Saturday, October 26, 2013

உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா? Children sex news

உங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா?

Dear Parents

கவனமாகப் படியுங்கள். உலகிலேயே அற்புதமான கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் உண்மையான முகத்தைத் தரிசிக்க உதவும் புள்ளிவிவரங்கள் இவை. 
* உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் 53 சதவிகிதம் குழந்தைகள் - அதாவது இரண்டில் ஒரு குழந்தை - பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் நாடு இந்தியா.
* இவற்றில் 89 சதவிகிதம் குற்றங்கள் உறவினர்கள், நண்பர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன.
* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளில் 87 சதவிகிதம் பேர் மீது மீண்டும் மீண்டும் வன்முறை தொடர்கிறது.
* இவர்களில் 5-12 வயதுக்குள் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 42.06 சதவிகிதம்.
* இப்படி வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்களில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம் அதிகம்.
* இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.
டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மாணவி ஐந்து பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஆகட்டும், குவாஹாத்தியில் சாலையில் பலர் முன்னிலையில் ஓட ஓட ஓர் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவம் ஆகட்டும். முக்கியமான ஒரு செய்தியை நமக்குத் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றன... இனியும் இந்த நாட்டில் அரசாங்க அமைப்புகளை நம்பிப் பயன் இல்லை. நம் குழந்தைகளைக் காத்துக்கொள்ள இனி நாம்தான் களம் இறங்கியாக வேண்டும்; குழந்தைகளுக்கான பாலியல் கல்வியை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதே அந்தச் செய்தி!சரி, எந்த இடத்தில் இருந்து தொடங்குவது?
முக்கியமான 5 கட்டளைகள்:
*மார்பகம், பிறப்புறுப்பு, மாதவிடாய், நாப்கின், ஆணுறை, சுய இன்பம், உடலுறவு, கற்பு, பலாத்காரம், காதல், குழந்தைப் பிறப்பு... இப்படி எது தொடர்பாக உங்கள் குழந்தை கேட்டாலும் மறைக்காமல் அறிவியல்ரீதியிலான உண்மையைச் சொல்லுங்கள். அதேசமயம், தேவைக்கு அதிகமாக, பெரிய பெரிய விளக்கங்களோடு பதில் அளிக்க வேண்டியது இல்லை. அவர்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு வரியில் பதில் சொல்லப் பழகுங்கள். இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசும்போதோ, குழந்தைகளை விசாரிக்கும்போதோ ஒரு குற்றவாளியை அணுகுவதுபோல அவர்களின் நேருக்கு நேர் அமர்ந்து, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்த்து, பக்கவாட்டில் அமர்ந்து விளையாட்டாகப் பேசுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளைப் பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் இருக்கும். இயல்பாகவே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளை எப்படி அணுகுவது என்றும் சொல்லிக்கொடுங்கள். 
* வீட்டில் அரைகுறை ஆடையோடு உலவாதீர்கள். கணவன் - மனைவி நெருக்கத்தைக் குழந்தையின் முன் காட்டாதீர்கள். குழந்தையின் முன் உடை மாற்றாதீர்கள். ஆபாசம் வரும் எனத் தெரிந்தால், டிவியோ, பத்திரிகையோ குழந்தை முன் பார்க்காதீர்கள். 
* பாலியல் கல்வியின் அடிப்படையே வீட்டிலிருந்து, பாலியல் சமத்துவத்தில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே, ஆண் - பெண் பாகுபாடு எந்த விதத்திலும் வீட்டில் நிலவாத சூழலை உருவாக்குங்கள். சமையலில் தொடங்கி முக்கியமான முடிவுகளை எடுப்பது வரை எல்லா விஷயங்களிலும் கணவன் - மனைவி இருவருக்கும் சமமான பங்கு இருப்பதை உறுதிசெய்யுங்கள். ஆண் குழந்தைகளுக்குப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கும் எல்லா வேலைகளையும் கற்றுக்கொடுங்கள்; பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் எல்லா வாய்ப்புகளையும் அளியுங்கள்.
* சக நண்பராக குழந்தைகளோடு நெருக்கமாக உரையாடுங்கள். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமேனும் அவர்களோடு செலவிடுங்கள். அவர்களுடைய நண்பர்கள், விருப்பங்கள், செயல்பாடுகள்பற்றிப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகளிடம் பிறப்புறுப்புபற்றி சகஜமாகப் பேசுங்கள். கை, கால்களைப் போல அதுவும் ஓர் உறுப்புதான் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அதைப் பற்றிப் பேசவோ, சந்தேகம் கேட்கவோ அவர்கள் தயங்காத சூழலை உருவாக்குங்கள். புத்தக வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் - ஆனால், சொல்ல முடியாதது என்று நினைக்கும் - விஷயங்களைப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்.
* குழந்தைகள் எந்த ஒரு சங்கடமான விஷயத்தை உங்கள் முன் கொண்டுவந்தாலும் ''பயப்பட வேண்டாம், இது ஒரு பிரச்னையே இல்லை, நான் இருக்கிறேன்'' என்கிற பக்கபல வார்த்தைகளோடு அவர்களை அணுகுங்கள்.

அதிகம் கேட்கப்படும் 5 கேள்விகளும் சொல்ல வேண்டிய பதில்களும்!
''அம்மா, என்கூட படிக்குற ஒரு பையன் என்கிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொல்றாம்மா..."''ஆஹா... அவனுக்கு உன்னைப் பிடிச்சுருக்குபோல இருக்குடா. உன்கூட ஃப்ரெண்டா இருக்க ஆசைப்பட்டு இருக்கான். அதை அவனுக்குச் சொல்லத் தெரியலை. டி.வி., சினிமாவைப் பார்த்து காதல்னு சொல்லி இருக்கான். தப்பில்லே. அவன்கிட்டே சொல்லு. நம்ம ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து படிப்போம்னு. ஞாயிற்றுக் கிழமைல வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வா. விளையாடு!''
''ஏம்மா, பெண்களுக்கு மட்டும் மார்பு வளருது... ஆண்களுக்கு வளரலை?"''பிற்காலத்துல குழந்தைங்க பிறக்கும்போது, அந்தக் குழந்தைங்களுக்குப் பால் கொடுக்கணும் இல்லையா? அதுக்காகத்தான் பெண்களுக்கு மார்பு பெரிசா வளருது.''
''பலாத்காரம்னா என்னப்பா?"''கண்ணா, நம்ம உடம்புல சில இடங்களை எல்லோரும் தொடலாம், சில இடங்களைத் தொடக் கூடாது. அப்படித் தொடக் கூடாத இடங்களை நம்மளை மீறித் தொட்டுடறதைத்தான் பலாத்காரம்னு சொல்றாங்க.''
''மாதவிடாய்னா என்னம்மா? அக்காவுக்கு நாப்கின் எதுக்கு வாங்குறீங்க?"''உடம்புக்குத் தேவை இல்லாத தண்ணீர் எப்படி உச்சாவா வருதோ, அதேபோல, பெண்களுக்கு மட்டும் அவங்க பெரிய பிள்ளையா வளர ஆரம்பிச்ச உடனே தேவையில்லாத ரத்தம் வெளியே வரும். அதைத்தான் மாதவிடாய்னு சொல்வாங்க. அப்படி வரும்போது, அந்த ரத்தம் டிரஸ்ல பட்டுடாம இருக்கத்தான் நாப்கின்.''
''குழந்தை எப்படிப்பா பிறக்குது?"''அப்பாக்கிட்ட ஒரு கெமிக்கல் இருக்கும். அது அம்மா வயித்துக்குள்ள இருக்குற கெமிக்கல்கிட்டே போய் சேர்ந்து, பாப்பாவாப் பிறக்கும். ஏரோப்ளேன் எப்படிப் பறக்குது? அதை முழுசாச் சொன்னா உனக்கு இப்போ புரியாதுல்ல... அதுபோல, நீ பெரியவனாகும்போது இதெல்லாம் படிப்புல வரும். அப்போ உனக்கு எல்லாம் புரியும்.''
அணுகச் சங்கடமான 3 விஷயங்கள்! 
குட் டச் / பேட் டச் 
குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக, அதன் உடலில் பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக் கூடாது என்று புரியவையுங்கள். கை குலுக்கலாம் - குட் டச். தலை மேல் கை வைக்கலாம், கன்னத்தில் கையால் கிள்ளி முத்தம் கொடுக்கலாம், தோளில் கை போடலாம் - குட் டச். தடவக் கூடாது - பேட் டச். மார்பில், வயிற்றில், இடுப்பில், பிறப்புறுப்பில், தொடையில் கை வைக்கக் கூடாது; தடவக் கூடாது. வாய் மீது வாய் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது. கட்டிப்பிடிக்கச் சொல்லக் கூடாது. மடியில் அமர்த்திக்கொண்டு அணைக்கக் கூடாது - பேட் டச். அப்படி யார் செய்தாலும் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து சமர்த்தாய் நழுவி, தனியாக இருக்கும்போது அம்மாவிடம்/அப்பாவிடம் உடனே சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் . வீட்டின் அருகிலோ, பள்ளிக்கூடத்தின் அருகிலோ தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் யாரேனும் தங்களைத் தொடர்ந்து கவனிக்கிறார்களா, சைகை மூலம் அழைக்கிறார்களா, சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்களா என்று குழந்தைகள் கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். அப்படிக் குழந்தை தெரிவிக்கும் நபர்களைக் கண்காணியுங்கள். 
காதல் 
குழந்தை ஐந்து வயதில் காதல் வயப்படலாம். இயல்புதான். பதின்பருவத்தில் காதல் வருவதும் இயல்புதான். சூசகமாகச் சொல்லுங்கள்... ''வெறும் நட்புதான்பா. ஆனா, இந்த வயசுல அப்படித்தான் தோணும், தப்பில்லை. இப்படித்தான் அப்பாவுக்கும் சின்னப் புள்ளையா இருக்கும்போது நடந்துச்சு. அப்புறம் பெரியவனானதும் இதெல்லாம் சும்மான்னு புரிஞ்சுச்சு. படிப்பைக் கவனிப்பா. எதுவா இருந்தாலும் அது முக்கியம்'' என்பதுபோலப் பேசுங்கள்.
சுய இன்பம் 
ஆணோ, பெண்ணோ... ஒரு குழந்தை தன் வாழ்வில் இரு முறை சுயஇன்பம் பழக்கத்துக்கு ஆட்படுகிறது. முதல் முறை 3-5 வயதில். இரண்டாவது முறை 10-13 வயதில். இது எல்லாக் குழந்தைகளுக்கும் சகஜமானது. பிறப்புறுப்பைத் தேய்த்துக்கொண்டே இருப்பதால் கிடைக்கும் சுகம் காரணமாக ஏற்படும் இந்தப் பழக்கத்தை விவரம் தெரியாத வயதில், குழந்தையின் கவனத்தைத் திசை மாற்றி நம்மால் தடுக்க முடியும். ஆனால், விவரம் தெரிந்த பின் பதின்பருவத்தில் ஏற்படும் பழக்கம் அப்படி அல்ல. அனுமதியுங்கள். அதேசமயம், டி.வி., ஆபாசப் புத்தகங்கள், இணையம் போன்ற திசை திருப்பும் விஷயங்களை வீட்டில் இருந்து அகற்றுங்கள். விளையாட்டு உள்ளிட்ட பிற விஷயங்களில் ஊக்குவியுங்கள். கவனம் சிதறும் அளவுக்குப் பழக்கம் அதிகமானால், அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூசகமாகத் தெரியப்படுத்துங்கள்.
ஆப்த வாக்கியம் 

ஒரு விஷயத்தைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லி வளருங்கள். ''நீ மட்டுமே உலகம் இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் உயிர் வாழ எவ்வளவோ பேருடைய உழைப்பு தேவைப்படுகிறது. ஆகையால், உன்னைப் போல் எல்லோரையும் நினை'' என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வளருங்கள். எல்லோருடைய எண்ணங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தி வளருங்கள். வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் நீங்கள் அவர்களுக்குத் துணையாக இருப்பீர்கள்; எதையும் மறைக்க வேண்டியது இல்லை என்று சொல்லி வளருங்கள். அதேசமயம், எப்போதும் குழந்தைகளைக் கவனத்திலேயே வைத்திருங்கள்! 
டாக்டர் விகடன் ஜன.2013

...

shared via http://feedly.com

Friday, October 25, 2013

39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் கொண்ட உலகின் மெகா குடும்பம் world big family

39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் கொண்ட உலகின் மெகா குடும்பம்
By tamil

இந்தியாவை சேர்ந்த சொய்னோ சனா என்பவர் உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் என தமிழ்ஸ்வே இணையம் அறிகிறது. இவரது இந்த மெகா குடும்பத்திஉல் 39 மனைவிமாரும், 94 பிள்ளைகளும் மற்றும் 33 பேரப்பிள்ளைகளுடன் மொத்தமாக 181 அங்கத்தவர்கள் உள்ளனர்.

இவர் தனது வாலிப வயதில் ஓர் ஆண்டில் 10 திருமணங்கள் புரிந்துள்ளாராம். அத்துடன் இளைய மனைவிமாரை எப்போதும் தனக்கு அருகில் வைத்திருக்கும் அவர், யார் யார் எப்பொது தனது படுக்கை அறையை பகிர்ந்து கொள்வது என்பதற்க்கு ஒரு சுழற்ச்சி முறை அட்டவனையை வைத்துள்ளார்.

இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இவருக்கென்று 100 அறைகளைக் கொண்ட பெரிய மாளிகையே உள்ளது. ஒவ்வொறு அறைகளுக்கு கிட்டத்தட்ட மூன்று பேருக்கு மேல் வசிக்கின்றனர்.

வீட்டில் ஒரு இராணுவ ஆட்சியே நடக்கிறது. ஒவ்வொரு நிகழ்வையும் ஒருங்கினைத்து நடத்துவது மூத மனைவியே ஆகும். அவர் தனது சக்காளத்திகளுடனும் ஏனய குடும்ப அங்கத்தவர்களுடனும் குடும்ப வேலைகளை பார்த்து வருகிறார்.

ஒருநாள் உணவிற்கே பல காய்கறிகளும் ஆடு மாடு கோழி என பலவகையான பொருட்கள் தெவைப்படுகின்றன.

தன்னுடைய வம்சத்தை பரப்புவதற்காக தான் அமெரிக்கா வேண்டுமானாலும் செல்ல தய்யார் என்கிறார் சொய்னோ சனா..

The post 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் கொண்ட உலகின் மெகா குடும்பம் appeared first on Tamilsway.

shared via

முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க tamil jokes with deepawali

முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க

கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் தரைச் சக்கரம் சுத்தமாட்டேங்குது!

முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் 
சுருளு...!
                                  
- தஞ்சை தாமு

shared via

adhikaalai nerame lyrics-meendum oru kaadhal kadhai tamil song lyrics - அதிகாலை நேரமே

adhikaalai nerame lyrics-meendum oru kaadhal kadhai tamil song lyrics - அதிகாலை நேரமே

Movie Name:Meendum oru kaadhal kadhai
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Gangai amaran
Cast:Prathap Bothathan,Radhika
Year of release:1985

Lyrics:-

Adhikaalai nerame pudhithaana raagame
Engengilum aalabanai
Koodatha nenjam rendum kooduthe paaduthe

Adhikaalai nerame ...

Kaatrodu modhum aanandha raagam thaalattuthu
Kaveri min alai adhu kadalodu vanthu sernthathu
Kaveri min alai adhu kadalodu vanthu sernthathu
Pudhu sangamam sugamengilum
Ondrai ondru ennaalum servathe aanandham

Adhikaalai nerame ...

Unnodu naanum ennodu neeyum uravaadalaam
Nenjodu oorvalam vara neengaamal naam sugam pera
Nenjodu oorvalam vara neengaamal naam sugam pera
Tholodu thoal serave
Thoongamal kaanum inbam vaavenum nerame

Adhikaalai nerame ....

அதிகாலை நேரமே புதிதான ராகமே
எங்கெங்கிலும் ஆலாபனை
கூடாத நெஞசம் இரண்டும் கூடுதே பாடுதே

அதிகாலை நேரமே ...

காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது
காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது
புது சங்கமம் சுகமெங்கிலும்
ஒன்றை ஒன்று எந்நாளும் சேர்வதே ஆனந்தம்

அதிகாலை நேரமே ....

உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
தோளோடுதான் தோள் சேரவே
தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..

அதிகாலை நேரமே ....



shared via

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் ! Paypal money gram

பேபால் மணி கிராம் – இதில் உடனடியாக பணம் !

பேபால் மூலம் பரிவர்த்தனை நடத்துவதுதான் இப்ப ஃபேம்ஸாக இருக்கிறது. உடனே பணம் அனுப்ப‌ இன்னொரு முறை வெஸ்ட்டர்ன் யூனியன் அல்லது மணி கிராம் என்ற சேவை. இப்போது பேபால் மனி கிராமுடன் இனைந்து அற்புதமான திட்ட்த்தை உருவாக்கியுள்ளது.

1. அதாவது பேபாலுக்கு தேவையான கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கு இனி மேல் தேவையில்லை. நேராக மணி கிராம் கடைக்கு சென்று காசை கட்டி பேபால் அக்கவுன்ட்டில் வரவு வைத்து அனுப்ப வேண்டியவங்களுக்கு பேபால் மூலம் பணத்தை அனுப்பலாம்.

2. பேபாலில் பணம் வந்தாலோ அல்லது பணம் எடுக்க 7 – 10 நாட்கள் ஆகும் ஏன் என்றால் பேபால் பணத்தை வங்கியில் தான் நேரடியாய் செலுத்தும். அது வரை நமக்கு ஸ்டக் ஆகிவிடும். இப்போது பணத்தை வித்டிரா செய்யலாம் எப்படி – பணத்தை மணி கிராமாக டிரான்ஸஃபராக மாற்றி உடனே உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் பணத்தை மணி இன் செகன்ட்ஸ் பிரகாரம் உடனே பெறலாம்.

இப்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டும் சாத்தியம் ஆனால் விரைவில் உலகெம்ங்கும்….

இதை தவிர இப்போது பேபால் ப்ரீபேய்ட் மாஸ்டர் கார்டை இலவசமாக தருகின்றனர். இதன் மூலமும் பேபாலில் நமக்கு வரும் பணத்தை கிரடிட் அல்லது டெபிட் கார்ட் மாதிரி உபயோகிக்கலாம் மற்றும் உலகத்தின் எந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்திலும் பணம் எடுக்கலாம். சார்ஜ் வழக்கம் போல உண்டு.இதுவும் உடனே எடுக்க கூடிய ஒரு விஷயம் தான். எனக்கு வேணா ஒரு ஆயிரம் அமெரிக்க டாலர் அனுப்பினா பக்காவா வேலை செய்தான்னு பார்த்து சொல்றேன் – வசதி எப்படி..???

ஆந்தைரிப்போர்ட்டர்

துளியே மழைத் துளியே tamil kavithai

துளியே மழைத் துளியே

அவள் கன்னத்தில் விழுந்த 
மழைத்துளியை 

வழிந்து விழுவதற்குள் 
வலிந்து வந்து சேகரித்தது...

தேனீ.....

தேன் கூட்டுக்குள் இப்போது 

இன்னும் ஒரு 

தேன் துளி....!

shared via

Thursday, October 24, 2013

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்...?? Tamil god and temple

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்...??

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்:
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா?

அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

shared via

குறளின் குரல் - 554

குறளின் குரல் - 554

24th Oct 2013

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

                         (குறள் 547: செங்கோன்மை அதிகாரம்)

Transliteration:

iRaikAkkum vaiyagam ellAm avanai

muRaikAkkum muTTach cheyin

iRai - - the ruler of the country, king

kAkkum – will protect

vaiyagam ellAm – people of his country

avanai – such a king

muRai – the just rule of his

kAkkum – will protect

muTTach cheyin – if he renders just rule, without any hinderance

King is like God that protects his citizens; the king is protected by his just rule of unbent scepter, if he rules without any defects in the administration – another chapter filling verse.

There have been many rulers documented in the pages of Tamil history; ManunIdhi Chola who ran the chariot over his only son,  to render justice to a cow whose calf had been accidentally killed by his son, PoRkai PANDiyA who severed his own hand to convince a doubting husband and the citizens that did not realize his good intentions were the glorious rulers. Even the PANDiyan Nedunchezhiyan who took his own life after KANNAgi proved to him about her husband's innocence.

"King protects his country; A rule of unbent scepter

 Is his protection; if done without defects that deter"

தமிழிலே:

இறை - அரசன், நாட்டை ஆளும் தலைவன்

காக்கும் - காப்பான்

வையகம் எல்லாம் - தான் ஆளும் நாட்டினரை

அவனை - அத்தகு அரசனை

முறை - அவனுடைய செங்கோன்மை கொண்ட நீதிவழுவா முறையான ஆட்சியே

காக்கும் - காக்கும்

முட்டாச்செயின். - அதில் ஏதும் தடையில்லாமல் செய்தால்.

அரசன் அல்லது நாட்டை ஆளுபவனே தன் குடிகளைக் காப்பவன்.  அவ்வரசனைக் காப்பது, அவனுடை செங்கோல் கோணாத ஆட்சி முறையாம், அதையும் அவன் தடையறச் செய்வானாயின் - இதுவே இக்குறள் சொல்லும் கருத்து.

நீதிவழுவா ஆட்சிசெய்தவர்க்கு எடுத்துக்காட்டு, மகனென்றும் பாராமல், பசுவுக்காக, தன் மகனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனும், கற்புடைய குடிமகளுக்காக தன் கையை இழந்த பொற்கைப் பாண்டியனும். நீதிமுறை தவறி, கண்ணகியால் தன் தவறை உணர்ந்து செங்கோல் தாழ்ந்தமைக்காகத், தன்னையே மாய்த்துக்கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனும் நீதிவழுவா மன்னர்களே.

இன்றெனது குறள்:

கோல்கோணாக் கோனைசெங் கோன்முறையே காக்குமாப்

போல்காக்கும் கோனுந்தன் நாடு (கோனும் தன் - கோனுந்தன்)

kOlkONAk kOnaiseng kOnmuRaiyE kAkkumAp

pOlkAkkum kOnundan nADu

shared via

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா 3–ந்தேதி தொடங்குகிறது: முன்னேற்பாடு பணிகள் தீவிரம் Tiruchendur temple kantha sasti Festival 3 Starting

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா 3–ந்தேதி தொடங்குகிறது: முன்னேற்பாடு பணிகள் தீவிரம் Tiruchendur temple kantha sasti Festival 3 Starting

தூத்துக்குடி, அக். 24–

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 3–ந்தேதி தொடங்குகிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ரவிக்குமார் பேசியதாவது:–

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 3–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், கொசு மருந்து அடிக்கவும், 24 மணி நேரம் இயக்கக்கூடிய மருத்துவ குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில் வளாகம், குரும்பூர்–குரங்கன்தட்டு நீரேற்றும் நிலையம், திருச்செந்தூர் தெப்பக்குளம் நீரேற்றும் நிலையம் போன்ற பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரசம்ஹாரம் நடைபெறும் 8–ந்தேதி பல்வேறு ஊர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ், ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை மூலம் கடல் பாதுகாப்பு வளையத்துடன் உயிர் மீட்பு படகுகளும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும்.

பாதுகாப்பு பணிகளில் அதிக காவலர்களை ஈடுபடுத்துவது, சிறப்பு விருந்தினர்களுக்கு கார் பாஸ் வழங்குவது, சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யவும், கோவிலை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயகார்த்தி கேயன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, வருவாய் கோட்டாட்சியர்கள் நாக ஜோதி, தமிழ்ராஜன், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், பேரூராட்சி தலைவர் சுரேஷ்பாபு, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

...

shared via

ஐசான் வால் நட்சத்திரத்தால் ஆபத்தா: அணு ஆற்றல் துறை விஞ்ஞானி விளக்கம் Aican star is in danger scientist description

ஐசான் வால் நட்சத்திரத்தால் ஆபத்தா: அணு ஆற்றல் துறை விஞ்ஞானி விளக்கம் Aican star is in danger scientist description

திருப்பூர், அக்.24-

வால் நட்சத்திரத்திலேயே மிகப்பெரிய வால்நட்சத்திரம் ஐசான் வால் நட்சத்திரமாகும். வருகிற நவம்பர் மாதம் 28–ந் தேதி மாதம் பூமியில் தெரியப்போகிறது.

ஐசான் வால் நட்சத்திரத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21–ந் தேதி வான வியலாளர்கள் வைட்டலி நெவ்ஸ்கி, அர்த்யோன் நோவிசொனோக் ஆகியோர் கண்டுபிடித்தனர். இதனைக் காண்பதற்குப் பயன்படுத்திய கருவியின் பெயரைக் கொண்டே இதற்கு ஐசான் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசான் வால் நட்சத்திரம் இதுவரை வந்த வால் நட்சத்திரங்களில் மிகப் பெரியதும், மிகவும் பிரகாசமானதும் ஆகும். இது, சூரியனுக்கு முன்னே பிறந்ததாம். இதன் வயது சூரியனைவிட அதிகம் என்கின்றனர். அதாவது சுமார் 470 கோடி ஆண்டுகள்.

இதன் வாலின் நீளம் 3 லட்சம் கி.மீ. அகலம் 5 கி.மீ. நவம்பர் மாதம் 22–ந் தேதி சூரியனுக்கு மிக அருகில் 1.16 மில்லியன் கி.மீ. தொலைவில் வந்து சூரியனின் ஒளியுடன் போட்டியிடப் போகிறது.

அதன்பிறகு நவம்பர் 28–ந் தேதி பூமிக்கு மிக அருகில் வரப்போகிறதாம். ஐசான் வால் நட்சத்திரம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சூரிய குடும்பத்திற்குள் புதிதாக நுழைய உள்ளது. இந்த நட்சத்திரம் இப்போது பூமியில் தெரிய உள்ளது. இது ஒரு அரிய வானவியல் நிகழ்வாகும்.

டெலஸ்கோப் மூலம் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்துப் பகுதியினரும் கண்களால் பார்க்கக்கூடிய வால் நட்சத்திரம் இதுதான். இதே போன்ற வால் நட்சத்திரங்கள் தெரிந்தால் பாதகம் ஏற்படும் என்ற மூட நம்பிக்கை காலம் காலமாக மக்களிடையே இருக்கிறது.

இந்த மூட நம்பிக்கையை போக்கும் வகையில் மத்திய அரசின் விஞ்ஞான பிரசார் என்ற அமைப்பும், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பும் ஐசான் நிகழ்வை இந்தியா முழுவதும் மக்களிடையே கொண்டு சென்று அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

அதன்படி ஐசான் என்ற வால் நட்சத்திரத்தை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து "ஐசான் வால் நட்சத்திரம் காண்போம்" என்ற பிரசாரத்தை நாடு முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக மாநில பயிற்சி முகாமை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் தேஜா மகளிர் தொழில் நுட்பக் கல்லூரியும் இணைந்து திருப்பூர் ஜெய் வாபாய் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடத்தியது.

அறிவியல் பிரசார ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். ஊட்டி ரேடியோ வானவியல் மையத் தலைவர் பேராசிரியர் மனோகரன் சிறப்புரையாற்றினார். பெங்களூரிலுள்ள இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முத்துமாரியப்பன் சூரிய குடும்பம் குறித்தும், கல்பாக்கம் அணு ஆற்றல் துறையைச் சார்ந்த விஞ்ஞானி பார்த்த சாரதி வால்நட்சத்திர அறிவியலின் வரலாறு குறித்தும் முன்னாள் அறிவியல் இயக்க செயலாளர் ராமலிங்கம் ஐசான் வால் நட்சத்திரம் குறித்தும் பேராசிரியர் மோகனா வானவியலும் ஜோதிடமும் குறித்தும் பேசினார்கள்.

ஐசான் வால் நட்சத்திரம் குறித்து கல்பாக்கம் அணு ஆற்றல் துறையை சார்ந்த விஞ்ஞானி பார்த்தசாரதி பேசும்போது கூறியதாவது:–

ஐசான் வால் நட்சத்திரம் மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே ஒரு அழுக்கான பனிப்பந்தாகும். இது சூரிய குடும்பத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் ஊரட் மேகம் என்ற பகுதியிலிருந்து புதிதாக வருகிறது. ஆரம்பத்தில் இதற்கு வால் கிடையாது.

வால் நட்சத்திரம் சூரியனில் இருந்து கிட்டத்தட்ட வியாழன் கோளின் தூரத்தினை அடையும்போது சூரிய கதிர் வீச்சினால் இந்த பனிப்பந்து ஆவியாக ஆரம்பித்து வாயுக்களையும் தூசுகளையும் வெளியிட ஆரம்பிக்கிறது.

இவை சூரியனின் கதிர் வீச்சு அழுத்ததினால் சூரியனுக்கு எதிர்புறமாகத் தள்ளப்பட்டு வால் போன்ற தோற்றத்தை பெறுகின்றன. சூரியனுக்கு அருகே செல்லச் செல்ல சூரியனின் வெப்பம், கதிர்வீச்சு அழுத்தம் போன்றவை அதிகமாவதால் வாலின் நீளமும் பிரகாசமும் அதிகமாகும்.

ஐசான் வால் நட்சத்தி ரத்தை அக்டோபரில் இருந்து தொலை நோக்கி மூலம் காணலாம். நவம்பர் 2–வது வாரத்திலிருந்து அதிகாலை கிழக்கு அடிவான் அருகே இதனை நாம் வெறும் கண்களினால் காணலாம். நகர் புறங்களில் ஒளி மாசு அதிகம் இருப்பதாலும், கட்டிடங்கள் அடிவானை மறைப்பதாலும் பார்க்க கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

ஆனால் ஐசான் வால் நட்சத்திரத்தை கிராமப்புறப் பகுதிகளில் நன்கு காணலாம். அதன்பிறகு நவம்பர் 4–வது வாரத்தில் சூரியனுக்கு அருகே ஐசான் சென்றுவிடும். இதனால் இதை முழுவதுமாக காண முடியாவிட்டாலும் அதன் வாலின் ஒரு பகுதியைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐசானை உலகில் அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது. இது சூரியனை உரசிச் செல்லும் வால் நட்சத்திரமாகும். நவம்பர் 28–ந் தேதி ஐசான் சூரியனுக்கு மிக அருகில் சூரியனை உரசிச் செல்கிறது. அப்போது அதன் வெப்ப நிலை சுமார் 2000 டிகிரி செல்சியஸை (இரும்பின் உருகு நிலையை விட அதிகம்) அடையக்கூடும் .

சூரியனிலிருந்து அதன் தூரம் வெறும் 1.2 மில்லியன் கி.மீ. ஆதலால் சூரியனின் ஈர்ப்பு விசை ஐசானை சிதறடிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஐசானின் அளவு சற்று பெரியதாக இருப்பதால் இதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதுகின்றனர்.

அவ்வாறு தப்பிப் பிழைத்தால் டிசம்பர் மாதம் முதல் வார பிற்பகுதியில் ஒரு கண்ணைக் கவரும் வால் நட்சத்திரமாக ஐசான் வெளிப்படும். அது தொடர்ந்து ஜனவரி மாதம் 2–வது வாரம் வரை வெறும் கண்களுக்குத் தென்படும்.

தற்போது மணிக்கு 1 லட்சம் கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரம் சூரியனை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். இது நவம்பர் மாதம் 28–ந் தேதி மணிக்கு 13 லட்சம் கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றித் திரும்புகிறது.

இதன் அளவு அதிக பட்சமாக 6 கி.மீ.க்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐசானின் பாதை பூமியின் பாதைக்கு வெகு தொலைவில் உள்ளது. எனவே, இந்த வால் நட்சத்திரம் பூமியில் மோதுவதற்கு அறவே வாய்ப்பு இல்லை.

வால் நட்சத்திரங்கள் எப்போது தோன்றும்? அவற்றிற்கு என்ன பாதைகள் உண்டு? என்பதையெல்லாம் அக்காலத்தில் மக்கள் அறிந்திருக்க முடியாது. எனவே அவை திடீரென வானில் தோற்றம் தருவதைக் கண்டு அவர்கள் அச்சம்கொண்டு அவற்றை தீய சகுனமாகக் கருதினர்.

தற்போது ஆண்டுதோறும் பல வால் நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன. கடந்த 400 ஆண்டுகளில் சுமார் 5000 வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2000 சிறு வால் நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

எனவே இவற்றைப் பற்றி அச்சப்பட தேவையில்லை.கண்களுக்கு விருந்தளிக்க உள்ள ஐசான் வால் நட்சத்திரத்தை அச்சமின்றி அனைவரும் வரவேற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

Wednesday, October 23, 2013

aande nootrande lyrics-mugavari tamil song lyrics - ஆண்டே நூற்றாண்டே

aande nootrande lyrics-mugavari tamil song lyrics / ஆண்டே நூற்றாண்டே

Movie Name:Mugavari
Song Name:Aande noottrande
Singer:Naveen
Music Director:Deva
Cast:Ajith kumar,Jyothika
Year of release:2000

Lyrics:-

Alaigal illaamal mega sedhukkal nee thara vaa
Iraichal illaamal kaadhil thaen isai nee thara vaa
Nilavukku poi varave engal dhegathukku siragu kodu
Ovvoru vidiyalilum nejai ulagukku valimai kodu

Noottrande noottrande noigal ellaam kalaivaaya
Azhukkillaatha kaatrum neerum
Agilam muzhuthum tharuvaya
Petrolum theernthu vittaal karkaalam tharuvaya
Ponnaana vaaganam odum porkaalam tharuvaya
Ore nizhal ore nijam nee kondu vaa nee kondu vaa
Ore pagal ore nilai nee kondu vaa nee kondu vaa
Poiye pesaatha puththulagam nee kondu vaa
Pasi illaa poi sollaadha pudhu ulagam nee kondu vaa
Oru bhoogambam engum neraatha
Anal bhoomiyai nee kondu vaa

Illarathil pengalukku inba nilai tharuvaya
Samaiyal arai vazhintha veedugal
Thaai maarkellam tharuvaya
Podhi sumakkum kuzhanthaigalin
Puthagangal kuraippaya
Pareetchai indri kalviyum vendum
Paada thittam tharuvaya
Ore mozhi ore needhi nee kondu vaa nee kondu vaa
Ore nizhal ore vizha nee kondu vaa nee kondu vaa
Pore illaatha pon ulagam nee kondu vaa
Tamizh saagamal manam paarkindra
Andha kaadhal nee kondu vaa
Isai kekkaamal kan thugilaatha
Ada ulagam nee kondu vaa

Putham pudhu aande thaen pookkum nootrande
Pookkal nee thara vaa thaen punnagai nee thara vaa
Porkalamnuzhainthu vidu ange poocharamnattu vidu
Anugundu athanaiyum pacific kadalil kotti vidu
Manithargal virumbum varai mannil manitharai vaazha vidu
Maruthuvam illaamal engal maanudam vaazha vidu
Nilavukkum poi varave engal thondukku niraku kodu
Ovvoru vidiyalilum nenjai ulagukku valimai kodu

அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா
நிலவுக்கு போய் வரவே எங்கள் தேகத்துக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு

நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள்
எல்லாம் கலைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும்
அகிலம் முழுதும் தருவாயா
பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா
ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா
பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லா பொய் சொல்லாத
புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத
அனல் பூமியை நீ கொண்டு வா

இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா
சமையல் அறை வழிந்த வீடுகள்
தாய்மாருக்கெல்லாம் தருவாயா
பொதி சுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியும் வேண்டும்
பாடத்திட்டம் தருவாயா
ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிழல் ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா
போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா
தமிழ் சாகாமல் மனம் பார்க்கின்ற
அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேக்காமல் கண் துகிலாத
அட உலகம் நீ கொண்டு வா

புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா
போர்க்களம் நுழைந்துவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு
நிலவுக்கும் போய் வரவே எங்கள் தொண்டுக்கு நிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு

http://www.youtube.com/watch?v=3_B0Dg0YDIc

shared via

Sunday, October 20, 2013

ye kuruvi lyrics-mudhal mariyathai tamil song lyrics - ஏ குருவி சிட்டுக்குருவி

ye kuruvi lyrics-mudhal mariyathai tamil song lyrics / ஏ குருவி சிட்டுக்குருவி

Movie Name:Mudhal mariyathai
Song Name:Ye kuruvi
Singer:Malaysia Vasudevan
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu
Cast:Sivaji Ganesan,Radha
Year of release:1985

Lyrics:-

Ye kuruvi chittuk kuruvi

Ye kuruvi chittuk kuruvi

Onj jodi enga adha koottik kittu

Enga vittathula vanthu koodu kattu

Pollaadha veedu kattu ponnaana koodu
Ippo pondaatti illa vanthu en kooda paadu

Ye kuruvi chittuk kuruvi

Ye kuruvi aiya ullathula nalla anbirukku
Aana veettukkulla konjam vambirukku
Pondaattik kaari ennannu paatha
Vanthu un kootta paatha kodak kooli keppa

Ye kuruvi chittuk kuruvi

Ye evadi adhiye evadi
Ye evadi adhu ....

ஏ  குருவி குருவி குருவி

ஏ குருவி சிட்டுக்குருவி

ஒஞ் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு

எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு

பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு
இப்போ பொண்டாட்டி இல்ல வந்து என்கூட பாடு

ஏ குருவி சிட்டுக்குருவி

ஏ குருவி ஐயா உள்ளத்துல நல்ல அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிக்காரி என்னான்னு பாத்தா
வந்து உன் கூட்ட பாத்தா கொடக்கூலி கேப்பா

ஏ குருவி சிட்டுக்குருவி…

ஏ எவடி அடியே எவடி
ஏ எவடி அது…

 

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts