Saturday, August 31, 2013

காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே.. கண்ணீர் வழியுதடி

தமிழால் இணைவோம்:
காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..
கண்ணீர் வழியுதடி கண்ணே..
கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

புளியம்பழ மருத்துவம்.! Message from தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்:


புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை.

குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.

அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.

எகிர் வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது.

Visit our Page -► தமிழால் இணைவோம்

(Sent via Seesmic http://www.hootsuite.com)

Friday, August 30, 2013

சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்! Message from தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்:
சின்ன வயசுல நாம எப்படியெல்லாம் இருந்தோம். இப்ப எப்படியெல்லாம் இருக்கோம்!!

1. நமக்கு சாப்புட கைல ஒரு பாக்கெட் மிட்டாய் கிடைச்சாலும் அதை ஒரு நொடில தின்னு காலி பண்ணிருவோம். இல்லாட்டி நம்ம மண்டை வெடிச்சுரும். இப்ப அதை கொடுத்தா ஒன்னு மட்டும் எடுத்து வாய்ல போட்டு பாக்கெட்டை ஓரமா வச்சுடுறோம்.

2. திருவிழா கடைக்கு போனா நம்ம கண்ல பட்டதெல்லாம் கைய நீட்டிக் கேட்டிருப்போம். இல்லை என்ற பதில் தான் அதிகம் கிடைச்சுருக்கும். அதையும் காசு இல்லைன்னு உண்மைய சொல்லாம அந்த பொருள் நல்லா இல்லைன்னு பொய் சொல்லிருப்பாங்க. இப்ப அது எல்லாத்தையும் வாங்க நம்மகிட்ட காசு இருக்கும், ஆனா விளையாட வயசு தான் இருக்காது.

3. அம்மாக்கிட்ட நொய் நொய்ன்னு எதையாவது பேசிக்கிட்டே இருப்போம். அவங்களும் புரிஞ்சாலும் புரியாட்டியும் மண்டைய ஆட்டி ரசிச்சுருப்பாங்க. இன்னைக்கு அம்மா நம்ம கிட்ட பேசறப்ப, நாம என்னவோ கலெக்டர் வேலைக்கு போற மாறி "சீக்கிரம் சொல்லுமா " ன்னு அலுத்துகுறோம்.

4. அப்பா நேரத்தோட வீட்டுக்கு வரலைன்னா மூஞ்ச தூக்கிட்டு மூலைல உட்காந்திருப்போம். இன்னைக்கு நாம நேரம் கழிச்சு வீட்டுக்குப் போறப்ப அப்பா வீட்டுல இல்லைன்னா "அப்பாடா தப்பிச்சோம்" ன்னு பெருமூச்சு விடுறோம்.

5. சிபிஐ மாறி நம்ம அக்கா, அண்ணா லாம் என்ன பண்றாங்கன்னு கவனிக்கரதையே வேலையா வச்சுருப்போம். "இரு இரு உன்னைய அப்பாக்கிட்ட சொல்றேன்னு" மிரட்டி வேற பாப்போம். இன்னைக்கு நாம பண்ற வேலையெல்லாம் அவங்களுக்கு தெரியாம பாத்துகறதே நமக்கு பெரிய வேலையா இருக்கு.

6. ஏலேய்.... ன்னு ஒரு சத்தம் கேட்டாலே ஓடிபோய் அம்மா முன்னாடி நிப்போம். இப்ப கோர்ட்ல கூப்புடற மாறி 3 தரம் பேரச் சொல்லிக் கூப்டா கூட நம்ம காதுல விழாத அளவுக்கு இணையத்தில் மூழ்கி இருக்கிறோம்.

7. அப்பாவோ அம்மா வோ வெளிய போனா, என்னைக் கூப்டு போயே ஆகனும்ன்னு தரயில படுத்துட்டு உருண்டு புரண்டு அழுவோம். இப்ப அவங்கள வெளிய கூப்டு போய் அவங்ககூட நேரம் செலவழிக்கறத விட பெரிய வேலைகளெல்லாம் நமக்கு இருக்கு.

8. பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போறப்ப, நேரா நடக்க மாட்டோம். மரக்கிளைய புடிச்சு தொங்கறது, ரோட்ல கிடக்கற கல்ல கலால தள்ளி தள்ளிட்டே போறது. நின்ன இடத்துல சச்சின் போஸ் கொடுக்கறதுன்னு இல்லாத சேட்டைலாம் செஞ்சுக்கிட்டே தான் போவோம். இப்பலாம் ரோட்ல நடக்கறப்ப கைல மொபைல் வச்சுட்டு குனிஞ்ச தலை நிமிராம நேரா போய் செவுத்துல முட்டிக்கிறோம்.

-ஆதிரா

Visit our Page -► தமிழால் இணைவோம்

கண்ணீர்... kanneer

பாவையே...

கடலின் ஆழத்தை அறியும்

கருவிகள் உண்டாம்...

உன் மனதின்

ஆழத்தினை அறிய...

இதுவரை

கண்டுபிடிகவில்லையடி...

பிறர் தந்த

வேதனையால்...

நான் துடித்ததை

விட...
நீ எனக்கு தந்த

வேதனைதானடி...

என் விழியில் கூட

உறங்க மறுக்குதடி...

என் விழிகள்

சிந்தும் கண்ணீர்...
கடலில் கலந்தால்
கடலின் நீர் கூட
அதிகரிகுமடி...

தீராத வலியையும்
வேதனையும்...

தந்துவிட்டாயடி
எனக்கு...

உயிராக உன்னையே
நேசித்த எனக்கு...
நீ தந்த காயங்கள் கூட
எனக்கு சுகம்தானடி...

நாம் ஒருவனை
வெறுத்தோமே...
நினைபாயே அவ்வபோது
அந்த நினைவே போதுமடி...

விரோதியாய் நீ நினைக்கும்
அந்த நினைவுகள்.....

பிரதமரை திருடன் என்று கூறும் அநியாயம் மன்மோகன் சிங் வேதனை PM discent of MPS shouting him as theif

எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என்று கூறும் அநியாயம் நடப்பதுண்டா?: மன்மோகன் சிங் வேதனை PM discent of MPS shouting him as theif 

 

ஒரு நாட்டின் பிரதமரை திருடன் என்று கூறுவது எந்த நாட்டிலாவது நடப்பதுண்டா? என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக  பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

உன் தோற்றத்தில்..... un thotraththil


உன் தோற்றத்தில்
தோன்றும் ஒருவன்
என்னை வதைக்கிறான்,
நான்  போகும் இடமெல்லாம்
உன் நினைவை தந்து மறைகிறான்,
கவிதை எழுத தூண்டியே
தொடர்ந்து தொல்லைத் தருகிறான்,
கண்கள் இரண்டைக் கொண்டே
கைது செய்ய பார்க்கிறேன்,
மறந்துப் போன உன் நினைவுகளை
மீண்டும் மீட்டுத் தருகிறான்,
வெளுத்து போன வானவில்லை
வண்ணக் கோலமாக்கிறான்.

Thursday, August 29, 2013

அம்மா

தமிழால்
சனியன் பிடித்தவளே,
என்ன சாப்பாடு செய்ற,
ஒரு உப்பு இருக்கா,
புளிப்பு இருக்கா,
காரம் இருக்கா,
பத்தியம் சாப்பாடா போடுற,
இப்படி திட்டி கொண்டே
மகன் சாப்பிட்டு, எழுந்து
போய் விட்டான்.

அம்மா அமைதியாய்
இருந்தாள், பக்கத்தில்
இருந்த அவனின்
தங்கை கேட்டாள், அவன்
அப்படி திட்டுறான், ஏன்னு
ஒரு கேள்வி கேட்க மாட்டியா,

அதற்கு அம்மா சொன்னாள்,
நான் கேட்டால் அவன்
கோவமா பாதி
சாப்பிடிலேயே எழுந்து
போய்டுவான், அதான்....

அதான்...."அம்மா"..

-Vel Murugan

Visit our Page -► தமிழால் இணைவோம்

நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும் - The secret of your nail shape

 
உங்கள் நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும் - The secret of your nail shape.
[ இவை உண்மையா - பொய்யா என்பதை நீங்களே உங்களோடு ஒப்பிட்டு அறிந்துகொள்ளுங்கள்]

Wednesday, August 28, 2013

இங்கேயும் இளிச்சவாயன் தமிழன்

சற்றுமுன் செய்திகள்:
சீனா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ்க்கு பிறகு எல்லையில் ஆக்கிரமிக்கும் பர்மா, விட்டுகொடுக்கப்படுமா ஆக்கிரமிப்பில் சிக்கிய‌  தமிழ் கிராமம்?

பாக்கிஸ்தா, சீனா , பங்களாதேஷ் போன்ற நாடுகள் இந்தியாவின் எல்லையில் ஆக்கிரமித்து கொண்டுள்ளார்கள், இந்தியாவோ சும்மா எச்சரிக்கைகள் மட்டும் கொடுத்துக்கொண்டுள்ளன, இந்நிலையில் வடமேற்கு மாநிலமான மனிப்பூரில் சாந்தேல் மாவட்டத்தில் எல்லைப்புற நகரமான மோரே வில் உள்ள ஒலன்பே கிராமத்தில் செவ்வாய் அன்று ஊடுறுவிய மியான்மர் இராணுவம் அங்கே தற்காலிக முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

படத்தில் இருப்பது மோரே நகரில் உள்ள அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரன் கோவில்

மியான்மருக்காக விட்டு கொடுக்கப்படுமா தமிழ் கிராமங்கள்?

மேலும் படிக்க‌

http://www.satrumun.net/2013/08/moreh-town-myanmar-intrusion-tamils.html

# தமிழர்களின் நிலமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது, இப்போது தமிழன் கிராமம் மியான்மருக்கா? இங்கேயும் இளிச்சவாயன் தமிழன்

வேகமாக வளரும் மனை வணிகம்

தூய தமிழ்ச்சொற்கள்
வேகமாக வளரும் மனை வணிகம். விரைவாக கைவிட்டு போகும் தமிழர் நிலங்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா ?

ஒரு இனம் வாழ வேண்டுமெனில் அதற்கு முக்கியமான தேவை அந்த மக்கள் வாழ்வதற்கான மண். அந்த மண் இல்லாவிட்டால் அந்த மக்கள் அகதிகள் ஆகிவிடுவார் . ஈழத்தில் மண்ணை இழந்த மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகள் ஆனது நாம் எல்லோரும் அறிந்ததே. அதனால் தான் உலகில் பல இனங்கள் தங்கள் மண்ணை உயிர் கொடுத்தேனும் பாதுகாத்து வருகின்றனர்.

உலகில் தொன்மை இனமான தமிழினம் பல காலகட்டங்களில் தனது மண்ணை பாதுகாத்து வந்துள்ளது. இம்மண்ணை ஆண்ட மன்னர்கள் அந்நியர்களின் படையெடுப்பை கடுமையாக எதிர்த்து போரிட்டு வந்துள்ளனர் . எனினும் தமிழர் மண்ணை வேற்றின மக்கள் ஆளாமல் இல்லை. மராத்தியர்கள் , தெலுங்கு நாயக்கர்கள் , பிரெஞ்சு அரசு , பிரித்தானியா அரசு எனப் பலரும் இந்த மண்ணை ஆண்டு வந்துள்ளனர். இருப்பினும் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்பு, தமிழ் மொழிக்கான மாநிலம் உருவான பின்னர் தமிழர் நாட்டை முற்றிலும் தமிழர் ஆளவில்லை என்பது கசப்பான உண்மை.

இங்கு தமிழ்நாடு தனி மாநிலமாக இருந்தாலும் , இம்மண் இந்த மக்களுக்கு சொந்தமில்லை என்ற நிலை தான் இன்று வரை இருக்கிறது . யார் வேண்டுமானாலும் , எந்த இனத்தவர் வேண்டுமானாலும் தமிழர் மண்ணை வாங்கலாம் , உரிமை கொண்டாலாம் என்ற நிலையில் தான் தமிழகம் உள்ளது . இது மொழிவழி மாநிலம் பிரிந்ததற்கு முற்றிலும் முரணானது ஆகும்.

காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பூர்வ குடிமக்களை தவிர யாரும் நிலம் வாங்க முடியாது . அப்படி ஒரு சிறப்பு நில உரிமை சட்டம் அங்கு உள்ளது . ஆனால் தமிழகத்திலோ அப்படியெல்லாம் இல்லை . பணம் இருந்தால் போதும் யாரும் இங்கு வந்து நிலம் வாங்கலாம் .

இதனால் என்னவாயிற்று என்று நீங்கள் கேட்கலாம். மனைவணிகம் என்பது லாபகரமான தொழிலாக மாறிவிட்ட காரணத்தால் பணபலம் படைத்த வடநாட்டவர்கள், மலையாளிகள் இங்கு வந்து சொத்துக்களை குவிக்கின்றனர். விவசாயிகளின் இயலாமை மற்றும் வறுமையை பயன்படுத்தி அவர்களின் நிலத்தை பிடிங்கி வைத்துக் கொள்கின்றனர் . பின்னர் அதிக லாபத்திற்கு விற்பனை செய்கின்றனர். இதை தமிழக வியாபாரிகளும் செய்கின்றனர் . பல நூறு ஏக்கர் விளை நிலத்தை வாங்கி விட்டு , பல முகவர்களை நியமித்து கண்மூடி கண் திறப்பதற்குள் நிலத்தை விற்று விடுகின்றனர். இதுபோல் எல்லா பணமுதலைகளும் போட்டி போட்டு இந்த வியாபாரத்தில் இறங்கி இலாபம் சம்பாதிக்கின்றனர்.

இதனால் விலை நிலங்கள் நுகர்பொருள் போல் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகிறது. இப்படி பெரு முதலீட்டாளர்களிடம் இருந்து நிலங்களை வாங்கும் சிறு முதலீட்டாளர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தவர் ஆவர். இவர்கள் கைக்கு தான் தமிழர் நிலங்கள் சென்று சேர்கிறது. இவர்கள் குடும்பமும் , உற்றார் , உறவினர் அனைவரும் தமிழரிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் சுபபோகதுடன் வாழ தமிழினம் தனது நிலத்தை , வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது . தமிழ் மக்கள் வெளி மாநிலத்திலும் வாழ முடியாத நிலையில் , சொந்த மாநிலத்திலும் நிலம் வாங்க முடியாத அவல நிலையில் சிக்கியுள்ளனர். மேலும் நுகர்பொருள் போல மனைவணிகம் சந்தைப் படுத்தப்பட்ட காரணத்தால் மனையின் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டே போகிறது . தமிழ் மண்ணின் மனிந்தர்கள் இதனால் நிலம் வாங்குவது என்பது முடியாத காரியம் ஆகிவிட்டது .

இதை நாம் தடுத்து நிறுத்தத் தவறினால் தமிழர் நிலங்கள் யாவும் அந்நியர்கள் கைக்கு சென்று விடும் . தமிழினம் நிலமில்லாமல் அந்நியர்களிடம் அண்டிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்படுவர் . மக்கள் தொகையில் சிறு பான்மை இனமாக மாறி அரசியல் உரிமைகளை கூட பெற முடியாத நிலைக்கு தமிழர்கள் தள்ளப் படுவர். இதனால் விரைவில் தமிழர்கள் தங்கள் மொழி , பண்பாடு மற்றும் அடையாளத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.

இப்போது தேவை , விளை நிலங்கள் யாவும் வெளி மாநிலத்தவர் வாங்க முடியாது என்ற சட்டம் இயற்ற வேண்டும். இதற்கு மேலும் நிலங்களை தமிழர்கள் இழக்க முடியாது . பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழர் நிலத்தை தமிழக அரசு தாரை வார்த்துக் கொடுக்கக் கூடாது. மேலும் வீட்டு மனையை விற்பனை செய்யும் தமிழர்கள் இன்னொரு தமிழருக்கே மனையை விற்க வேண்டும் . மனையை வாங்கும் போது வேற்றின மக்களிடம் சிக்கியுள்ள தமிழ் மண்ணை வாங்க வேண்டும் . இது தமிழர்களால் செய்யக் கூடியது. இதை தமிழர்கள் உடனே நடைமுறை படுத்த வேண்டும் . அரசியல் தீர்வாக , தமிழர்களுக்கு நில உரிமை சட்டம் இயற்ற வேண்டும். தமிழர் நாட்டில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட மக்களே மண்ணை வாங்க முடியும் என்ற சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். இதை தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்த வேண்டும் .

தமிழ் மண்ணில் தமிழர் அகதிகளாக மாற வேண்டாம் என்று நினைத்தால் உடனே நம் நிலத்தை பாதுகாப்போம். மண் காப்போம் , மொழி காப்போம் இனம் காப்போம் .

இன்றைய நிலை

* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..

* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இருந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.

* குங்குமம் வர இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலிஎடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.

-எம்.எஸ். சுகுமார்

Tuesday, August 27, 2013

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?

''இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதற்கும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?''

''எல்லா வகையிலும் சம்பந்தம் இருக்கிறது. விநோதமான 'சம்பந்தம்’ பற்றிய ஒரு செய்தி படித்தேன். 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த புதிதில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுலின் வயது 43-ஐ ஒட்டி இருந்தது. இப்போது அதே மதிப்பு சுமார் 61 ரூபாய்க்கு உயர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவின் வயது 66-ஐ நோக்கி பீடு நடைபோடுகிறது. இன்னும் சில மாதங்கள் 'காங்கிரஸ்’ ஆட்சியில் இருந்தால், பிரதமர் மன்மோகன் சிங் வயது 80-ஐ எட்டிவிடுமோ என்று பயமாக உள்ளது!’ என்று சொல்லியிருக்கிறார் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இதை அவர் ஜோக்காக சொல்லியிருந்தாலும்,இப்போ தைய இந்தியப் பொருளாதார நிலைமை அப்படித்தான் இருக்கிறது!''

- பா.மனோகரன், சென்னை-54.
ஆனந்த விகடன்..

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா......??? Burn Has there ......?

தகவல் புத்தகம்:
Gokul Gk

தீக்காயம்
ஏற்பட்டு விட்டதா......???

மருந்தை தேடி அலைய
வேண்டாம்...!
தீக்காயம் பட்ட உடன்,
உடனடியாக குளிர்ந்த
நீரை சூடு குறையும்
வரை காயத்தில்
விடுங்கள்...
பின்னர்
ஒரு முட்டையை எடுத்து அதன்
வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மேல்
படரும் படி தடவுங்கள்...

சிறிது நேரத்தில்
வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பாகிறது...
சிறிது நேரத்தில்
வலி முற்றிலும்
குறைந்து விடும்...

இதை தொடர்ந்து செய்து வந்தால்.....
அடுத்த 10 நாட்களில்
காயத்தின் தடயம்
மறைந்து விடும்....
{தீயணைப்பு படையினர் மற்றும்
மீட்பு படையினர்
பயன்படுத்தும் யுக்தியும்
இதுவே.}

Monday, August 26, 2013

ஷாம்பு தலைக்கு போடுவது அவசியமா?

தமிழ்ச் சமுதாயம்  -  தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி:
ஷாம்பு தலைக்கு போடுவது அவசியமா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது.

மேலும் ஷாம்பு, கண்டிஷனரில் உள்ள கெமிக்கல் குப்பைகளை என்ன செய்வது என்பது நம் முடிக்கு தெரிவது இல்லை. முடி வெட்டியபிறகு தலைக்கு குளிக்க வேண்டும் எனில் பின்வரும் இயற்கை ஷாம்புவை பயன்படுத்தலாம்.

1) தண்ணீர்: தலையில் நீரை விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.

2) முட்டை: முழு முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து கொள்ளுங்கள். இதை தலையில் ஊற்றி ஓரிரு நிமிடம் காத்திருந்து தலையை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். குளிர்ந்த நீரில் மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும். இது அளிக்கும் புத்துணர்வை எந்த ஷாம்புவும் அளிக்க முடியாது.

கண்டிஷனர் வேண்டுமா?

எலுமிச்சை ஒன்றை நேரடியாக தலையில் பிழிந்து சிறிது நீர் விட்டு மசாஜ் செய்யுங்கள். அல்லது லெமன் ஜூஸை நீரில் கலந்து கண்டிஷனராக பயன்படுத்துங்கள். இப்படி வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும்.

ஆப்பிள் மரம் apple tree story

தமிழால் இணைவோம்:
இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்..(முழுவதுமாகப் படிக்கவும் )

சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான்.அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது.

ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி.

சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்லை இப்போதெல்லாம் அப்படி விளையாட முடியாது, நான் பெரியவன் ஆகிவிட்டேன்.எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும் " என்றான்.

மரம், "என்னிடம் பொம்மைகள் எதுவும் இல்லை, என்னிடம் இருக்கும் ஆப்பிள்களை பறித்துக் கொள்.அதை விற்றுப் பணமாக்கி பொம்மை வாங்கிக் கொள் என்றது"

சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது.அப்படியா உண்மையாவா!! என்று எல்லா பழங்களையும் பறித்துக் கொண்டு சென்றான்.அதன் பின் மரத்தைப் பார்க்க வரவில்லை.

மீண்டும் சில நாட்கள் கழித்து வந்தான்.இம்முறையும் மரம் " வா , வந்து என்னுடன் விளையாடு " என்று அழைத்தது.அவன் இல்லை நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன்.நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும்.நாங்கள் தங்குவதற்கே வீடு இல்லாமல் இருக்கிறோம்.உன்னால் எங்களுக்கு வீடு தர முடியுமா என்றது.

மரம் " என்னிடம் வீடு இல்லை, என் கிளைகளில் சிலவற்றை எடுத்துக் கொள், அதைக் கொண்டு சின்ன வீடு அமைத்துக் கொள்" என்றது.மீண்டும் அவனின் சந்தோசத்தை கண்டு மரம் மகிழ்ந்தது.தன்னிடம் இருப்பதை இழக்கிறோம் என்று மரம் கொஞ்சமும் வருந்தவில்லை.

வழக்கம் போல் மரம் அவன் வரவிற்காக ஏங்கி தவிக்கிறது.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கோடை நாளில் வந்தான். எனக்கு வெப்பமாக இருக்கிறது.கடலுக்கு செல்ல ஆசையாக இருக்கு.எனக்கு ஒரு படகு வேண்டும் என்றான்.மரம் என்னிடம் படகு இல்லை, ஆனால் நீ என் தண்டுப் பகுதியை எடுத்து படகு செய்துக் கொள் என்றது.அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

காலங்கள் ஓடி அவனுக்கும் வயதாயிற்று.அப்போதும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க வருகிறான்.இம்முறையும் மரம் அவனை ஆசையாய் வரவேற்று அரவணைக்க நினைக்கிறது. எனக்கு வயதாகிட்டு , மிகுந்த களைப்பாய் இருக்கு.நான் இங்கு ஓய்வு எடுக்க ஆசைபடுகிறேன் என்றது.

எல்லாவற்றையும் இழந்தும் சிரித்துக் கொண்டே மரம் "என்னிடம் இருப்பது வேர் மட்டுமே.நீ என் வேர் பகுதியை சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் ஓய்வு எட்டுத்துக் கொள் " என்று சொல்லிக்கொண்டே சாகிறது.

அவனும் அவ்வாறே செத்துக் கொண்டிருக்கும் மரத்தின் மேலே படுத்துக் கொண்டான்.

# நீதி : கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நாம் மரங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி விடுகிறோம்.மரத்தை வெட்டுவது பாவம்.இவ்வளவு தானே!!!

கதை அதை மட்டும் சொல்லவில்லை.இந்த மரம் தான் நம் ஒவ்வொருவரின் பெற்றோரும். சிறுவயதில் பெற்றோருடன் ஆடிப் பாடி மகிழ்கிறோம்.வளர வளர அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நம் தேவைகளுக்கு மட்டும் அவர்கள் முன் சென்று நிற்கிறோம்.

நாம் குடும்பம் ஆனதும் முழுவதுமாய் ஒதுங்கி, நமக்கு பிரச்சனை என்றதும், நம்மை காத்துக் கொள்ள மட்டும் அவர்களை எதிர்பார்க்கிறோம்.பெற்றோர்கள் இந்த மரத்தை போன்றே நம் வரவிற்காக எப்போதும் ஏங்குபவர்கள்.தம்மால் இயன்றதை நமக்கு கொடுத்து நம் புன்னகையில் அவர்கள் சந்தோசத்தை தேடுவார்கள்.

என்னைக் கவர்ந்த கதை.
-ஆதிரா

Visit our Page -► தமிழால் இணைவோம்

..................................................................................

Sunday, August 25, 2013

பிறந்த நாள் கொண்டாடலாமா? இஸ்லாம் தரும் விளக்கம்


பிறந்த நாள் கொண்டாடலாமா?

கேள்வி

எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா? விளக்கம் தரவும்.

இர்பான்

பதில் :

வஅலைக்குமுஸ்ஸலாம்

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.

இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது
பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி
(ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய
பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும்
இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை
பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?

மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக்
கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும்.
கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள்
எச்சரித்துள்ளார்கள்.

*3456**حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ
عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ
قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري***

*அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள்

*''**உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள்
அங்குலம் அங்குலமாக, **முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர்
உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' **என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''**அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்
கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?''
**என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''**வேறெவரை?'' **என்று
பதிலலித்தார்கள்.*

புகாரி (3456)

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள்
குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்.

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts