Saturday, August 10, 2013

இவையெல்லாம் தேவையா..?!

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?

அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில் இவையெல்லாம் தேவையா..?!

Thursday, August 8, 2013

காதல் கவிதை

காதல்..... காதல்.....
காதல்.....!!

காதல் என்றாய் கன்னம்
சிவந்தேன்..
கண்ணிமைகள் படபடக்க
கதவோரம்
சென்று மறைந்தேன்..!!

கதவருகே வந்து நின்று
கை விரலால் எனைத்
தீண்ட
கண்மூடி ஒரு கணமே
உன் கைகளுக்குள்
நான் புகுந்தேன்..!!

கைகளுக்குள்
புகுந்த என்னை
காதலால் நீ தழுவ
கணநேரத்தில்
சுதாரித்தே நான்
கலவரமாய்
விலகி நின்றேன்..!!

ஏனென்று நீ கேட்க
வெட்கத்தில் நான்
பூக்க..
கற்பனையில்
விரிந்ததுவே நம்
அற்புதமான காதல்
வாழ்க்கை..!!

Wednesday, August 7, 2013

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!


இந்தியாவுக்கு சுதந்திரம்
வாங்கி கொடுத்தது யார் ?
இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!!
இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய
காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ்
தான் .
இந்தியாவில் நாம் விரட்டி அடிக்கப்பட்டோம் என்ற அவமாணம் வந்து விடக்கூடாது என்பதற்காக காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி நமக்கு விடுதலை தந்தான்
அன்று நேதாஜியை காட்டிக்கொடுத்தார் காந்தி
இன்று பிராகரனை காட்டிக் கொடுத்தார் சோனியா காந்தி
அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன்
எழுத்துக்களால் பொறிக்கப் பட
வேண்டியவை திட்டமிட்டு மறைக்க
பட்டுவிட்டது .
இந்தியாவுக்கு சுதந்திரம்
வாங்கி கொடுத்தது யாரோ ?
அந்த பேரையும் புகழையும்
அனுபவிப்பது யாரோ ?
சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .
சுருக்கமாக : அகிம்சை முறையில்
போராடி கொண்டு இருந்த காந்தியிடம்
சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில்
போராடினால் பல ஆண்டுகளாக இந்த
போராட்டம் இழுத்து கொண்டே போகும் .
கோடிகணக்கான இந்தியர்களை வெறும்
இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட
ராணுவம்
அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது .
ஏன்
அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது .
அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள
திட்ட மிட்டு இருக்கிறேன் .
உங்களின்
கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட
போது அகிம்சையை போதிக்கும் நான்
இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன்
என்று சொன்னார் .
இருவருக்கும் நிறைய
கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ்
அவர்கள் தனித்து போராட தயாராகினார் .
முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் .
வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து .
வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான்
எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ
கட்டமைப்பை உருவாக்க வேண்டும் .
என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் .
பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற
மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின்
ஆதரவை திரட்டினார் .
ஆனால்
அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும்
ஆயுதம் எடுத்து போராட முன்
வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .
தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான
இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின்
போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் .
அந்த
இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக
பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில்
காந்தியின் ஆதரவாளர்கள்
எண்ணிக்கை நாளுக்குநாள்
குறைந்து கொண்டே போனது .
தமிழர்கள்
சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில்
நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய
ஆரம்பித்தார்கள் .
அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில்
ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள்
என்று வெள்ளையர்களுக்கு தெரியவர .
இவர்களை எல்லாம் வெள்ளையர்கள்
வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .
சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ்
இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த
காந்தியின் ஆதரவாளர்கள் .
சுபாஷ்
சந்திரபோசை காட்டி கொடுக்கவும்
ஆரம்பித்தார்கள்.
அதனால் அவரால் இந்தியாவில்
இருந்துகொண்டு செயல்பட முடியாமல்
போனது .
வெள்ளையர்களிடம்
இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ்
வெளிநாடுக்கு சென்றார் .
சில
வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போ
ஆதரவை திரட்டினார் .
ஒவ்வொரு நாடாக
சென்று போருக்கான ஆயுத
தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் .
எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில்
இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ
முகாம்களின்
எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர்
இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல்
அறிந்து கொண்ட பின்னர் .
தமிழ் நாட்டில் இருக்கும் அவரின்
ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் .
நான்
வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ
கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் .
இந்த
ராணுவத்தில்
இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக
ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் .
என்னுடன் இணைந்து கொள்ளலாம்
என்று தகவல் அனுப்பி இருந்தார்.
இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது .
இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள்
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம்
வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .
அங்கே எல்லோருக்கும் போர்ப்
பயற்சி அளிக்கப்பட்டது .
அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ்
பேசினார் .
எமது தேசத்தில் வெறும்
இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம்
இருக்கிறது .
நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ
கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் .
அவர்களை நாம் கப்பல் மூலம்
சென்று டெல்லி வரை தாக்க போகிறோம்
டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும்
இருக்கிறது எனவே டெல்லி வரை நாம்
சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் .
ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர்
தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .
ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம்
நடந்து கொண்டிருந்தது .
சுபாஷ்சந்திரபோஸ்
திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம்
சென்று டெல்லி வரை வெள்ளையர்களின்
ராணுவத்தை அடித்தார்கள் .
அப்போது வெள்ளையர்கள் பாரிய
உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் .
வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில்
இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள்
முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர
போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது .
அதனால்
தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம்
செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது.
பொருளாதார பிரச்சனையும்
அவர்களுக்கு வந்தது
தொடர்ந்து அவர்கள்
இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது
சுபாஷ்சந்திரபோஸ்
ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும்
சண்டையில் வெள்ளையர்கள்
தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள்.
இந்த
தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள
முடியவில்லை.
அதனால் வெள்ளையர்கள்
இந்தியாவை விட்டு வெளியேற
முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும்
சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ
போராட்டம் தெரியவந்தது .
அதனால் காந்தி வழியில்
போராடி கொண்டிருந்தவர்களுள்
பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின்
பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால்
வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில்
இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது .
ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள்
கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர
போஸ் மக்களை தவறான வழியில்
கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .
காந்தியின் ஆதரவாளர்களால்
சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் .
அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்
வெள்ளையர்கள் .
ஆனால் சிறையில்
வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ்
சந்திர போஸ் தப்பித்து வந்தார் .
அதன் பிறகு
ஆயுத போராட்டம் கடும் தீவிரம்
அடைந்து வந்தது
வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும்
வந்தது .
ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக
தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க
பட்டோம் என்று வந்து விடக்
கூடாது என்பதற்காக .
அப்படி ஒரு அவமானம்
வந்து விட கூடாது என்பதற்காக
காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .
வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும்
காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள்
அகிம்சை போராட்டத்தால்
உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம்
நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம்
என்று சொன்னார்கள் .
காந்தியின்
அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன்
இந்தியாவிற்கு சுதந்திரம்
கொடுத்து விட்டு வெளியேறினான் .
ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய
மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் .
அவரின் மகத்தான
போராட்ட வரலாற்றை திட்ட
மிட்டு மறைத்து விட்டார்கள்.
காரணம்
காந்தியின் அகிம்சை போராட்டம்
பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும்
என்பதற்காக .

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிகள்

இன்றைய நவீன யுகத்தில்
காலடி எடுத்து வைத்துள்ள நம் வாழ்வில்
எப்போதும் அவசர போக்கைத் தான் காண
முடிகின்றது.

வாழ்க்கையின் அவசரங்கள் மனிதர்களை ஓட
வைத்துவிட்டது. யாரும் ஆற அமர
நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை,
நின்று நிதானமாய் பேசுவது இல்லை,
குடும்பத்தோடு போதிய அளவு நேரம்
செலவிடுவதும் இல்லை.

சொல்லப்போனால், இத்தகைய வாழ்க்கை சில
நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட
யோசிக்க வைக்கிறது.

இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான
ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும்
பொழுதுகளில், என்னென்ன செய்தால்
ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக்
கொள்ளலாம் என்று ஒவ்வொருவரும்
அடிப்படை ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம்
ஆகியவற்றிற்கு அடையாளமே சரியான
உடலமைப்பு ஆகும். சரியான
உடலமைப்பு எந்த ஒரு உடல்நல
கோளாறுகளையும் தருவதில்லை.
ஆகவே அவ்வாறு சரியான உடலமைப்பைப் பெற
நினைத்தால் ஜிம்மிற்கு செல்வது, உணவில்
கவனமாய் இருப்பது போன்றவை மட்டும்
போதாது. சில வாழ்க்கை முறைகளையும்
மாற்றி கொள்ளுதல் அவசியம்.
இப்போது அந்த சரியான உடலமைப்பைப்
பெறுவதற்கு, இதோ சில சூப்பர் டிப்ஸ்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அதைப்
பின்பற்றினாலே உடலை ஆரோக்கியமாகவும்,
ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ளலாம்.

முதுமையற்ற சருமத்திற்கு கடல் உணவுகள்
வாரம் மூன்று முறை மீன்
சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம்
தொய்வுறுதல் 30 சதவீதம் குறைகிறது.
ஏனெனில் மீனில் ஒமேகா-3, புரதம் மற்றும்
தாதுக்கள் நிறைந்துள்ளன. இவையே சருமத்தில்
உள்ள கொலாஜனுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து,
சருமத்தை மென்மையாக வைத்திருக்கிறது.
அதிலும் சால்மன் எனப்படும் மீன் வகையில்
உள்ள அஷ்டக்ஷேந்தின் (Astaxanthin) எனப்படும்
ஊட்டச்சத்து ஆக்சிஜனேற்ற தடுப்பானாக (Anti
Oxidant) இருந்து,
சருமத்திற்கு போஷாக்கு அளித்து சுருக்கங்கள்
ஏற்படாமல் தடுக்கின்றது.

மன அழுத்தம் போக்க க்ரீன் டீ
க்ரீன் டீயில் உள்ள கலவைகள்,
மூளையானது இரத்தத்தில் உள்ள
சர்க்கரையை பயன்படுத்தி எண்டோர்பின்
எனப்படும் சக்தியூட்டும் ஹார்மோனை சுரக்க
வழி செய்கிறது. ஆகவே அடுத்த
முறை புத்துணர்ச்சி இல்லாததாய் உணர்ந்தால்,
க்ரீன் டீயை சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமான இதயத்திற்கு அக்ரூட்/வால்நட்
தினமும் ஐந்து முதல் ஆறு அக்ரூட் பருப்புகள்
சாப்பிட்டு வந்தால்,
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாக
குறைகிறது எனவும், ஆயுள் காலத்தில்
மேலும் மூன்று ஆண்டுகள்
வரை அதிகரிக்கிறது எனவும், இதய நோய்
மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

நினைவாற்றல் அளிக்கும் மஞ்சள் உணவில்
மஞ்சள்
சேர்த்து கொள்ளுவது நினைவாற்றலை 30
சதவீதம் வரை மேம்படுத்தும் என்று நிபுணர்கள்
தெரிவிக்கின்றனர். இதற்கு மஞ்சளில்
காணப்படும் கர்க்யூமின் (curcumin) எனப்படும்
மிகவும் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற தடுப்பான்
(Anti Oxidant)
மூளைக்கு ஊட்டமளிப்பதே இதற்கு காரணம்.

மூச்சு பயிற்சி மூலம் மன
அழுத்தத்தை குறைத்தல்
மன அழுத்தம் மற்றும் கவலையை போக்க
வயிற்றில் இருந்து மூச்சு எடுத்து விட
வேண்டும். ஒன்றில்
இருந்து ஆறு வரை எண்ணி கொண்டே மூக்கின்
வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து,
வயிற்றை முடிந்த வரையில் நிதானமாக விரிய
செய்ய வேண்டும், பின்பு நான்கு எண்ணும்
வரையில் மூச்சை பிடித்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒன்று முதல் ஏழு வரையில் எண்ணிய
படியே மூச்சை நிதானமாக வாய் வழியாக விட
வேண்டும். இதனை மனம் ரிலாக்ஸாக உணரும்
வரை, இந்த மூச்சு பயிற்சியை திரும்ப திரும்ப
செய்ய வேண்டும்.

குட்டி தூக்கம் மூலம் வலியைப் போக்குதல்
அடிக்கடி தலைவலி, முதுகு வலி போன்ற
தொல்லைகள் இருந்தால், கவலைப்படாமல்
ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும்.
அவ்வாறு தூங்கினால், உடல் அசௌகரியங்கள்
பாதியாக குறைந்துவிடுமென
ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில்
தூக்கமானது, வளர்ச்சி ஹார்மோன்களை சுரக்க
செய்து, சேதமடைந்த திசுக்களை வேகமாக
குணப்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தை சரிசெய்யும்
இலவங்கப்பட்டை :
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, தினமும்
உணவில் அரை டீஸ்பூன் இலவங்கம்
சேர்த்து கொள்ளுதல் இரத்த சர்க்கரையை 29
சதவீதம் அல்லது அதிகளவில் கட்டுப்படுத்தும்.
மேலும் இது சிறு குடலில் கார்போஹைட்ரேட்
உறிஞ்சுதலை தாமதப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பை வலுப்படுத்த காய்கறிகள் :
நோய் வருவதை தடுக்க பசுமையான மற்றும்
வண்ணமயமான காய்கறிகளை உண்ண
வேண்டும். அதிலும் கேரட், மிளகாய் மற்றும்
வெண்டைக்காய் போன்ற வண்ணமயமான
உணவுகள் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்.
உண்ணும் காய்கறிகள்
எவ்வளவு வண்ணமயமாய்
உள்ளதோ அவ்வளவு நல்லது. ஏனெனில்
தாவரத்தில் உள்ள நிறமி சுவாசக்
குழாயை ஆரோக்கியமாக வைத்திருக்க
உதவுகிறது, அதனால் உடலுக்குள் செல்லும்
வைரஸை தடுத்து, நோய்க்கு எதிராக
போராடும் அணுக்களை பெருக்க
வழி செய்கிறது.

வைரஸை அழிக்கும் தேன்:
பதப்படுத்தப்படாத தேன், இயற்கை கொல்லிகள்/
ஆன்டி பயோடிக்ஸ் (Anti Biotics) மற்றும்
சிகிச்சை முறை நொதிகள் (Enzyme)
நிறைந்துள்ளது.

எனவே தேனை உடம்புக்கு முடியாத
போது உண்டு வந்தால், நோய்
தாக்கத்தை மூன்று நாட்களுக்குள்
குறைத்துவிடும். அதிலும் இது சைனஸ்
நோய்த்தொற்று மற்றும் பிற குளிர்
சிக்கல்களுக்கு காரணமான வைரஸ்
கிருமிகளை அழித்துவிடும

பொற்றோர்களின் கவனத்திற்கு

பெற்றோரின் கவனத்திற்கு.... !

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய்
இருந்தாலும், “Good touch”, “bad
touch” எது என்பதை பெற்றோர்கள்
சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,
ஆடையே இன்றியோ குழந்தைகள்
உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம்,
எல்லோருக்கும் அப்படியே தெரியும்
என்று எண்ணிவிடாதீர்கள ்.

3.
குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும்
போது கவனம் தேவை, நெடு நேரம்
குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ,
பொருட்கள் மிகுதியாகவோ,
இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம்
தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில்
தனியாகவோ, பிற
குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த
வாகன ஓட்டுனரின் முழு விவரமும்
தெரிந்து கொள்ளுங்கள், அவர்
வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும்,
பழக்க வழக்கத்திலும்
ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள்,
மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து,
மரியாதையின்றி பேசுவதும், தொடக்
கூடாத இடங்களை தொடுவதும், சில
இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார்
கொடுத்தால் வாங்க வேண்டும்
என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்த
ங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி,
பெற்றோரின் தொலைப்பேசி எண்கள்
அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தைகள் இருந்தால், ஒருபோதும்
ஒருவருடன்
மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள்,
வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள்
விருப்பங்களை குழந்தையின் மேல்
திணிக்காதீர்கள் .

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது,
வன்முறை, காதல், கொலை, களவுப்
போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்க
ளையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள் !

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும்
சீரியல்களில் மூழ்கி இருக்காமல்,
குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,
அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருக
வகையிலான
நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம்
செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள்
சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன்
திருத்துங்கள், தண்டிக்க
நினைக்காதீர்கள் !

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன்,
விதை மரமாகிவிடாது, நீங்கள்
ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள்
விருப்பபடி மாறிவிட மாட்டார்கள்.
உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும்
குழந்தைகளை அன்புடன் அரவணைத்து,
வேண்டியது செய்ய அம்மாவோ,
பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம்
பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள்
உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம்,
உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது.
நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும்
தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற
ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20.
ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின்
ஆரோக்யத்திற்கு அவசியம்.
விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். “All
work and no play makes Jack a
dull boy”

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும்,
அவர்களின் வயதுக்கேற்ப
புரியும்படி பதில் சொல்லுங்கள்!
பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும்
போது தெரிந்தால் சொல்லுங்கள்,
தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன்
என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான
பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல்
அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் “ச்சீ வாயை மூடு”
“தொணதொண என்று கேள்வி கேட்காதே”
என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி,
அவர்களின்
ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீ

23. பசி என்று குழந்தை சொன்னால்,
உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ,
சோம்பலிலோ,
வேறு வேலையிலோ குழந்தையின்
குரலை அலட்சியப்படுத்த ாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின்
எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம்,
அவர்கள், ஒருபோதும் உங்கள்
கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா…?

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.
முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

Tuesday, August 6, 2013

காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு

இந்திரா காந்தியை கொன்ற சீக்கயருக்கு எதிராக
மிகபெரும் கலவரத்தில்
இறங்கியது காங்கிரஸ்....

ராஜீவ் காந்தியை கொன்றதாக
விடுதலை புலிகள் மீது போர் தொடுத்த
காங்கிரஸ்.....

இன்று 5 வீரர்களை கொன்ற
பாகிஸ்தானுக்கு வெறும் கண்டனம்
மட்டுமே......

ஏன்டா உங்க உயிர் மட்டும்தான் உயிரா???

மத்தவன் உயிரெல்லாம் மயிரா ?????

நாவல் பழம்

நாவினிக்க நாவல் பழம்!

நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற
குளூக்கோசைட் உள்ளது,
இதன் செயல்பாடு உடலுக்குள்
ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும்
செயல்பாடு தடுக்கப்படுகிறது.

இதனால் நாவல்
பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில்
இருக்க்கும் என்பது லக்னோவில் உள்ள
நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தில் நடந்த
ஆய்வில் தெரிய வந்தது,

பலன்கள்:
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல்
பழத்தை மதிய உணவுக்குப்பின்
சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்
பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும
நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத்
தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

மூளை பலமாகும். நல்ல ஜீரண
சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம்
போல் தயாரித்து சாப்பிடும்
போது வாயுத்தொல்லை நீங்கும்.

பித்தத்தைத் தணிக்கும்,மலச்சிக்கலைக்
குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச்
செய்யும். ரத்த சோகை நோயைக்
குணப்படுத்தும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும்
நிவர்த்தி செய்யும்.ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யும்
ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.

இதனால் ரத்தத்தின் கடினத்
தன்மை மாறி இலகுவாகும்.
தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால்
குடல், இரைப்பை இதயத்தின் தசைகள்
வலுவாகும்

Monday, August 5, 2013

இந்திய பொருளாதாரம் வீழ்வதற்கான காரணங்கள் நம்மிடமே உள்ளது

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள்
செலவு செய்வீர்களா...?
சமீப காலமாக
விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக்
குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு...
... விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...
கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??
கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.
இன்று 1 US $ = ரூ 61.09
அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின்
தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10...
அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய்
வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???
முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின்
பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல்
தேங்கிக் கிடக்கின்றன...
அவற்றை வாங்குவதற்கு நாம் முன்
வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில்
கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம்
காப்பாற்றமுடியும்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய
பொருள்களை வாங்கவும்,
வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்
முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES,
CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK,
COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and
MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA,
MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS,
SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL,
MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA
BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL,
DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY,
PALMOLIVE

TOOTH PASTE:-
வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO
VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS,
MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT,
CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-
வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.
தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT,
FORHANS, ORAL-B

SHAVING CREAM:-
வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-
வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-
வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY
POWDER, BOROPLUS.
தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S
BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-
வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.
தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY
MILK, MILKMAID.

SHAMPOO:-
வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.
தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK,
HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-
வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-
வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri,
Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT,
A&W.
இந்தியனாக இருப்போம் இந்திய
பொருள்களையே வாங்குவோம்.

கீழே எந்த எந்த பொருள் எந்த நிறுவனம்
தயாரிக்குது என்று பாருங்கள்...

உலகின் தேவதை அம்மா

தமிழால் இணைவோம்:
படித்ததில் பிடித்தது:

கடவுளும் குழந்தையும்..

இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா.

குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.

உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது...

கள்ள DD

ஆபீஸ் பாய் : சார், பேங்க் மானேஜர் உங்களை வர சொன்னார். அவசியம் நீங்க போகணுமாம்.
 
வியாபாரி : மத்தவங்களுக்கும் லோன் ரெடியாயிருக்கும்.
 
with in 15 minutes, he reached the bank
 
மானேஜர் : வணக்கம் சார். வாங்க வாங்க, பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கு?
 
வியாபாரி : நல்லா போயிட்டு இருக்கு!
 
 மானேஜர்: சனிக்கிழமை நீங்க போட்ட DD return ஆகியிருக்கு!
 
வியாபாரி : சார் அது cheque இல்ல DD.
 
மானேஜர்: ஆமா சார், அந்த branch ல விசாரிச்சிட்டோம் அப்படி ஒரு DD அவங்க issue பண்ணவில்லையாம்!
 
வியாபாரி : போச்சு, கள்ள பணம், கள்ள cheque வரிசையில கள்ள DD யுமா ? ஏமாற்றியது நானா? அவனா?
 
 
எச்சரிக்கை தேவை. DD மேலும் சந்தேகம் கொள்ளுங்கள்.

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts