Saturday, September 28, 2013

பேஸ்புக்கில் இதை கடைபிடிக்கறிங்களா? Facebook news

பேஸ்புக்கில் இதை கடைபிடிக்கறிங்களா?

by Marikumar
டிப்ஸ்Today, 21:33

இன்று உலகில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு சோஷியல் மீடியாவான பேஸ்புக் அல்லது ட்விட்டர் தளத்தில் நிச்சயம் அக்கவுன்ட் இருக்கும்.

உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர்.

இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும்.

இதோ இவை தான் நண்பரே அந்ச அடிப்படை கோட்பாடுகள் பாருங்கள்......

உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு

என்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்படுத்துகின்றனர்.

நம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வேண்டாமே.

சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல

இணையத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக்கும் ஓர் இடம் தான். ஆனால், அதனையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்குவது தவறானதாகும்.

உங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடுவது தவறு.

குற்றச்சாட்டுக்கான மேடையா இது

சிலர் நுகர்வோர் பிரச்னைகளுக்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தவறு. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலாம். ஆனால், தொடர்ந்து ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.

நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா?

இணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அல்லது நடந்து முடிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர். இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத் தளங்களின் இடத்தையும் வீணடிக்கிறீர்கள்.

மேற்கோள்கள் தேவையா?

சிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறியது என எதனையாவது மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா? நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொள்ளலாமே.

வீணான பெருமை வேண்டாமே!

சிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவதற்காக, தினந்தோறும் தொடர்பு அற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்கள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருந்தால் மட்டுமே நண்பர்களின் வட்டத்தை விரிதாக்குங்கள். நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் ஆரோக்கியமான உறவினைப் பலப்படுத்துங்கள்.

உங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை?

சில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனைவருக்கும் அனுப்புவதனை நிறுத்தவும். ஏனென்றால், சமூக வலைத் தளம் உங்களின் பிரைவேட் டயரி அல்ல.

முகம் சுழிக்கும் படங்கள் தேவையா?

என்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் படங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடிப்படையில் சில ஒத்துக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். எனவே தேவையற்ற படங்களை வெளியிட வேண்டாமே. அதே போல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர்களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந் தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ்படுத்த வேண்டாமே.

Share |

Show commentsOpen link

ஒரே செடியில் உருளைக் கிழங்கும் தக்காளியும் : பிரிட்டன் சாதனை (வீடியோ ) tamil different news

ஒரே செடியில் உருளைக் கிழங்கும் தக்காளியும் : பிரிட்டன் சாதனை (வீடியோ )

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today

ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.

மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.
எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம்.இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன.

இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது.சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.
இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த முறையை தற்போது நியூசிலாந்து நாட்டு விவசாயிகளும் பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

The post ஒரே செடியில் உருளைக் கிழங்கும் தக்காளியும் : பிரிட்டன் சாதனை (வீடியோ ) appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

ஜாவாவில் வைரஸ் ! Virus in java

ஜாவாவில் வைரஸ்!!!
by Marikumar

இன்றைய கம்பியூட்டரி யுகத்தில் எத்தனையோ ப்ரோகிராம்கள் வந்தாலும் ஜாவா தான் அதில் முக்கிய பங்கு வகிக்கிரது எனலாம்.

ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும்.

தற்போது ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு மூலம் ஹேக்கர்கள் உங்களை HTML கோப்பு ஒன்றை பார்க்க வைத்து அதன் மூலம் வைரஸ் அனுப்பி உங்கள் கணினியை தாக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த வைரஸ் பாதிப்பை ஜாவாவை உருவாக்கிய ஆரக்கிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்து புதிய பதிப்பை அதிக பாதுகாப்பு வசதிகளுடன் ஜாவா வெளியிட்டுள்ளது. நீங்கள் அவசியம் செய்ய வேண்டியது....

உங்கள் கணினியில் Control Panel பகுதிக்கு சென்று Programs and features (windows 7) அல்லது Add or remove programs பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கு Java 7 Update 10 (அல்லது அதற்கு முந்தைய) பதிப்பாக இருந்தால் அதில் Right Click செய்து Uninstall என்பதை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள்.

பிறகு java.com முகவரிக்கு சென்று ஜாவா புதிய பதிப்பான Java 7 Update 11 பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்! மேலே சொன்னது எளிதாக இருந்தாலும் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும்.
Share |

Show commentsOpen link

Friday, September 27, 2013

ஓடிப் போகும் பெண்களே உஷார்! Ladies special report

ஓடிப் போகும் பெண்களே உஷார்!!
Ldies special report
Tamil NewsToday, 05:30

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்.

நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ, அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும், நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.

இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய், தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம் உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள்.

இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள்.

அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்.. இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம்.

உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள் இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும் சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும் பெற்றோர்கள் பெண்களை விழிப்போடு தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். பாதிக்க பட்ட பெண்கள் மற்றும் இனி'வரும் காலங்களில் இது போன்று சில மிருகங்களிடம் தன்னுடைய வாழ்க்கையே துளைத்து விட கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கமே தவிர ஆண்களை குறை கூறுவதற்கு இல்லை .காதலில் உண்மையானவர்களையும் நம் கண் முன்னே பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் பெண்களை போதை பொருளாக நினைத்து அவர்களை பேதைகளா ஆக்க படுவதை தான் வன்மையாக நாம் கண்டிக்கிறோம்.
...
Show commentsOpen link

உணவு உட்கொண்ட பின்னர் எதனை தவிர்க்க வேண்டும் after lunch

உணவு உட்கொண்ட பின்னர் எதனை தவிர்க்க வேண்டும்

by Marikumar

ஒருவர் நல­மாக இருப்­ப­தற்கு உணவு, உடற்­ப­யிற்சி, நல்ல பழக்க வழக்­கங்கள் என பல கார­ணங்கள் கூறி­னாலும், அனைத்­திலும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது நம்­மு­டைய உணவுப் பழக்­கம்தான். சாப்­பி­டும்­போது தண்ணீர் குடிக்­க­லாமா? சாப­பிட்­ட­வுடன் பழங்கள் சாப்­பி­டு­வது சரியா? என நம் மனதில் பல்­வேறு கேள்­விகள் எழு­கின்­றன. உண்­மையில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்!

நம்­மு­டைய உடலின் ஒவ்­வொரு உறுப்பும் இயங்கத் தேவை­யான ஆற்றல் மற்றும் ஆக்­ஸி­ஜனை இரத்தம் கொண்டு செல்­கி­றது. உணவு உட்­கொண்­டதும் இரைப்­பையின் செயல்­பாடு அதி­க­ரித்து, மூளைக்குச் செல்லும் இரத்­தத்தின் அளவு குறைய வாய்ப்பு இருக்­கி­றது. இத­னா­லேயே உணவு உட்­கொண்­டதும் ஒரு­வித மந்த நிலை ஏற்­ப­டு­கி­றது.

சாப்­பிட்­டதும் தேநீர் அருந்­த­லாமா?

கூடாது. ஏனெனில், தேயி­லையில் சில அமி­லங்கள் உள்­ளன. இது, புரதச் சத்­தையும், செரி­மா­னத்­தையும் கடி­ன­மாக்கி விடு­வ­தற்­கான வாய்ப்பு அதிகம். சாப்­பிட்டு அரை முதல் ஒரு மணி நேரங்­களின் பின்னர் தேநீர் அருந்­தலாம்.

சாப்­பிட்­டதும் சிகரெட் பிடிப்­பது தவறா?

சிகரெட் பிடிப்­பதே ஆரோக்­கி­ய­மா­னது அல்ல. சாதா­ர­ண­மாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்­வ­ளவு பாதிப்பு ஏற்­ப­டுமோ, அதை விட சாப்­பிட்­டதும் சிக ரெட் பிடிக்­கும்­போது 10 மடங்கு பாதிப்பு ஏற்­படும். எனவே, சிகரெட் பிடிப்­பதை முற்­றிலும் நிறுத்த முடி­யா­விட்­டாலும், சாப்­பிட்­டதும் சிகரெட் பிடிப்­ப­தை­யா­வது நிறுத்த வேண்டும்.

சாப்­பி­டும்­போது குளிர்ந்த நீர் அருந்­த­லாமா?

உணவு உட்­கொண்­டதும், குளிர்ந்த நீரோ, குளிர்­பா­னமோ குடிப்­ப­வர்­க­ளுக்கு இதயம், சிறு­நீ­ரகம் போன்­றவை பாதிப்­ப­டைய அதிக வாய்ப்பு உண்டு. மேலும், நெஞ்சு எரிச்சல், உயர் இரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்­க­வாதம், வயிற்­று­வலி, மைக்ரேன் தலை­வலி, மூளை உறைவு நோய், பற்­சி­தைவு போன்­றவை ஏற்­படக் கூடும். சாப்­பிட்ட உணவில் உள்ள எண்ணெய், இரத்த நாளங்­களில் தங்கி அடைப்பை உண்­டாக்­கி­விடும். குறிப்­பாக, மார­டைப்பு போன்ற இதய நோய் வரு­வ­தற்­கான வாய்ப்பு உள்­ள­வர்கள், சாப்­பி­டும்­போது குளிர்ந்த நீரைப் பரு­கவே கூடாது. வெது­வெ­துப்­பான நீர் அருந்­து­வது, செரி­மானத் திறனை மேம்­ப­டுத்தும்.

சாப்­பிட்­டதும் குளிக்­க­லாமா?

இதனை தவிர்க்க வேண்டும். குளிக்­கும்­போது கை, கால், உடல் பாகங்­களில் இரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்­பைக்கும் செரி­மா­னத்­துக்கும் தேவை­யான இரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரி­மான மண்­டல உறுப்­புகள் பாதிப்­ப­டையும்.ஆகையால் சாப்­பிட்­ட­வுடன் குளிப்­பதை தவிர்ப்­பது சிறந்­தது.

சாப்­பாட்­டின்­போது அல்­லது சாப்­பிட்டு முடித்­ததும் பழங்கள் சாப்­பி­ட­லாமா?

உண­வுக்கு இடையில் அல்­லது முடித்­த­வுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்­படி எடுத்துக் கொண்டால், வயிற்­றுக்குள் உப்­புசம் ஏற்­படும். எனவே சாப்­பி­டு­வ­தற்கு ஒரு மணி நேரத்­துக்கு முன்போ அல்­லது பின்­போதான் பழங்­களைச் சாப்­பிட வேண்டும். இப்­படி இடைவெளி விட்டுச் சாப்­பி­டும்­போது செரி­மானத் திறன் மேம்­படும்.

சாப்­பிட்­ட­வுடன் தூங்­க­லாமா?

மதிய உணவு, இரவு உண­வுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்­லக்­கூ­டாது. உண­வுக்குப் பின் குறைந்­தது அரை­மணி நேரத்தின் பின்­னரே தூங்க செல்ல வேண்டும்.

சாப்­பிட்­டதும் உடற்­ப­யிற்சி, நடைப் பயிற்சி செய்­ய­லாமா?

சாப்­பிட்ட பின்பு நடப்­பது நல்­லது அல்ல. நடந்தால், செரி­மான உறுப்­பு­க­ளுக்குச் செல்லக் கூடிய இரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக இரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரி மானம் ஆகாமல், சத்துக்கள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் சிறந்தது.
Share |

Show commentsOpen link

Thursday, September 26, 2013

Best Line For all Tamilan

Best Line For all Tamilan
by Manonmani Nagamani

Girls secret Vs Boys secret - Tamil Facebook SharesToday, 00:21

Show commentsOpen link

இ மெயில் சில டிப்ஸ்! Email tips

இ மெயில் சில டிப்ஸ்!!!

by Marikumar

இன்று உலகில் அனைத்து அலுவலக மற்றும் வெளியுலக செயல்களுக்கு முக்கிய பங்காற்றுவது இ மெயில் தான் என்று நம் அனைவருக்கும் தெரியும்.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கடல் தாண்டி உங்களுக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். தகவல்களை அனுப்புவது எளிதாகிறது.

இதனால் உங்கள் வர்த்தகம் மற்றும் தனிநபர் உறவு வலுப்படுகிறது. வாழ்க்கை ஆனந்தமாகவும் நிறைவானதாகவும் மாறுகிறது.

ஆனால் சில வேளைகளில் நீங்கள் அனுப்பும் இமெயிலால் பிறர் எரிச்சல் அடையவும் கூடும். நட்பும், உறவும் முறியவும் செய்யலாம்; வியாபாரம் கை கூடாமல் போகலாம்; வேலை கிடைக்காமல் போகலாம்.

நாம் பிறருக்கு அனுப்பும் மின்னஞ்சல் இப்படித்தான் இருக்க வேண்டும் என இல்லை ஆனால் அதை வாசிப்பவர் நிச்சயம் சில எதிர்பார்ப்புகளுடன் தான் வாசிப்பார் மேலும் பிறருக்கு அனுப்புகிற மின்னஞ்சல் கடிதங்களில் நீங்கள் பின்பற்ற வேண்டிய நல்வழிகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா.....

முதலில் இமெயில் கடிதங்களைப் பொறுத்தவரை அவற்றை அனுப்பி விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். அவசரத்தில் அனுப்பினேன். அதனால் அவ்வாறு எழுதினேன் என்ற நொண்டிச் சாக்குகளுக்கெல்லாம் இங்கே இடம் இல்லை பாஸ். எனவே அனுப்பு முன் கவனமாக அதனைக் கவனித்த பின்னரே அனுப்ப வேண்டும்.

பொதுவாக இமெயில்களில் எழுத்துப் பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் யாரும் பொருட்படுத்துவதில்லை. அதுவும் நீங்கள் ஆன் லைனில் இருந்து மெயில்களைத் தயாரிக்கும்பொழுது இண்டர்நெட் நேரத்தை குறைப்பதில்தான் உங்கள் கவனம் செல்லும். அது நியாயமானதே.

பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்தால் நேரமாகும். எனவே பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை என துரிதமாக மெயில்களை அனுப்ப வேண்டும். ஆனால் தெரிந்தவர்களுக்கு மெயில்களை அனுப்பும் போதுதான் பிழைகளைக் கண்டு கொள்ளக் கூடாது.

முன்பின் தெரியாதவர்களுக்கு மெயில்களை அனுப்பும் பொழுது எந்தப் பிழைகளுமின்றி அனுப்புங்கள். இதற்காகவே இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் வேர்டின் ஸ்பெல் செக்கர்கள் போன்று நமக்கு உதவும் வகையில் தங்கள் கிளையண்ட் புரோகிராம்களை அமைத்துள்ளன. எனவே அவற்றை நம் எழுத்துப் பிழைகளைத் திருத்தி அனுப்ப பயன்படுத்தலாம்.

மெயிலைத் தயாரித்து முடித்தவுடன் அதைத் திரும்பவும் படியுங்கள். சொல்ல வந்த கருத்துக்கு மாறான கருத்து கொண்ட கடிதம் உங்களிடம் இருந்து சென்று விடக் கூடாது.

புரியாத கருத்து கொண்ட கடிதமும் சென்று விடக் கூடாது. சில நேரங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களில் பிழை இருக்காது. ஆனால் அது வேறொரு பொருள் தருவதாக, அல்லது நேர்மாறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

நீங்கள் ஒரு மூன்றாவது நபர் குறித்து எழுதி இருப்பீர்கள். ஆனால் படிப்பவர் தன்னைப் பற்றி எழுதியதாக எண்ணம் கொள்ளும்படி இருக்கக் கூடாது. எனவேதான் அனுப்புவதற்கு முன்பு கடிதத்தை மீண்டும் படிக்க வேண்டும்.

யாருக்குப் பதில் போய் சேர வேண்டுமோ அவருக்கு மட்டும் பதிலை அனுப்பி வையுங்கள். தேவையில்லாமல் Reply All பட்டனை அழுத்தி உங்கள் பதிலை எல்லாருக்கும் அனுப்பி வைக்காதீர்கள்.

குறிப்பாக நியூஸ் குரூப், மெயிலிங் லிஸ்ட் போன்றவற்றில் Reply All பட்டனைப் பயன்படுத்தாதீர்கள். மின்னஞ்சல் சேவையில் மட்டும் மிக மிக தேவைப்பட்டால் மட்டுமே Reply All பட்டனை அழுத்துங்கள்.

கடிதம் பெறுபவரைத்தான் நாம் பார்க்கப் போவதில்லையே என்ற எண்ணத்தில் அநாகரிகமாக மெயிலின் உள்ளே எதையும் குறிப்பிடாதீர்கள். கடிதம் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறதோ அவர் உங்கள் முன்பு தோன்றினால் அவரிடம் எவ்வளவு கண்ணியமாகப் பேசுவீர்களோ அதே கண்ணியத்தை அவருக்கு அனுப்புகிற மெயிலிலும் காட்டுங்கள்.

கோபத்தில் இமெயிலைத் தயாரிக்காதீர்கள். அப்படியே தயாரித்தாலும் உடனே அதை அனுப்பாதீர்கள். ஓரிரு நிமிடங்கள் ஆறப்போட்டு, பின்பு மெயிலைப் படித்துப் பாருங்கள். புண்படும்படியாக எழுதியவற்றை நீக்கி பின்பு மெயிலை அனுப்புங்கள்.

நேரில் ஒருவரிடம் பேசும்பொழுது உங்கள் முக பாவனை பேச்சின் ஏற்ற இறக்கம், அங்க சேஷ்டைகள் வைத்து நீங்கள் கோபத்திலா அல்லது கேலியாகவா அல்லது மகிழ்ச்சியுடனா பேசுகிறீர்கள் என்பதை எடை போட முடியும்.

ஆனால் இமெயில் என்பது வெறும் டெக்ஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே நீங்கள் சாதரணமாக அனுப்புகிற மெயிலை ஒருவர் தவறுதலாக புரிந்து கொள்ள முடியும். இதைத் தவிர்க்க Smileys எனப்படுகிற அடையாளங்களை இமெயிலில் சேர்த்தால் நன்று.

உரியவருக்குதான் இமெயிலை அனுப்புகிறீர்களா என்பதை கவனியுங்கள். ஏதோ நினைவில் இமெயிலைத் தயாரித்து ஏதோ நினைவில் தொடர்பில்லாத ஒருவருக்கு இமெயிலை அனுப்புவது மிகவும் தவறாகும். ரகசிய மெயில்கள், தனிப்பட்ட விஷயங்களை கொண்ட மெயில்கள் போன்றவற்றை அனுப்பும்போது மெயிலின் பெறுநருடைய முகவரியைச் சரி பாருங்கள்.

ஒரே மெயிலை உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்புகிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். உங்களுடைய நண்பர் ஒருவருக்கு, உங்களுடைய மற்றொரு நண்பர், நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே அவர் மற்றவருடைய இமெயில் முகவரியை தெரிந்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. ஆகவே நீஙகள் BCC பீல்டைப் பயன்படுத்தி அதில் எல்லாருடைய முகவரிகளையும்தெரிவிக்க வேண்டும்.
Share |

Show commentsOpen link

தியாகம்-சிறுகதை by Mohamed Imzan

தியாகம்-சிறுகதை
by Mohamed Imzan


          இன்று பேராதனை பல்கலைகழக முடிவுநாள். அனைவரது முகங்களிலும் சோகம்.நண்பிகளை பிரியபோகிறோம் என்பதுதான் அதற்கான காரணம்.கியாசா மஹீசா சகீயா மூவருமே இணைபிரியாத நண்பர்கள்.மூவருமே தியாக மனம்பான்மையோடுதான் நடந்து கொள்வார்கள்.
                          இன்று முவரும் கைகளை கொறுத்தவாறு திரிந்தனர். தமக்கிடையே அன்பளிப்புக்களையும் பகிர்ந்து கொண்டனர்.  இவ்வாறு துக்கமும் மகிழ்ச்சியும் ஒன்று கலந்த வேளையில் சகியா பேச ஆரம்பித்தாள். கியாசா மஹிசா நாம் மூனுபேரும் எப்பவோ எங்கேயோ ஒரு இடத்தில ஒரு நாளைக்கு சந்திக்கனும் அந்த நேரம் நாம நம்மட வாழ்க்கைய ஏதோ  ஒரு வகையில தியாகம் செஞ்சி இருக்கனும் என்று கூறும்போதே அது எப்படி தியாகம் செய்றதுனு மஹிசா இடையில் கேட்டாள். இதைக்கேட்ட கியாசா நான்டா என்னட வாழ்க்கைய ஒரு கண்ணு தெரியாத ஒருவருக்கு மனைவியா ஆகி காலம் பூராக அவருக்கு பணிவிட செய்யனும் அதுதான் என்ட இலச்சியம் என்று கூரும்போதே மஹிசா என்னட தலைவிதி எப்படியோ அல்லாதான் அறிவான் ஏன்ட அளவு முயற்ச்சி செய்யிரம் என்ற சகியாவின் முகத்தை பார்த்தாள். சகியா பதிலுக்கு புன்னகைத்தவாறு இன்ஷா அல்லாஹ் நானும் முயற்ச்சி செய்றேன் என்று  கூறியவாறு ஒரு குறிப்பிட்ட நாளையும் இடத்தை;யும் கூறி நான்குவருடங்களின் பின் சந்திப்பதாக சொல்லி பிரிந்து சென்றார்கள்.
                     நாட்கள் வேகமாக விரைந்தது. மூவரும் ஒரே இடத்தில் கணவன்மாரோடு நான்கு வருடங்களின் பின் சந்தித்தனர். சகியாவின் கணவனுக்கு இரண்டு கண்களுமே குருடு. மஹிசாவின் கணவன் ஒரு ஊமை.கியாஷாவின் கணவனுக்கு ஒரு குறையும் இல்லை. என்பதை உணர்ந்த இரு நண்பிகளும் கியாஷாவிடம் குறைப்பட்டுக் கொண்டார்கள். மஹிசாவுக்கு இரண்டு ஆண் குந்தைகள். சகியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கியாசாவிடம் குழந்தை எதுவும் இல்லை.
               என்றாலும் கோபத்தோடு கியாஷாவை ஏச ஆரம்பித்தார்கள். கியாஷாவால் தாங்க முடியவில்லை. என்றாலும் சமாளித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.உங்கட கணவன்மார்ட குறையை பார்த்தாலே தெரியிரு.  ஏன்ட கணவன்ட குறையை சொல்ரேன். எங்களுக்கு பிள்ளை பாக்கியமே இல்லை. இது தான் என்ட கணவன்ட குறை எனக் கூறி தாங்க முடியாமல் அழுதுவிட்டால். இரு நண்பிகளும் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

                          ஹப்ஸா ஹலீல்.  
                                     புத்தளம்

Show commentsOpen link

Tuesday, September 24, 2013

ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி? How to block website in your system

ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி?
by Marikumar
டிப்ஸ்Yesterday, 23:40
இன்றைய நவீன உலகில் இன்டர்நெட்டின் தேவைகள் ஒரு அத்தியாவசிய விஷியமாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் இன்றைய மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

இன்டர்நெட்டின் மூலம் எந்த அளவிற்க்கு பயன்கள் அதிகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் தீமைகளும் அதிகம் உள்ளன. இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் இன்டர்நெட்டின் தேவைகள் அதிகம் உள்ளன. குழந்தைகள் இன்டர்நெட்டின் மூலம் தவறான வழிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

இன்டர்நெட்டில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் தேவையற்ற இணைய பக்கங்கள் அல்லது தகவல்கள் வந்து விடுவது உண்டு. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நாம் தேவையற்ற தவறான வெப்சைட்களை பிளாக் செய்வது பாதுகாப்பானதாகும். ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

விண்டோஸ் எக்ஸ்பிளோரரை ஓபன் செய்து C:/Windows/System32/drivers/etc. என டைப் செய்யுங்கள். C: டிரைவில் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் எந்த டிரைவில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதோ அந்த டிரைவின் பெயரை டைப் செய்யுங்கள்.

hosts என்பதில் டபுள் கிளிக் செய்யுங்கள். பின்பு அதில் இருக்கும் டாக்குமெண்டை விண்டோஸில் இருக்கும் நோட்பேடை கொண்டு ஓபன் செய்யுங்கள்.

hosts வேறு புரோகிராமில் ஓபன் ஆகிவிட்டால் Start - All Programs -Accessories - Notepad சென்று நோட்பேடை ஓபன் செய்திடுங்கள் பின்பு hosts fileயை நோட்பேடில் ஓபன் செய்யுங்கள்.

அதன் பின் நோட்பேடில் ஓபன் ஆன டாக்குமென்டில் "127.0.0.1 localhost" or "::1 localhost." என்பதை பார்த்து அதன் லைனின் முடிவில் கர்ஸரை வையுங்கள். பின்பு என்டர் தட்டினால் ஒரு புது லைனுக்கு செல்லும்.

புது லைனில் 127.0.0.1 என டைப் செய்து சிங்கிள் ஸ்பேஸ் விட்டு நீங்கள் எந்த வெப்சைட்டை பிளாக் செய்ய நினைக்கிறீர்களோ அந்த வெப்சைட்டை டைப் செய்யுங்கள். உதாரணமாக நீங்கள் reddit.com என்ற வெப்சைட்டை பிளாக் செய்ய எண்ணினால் 127.0.0.1 reddit.com என டைப் செய்யுங்கள்.

பின்பு file மெனுவுக்கு சென்று இந்த hosts fileயை save செய்திடுங்கள் .

நீங்கள் Admin ஆக இல்லையென்றால் fileயை save செய்ய முடியாது என்று கம்பியூட்டர் சொன்னால் Properties - Securityக்கு சென்று உங்கள் யூஸர் அக்கவுன்டில் இருக்கும் எல்லா பாக்ஸையும் செலக்ட் செய்திடுங்கள். இதன் மூலம் நீங்கள் fileயை save செய்யலாம்.
Share |

Show commentsOpen link

Beauty daughter எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??

Beauty daughter - எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அ
by selvipandiyan
New Tamil Jokes - .comToday, 16:02
எப்போதெல்லாம் மகள் அழகாய் தெரிவாள் அப்பாக்களுக்கு??

பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில் அழகு..

முகம் பார்த்து சிரிக்கையில் அழகு...

கை பிடித்து நடக்கையில் அழகு...

தரை கூட்ட பட்டுப்பாவாடை கட்டி தத்தி தத்தி நடக்கையில் அழகு...

ரெட்டை சடையிட்டு துள்ளி துள்ளி வருகையில் அழகு...

தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு...

தாவணி கட்டியபோது வந்த நாணத்திலும் அழகு...

கைகளை சுட்டுக்கொண்டு எனக்காக சமைக்கையில் அழகு...

என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு...

என் மகள் என்னும் குட்டி தேவதை அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்தபோதும் அழகு...

அப்பாக்களுக்கும் மகள்கள் என்றுமே அழகு தான்.

Show commentsOpen link

ஒரேசமயத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற பசு cow intresting news

ஒரேசமயத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற பசு
by Marikumar
சில டிப்ஸ்Today, 14:34

பசு­வொன்று ஒரே சம­யத்தில் நான்கு கன்றுகளை ஈன்ற சம்­பவம் கியூ­பாவில் இடம் பெற்­றுள்­ளது.

ஹவா­னாவின் கிழக்கே சுமார் 44 மைல் தொலைவில் பிகடுரா நக­ரி­லுள்ள அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான பண்­ணையைச் சேர்ந்த அலெலி என்ற 3 வய­தான பசுவே இவ்­வாறு ஒரே சம­யத்தில் 4 கன்­று­களை ஈன்­றுள்­ளது.

இவ்­வாறு ஒரேசம­யத்தில் பசு­வொன்று ஆரோக்­கி­ய­மான 4 கன்­று­களை ஈனு­வது 11 மில்­லியன் கன்றுகளுக்கு ஒன்று என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.
Share |

Show commentsOpen link

Monday, September 23, 2013

நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு Fundoplication சிகிச்சை

நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு Fundoplication சிகிச்சை

வாய் முதல் ஆசன வாய்ப் பகுதி வரையான உள்ளுறுப்புக்களில் வரக்கூடிய அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக் கும் துறையே 'கேஸ்ட்ரோ என்ட்டரோலஜி'. அண்மைக்காலமாக, இந்தத் துறை தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும் பெரும்பாலான நோயாளர்களைக் காண முடிகிறது. காரணம், மாறி யிருக்கும் நமது உணவுப் பழக்கவழக்கம். முன்னைய காலங்களில், நமது மண்ணில் விளைந்த இயற்கையான தானியங்கள், காய்கறிகளை உணவாகக் கொண்ட நாம், மேற்கத்திய நாகரிகத்தின் ஊடுருவலால், அவர்களது உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம். விலை குறைந்த வீதியோரக் கடைகளில் உணவருந்த ஆரம்பித்திருக்கிறோம். ஏற் கனவே பயன்படுத்திய எண்ணெய்யை மறுநாளும் பயன்படுத்தும் பழக்கமும் வந்துவிட்டது. இவையனைத்தும் குறி வைப்பது சமிபாட்டுத் தொகுதியையே என்று மிகத் தெளிவாகக் கூறினார் டாக்டர் ஜி.ராஜரத்தினம். இவர், திருச்சி, தில்லைநகரில் இயங்கிவரும் 'சிதார்' அதிநவீன பல்சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர். மேலைத்தேய மருத்துவமனை போன்ற மிகச்சிறந்த உட்கட்டமைப்புடன், அமைக் கப்பட்டிருக்கும் இம்மருத்துவமனையில், வாசகர்களுக்காக அவரைச் சந்தித்தோம்.

சமிபாட்டுத் தொகுதியில் பிரதானமாக வரக்கூடிய வியாதிகளாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்? அவற்றுக்கான சிகிச் சைகள் எவை?

முதலில் சிகிச்சைகள் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இந்தத் துறையைப் பொறுத்தளவில், சமிபாட்டுத் தொகுதியின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு மருத்துவர் என்ற அளவிற்கு இத்துறை முன்னேறியுள்ளது. 'ரொபோட்டிக் சேர்ஜரி' மூலமும் இத்துறைசார்ந்த சிகிச்சைகளைச் செய்துகொள்ளலாம். இன்னும் சில மாதங் களில் திருச்சியில் ரொபோட்டிக் சிகிச்சை யையும் சிதார் மருத்துவமனையில் அறிமுகப் படுத்தவிருக்கிறோம்.

முன்னைப்போல், வயிற்றை வெட்டிச் செய்யப்படும் சத்திர சிகிச்சைகள் மிக மிகக் குறைந்துவிட்டன. 'லேபராஸ்கோப்பி' எனப்படும் நுண்துளை சிகிச்சை முறை மூலமாக, தழும்பே இல்லாத வகையில் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். அதுமட் டுமன்றி, அந்நாளில், சிகிச்சை முடிந்தபின் ஓரிரு மாதங்கள் மருத்துவமனையில் தங்கு வதோ அல்லது வீட்டில் ஓய்வெடுப்பதோ கட்டாயமாக இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. சிகிச்சை முடிந்த இரண்டாம், மூன்றாம் நாளே நோயாளர்கள் வீடு செல்ல முடியும். இந்த சிகிச்சைகள், சமிபாட்டுத் தொகுதிக்கும் பொதுவானதே. இனி, சமி பாட்டுத் தொகுதியில் தோன்றக்கூடிய பிரச் சினைகள் பற்றிப் பார்க்கலாம்.

நெஞ்செரிச்சல்: உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஒரு 'வால்வு'ப் பகுதி இருக்கிறது. எமது இன்றைய உணவுப் பழக்கம் மற்றும் புகைபிடித்தல் போன்ற இன்னும் சில காரணங்களால், இந்த வால்வு தளர்ந்து விடுகிறது. உணவைக் கூழாக்குவதற்கு ஒருவகை அமிலம் இரைப்பையில் சுரக்கும். வால்வு தளர்ந்துவிடுவதால், கூழாக்கும் நடைமுறையின்போது, அந்த அமிலம் உணவுக்குழாய்க்குள் பாய்கிறது. இதுவே நெஞ்செரிச்சலுக்குக் காரணம். இதனால் ஆஸ்துமா கூட வரலாம். இதை குணப்படுத்தாவிடின், உணவுக்குழாயில் புற்றுநோயைத் தோற்றுவிப்பதற்கும் இடம் உண்டு. மருந்துகள் மூலம் குணமாகாவிடில், 'லேபராஸ்கோப்பி ஃபன்டோப்ளிகேஷன்' (Fundoplication) என்ற சிகிச்சை மூலம், அந்த வால்வை இறுக்கிவிடுவோம். இதனால் மீண்டும் நெஞ்செரிச்சல் தோன்ற வாய்ப்புகள் இருக்காது.

வயிற்றுப்புண்: வயிற்றுப்புண் பிரதான இடம் வகிக்கிறது. இத்தனை நாட்களாக, சரியான நேரத்திற்குச் சாப்பிடாத தால், சமிபாட்டுக்காக வயிற்றினுள் சுரக்கப் படும் ஒருவித அமிலமே வயிற்றுப் புண்ணுக்குக் காரணம் எனக் கருதப்பட்டது. அந்த அமிலத்தைக் குறைப்பதற்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் தற்போது, 'ஹெலி கோபாக்டர் பைலோரி' (Helicobacter pylori) எனப்படும் ஒரு வகை பக்டீரியாவும் வயிற்றுப்புண்ணுக்குக் காரணமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுவகைகளை உட்கொள்ளும்போது அதில் இருக்கும் இந்த பக்டீரியா, வயிற்றில் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனால், வயிற்றுப்புண்ணுக்காக வருபவர்களுக்கு, இந்த பக்டீரியாவை எதிர்க்கும் தன்மையுடைய 'என்டிபயோட்டிக்' மருந்துகளும் கொடுக்கி றோம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளைக் கொண்டு, உங்களுக்கு வந்திருப்பது வயிற்றுப்புண்தான் என்று எண்ணிக் கொண்டு, அதற்கான மாத்திரைக ளையும் நீங்களே தெரிவுசெய்து எடுத்துக் கொள்ளக்கூடாது. இப்போதெல்லாம், வயிற்றுப்புண்ணுக்காக வருபவர்களுக்கு என்டோஸ்கோப்பி பரிசோதனை செய்கி றோம். இதனால், நோயாளிக்கு வந்திருப்பது வெறும் வயிற்றுப்புண்தானா அல்லது புற்றுநோயா என்பதைக் கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால், வயிற்றில் புற்று நோய் வந்திருப்பதை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால்கூட, சத்திர சிகிச்சை செய்தபின் சில மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்திவிடலாம்.

கல்லீரல்: மஞ்சட்காமாலையால் பாதிக் கப்படும் பிரதான உறுப்பு கல்லீரல். நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆனவுடன் கல்லீரலுக்குத்தான் செல்லும். கல்லீரல் என்பது ஒரு பெருந்தொழிற்சாலை போன்றது. உண்ணும் உணவில் உள்ள நச்சுப் பொருளைப் பித்தநீர் வழியாகவும் (மலம் மூலம்) சிறுநீரில் உப்பாகவும் மாற்றி வெளியேற்றுவது, குளுக்கோஸ் மற்றும் புரதம் போன்ற உட லுக்குத் தேவையான சத்துக்களை, அதைப் பயன்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பி வைப்பது, உடலுக்குத் தேவையான அல்புமின் எனும் புரதச்சத்தை உற்பத்தி செய்வது, இரத்தம் உறைதலுக்குத் தேவை யான விற்றமின்களை உற்பத்தி செய்வது என்பன போன்ற பல வேலைகளைக் கல்லீரல் செய்கிறது. மஞ்சட்காமாலை மூலம் கல்லீரல் பாதிக்கப்படுவதால் இவ்வியக்கங்கள் தடைப்படுகின்றன. வெளியேற்றப்படவேண்டிய பித்த நீர் உடலில் தேங்கிவிடும். பித்த நீர் மஞ்சள் நிறமாக இருப்பதனால், உடலும் மஞ்சள் நிறமாகிவிடும். வயிறு வீங்கிவிடும். கல்லீரல் சுருங்கிவிடுவதால் அதன் இரத்த ஓட்டம் தடைப்படும். இதனால் இரத்த நாளங்கள் வீங்கி, வெடித்து இரத்த வாந்தியும் ஏற்படும். உயிராபத்து ஏற்படவும் வாய்புள்ளது.

மஞ்சட்காமாலைக்கு முக்கிய காரணம் மதுப்பழக்கம். மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்படைவதனால் மஞ்சட்காமாலை உண்டாகலாம். அடுத்து, 'ஹெப்படைட்டிஸ்' ஏ முதல் ஈ வரையான ஐந்து வகைக் கிருமிகள் மூலமும் மஞ்சட்காமாலை வரலாம். இது, எயிட்ஸ் போலவே, இரத்தம் மூலம் பரவக்கூடியது. இதில், ஹெப்படைட்டிஸ் ஏ மற்றும் பி வைரஸ்களுக்கு இப்போது தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எம் போன்ற மத்திய ஆசிய நாடுகளில், இவ்விரு கிருமிகள் மூலமே பெரும்பாலும் மஞ்சட்காமாலை வரும். இவை தவிர, சுயமருத்துவம் செய்து கொள்பவர்கள் அதிகளவில் மாத்திரைகளை உட்கொள்வதாலும் மஞ்சட்காமாலை வரலாம். பூஞ்சை படர்ந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதாலும் மஞ்சட்காமாலை வரலாம். இவ்வாறான காரணங்களால் முழு மையாகப் பாதிப்படைந்த கல்லீரலுக்கும் இப்போது கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை செய்துகொள்ளலாம். இந்த சிகிச்சையை, திருச்சியில் வழங்கும் ஒரே மருத்துவமனை சிதார் மருத்துவமனைதான்.

கணையம்: மஞ்சட்காமாலையால் கணையமும் பாதிக்கப்படலாம். இது தவிர கணையப் புற்றுநோய் ஏற்படலாம். அதிகமாக மது அருந்துவதால் கணையம் அழுகியும் போய்விடலாம். கணையப் பாதிப்பினால் உண்டாகக்கூடிய மிகக் கடுமையான நோய், நீரிழிவுதான். காரணம், இன்சுலினைச் சுரப்பதே கணையத்தின் முக்கிய வேலை. இது பாதிக்கப்பட்டால், இன்சுலின் சுரப்ப திலும் கோளாறுகள் ஏற்பட்டு நீரிழிவு நோய் வந்துவிடும். கணையம் பாதிக்கப் பட்டிருப்பதை, முதுகுவலி, பசியின்மை, உடலில் அரிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டு அறியலாம். இவ்வாறான நோய்க ளுக்கும் மருந்துகள் மூலமே குணப் படுத்த லாம் என்றாலும், தேவையான ஸ்கேன் பரிசோ தனைகளைச் செய்து, கணையப் பாதிப்பின் அளவை அறிந்துகொண்டு, அதன்படி சத்திர சிகிச்சையைச் செய்துகொள்ளலாம்.

மேலும், கணையத்தில் கற்கள் அல் லது கட்டி என்பனவும் தோன்றலாம். கணை யத்தில் கற்கள் இருந்தால் கணையம் சீராகச் செயற்படாது. இதனால், நீரிழிவு ஏற்படும்; வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இதையும் சத்திர சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

பெருங்குடல்: மலச்சிக்கலே பெருங் குடலில் ஏற்படக்கூடிய பிரதான நோய். இதற்கு முக்கியமான காரணம், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் அதிகளவில் உட் கொள்ளாமையே. மலச்சிக்கலால், கழிவுகள் குடலினுள்ளேயே நீண்டநாட்கள் தேங்கி இருப்பதால், குடல் புற்றுநோய் தோன்றவும் வாய்ப்புகள் உண்டு. ஆகையால், நார்ச்சத்து உடலில் தேவையான அளவு இருந்தால், குடல் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பு அரிது.

அதுமட்டுமன்றி, மலச்சிக்கல் நோய் உள்ளவர்கள் மலங்கழிப்பதற்கு அதிக சிரமம் எடுத்துக்கொள்வதால், 'பைல்ஸ்' எனப்படும் மூலநோயும் ஏற்படலாம். தற் போது மூலநோய்க்கு லேசர் சிகிச்சைகள் அறிமுகமாகியுள்ளன. வலியே இல்லாமல், இரத்தக் கசிவுகள் இல்லாமல் சில நிமிட நேரங்களில் முடித்துக்கொள்ளக்கூடிய வகை யில் இந்த சிகிச்சைகளை நாம் செய்து வரு கிறோம்.

அதிக உடல் எடையும் உங்கள் துறை யுடன் தொடர்புகொண்டதுதானே? அவ் வாறானவர்களுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கு கிறீர்கள்?

ஆம். உடல் எடை என்பது, பல நோய் களுக்கு மூல காரணமாக இருக்கிறது. இரை ப்பை பெரிதாக இருப்பதால், அந்த இரைப்பை நிரம்பும் வரையில் உணவு உண்ட திருப்தி ஏற்படாததால்தான் அதிகளவில் உணவு உட் கொள்கிறார்கள். இவர்களுக்கு 'ஒபிசிட்டி சேர்ஜரி' எனப்படும் அறுவை சிகிச்சையை வழங்குகிறோம். லேபராஸ்கோப்பி மூலம் வழங்கப்படும் சிகிச்சையில், அதிக உடல் எடை கொண்டவரின் இரைப்பையைச் சுருக்கி விடுகிறோம். இதன் மூலம், அவர்களுக்கு உணவு உண்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலதிகமாக உணவு உண்பதைத் தவிர்த்துக்கொள்ள முடியும். வயதானவர்கள் பலர் இப்போது இந்த சிகிச்சையைச் செய்துகொள்கிறார்கள். காரணம், வயதான காலத்தில் உடல் எடை அதிகரித்திருந்தால், மூட்டு வலி, நீரிழிவு, இதயநோய் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரலாம். அந்த வாய்ப்புகளைத் தவிர்க்கவே இந்த சிகிச்சையைச் செய்து கொள்கிறார்கள். இந்த சிகிச்சையை, சமிபாட்டுத் தொகுதி தொடர்பான மருத்துவத்தின் அதி உன்னத வளர்ச்சி என்றே நான் சொல்வேன்.

இயற்கையாக உள்ள இரைப்பையை சுருக்குவதன் மூலம், அவர்களின் நாளாந்த இயக்கத்தில் பிரச்சினைகள் அல்லது பக்க விளைவுகள் ஏற்படாதா?

ஏற்படாது. தேவைக்கு அதிகமாக உட லில் சேரும் சத்துப்பொருட்கள், உடல் எடை குறைப்பு சிகிச்சைக்குப் பின் உடல் இயக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும். அதேநேரம், சிகிச்சைக்குப் பின், தமது உடல் இயக்கத்திற்குத் தேவையான அளவு உணவை அவர்கள் உட்கொள்வதால், இந்த சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்படாது.

இயற்கையான உணவுகளை சரியான நேரத்தில், போதுமான அளவு மட்டும் உண்டு, உடற்பயிற்சிகள் செய்து, மது, புகைப்பழக்கம் என்பவற்றைத் தவிர்த்து வாழந்தால் குடல் சம்பந்தமான நோய்கள் எம்மை அண்டாது.

சந்திப்பு : ஏ.எஸ்.தேவராஜன்

தொலைபேசி: 0091 431 2751101-5

அலைபேசி: 0091 95970 89102

மின்னஞ்சல்: drrajatrichy@gmail.com

இணையம்: www.cetharhospitals.com
Share |

Show commentsOpen link

காலை உணவில் கவனம் தேவை! Morning tiffeen

காலை உணவில் கவனம் தேவை!
Tamil NewsToday, tamil news

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள். 

இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்பது, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற வையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடியவையே. இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலாம்.

அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அதனை குணப்படுத்துவதற்கான முயற்சி யில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதிலும் அமில சுரப்பைப் போக்குவதற்கு எங்கும் செல்ல வேண்டாம். அதனை சரி செய்ய பல இயற்கை முறைகள் உள்ளன. அவைகளைப் பின்பற்றி வந்தாலே, அமிலசுரப்பை எளிதில் குணப்படுத்தலாம்.

தண்ணீர் - தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு கோப்பை தண்ணீர் குடித்து வந்தால், அமில சுரப்பு வராமல் தடுக்கலாம்.

முட்டைகோஸ் - இதன் சாறை நாள்தோறும் அருந்தி வந்தால் அமில சுரப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மோர் - மோருடன் ஒரு மேசை கரண்டி கொத்துமல்லி சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், அமில சுரப்புக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கிராம்பு - கிராம்பு மிகவும் காரமாகத் தான் இருக்கும். இருப்பினும் அதனை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அமில சுரப்பு பிரச்சனையைப் போக்கலாம்.

தேன் மற்றும் ஆப்பிள் – உணவு உண்ணுமுன் ஒரு மேசை கரண்டி தேனுடன், இரண்டு மேசை கரண்டி ஆப்பிள் சாறு கலந்து குடித்தால், அமில சுரப்பு வராமல் தவிர்க்கலாம்.

புதினா சாறு - உணவைச் சாப்பிட்டு முடித்த பின், கொதிக்கும் நீரில் புதினா இலையைப் போட்டு கொதிக்க விட்டு, பின் குளிர வைதது குடித்தால், அமில சுரப்புக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

இளநீர் - பல மருத்துவ குணம் கொண்ட இளநீரை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அமில சுரப்பு குணமடையும்.

வெள்ளரிக்காய் - வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அத்தகைய வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அமில சுரப்புக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

துளசி இலை - அமில சுரப்பு, வாயு தொல்லை, குமட்டல் போன்றவற்றிற்கு துளசி இலை ஒரு சிறந்த நிவாரணியாகும்.

குறிப்பு: உடம்புக்கு எப்படி ஓய்வு தேவையோ அதேபோல் குடலுக்கும் ஓய்வுதேவை ஆதலால் இரவில் குறைவாக உண்பது அதுவும் படுக்கை செல்ல ஒரு மணி தியாலங்களுக்கு முன் உணவு உண்பது ஆரோக்கியமானது. (அதிக உணவு சாப்பிடுபருக்கு காலையே சிறந்தது).
...
Show commentsOpen link

Sunday, September 22, 2013

Chennai History சென்னையின் வரலாறு

சென்னையின் வரலாறு
Chennai history
 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும்
ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு
வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக  நகரங்களுள்
ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய
மாநகரங்களுள் ஒன்று.
 
17 ஆம்  நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில்
கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து
வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை
நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான  கடற்கரைகளுள் ஒன்று. சென்னை,
கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு 
அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
சென்னையின் பொருளாதாரம்  பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது.
 
ஊர்தி,
தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக்
கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும்
நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல்
தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
 
வரலாறு
சென்னை
நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ,
மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக
கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை
கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற
சிறிய கிராமமாக இருந்தது.
 
1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி
தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது.
அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன்
ஆகியோர் தங்களது  உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட்
ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன்,
வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக
கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
 
சென்னையில்
அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில்
உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித
தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக  கருதப்படுகிறது. 16
ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம்
என்ற பெயரில் ஒரு  துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு
நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.
 
1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே
கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன்
ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை
மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. 
 
சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522
ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக்
கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது.
தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில்
அவர்களது குடியிருப்பு உருவானது.
 
1688 ஆம் ஆண்டில் சென்னை முதல்
நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 
இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய
கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப்
பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு
பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர்
பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும்
பிரஞ்சு கைப்பற்றியது.
 
1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர்
வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது.
இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன்
இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா  விடுதலை அடைந்த பிறகு மதராஸ்
மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர்
மாற்றம் செய்யப்பட்டது.
 
நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு
சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில
வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது,
தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு
தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது
என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.
 
வெங்கடபதி
சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர்
வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என
அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை
ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என
அழைக்கப்படுகிறது.
 
புவியியல்
இந்தியாவின் தென்கிழக்கு
கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப்
பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள
விரிகுடா உள்ளது. சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ. சென்னை மாவட்டமும்,
திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை
மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில்
மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம்,
ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன
 
கூவம், மற்றும் அடையாறு ஆகிய
நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி,
செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு
வரப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை  உலகின் இரண்டாவது பெரிய
கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும்
இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில்
அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை
என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர்
கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.
 
சென்னை நகரின் தொழிற்சாலைகளில்
பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப்
பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னை
மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது
மாநகராட்சியின் தலைவர் மேயர் - சைதை சா. துரைசாமி சென்னை மாநகராட்சி
ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம்
ஆண்டு துவங்கப்பட்டது.
 
இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின்

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்! Factor of diabeties

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்!!
by Marikumar
ஆண் பெண் செக்ஸ்: சில டிப்ஸ்Yesterday, 14:49
பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும்.

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய மாற்றங்களே சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

இவ்வாறு உடலில் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்று கூர்ந்து கவனித்து வருவதன் மூலம் சர்க்கரை நோய் இருப்பதை சீக்கிரமே அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்ட பின், தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் இந்நோய் உண்டாக்கக்கூடிய விபரீத விளைவுகளை தவிர்க்கலாம். இப்போது சர்க்கரை நோயின் பல்வேறு அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா!!!

அடிக்கடி சிறுநீர் கழித்தல்: சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படுமாயின், உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கக்கூடும். சர்க்கரை அளவுகளில் ஏற்படக்கூடிய உயர்வு, இரத்த ஓட்டத்தில் காணப்படும் திரவங்களின் அளவை உயர்த்தக்கூடியதான ஓஸ்மொலாலிட்டியை அதிகரிக்கும். இது சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, அதிக அளவிலான சிறுநீரை உருவாக்கும் படி செய்யும். இதனாலேயே சர்க்கரை நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது.

அதீத தாகம்: சர்க்கரை நோயாளிக்கு எப்போதும் அடங்காத தாகம் இருப்பது போன்ற உணர்வு எழும். உடலில் உள்ள திரவங்கள் அனைத்தும் அடிக்கடி வெளியேற்றப்படுவதினால், அந்த நீர் இழப்பை ஈடுகட்ட வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக, அதீத தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய இரண்டு அவஸ்தைகளும் இருப்பின், அது சர்க்கரை வியாதி இருப்பதற்கான உறுதியான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

எடை குறைதல்: இது டைப்-1 சர்க்கரை நோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும். உயிரணுக்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காததனால், உடல் தனக்கு தேவையான சக்தியை கொழுப்பு நிறைந்த திசுக்களை உடைத்து எடுத்துக் கொள்ள தலைப்படும். இதனால் தான் எடை குறைவு ஏற்படுகிறது.

சோர்வு: சர்க்கரை நோயாளியின் உடல், சர்க்கரையை உபயோகித்து தனக்குத் தேவைப்படும் சக்தியைப் பெற்றுக் கொள்ள இயலாது. இதனால், அந்நோயாளி உடற்சோர்வு, அசதி போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும். உயிரணுக்களால், இரத்த ஓட்டத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸை, இன்சுலினின் உதவியின்றி உறிஞ்ச இயலாது. அதனால் அவற்றின் ஆற்றல் குறைந்து காணப்படும்.

கைகள் மரத்துப் போதல்: இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதனால், நரம்பு மண்டலம் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்புக்கு ஆளாகும். சர்க்கரை நோய் நீண்ட காலம் வரையில் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கும் பட்சத்தில், அது கைகளில் அடிக்கடி சிலிர்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் அல்லது உணர்வுகள் ஏதுமின்றி மரத்துப் போகச் செய்யும்.

சிராய்ப்புகள், வெட்டுக்காயங்கள் போன்றவை மெதுவாகவே குணமாகும்: இது சர்க்கரை நோய்க்கான மிகப் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், உடலின் நோய் எதிர்ப்பு மையமானது, சீராக இயங்கும் ஆற்றலை இழந்துவிடும். திசுக்களில் காணப்படும் சீரற்ற நீர் சமன்பாடு, வெட்டுக்காயங்கள் மற்றும் புண்கள் குணமடைவதை தாமதப்படுத்தும்.

சரும வறட்சி: புறநரம்பு மண்டல கோளாறு காரணமாக, வியர்வை சுரப்பியின் சுழற்சி மற்றும் இயக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாக மேற்புற சருமம் வறட்சியடைந்து, அரிப்பு ஏற்படும்.

எப்போதும் பசி இருப்பது போல் தோன்றும்: நீங்கள் எவ்வித கடின உடற்பயிற்சியை மேற்கொள்ளாத போதும் அல்லது நிறைவாக சாப்பிட்டிருந்தாலும் கூட, எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு எழுந்தால், அது சர்க்கரை நோயின் அறிகுறி தான். ஏனெனில் சர்க்கரை நோய், குளுக்கோஸை உயிரணுக்களுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இந்நிலையில் நீங்கள் உண்ணும் உணவை ஆக்க சக்தியாக மாற்றும் திறன் உங்கள் உடலுக்கு இல்லாமல் போய்விடும். அதனால் உங்கள் உயிரணுக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலை உருவாகும்.

வீக்கமடைந்த ஈறுகள்: கிருமிகளில் பெரும்பாலானவை வாய் மூலமாகவே உடலுக்குள் நுழைகின்றன. சர்க்கரை நோய் இத்தகைய கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலை குறைக்கும். இந்நோய், வலியும் வீக்கமும் மிகுந்த ஈறுகள், தாடை எலும்புகளின் தேய்மானம் மற்றும் நாளடைவில் பற்சிதைவு போன்ற வாய் தொடர்பான ஏராளமான பிரச்சனைகளை உண்டாக்கும். சில சமயம் வாய்க்குள் புண்களையும் உண்டாக்கும். சர்க்கரை வியாதி வரும் முன்னரே ஒருவருக்கு பல் தொடர்பான கோளாறுகள் இருந்தால், அத்தகைய பிரச்சனைகள் சர்க்கரை வியாதி வந்த பின் மேலும் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

Thatstamil
Share |

Show commentsOpen link

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts