Saturday, August 3, 2013

நணபர் தின வாழ்த்துக்கள்

பந்தம் என்ன
சொந்தம் என்ன
போனா என்ன
வந்தா என்ன
உறவுக்கெல்லாம்
கவலப்பட்ட ஜென்மம்
நானில்ல,

பாசம் வெக்க நேசம்
வெக்க தோழன்
உண்டு வாழவெக்க
அவனைத்தவிர
உறவுக்காரன் யாரும்
இங்கில்லே,

உள்ளமட்டும் நானே
என் உசிரக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்,

என் நண்பன் போட்ட
சோறு நிதமும் தின்னேன்
பாரு
நட்பைக் கூடக் கற்பைப்
போல என்னுவேன்

சோகம் விட்டு சொர்க்கம்
தொட்டு ராகம் இட்டுத்
தாளம் இட்டுப்
பாட்டுப் பாடும்
வானம்பாடி நான் தான் ஹோய்

Happy Friendship Day

மாவீரன் நேதாஜி

தமிழால் இணைவோம்:
உலகத்தையே ஆட்டிப் படைத்த
சர்வாதிகாரி முசொலினியிடத்தில்
"நேதாஜி சுபாஷ்
சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள்.
சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-
" இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
காலந்தவறிப் பிறந்துவிட்டார்...
சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக
சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும்
நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது"

- அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி.

அப்பாவை மாமாவாக்கும் பணம் தேவைதானா?

தமிழால் இணைவோம்:
திருமணம் முடித்த மூன்றாவது மாதம்
பொருள் தேடி வெளிநாடு பயணம்

நான் தகப்பனாக போகிறேன்
என்றதும் கூட தொலைபேசியின்
வாயால் தான் அறிய முடிந்தது...

மற்றொருநாள் தொலைபேசி அலறல்
பெண் பிள்ளைக்கு தகப்பனானேன்
என்ற செய்தி தாங்கி வந்தபோது
ஊருக்கு கிளம்பும் முடிவு
ஒத்திவைக்கப்பட்டது...!
இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டும் என்பதற்காய்....

என் மகளின் ஒவ்வொரு அசைவும்
எனக்கு தொலைபேசியிலேயே விளக்கப்படும்
என் மனைவியால்
நான் 'புகைப்பட அப்பா' என் மகளுக்கு
எப்பொழுதேனும் திருமண வீடியோவில் ....

அவளின் விருப்பம் எல்லாம்
நிறைவேற்று ...
அவளுக்காகத்தானே எல்லாம்
வாய்மொழி உத்தரவு என் மனைவிக்கு!!

ஐந்து வருடங்கள் உருண்டோடி
விடுப்பில் பயணம் ஊருக்கு....
கூடு திரும்பும்
குயிலின் மகிழ்ச்சி....

எண்ணற்ற மாற்றம்
மண் சாலையெல்லாம்
தார் சாலையாய்
செல் போன் கோபுரங்கள்
டிஷ் ஆண்டனா குடைகள்

திறந்த வீட்டில் நுழையும்
என் ஓசை கேட்டு
என் மகள்
"அம்மா யாரோ ஒரு மாமா வந்திருக்காங்க....."
இடியென இறங்கிற்று என்னுள்

அப்பாவை மாமாவென அழைத்தது அவள் குற்றமில்லை
அப்பாவென அடையாளம் கற்பிக்காதது என் மனைவி குற்றமில்லை
பொருள் தேட அயல்நாடு சென்றது என் குற்றமில்லை

எது, யார், ஏன்? ஏதும் அறியா நிலையில்
என் பாஸ்போர்ட் விசாவை குப்பையில்
எரிந்து விட்டு உள் நுழைந்தேன்.....!!!!

அப்பாவை மாமாவாக்கும் பணம் தேவைதானா?

- ஜெய் குமார்

Friday, August 2, 2013

உணவே மருந்து

தமிழால் இணைவோம்:
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்:

தமிழன் உணவே மருந்து என்று வாழ்ந்து வந்தவர்கள். தாம் உண்ணும் உணவை கூட எவ்வாறு இலையில் இட்டு உண்ணவேண்டும் என்று ஒரு முறையை கையாண்டவர்கள். இந்த படம் அந்த உணவு பரிமாறும் முறையினை விளக்கும் ஒரு சாட்சி...

மேலும் இந்த பரிமாறும் முறையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவைகளை இங்கு காண்வோம்.

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு. வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

நன்றி - தமிழ்க்குடில்

பற்களை எப்படி துலக்க வேண்டும்

பற்களை எப்படி துலக்க வேண்டும்?

தற்ப்போது குழந்தைகளுக்கு விதவிதமான
பேஸ்ட்டு வருகிரது. அவைகள் ஆரோகியம்
தானா சற்று சிந்தியிங்கள். ஒரு வெப் தளத்தில்
வெளி வந்த நல்ல தகவல்.

எல்லோருக்குமே வெண்மையான பற்கள்
மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப்
பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள்
நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட்
பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப்
பயன்படுத்துபவர்கள்,
வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின்
பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும்.

அதோடு வாய் துர்நாற்றம் வேறு.
பற்களை முறைப்படி துலக்காதது,
ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில்
பயன்படுத்துவது, கண்ட கண்ட
பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்
காரணமாகும். உங்கள் பற்களும் முத்துப் போல்
வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா?

இதோ சில டிப்ஸ்:
பிரஷ்ஷில் பேஸ்ட் வைக்கும்போது பிரஷ்
முழுவதும் வைக்க வேண்டிய அவசியமில்லை.
பாதி அளவு வைத்தால் போதுமானது. அந்தந்த
நேரத்தில் கிடைக்கும்
ஏதாவது ஒரு பேஸ்ட்டைப் பயன்படுத்தாமல்,
தொடர்ந்து தரமான பேஸ்ட்டைப்
பயன்படுத்துங்கள்.

பல் துலக்கும் போது, கண்ணாடி முன்னால்
நின்று மேல்வரிசைப் பற்களை கீழ்வரிசைப்
பற்களுடன் ஒட்டாமல் லேசாகத்
திறந்து வைத்துக் கொண்டு (ஒரு விரல்
அளவுக்கு) துலக்க வேண்டும்.

பற்களைச் சேர்த்து வைத்து துலக்கும்போது,
பற்களில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும்
படலங்கள் வெளியேறாமல் மீண்டும் பல்
ஈறுகளின்
அடியிலேயே ஒட்டிக்கொண்டு விடும்.
பற்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு
துகள்கள், படலங்கள் வாய்க்குள் சென்றுவிடும்.

பின்னர் வாய் கொப்பளிக்கும்போ
து அவை வெளியேறி விடும்.

பற்களைத் துலக்க ஆரம்பிக்கும்பொழுது,
முதலில் கடைவாய்ப் பற்களில்
இருந்து ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்வதால்,
மொத்தப் பற்களையும் வரிசையாக பிரஷ் செய்த
திருப்தி கிடைக்கும்.
மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும்,
கீழ்வரிசைப் பற்களை கீழிருந்து மேலாகவும்
துலக்க வேண்டும்.
மென்மையான பிரஷ்ஷையே பயன்படுத்த
வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மா
பற்பொடியை விட பேஸ்ட் கொண்டு பல்
துலக்குவதே சிறந்தது. ப்ளோரைடு கலந்த
பேஸ்ட்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்குத்
தீங்கு விளைவிக்கும்.

நாக்கில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, டங்க்
கிளீனருக்குப் பதிலாக, பிரஷ்ஷின் குச்சங்களைக்
கொண்டே சுத்தம் செய்யலாம்.

ஏனெனில், டங்க்
கிளீனர் நாக்கில் உள்ள
சுவை நரம்புகளை புண்ணாக்கி விடும்.

காலையில் எழுந்த உடனும்,
இரவு படுக்கப்போகும் முன்பும் என
ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்க
வேண்டும்.

சிலருடைய
பற்களுக்கு இடையே இடைவெளி காணப்படும்.
இவர்கள் இன்டர்டென்டல் பிரஷ்
கொண்டு உணவுத் துகள்கள் மற்றும்
படலங்களை அகற்றலாம்.

சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குறைவாக
சாப்பிட வேண்டும். இவற்றைத்
தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில்
பற்சொத்தை ஏற்படும். அதேபோல் அதிக
குளிர்ச்சியான பானங்களை அருந்தக் கூடாது.

ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட
பின்பு இரண்டு, மூன்று முறை நன்றாக வாய்
கொப்பளிக்க வேண்டும்.

மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தக்
கூடாது.

பயன்படுத்த வேண்டிய அவசியம்
ஏற்பட்டால் மருத்துவரின்
ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த
வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம்
சென்று, பற்களைச் சுத்தம்
செய்து கொள்வது அவசியம்.

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.

எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது
...
மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்

ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.

டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்

அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து

சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.

சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.

அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்

அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷ

நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ

அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்

பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......

ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.

போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Thursday, August 1, 2013

சென்னை அடுக்குமாடி வீடு - சிறுகதை

கிராமத்தில்
இருந்து சென்னை அடுக்கு மாடிக்கு ....

சென்னையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன்
தன்னுடைய கிராமதிருக்கு சென்று அவனின்
அப்பாவிடம் நான் சென்னையில்
ஒரு வீடு வாங்க போகிறேன் .. 5 லட்சம் பணம்
கேட்டான் , அதற்கு அவர் இன்னும்
உன்னக்கு திருமணமே ஆகவில்லை அதற்குள்
ஏன் அவசரம் என்றார் .

இப்பொழுது வாங்கினால்
30 லட்சத்தில் வாங்கிவிடலாம்
பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம்
தேவைப்படும் ... தினம் தினம்
விலை ஏறி கொண்டேபோகிறது என்றான் ...

யோசித்த அப்பா சரியான முடிவு தான் ..

ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க
வைக்க வாங்கிய கடனை உண் சம்பளத்தில் தான்
அடைக்க
ஆரம்பித்து இருகின்றோம் .

திடிரென்று 5 லட்சம்
கேட்டால் எப்படி???

நமது விவாசய நிலத்தில்
ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய
கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில்
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் ...

5
லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள
தொகைக்கு என்ன பண்ணுவ என்று கேட்க ..

மகன் -அதை வங்கி லோன் தரும் ..நாம்
அதை மாதம் தவனை முறையில் 20
வருஷதிருக்கு செலுத்தலாம்

என்றான் ... எந்த
மாதிரியான வீடு எப்டி இருக்கும் என்று கேட்க ..

300 வீடு கொண்ட
அடுக்கு மாடி குடியிருப்பு ,சகல வசிதிகளும்
இருக்கும் ..

அடுக்குமாடி என்றவடுன் அவர்
முகம் மாறியது ..

ஆனால் மகன் ஆசைகேற்ப
ஒரு பகுதி விவசாய
நிலத்தை விற்று வீடு வாங்க பணம்
கொடுத்தார் ..

வீடு வாங்கிய
பின்பு அப்பாவை சென்னை வாருங்கள்
என்றான் ..

அவரும் புதிய வீட்டை பார்க்க
மிகுந்த
ஆசையோடு வந்து அடைந்தார் ...

ஒவ்வரு வீட்டு
நல்ல இடைவெளி விட்டே பார்த்து பழகிய
மனிதன்
இப்படி ஒரு வீட்டை பார்த்து அசந்து நின்றார் ..

உள்ளே சென்று 900 சதுர
அடி வீட்டை பார்த்து இதை வாங்கவா நம்மக்கு ச
நிலத்தை விற்க சொன்ன
என்றார் ....

இது எல்லாம்
உங்களுக்கு புரியாது இங்க
அப்டிதான் ...

என்னோட லைப் சென்னையில்தான்
இன்னிமே நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வர போறேன் ..

இங்க தனி வீடு எல்லாம்
வாங்க முடியாது அதுக்கு கோடி கணக்குல
பணம் வேணும் ...

பேசாம தூங்குங்க
வந்தது அசதியா இருக்கும் ...மனம் கேட்காமல்
உறங்கினர் ....

மாலை வேலையில்
வீட்டை விட்டு வெளியே வந்தார் .. மற்ற
வீடுகள் அனைத்தும் உள்ளே பூட்ட
பட்டு இருந்தது ..

கீழ இறங்கி வந்தவர் சில
பெற்றோர்கள் தங்கள்
சிறு குழந்தைகளை பூங்காவில் விளயாட
வைத்து கொண்டு இருந்தார்கள் ...

இவருக்கு மனதில் ஒரு சந்தோஷம் அதை பார்த்த
படி நின்று கொண்டுஇருந்தர் ...

பக்கத்தில் வந்த
செக்யூரிட்டி அய்யா நீங்க சரவணன் சார்
அப்பாவா என்றான்...

அமாம் என்றார் .. சார்
சொல்லிட்டு தான் போனாரு ... வாங்க சார்
டி சாபிடலாம் என்றான்...

சரி என்று நகரும்
போது ஏன் பா இங்க யாருமே ஒருதற்கு ஒருத்தர்
பேசிக்க மாட்டாங்களா எல்லாம் வீடு உள்ள
பூட்டிகிரங்க ????

அது எல்லாம் அப்படிதான் அய்யா ...
எல்லாத்துக்கும் நிறைய வேலை ...காலையில
ஆரம்பிச்சு நைட் வரைக்கும் .. பல வீட்ல
கணவன் மனைவி ரெண்டு பேரும்
வேளைக்கு போறாங்க ...

அவுங்க சின்ன
பசங்கள பக்கதுல இருக்க ஹோம் ல
விட்ருவாங்க ..

நைட் யாரு முதல
வரங்களோ அவுங்க
கூட்டிட்டு வருவாங்க ...

பெத்த புள்ளைய
யாருகிட்டயோ விட்டு போவாங்கள ???

ஏன்
அவுங்க அப்பா அம்மா எல்லாம் எங்க வர
மாட்டங்கள ???

அதுவா இவங்கு இருக்க
பிஸில ... பெதவுங்கள பார்க்க
முடியாதுனு ....ஒன்னும் அவுங்க சொந்த ஊர்ல
விட்ருவாங்க ..இல்லாட்டி முதியோர்
இல்லத்தில் சேர்த்து விட்ட்ருவங்க .

இதை கேட்ட ஆச்சிரியத்தில்
நின்று கொண்டு இருக்க .. இதோ போராறே சேகர்
சார் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு தான்
இப்போ கூட இவர் பையன அங்க இருந்து தான்
கூட்டிட்டு வரறாரு ...

திகைத்து நின்ற பெரியவர் .. தான் மகனிடம்
ஏதும் கேட்காமல் ஒரு வாரம்
பல்லை கடித்து கொண்டு கடந்தார் ...ஒரு நாள்
மாலை கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..

பக்கத்தில் வந்த சேகரை பார்த்தார் ... என்ன
தம்பி ஆச்சிரியமா இருக்கு ..இன்னக்கி வேலை இ
இல்ல அய்யா .. லீவ் போட்டுட்டேன் ...

எதுவுமே பிடிக்கலே ... கொஞ்சம் ரிலாக்ஸ்
பண்ணலாம்னு ...

ஓஹோ சரி சரி ... எங்க
உங்கள் மனைவி என்றார் ... அவளுக்கு செகண்ட்
ஷிபிட் நைட் 12 மணி ஆகும் ..

அதுவரைக்கும்
நான் பையன பார்த்துக்குவேன் ...

அப்புறம்
கலையில நான் வேளைக்கு போயிருவேன் ...

அவ வீடு வேலையெல்லாம்
முடிச்சுட்டு பையன பக்கத்துக்கு ஹோம் ல
விட்டுட்டு வேளைக்கு போய்டுவா என்றான

சேகர் ... அப்போ நீங்க ரெண்டு பேரும்
பேசிக்கவே மாட்டிங்கள ???

சண்டே மட்டும்
தான் பேச முடியும் அதுவம்
அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10
மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா ..

அப்போ ஒரே தூக்கம் தான் .. சாய்ந்தரம்
எதாவது ஹோட்டல்
போய்ட்டு சாப்பிட்டு வருவோம் என்றான் ...

எதுக்கு பா இப்டி கஷ்ட படனும் ???

இப்படி இருந்த தான் இங்க வாழ முடியும் ..

அதற்கு அந்த பெரியவர் .. நீங்க
சொல்றது தப்பு இப்படி இருந்த தான்
வசதியா வாழ முடியும் அப்டி சொல்லுங்க ..

என்றார் .. அதை கேட்டவுடன் செவியில்
அறைந்தது போல இறந்தது சேகருக்கு ...

அடுத்த நாள் தான் மகனிடம் நான்
ஊருக்கு போறேன் பா என்றார் பெரியவர் ..

என்ன
அப்பா இவளவு அவசரம் ....ஒன்னும் இல்ல
படிச்சா நல்ல இருக்கலாம் ...அப்டிங்கற
எண்ணத்துல தான் உன்னை கடன வாங்கி படிக்க
வச்சேன்..

ஆனா நீ இன்னும் உன்
வாழ்கையே ஆரம்பிகல அதுக்குள்ள அடுத்த 20
வருஷத்துக்கு கடன்காரன் அயிட்ட ...

இனிமே உனக்கு கல்யாணம் பண்ண
அவளுக்கு அப்புறம் உன்
குழந்தைக்கு சேர்த்து உன் மனைவியும்
வேலைக்கு போகணும் ...

கடைசியா படிப்பு உன்ன ஒரு கடன் காரண தான்
ஆக்கும் நு தெருஞ்சு இருந்த உன்ன
படிக்கவே வச்ருகமட்டேன் ....

விவசாயம்
செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உண்
படிப்க்கு தவிர கடன் வாங்கல .... இனிமே உன்
வாழ்கையில நிமதியே கிடயாது அப்டிங்க்ரத
நினைக்கிற போது தான் கஷ்டமா இருக்கு ...

மீண்டும் திரும்பி வருவாய்
என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன்
என்று தனது கிராமத்திற்கு சென்றார் ...

அவருக்கு எப்படி தெரியும் இந்த
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும் தான்
எக்ஷிட் கிடையாது என்று ...

சரவணனும் ,சேகரும் அவர் அவர்
வேலையை செய்ய தொடிங்கினர்கள் ......

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்களின் நிலமை

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் வென்ற
வீராங்கனை சாலையோரம் பானி பூரி விற்கிறார

# இதுதான் இந்தியா. அரசியல்வாதிகளின்
அன்றாட செலவுக்கு லட்சங்களும் கோடிகளும்
செலவு செய்யும் முட்டாள் அரசாங்கமே..

மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு ஒலிம்பிக்
போட்டியில்,
இந்தியாவுக்கு இரண்டு வெண்கலப்
பதக்கங்களை பெற்றுத் தந்த வீராங்கனைக்கு,
நமது ஆட்சியாளர்கள் அறிவித்தபடி,
உதவிதொகை கிடைக்கவில்லை. இதனால்,
வாழ்க்கையை ஓட்ட, சாலையோரம்
பானிபூரி விற்கும்
நடைபாதை கடையை நடத்தி வருகிறார

நன்றி : நல்லதை ஷேர் பண்ணுவோம் முடிந்தால்
நல்லது செய்வோம்

தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் குப்பையில்..?!

தமிழன் வரலாற்று ஓலை சுவடிகள் குப்பையில்..?!

தஞ்சையை ஆண்ட மன்னர் சரபோஜி அவர்களால் உருவாக்கப்பட்டது தான் சரசுவதி மகால் நூலகம் . இது உலகின் முக்கியமான நூலகங்களில் ஒன்றாக திகழ்கிறது .

இங்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஓலை சுவடிகள், தஞ்சாவூர் ஓவியங்கள், கையெழுத்து படிகள், பழமையான நூல்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1627 அச்சிடப்பட்ட பழமையான் அச்சு புத்தகம் இங்கு பாதுகாக்கப் பட்டு வருகிறது .

தமிழர் நாட்டில் உள்ள பண்டைய ஓலை சுவடிகளில் 50 மட்டுமே இது வரை படித்து அறியப்பட்டுள்ளன. அதற்குள் அடங்கியவை தான் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, அகநானூற, புறநானூறு, பதிற்று பத்து, எட்டு தொகை, நற்றிணை குறுந்தொகை ஐங்குறு நூறு சீவக சிந்தாமணி, பரி பாடல் போன்றவை.

இதில் சில இலக்கியங்களின் செழுமையும் தொன்மையையும் கண்டு உலகமே வியந்து நிற்கிறது.

மூன்று லட்சம் ஓலை சுவடிகளையும் படித்தறிந்தால் தமிழனின் வாழ்க்கை முறையும் தமிழ் மொழியின் செழுமையும் பற்றி நாம் அறிந்து கொள்ள எதுவாக இருக்கும்.

உலகில் தோன்றிய மொழிகளில், மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழினம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்க இந்த ஓலை சுவடிகள் உதவும்.

செம்மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியங்களை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு

இதற்கு வெறும் நூறு கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமானது.

Wednesday, July 31, 2013

மொளனம் சம்மதமாகாது

அன்பு நண்பர்களுக்கு

கான்பட் மின்னஞ்சல் குழுமம் என்பது நமது உறுப்பிணர்கள் தங்களுது கருத்துக்களையும் தாங்கள் தெரிந்துகொண்ட பிறவிசயங்களையும் நமது சக தொழில் தோழர்களும் தெரியும் வண்ணம் எடுத்துரைப்பதற்க்கு முழு உரிமை கொண்டதாகும். இதில் அளவுகடந்த கட்டுபாட்டினை விதிப்பது தொடர்ப்பு வட்டாரத்தை சுருக்கிவிடும் என்பதில் சிறதளவும் சந்தேகமில்லை. எனினும் கான்பட் மின்னஞ்சல் குழுமம் பற்றிய கீழ்கானும் எனது கருத்துக்களை இங்கு பகிர்கிறேன்.

விவேகானந்தர் - இறைவன் எங்கும் இருக்கிறான்

விவேகானந்தர்.....  



ஒருமுறை சுவாமிகள்,
ஆல்வார்
சமஸ்தானத்தை அடைந்தார்.

அங்கு இருந்த
மகாராஜா மங்கள் சிங்
சுவாமிகளை அன்புடன்
வரவேற்றார்.

அவருக்கு
இறைவழிபாட்டைப்
பொறுத்தவரை பல
சந்தேகங்கள் இருந்தன.
குறிப்பாக அவர் விக்ரக
வழிபாட்டை ஏற்கவில்லை.
எனவே சுவாமிகளிடம்,
“”கல்லாலும்,
உலோகத்தாலும் ஆன
இந்த விக்ரகங்களில் என்ன சக்தி இருக்கிறது என்று
இவற்றை நாம் வணங்க
வேண்டும்?, அறியாமல்
இவற்றை வணங்குவது
முட்டாள்தனம் அல்லவா!?”"
என்று கிண்டலாகக்
கேட்டார்.

வண்டி ஹாரன் - Sound Horn

நேத்து காலைல எங்க வீட்டு வாசல்ல வாகனத்துல வந்த ரெண்டு பேத்துக்கு சண்ட.  

ஏன் டா டேர்னிங்ல ஹாரன் அடிக்க மாட்டியானு ரெண்டு பெரும் சட்டய பிடிச்சு சண்ட போட்டுக்கிடாங்க. ஒரு கூட்டமே கூடி அவங்கள வெலக்கிவிட்டு என்ன பிரச்சனைனு விசாரிச்சாங்க.
வண்டில ஹாரன் அடிக்காம வேகமா வந்து திரும்பி என் வண்டில மோதிடான்யா னு ரெண்டு பெரும் கத்துனாங்க.. நீங்க வண்டில ஹாரன் அடிக்கலையா னு கேட்டா ரெண்டுபேருமே ஹாரன் அடிச்சோம் னு சொன்னாங்க..

ஒருத்தன் சொன்னான் நீ எங்கடா ஹாரன் அடிச்ச உன் புள்ள கத்துற சத்தம் தான் கேட்டுச்சுனு சொன்னான். இன்னொருத்தன் சொன்னான் உன் வண்டில ஓடுன ரேடியோ பாட்டு தான் கேட்டுச்சு நான் நல்லா தான் ஹாரன் அடிச்சேன்னு இவன் சொல்ல ஒரே கூச்சலும் குழப்பமும்மா இருந்துச்சு...

கடைசில என்னனு பாத்தா இவோட வண்டி ஹாரன் சின்ன புள்ள கத்துரமாரி, அவன்னோட வண்டி ஹாரன் ரஜினி பட பட்டு மியூசிக்..

இப்படி ஹாரன் வச்சா அப்பறம் ஆக்சிடென் ஆகமா என்ன ஆகும்...?

மொதல்ல ஹாரன ஹாரன் மாதிரி வைங்கப்பா..

Tuesday, July 30, 2013

வவ்வால் பசங்க திரைவிமர்சனம்

‘தருதல’ன்னு செல்லமா அப்பா அடிக்கடி கோபப்படுற பிள்ளைதான் ஹீரோ.. கேபிள் கனெக்க்ஷன் வேலை பார்க்கிறார். ஹீரோயின் மீது காதல் வருகிறது. ஆனா, ஹீரோயினுக்கும் அவர் மீது வரணுமே… அதுதான் இல்ல… ஒரு கட்டத்தில் ஹீரோயின் மீது பைக்கால் மோதி விடுகிறார் ஹீரோ. அப்புறம் ஒரு வழியாக அவர் மீது காதல் வருகிறது. ஆனால், ஹீரோ மெல்ல எஸ்ஸாகிப் போகிறார். எப்போதும் கரிச்சுக் கொட்டிக் கொண்டிருக்கும் அப்பாவிடம் எப்படியாவது நல்லபிள்ளை என பெயர் வாங்கிவிட வேண்டும் என்று இவர் எடுக்கிற அத்தனை முயற்சிகளும் வீணாகப் போக, கடைசியில் இவரது தங்கையை ஒரு கோஷ்டி கடத்திவிடுகிறது. அவர்களிடம் இருந்து அவளை மீட்டாரா? அப்பாவிடம் நல்ல பேரு வாங்கினாரா என்பதை கொஞ்சம் ஷாக் கொடுக்கிற க்ளைமேக்சுடன் சொல்லி முடிக்கிறார்கள்.

ஏரியா கவுன்சிலரிடம் ஹீரோ மோதும் காட்சியில் அடுத்து என்னென்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு நமக்குள் உருவாக்கும் இயக்குநர் அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பார்ப்புகளை நீர்த்துப் போகச் செய்கிறார். படத்தில் பெரிதும் ஆறுதலாக இருப்பது ஹீரோவின் பாட்டிதான். அடிக்கடி அலப்பறை கொடுக்கும் இந்த பாட்டி கொஞ்சம் சிரிக்க வைத்து காமெடி ட்ராக் இல்லாததை சரி செய்திருக்கிறார்.
ஹீரோவின் தங்கையை கடத்தும் காட்சிகள் கொஞ்சம் எக்ஸ்ட்னரியாக இருக்கின்றன. பெண்ணைக் கடத்தியவர்கள் அப்படி என்ன மாட்டுத் தொட்டியிலா கட்டிப் போட்டு வைத்திருப்பார்கள்? அந்த இடத்தில் நடைபெறும் சண்டைக்காட்சி அமர்க்களம்.
ஹீரோவுக்கு இது முதல் படம். முதல் படத்திலேயே ஆக்க்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
அரசு, கம்பீரம், சபரி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ரமேஷ் இயக்கியிருக்கும் படம். புதுமுகங்களுடன் களம் இறங்கியிருக்கிறார். கொஞசம் அழுத்தம் கொடுக்கிற க்ளைமேக்ஸ். படத்தின் காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இளநீரின் மருத்துவ குணங்கள்

தமிழால் இணைவோம்:
இளநீரின் மருத்துவ குணங்கள்:

இளநீர் என்பது இயற்கையிலேயே உருவான உடலியல் இயக்கங்களுக்கு இன்றியமையாத பல தாது உப்புகள் அதிகமாக உள்ள ஒரு பானம்(Isotonic Drink). இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர் இயற்கை அளித்த இனிய பானம் மட்டுமன்று பல பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தாகவும் உள்ளது.இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.கடும் நீரிழப்பின் போது(severe dehydration) சரியான மாற்றுக் கிடைக்காத போது இளநீரையே நேரடியாக இரத்த நாளங்களில் ஏற்ற முடியும்.

அப்போது உடலிலிருந்து வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் நீர்க்கடுப்பு ஏற்படலாம். அப்போது இரண்டு குவளை இளநீர் பருகுவது நல்லது.உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால் செரிமான உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும் போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும்.

நாக்கு வறட்சி நீங்கும்.கோடைக்காலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடிய இனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts