயன்படுத்துவதற்கு முன்னால் குறைந்தது 3 நிமிடங்களுக்காவது வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளுங்கள். இதனால் வெதுவெதுப்பான நீர் மயிர்த்தண்டுக்களை மென்மையாக்கும். இது நீண்ட நேரத்திற்கு வழுவழுப்பையும் அளிக்கும். ஷேவிங் எல்லாம் முடிந்த பின்பு, ஏதாவது இயற்கை லோசனை கொஞ்சமாக தண்ணீரில் சேர்த்து, முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.

சில்க் துணியில் வழுவழுப்பான தலையணை உறையை பயன்படுத்துங்கள். அதுமுடிகளின் புறத்தோல் மற்றும் தலையணை உறைக்கும் இடையே உருவாகும் உராய்வை தடுக்கும்.

சுலபமாக கருமையாகும் சருமத்தை கொண்டவர்கள், இந்த பிரச்னையை சரிசெய்ய, இயற்கை பொருட்களை பயன்படுத்துங்கள். அதிலும் முட்டையின் வெள்ளை கருவை, சோள மாவு மற்றும் எலுமிச்சை ஜஸ் உடன் கலந்து கொள்ளுங்கள். அல்லது சின்ன உருளை கிழங்கு துண்டு அல்லது எலுமிச்சை ஜூஸை பாதிக்கப்பட்ட இடங்களில் தேயுங்கள். இவைகள் வேலை செய்யவில்லை என்றால், ஒரு நல்ல சரும மருத்துவரை உடனே அணுகுங்கள்.

தலையை எப்போதும் தொப்பியால் மூடியிருக்கிறீர்களா? அப்படியானால் சருமத்தில் உள்ள எண்ணெய்கள் அடைபட்டு, நெற்றியில் பருக்கள் வந்துவிடும். அதனை தடுக்க நெற்றியை நன்றாக துடைக்க வேண்டியது அவசியம்.

பாதங்களை மூடிய ஷூக்குள் விடுவதற்கு முன்னால், எப்போதும் பூஞ்சையை அழிக்கும் பொடியை பயன்படுத்துங்கள். இதுபோக இறந்த அணுக்களை நீக்கவும், பாத சருமம் மீண்டும் உயிர் பெறவும் மெருகேற்ற உதவும் கல்லை பாதங்களுக்குப் பயன்படுத்துங்கள்.

ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை பெற புரதம் அதிகமுள்ள இறைச்சி, முட்டைகள், பருப்புகள், பால் மற்றும் பாலாடை கட்டிகளை உண்ணுங்கள். இந்த உணவுகள் எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

அழகாக இருக்க வேண்டுமா? போதுமான தூக்கத்தை பெற்று தேவையான அளவு தண்ணீரை பருகுங்கள். இவை இரண்டுமே நச்சுத்தன்மையை நீக்கி, வீங்கிய சிவந்த கண்களை சரி செய்வதால், சருமத்தை ஒளி வீசச் செய்யும்.

முகத்திற்கு மேக்-அப் போடும் போது, அவை மிகவும் குறைவாக இருக்க வேண்டும். அதிகமாக போடும் போது, அவை சரும துவாரங்களை அடைத்துவிடும். அதனால் சருமம் சுருக்கம் அடைந்து, பொலிவிழந்து போகும். மேலும் தூங்கச் செல்லும் முன், முகத்தில் தடவிய பவுண்டேஷன் பவுடரை முழுமையாக நீக்க மறந்து விடாதீர்கள்.

சரும வகையை பொறுத்து ஒரு க்ளென்சர் மற்றும் டோனரை பயன்படுத்துங்கள். கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் ஆகிய மூன்றையும் தினமும் செய்யுங்கள்.

அழுக்கு கைகளை கொண்டு, அடிக்கடி முகத்தை தொடுவதனால் பருக்கள் உண்டாகும். அதனால் வெளியில் இருக்கும் போது, கையில் இருக்கும் சானிடைசரைப் பயன்படுத்தி, அடிக்கடி கையை கழுவுங்கள். குறிப்பாக கையை முகத்திலிருந்து எப்போதும் தள்ளியே வைத்திருங்கள்.

தோல் உரிக்க பயன்படுத்தப்படும் எக்ஸ்போலியேட்டர் ஒன்றை வாரம் ஒரு முறையாவது பயன்படுத்துங்கள். இது சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தை பளபளக்கச் செய்யும்.

முடியை நீரில் அலசிய பின் நல்ல கண்டிஷனரை பயன்படுத்தி முடிக்கு தடவுங்கள். இது தலைமுடியை வறட்சி அடையாமல், மாசு காற்றினால் பாதிப்படையாமல் பாதுகாக்கும். மேலும் முடியை காய வைக்க ஹேர் ட்ரையர் மற்றும் ப்லோயரை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்.

கவர்ச்சியான முதுகை பெற, முதுகை சீரான முறையில் தேயுங்கள். அதிலும் பப்பாளியை கொண்டு செய்த கலவையை சருமத்தில் தடவி, 5-10 நிமிடம் வரை ஊற வையுங்கள். இது முதுகில் உள்ள இறந்த அணுக்களை மற்றும் அழுக்கினை நீக்க உதவும்.

Thatstamil
Share |

Show commentsOpen link

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts