Saturday, September 21, 2013

நெற்றிப் பொட்டில் உள்ள ரகசியம்! SECTRET OF POTTU

நெற்றிப் பொட்டில் உள்ள ரகசியம்!

by Marikumar

பெண்களின் முகத்திற்கு அழகும் வசீகரமும் சேர்ப்பவை பொட்டு. முந்தைய காலத்தில் நெற்றி நிறைய அகலமான குங்குமப் பொட்டு வைப்பது வழக்கம். இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்தை நெற்றிப் பொட்டு என்பர்.

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, நினைவாற்றலுக்கும் சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடம் இது. யோகக் கலை இதனை ஆக்ஞா சக்கரம் என்கிறது. எலக்ட்ரோ மேக்னடிக் என்ற மின்காந்த அலைகளாக மனித உடல் சக்தியை வெளிப்படுத்தும். அதிலும் முன்நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம்.

நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது என்கின்றனர் முன்னோர்கள்.

இன்றைக்கு ஸ்டிக்கர் பொட்டுக்களின் வருகைக்குப் பின்னர் பல வித டிசைன்களில் பொட்டுக்கள் மங்கையரின் முகத்தை அலங்கரிக்கின்றன. நாம் வைக்கும் பொட்டு நம்முகத்திற்கு ஏற்றதாக இருந்தால் அது அழகினை அதிகரித்துக் காட்டும். எனவே முக அமைப்பிற்கு ஏற்ற பொட்டுகளை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள்.

நீளமான பொட்டு

வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியதுபோல் அழகு தரும். இவர்கள் நெற்றி குறுகலாக இருந்தால், அவர்கள் புருவங்களுக்கு மத்தியில் பொட்டு வைக்கவேண்டும்.

இதய வடிவ முகம்

இதய வடிவ முகம் கொண்டவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள். இவர்கள் குங்குமத்தினால் பொட்டு இட்டுக்கொள்வது முகத்தை அழகாக்கும். ஸ்டிக்கர் பொட்டுக்களில் சிறிய அளவில் நீளமான பொட்டுகள் முக வசீகரத்தை அதிகரித்துக் காட்டும்.

ஓவல் வடிவ முகம்

ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.

சதுர முகம் உள்ளவர்கள் நீளமாக பொட்டுகளை வைக்கக்கூடாது. அகலம் அதிகமுள்ள பொட்டுகளை வைத்துக்கொள்ளலாம். உருண்டை மற்றும் முட்டை வடிவிலான பொட்டுகள் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வண்ணத்துப் பூச்சி வடிவ டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.

முக்கோணப் பொட்டுக்கள்

முக்கோண வடிவ முகம் உள்ளவர்களுக்கு அனேகமாக எல்லாவகைப் பொட்டுகளும் பொருந்தும். நெற்றி அகலமாக இருந்தால், நீளமான பொட்டுகளை பயன்படுத்த வேண்டும். முக்கோண வடிவிலான பொட்டுகளும் இவர்களுக்கு நன்றாக இருக்கும். அகலமான நெற்றியாக இருந்தால், புருவத்தில் இருந்து ஒரு சென்டிமீட்டருக்கு மேல் பொட்டுவைக்க வேண்டும்.

முகத்தின் வடிவம் மட்டுமின்றி உடை, சரும நிறம் போன்றவைகளும் பொட்டுடன் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அவைகளுக்கும் பொருத்தம் ஏற்படும் விதத்தில் பொட்டு வைக்கவேண்டும். கோதுமை நிற சரும பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும்.
Share |

Show commentsOpen link

ஆணியே புடுங்க வேணாம்... இஸ்திரியே பண்ண வேணாம்! Tamil intresting topic

ஆணியே புடுங்க வேணாம்... இஸ்திரியே பண்ண வேண
by tnkesaven

New Tamil Jokes - .comToday, 11:50
ஆணியே புடுங்க வேணாம்... இஸ்திரியே பண்ண வேணாம்!

பொதுவாக பலர் அன்றாடம் ஒரு ஆடையை அணிவர். மடிப்பு குலையாதபடி அவை இருக்க வேண்டும். இதற்காக பேண்ட், சட்டைகள் சலவை செய்து, பிறகு இஸ்திரி பெட்டி (அயர்ன் பாக்ஸ்) மூலம் நன்றாக தேய்த்து அணிந்து கொள்வர்.
இதை செய்ய சற்று உழைப்பும், பணச்செலவும் தேவைப்படுகிறது. ஆனால், சலவை செய்வது, அயர்ன் செய்வது போன்ற தொல்லையே இல்லாத ஒரு புதுமையான ஆடையை அமெரிக்க நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
இந்த புதுமையான ஆடையை 100 நாட்கள் வரையில் சலவைக்கு போடாமல் அயர்ன் செய்யாமல் தினமும் அணியலாம்.

துர்நாற்றம், எதுவும் இருக்காது.

இதை உயர்ரக கம்பளியை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

இந்த சட்டை ஒன்றின் விலை சுமார் ரூபாய் 5 ஆயிரம் (98 டாலர்கள்) ஆகும்.
இது இளைஞர்களுக்கு ஒரு புதுமையான வரப்பிரசாதமாக இருக்கும்

courtesy;''siruvar malar

Show commentsOpen link

Friday, September 20, 2013

ஆய கலைகள் 64 aaya kalaigal 64

ஆய கலைகள் 64

by Marikumar
சில டிப்ஸ்Yesterday,

ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . அவ்வாறு கேள்விப்பட்ட 64 கலைகள் எது எது என்று தற்போது தெரிந்து கொள்வோம்.

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)

2. எழுத்தாற்றல் (லிகிதம்)

3. கணிதம்

4. மறைநூல் (வேதம்)

5. தொன்மம் (புராணம்)

6. இலக்கணம் (வியாகரணம்)

7. நயனூல் (நீதி சாத்திரம்)v

8. கணியம் (சோதிட சாத்திரம்)

9. அறநூல் (தரும சாத்திரம்)

10. ஓகநூல் (யோக சாத்திரம்)

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)

16. மறவனப்பு (இதிகாசம்)

17. வனப்பு

18. அணிநூல் (அலங்காரம்)

19. மதுரமொழிவு (மதுரபாடணம்)

20. நாடகம்

21. நடம்

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)

23. யாழ் (வீணை)

24. குழல்

25. மதங்கம் (மிருதங்கம்)

26. தாளம்

27. விற்பயிற்சி (அத்திரவித்தை)

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)

30. யானையேற்றம் (கச பரீட்சை)

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)

35. மல்லம் (மல்ல யுத்தம்)

36. கவர்ச்சி (ஆகருடணம்)

37. ஓட்டுகை (உச்சாடணம்)

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)

39. காமநூல் (மதன சாத்திரம்)

40. மயக்குநூல் (மோகனம்)

41. வசியம் (வசீகரணம்)

42. இதளியம் (ரசவாதம்)

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)

47. கலுழம் (காருடம்)

48. இழப்பறிகை (நட்டம்)

49. மறைத்ததையறிதல் (முஷ்டி)

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)

51. வான்செலவு (ஆகாய கமனம்)

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)

54. மாயச்செய்கை (இந்திரசாலம்)

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
Share |

Show commentsOpen link

Women and Internet - இந்திய பெண்களும் இணையமும்

Women and Internet - பெண்களும் இணையமும்

by Subhasreemurali
New Tamil Jokes - .comToday,

கூகுள் இந்தியா மற்றும் டி.என்.எஸ். ஆஸ்திரேலியா இணைந்து அண்மையில், பெண்களும் இணையமும் என்ற ஆய்வினை மேற் கொண்டது. இதில் இந்திய பெண்களின் வாழ்வு முறை இணையத்தினால் மாற்றப்படுகிறது என அறியப்பட்டுள்ளது. சருமம் மற்றும் தலைமுடி பாதுகாப்பு, அழகு சாதனங்கள் மற்றும் ஆடைகள் வாங்குவது ஆகியவற்றில், இந்திய பெண்கள், இணையம் தரும் முடிவுகளையே ஏற்றுக் கொள்கின்றனர்.

இந்த ஆய்வு, இந்தியாவில், இணையத்தைப் பயன்படுத்தும் ஆயிரம் பெண்களிடையேயும், இணையம் மூலமாக மற்றவர்களிடமும் நடத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள 15 கோடி இணையப் பயனாளர்களில், 6 கோடி பேர் பெண்களாக உள்ளனர். இணையத்தைப் பயன்படுத்தும் பெண்களில் பெரும்பாலானவர்கள், வசதி படைத்தவர்களாகவும், இளம் வயதுடையவர் களாகவும் உள்ளனர்.

பெண்கள் இணையத்தில் தேடும் பொருட்களில் ஆடைகள், அதனுடன் அணியும் துணைப் பொருட்கள் முதல் இடம் பெறுகின்றன. அடுத்ததாக உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள், குழந்தை வளர்ப்பு, கேசப் பாதுகாப்பு மற்றும் சரும பாதுகாப்பு குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. சரும பாதுகாப்பு விஷயத்தில் இணையம் தரும் தகவல்களே, அதிகமான (72%)பெண்களை மாற்றியுள்ளன. குழந்தைகள் சார்ந்த தகவல்கள் 69 சதவீதப் பெண்களை முடிவெடுக்கச் செய்துள்ளன. மொத்தத் தேடல்களில், பெண்கள் 25% தேடல்களைத் தங்கள் மொபைல் போன்களில் மேற்கொண்டதாக இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

பெண்கள் பொருட்களை தேடி வாங்குவதில், இணையம் தங்களை அதிகம் பாதித்திருப்பதாகவும், அவர்களின் முடிவுகளை மாற்றியதா கவும் தெரிய வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இணையத்தால் முடிவெடுத்த பெண்கள், அவற்றை மற்ற பெண்களுக்கும் தெரிவித்து அவர்களையும் பின்பற்ற பரிந்துரை செய்வதுதான்.

Show commentsOpen link

பைத்தியக்காரன் - Nice Short Story of Osho - Read it friends

பைத்தியக்காரன் - Nice Short Story of Osho - Read it friends.
by Parasakthi
New Tamil Jokes - Penmai.comToday,
முன்னொரு காலத்தில் கித்ர் என்றொரு ஞானி இருந்தார்.ஒரு நாள் அனைவரையும் கூப்பிட்டு அவர் சொன்னார், ''நாளையிலிருந்து உலகம் முழுவதும் தண்ணீரின் குணம் மாறிவிடும். அதனைக் குடிப்பவர்கள் அனைவரும் பைத்தியம் ஆகி விடுவார்கள்.இப்போது தண்ணீரை கொஞ்சம் மிச்சப் படுத்தி வைப்பவர்கள் மட்டுமே இந்த கொடுமையிலிருந்து தப்பிக்க முடியும். ''யாரும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.ஒரே ஒருவன் மட்டும் கொஞ்சம் தண்ணீரை மிச்சப்படுத்தி வைத்துக் கொண்டான்.மறுநாள் ஞானி சொன்னது போலவே நடந்தது.அந்த ஒரு ஆளைத் தவிர அனைவரும் பைத்தியம் ஆகி விட்டார்கள்.இவன் ஒருவன் மட்டும் எப்போதும்போல இருந்தான்.அனைவரும் பைத்தியம் ஆகி விட்டதை அவர்கள் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொண்டான்.

அந்தப் பைத்தியக்காரர்களிடமிருந்து தான் தனித்து நிற்பது அவனுக்கு மெல்ல மெல்ல விளங்கலாயிற்று.ஊர் மக்கள் அனைவரும் இவனைப் பைத்தியம் என்று கூற ஆரம்பித்தார்கள். பாவம்!இவன் ஒரு தனி ஆள்அவனால் தான் பைத்தியம் இல்லைஎன்றும் மற்றவர்கள் அனைவரும் பைத்தியம் என்றும் எப்படி நிரூபிக்க முடியும்? பொறுக்க முடியாமல் ஒரு நாள் அவனும் புதிய தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டான். அவனும் இப்போது பைத்தியம் ஆகி விட்டான்.ஊர் மக்கள் இப்போது சொன்னார்கள்,''நம்மிடையே ஒரு பைத்தியக்காரன் இருந்தான். அவனும் இப்போது குணமடைந்து விட்டான்..''

இந்தக் கதையின் கருத்து என்ன?

ஓஷோ சொல்கிறார்:

சமூகம் மக்களின் மனோதத்துவத்தில் தான் வாழ்கிறது. உண்மையைப் பற்றிய கவலை சமூகத்தில் யாருக்கும் கிடையாது. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடின்றி இருப்பதிலேயே அது கவலை கொள்கிறது.சமூகத்துடன் ஒருவன் எவ்வாறு ஒத்துப் போவது என்ற கவலையே அது கொள்கிறது. சமூகம் பொய் என்றால் அவனும் பொய்யாகி விட வேண்டியிருக்கிறது. மனிதன் மிகவும் தனியானவன்.சமூகமோ மிகப் பெரியது. சமூகத்தை விட பெரிய ஏதோ ஒன்றின் ஆதாயம் இவனுக்குக் கிடைக்காதவரை அவன் சமூகத்திற்குக் கட்டுப் பட்டே தீர வேண்டும்.

Show commentsOpen link

Thursday, September 19, 2013

மாதம், 7.75 லட்சம் ரூபாய் (ஆண்டுக்கு 93 லட்சம்) monthly salary 7.75 lacks

மாதம், 7.75 லட்சம் ரூபாய் (ஆண்டுக்கு 93 லட்சம்)

புதுடில்லி: டில்லி தொழில்நுட்ப பல்கலைக் கழக மாணவருக்கு, மாதம், 7.75 லட்சம் ரூபாய் (ஆண்டுக்கு 93
லட்சம்) சம்பளத்தில், கூகுள் நிறுவனம் பணி நியமன உத்தரவை வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், மானசாவை சேர்ந்த மாணவர், ஹிமான்ஷு ஜிண்டால், 20. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர், டில்லி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில், கம்ப்யூட்டர் பொறியியல் துறையில், நான்காம் ஆண்டு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், கூகுள் நிறுவனம், இந்த பல்கலை மாணவர்களுக்கு வேலைக்கான, "கேம்பஸ் இன்டர்வியூ'வை நடத்தியது. இதில், தேர்ச்சி பெற்ற, ஹிமான்ஷு உட்பட, எட்டு மாணவர்களுக்கு, பெங்களூரில், நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் பங்கேற்ற, ஹிமான்ஷுவிடம், "டிசைன் மற்றும் கோடிங்' சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
அதன்பின், ஹிமான்ஷுவுக்கு, மாதம், 7.75 லட்சம் ரூபாய் சம்பளம் நிர்ணயித்து, பணி நியமன
உத்தரவை வழங்கியுள்ளது.
dinamalar

Show commentsOpen link

கீர்த்தனாவின் திருப்புமுனை-gowry mohan tamil short story

திருப்புமுனை-gowry mohan

திருப்புமுனை

வழமைபோல் கீர்த்தனா அலுவலகத்தில் மிகவும் இறுக்கமான மனநிலையில் இருந்தாள்.

"கீர்த்தி! நானும் பார்த்துக்கொணடுதான் இருக்கிறேன் தினமும் நீ குழந்தையை கிணத்துக் கட்டில வைத்துவிட்டு வந்தமாதிரி பரபரப்பா இருக்கிறாய்....
உனக்கென்னம்மா குறை. கண்ணிறைந்த கணவன், அருமையான மாமனார் மாமியார், அழகான குழந்தை..."

"ஏய் பத்மா! உனக்கெங்கே தெரியப்போகிறது என்னுடைய கஷ்டம். எல்லாம் இருக்கு..... ஆனா இல்லை."

"என்னடி, கஷ்டம் என்று நகைச்சுவையாக சொல்கிறாய்."

"எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்று அர்த்தம்....
உதவி செய்கிறேன் என்று என்னுடைய மாமியார் பண்ணும் கூத்து தாங்க முடியல. நல்ல மனதோட தான் செய்யிறாங்க. அது வினையா வந்து முடியுது...

ஒரு நாள், குழந்தை தூங்கிறான் தானே என்று, அவனோட அழுக்கு உடைகளை துவைத்துப் போட்டால் எனக்கு உதவியாக இருக்குமென்று போய் குளியலறையில் சவர்க்கார தண்ணில வழுக்கி விழுந்திட்டாங்க...

இன்னொரு நாள், குழந்தையுடைய துவைத்த உடைகள் காய போடும் மரத் தட்டியை வெளியே வைக்க வேண்டாம், காற்றுக்கு விழுந்தால் திரும்பவும் துணிகளை துவைக்க வேண்டும். அதனால் கூடத்தில் இருந்து காயட்டும் என்று சொல்லி வந்தேன். அனால் அன்று நல்ல வெயில், விரைவா காய்ந்துவிடும் என்று வெளில வைத்து, காற்றுக்கு விழுந்து, எனக்கு இருமடங்கு வேலை...

மற்றொரு நாள், குழந்தை தூங்குகிறான், இரவு சமையலுக்கு மரக்கறிகளை வெட்டி வைத்தால் எனக்கு உதவியாயிருக்குமென்று அவசர அவசரமாக வெட்டியதில் விரலை பெரிதாக வெட்டிவிட்டாங்க...

இப்பதான் குழந்தைக்கு எட்டு மாதம். நான்கு வயது முடியும்வரை எல்லோரையும் முருகன் தான் காப்பாற்ற வேண்டும்...."

"அப்புறம் வேலையை விடப்போகிறாயா என்ன?"

"இல்லடி, அப்புறம் அவனை சிறுவர் பாடசாலையில் சேர்த்துவிடலாம். கொஞ்சம் நிம்மதியாகவும் இருக்கலாம்...
சரி சரி.... என் புலம்பல கேட்டது போதும். வேலையைப் பார்."

கீர்த்தனாவின் கணவன் சரவணன் அரசாங்க நிறுவனமொன்றில் பொறுப்பான பதவியில் இருக்கிறான். பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி இரண்டு வருடங்கள். இவர்களுக்கு எட்டு மாத குழந்தை பிரணவன்.

திருமணத்தின் பின் வேலைக்குப் போக கீர்த்தனாவுக்கு துளியும் விருப்பமில்லை. வீட்டிலே இருந்து பொறுப்பாக எல்லோரையும் கவனித்து குடும்பம் நடத்தவே அவளுக்கு விருப்பம். கணவனின் வருமானம் நான்கு பேருக்கும் ஓரளவு வசதியாக வாழ போதும் என்றாலும் குழந்தை வந்ததும் செலவுகள் கூடும். மின், நீர் கட்டணங்களுக்கே பாதி பணம் செலவழிகிறது. எனவே வேலையை விட முடியவில்லை.

மாமனார் மாமியார் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்கள். பாசம் மிக்கவர்கள். ஆனால் மாமியாரின் உதவிகள் சிலசமயங்களில் வினையாக வந்து முடிகிறதே...

வேலைக்குப் போகுமுன் சமையல், உடைகளை தோய்த்தல், குழந்தையின் தேவைகளுக்கும் சகல ஆயத்தங்களையும் செய்து வைத்துவிடுவாள்.

------------

தினமும் சரவணன் தான் பிந்தி வருவான். அன்றும் கீர்த்தனா வழமைபோல் அலுவலகத்திலிருந்து வந்து எல்லா வேலைகளையும் முடித்திருந்தபோது,

"அம்மா.............
அப்பா..............
குட்டிக் கண்ணா..............
கீத்துச் செல்லம்........."

வழமையாக பிரணவ் குட்டியை அழைத்துக்கொண்டு வரும் சரவணன், அன்று வீட்டிலுள்ள எல்லோரையும் ஏலம் விட்டுக்கொண்டு வர, பரபரப்பாக எல்லோரும் கூடத்தில் கூடினர்.

"பிரணவ் கண்ணா! நீ எங்களுக்குப் பிறந்து சந்தோஷத்தை மட்டுமல்ல அதிஷ்டத்தையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டாய் குட்டி...

குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நான் கற்பனை பண்ண முடியாத பதவி உயர்வு உன்னோட அப்பாக்கு கிடைத்திருக்கிறது கண்ணா....."

"என்னங்க சொல்லுகிறீங்க...."

"ஆமா கீத்து...... நிறுவனத்தில் ஒரு இயக்குநர் பதவி விலகுகிறார். அவருக்கு வயதிருக்கிறது. ஆனால் அவருடைய ஒரே மகளுக்கு வெளிநாட்டில திருமணம் நிச்சயமாகி எல்லோருமே அங்கு போக வேண்டிய கட்டாயம். அந்தப் பதவிக்கு அடுத்து வரவேண்டியவர் சங்கர் தான். அவரும் ஒரு வருட சம்பளமில்லா விடுமுறையில இருக்கிறார். உடனடியாக வெற்றிடம் நிரப்பவேண்டிய காரணத்தால் அடுத்த தகுதியானவன் எனக்கு தந்திருக்கிறார்கள். அடுத்த வருடம் ஒருவர் ஓய்வில் செல்வதால், சங்கர் வந்து அந்த இடத்தை நிரப்பலாம். ஒருவருக்குமே மனக் கஷ்டம் இல்லை.

அதோடு வீடும் வாகன வசதியும் தருகிறாங்க. எல்லாம் நம்ம பிரணவ் செல்லத்தோட அதிஷ்டம் தான்."

கீர்த்தனாவால் நம்பவே முடியவில்லை.
அப்போ நான் வேலையை விட்டுவிடலாம் போல இருக்கே...
சரவணன் என்ன சொல்வாரோ தெரியவில்லையே...
வருமானம் பெருக பெருக பணத்தாசை கூடும் என்று சொல்வார்கள்.
வேலைக்கு ஆட்களை வைக்கலாம் என்று சொல்வாரோ...
அவர்களை நம்ப முடியாதே...
முருகா! அதிஷ்டத்தை தந்த நீதான் நல்லவழியையும் காட்ட வேண்டும்.

கீர்த்தனாவின் மனம் புலம்பிக்கொண்டிருந்தது. கணவனின் பதவி உயர்வின் சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்க முடியவில்லை.

"கீர்த்து...... நான் ஒன்று சொல்வேன். அது என்னுடைய விருப்பமே அன்றி கட்டளை அல்ல. நீ தான் முடிவு எடுக்க வேண்டும். என்ன முடிவு நீ எடுத்தாலும் எனக்கு சம்மதமே."

"என்னங்க இது..... உங்களுடைய விருப்பத்தை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். சொல்லுங்க...உங்களுடைய விருப்பம் தான் என்னுடையதும்."

"இல்ல கீர்த்தனா, நீ என்ன நினைப்பாயோ தெரியாது. நீ படித்த படிப்பு வீண் போகுதென்று நினைத்தால் நான் சொல்வதை மறந்துவிடு..."

"சரி.... நீங்க முதல்ல சொல்லுங்க..."

"நீ உன்னுடைய வேலையை இராஜினாமா செய்தால் நல்லதென்று நினைக்கிறேன்..."

அடுத்த கணம் கீர்த்தனா கணவனை கட்டி அணைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்...
மனம் முருகனுக்கு நன்றி கூறிக்கொண்டிருந்தது.

******

ஏதோ ஓர் ஆர்வத்தினால் எழுதிவிட்டேன். இது எனது முதல் கதை. என்னையும் எழுதத் தூண்டிய பெண்மைக்கு நன்றிகள் பல.

Show commentsOpen link

உங்களுக்கு என்ன சார் பிரச்சன ? Mobile customer care

படித்ததில் பிடித்தது :
by Marikumar

"சார்,, எனக்கு ஒன்னும் இல்ல சார் நான் நல்லா தான் இருக்கேன்,, இப்ப தான் சிக்கன் பிரியாணி சாப்ட்டு நூறு ரூவாய்க்கு டாப் அப் போட்டேன்,, அதுல அம்பது ரூவாய யாரோ கிளப்பிட்டாங்க,, அது யாருன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க,,"

"உங்க நம்பர செக் பண்ணி பார்த்துட்டேன்,, நீங்க மிஸ்ட் கால் அலர்ட் சப்ஸ்க்ரைப் பண்ணிருக்கீங்க,, நீங்க மொபைல சுவிட்ச் ஆப் பண்ணிருக்கும் போது/ நாட் ரீசபில்ல இருக்கும் போது யாரவது கால் பண்ணா உங்களுக்கு மெசேஜ் வரும், அதனால தான் உங்க பேலன்ஸ்ல அம்பது ரூவா டெடியூஸ் பண்ணிருக்கோம்,,"

"நானே ரெண்டு வாரமா மொபைலுக்கு ஒரு கால் கூட வராம சும்மா தான் வச்சிட்டு இருக்கேன்,, டைம் பாக்குறதுக்கு தான் 'போன' யூஸ் பண்ணிட்டு இருக்கேன்,, நான் ஏன் சார் இதெல்லாம் பண்ண போறேன் ??"

"இல்ல சார் நீங்க தான் சப்ஸ்க்ரைப் பண்ணிருக்கீங்க,,"

"சரி சார் நான் தான் 'சப்ஸ்க்ரைப்' பண்ணேன்னு வச்சுக்கோங்க,, ஆனா அந்த மாதிரி எந்த மெசேஜும் எனக்கு வரலயே,,"

"அது உங்களுக்கு யாரவாது கால் பண்ணா தான் சார் வரும்,,"

"அதான் சார் நானும் சொல்றேன்,, எனக்கு யாருமே கால் பண்றதே இல்ல,, நான் எதுக்கு சார் இதெல்லாம்,,,"

"நீங்க எதுனாலும் எங்க உயர் அதிகாரிட்ட பேசுங்க,,,"

(அவர் கடுப்பாகி மேலதிகாரிட்ட போன் லைன் குடுத்தாரு)

"சொல்லுங்க சார்,, வாட் யூ வாண்ட் அஸ் டு டூ ??"

"எவ்வளவு நேக்கா ஆட்டய போடுறீங்க,, எங்க சார் கத்துகிட்டீங்க இந்த திறமைய எங்களுக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க,,"

"இல்ல சார் எல்லாம் ரூல்ஸ் படி தான் நடக்குது,, உங்களுக்கு வேண்டாம்னா நீங்க அன் சப்ஸ்க்ரைப் பண்ணிக்கலாம்,,"

"முதல்ல சப்ஸ்க்ரைப் பண்றது எப்படின்னு சொல்லுங்க சார் ,,"

"அது நீங்க ஏற்க்கனவே பண்ணிடீங்க சார்,, உங்களால் இப்ப அன் சப்ஸ்க்ரைப் தான் பண்ண முடியும்,,"

"அன் சப்ஸ்க்ரைப் பண்ணா அம்பது ரூவா திரும்ப வந்துடுமா சார்,,??"

"அது வராது சார்,,"

"அம்பது ரூவா ஆட்டய போட்டா தப்பா சார் ??"

"சாரி சார்,,, என்ன சொல்றீங்க ??"

"அஞ்சு கோடி பேர் கிட்ட ஐநூறு தடவ அம்பது ரூவா ஆட்டய போட்டா தப்பா சார் ??"

"நீங்க ஏர்டெல் பிரச்சனை சம்பந்தமா மட்டும் தான் இங்க பேசனும் சார்.."

"அத பத்திதான் சார் பேசிட்டு இருக்கேன் ,,,நீங்க என்கிட்டே அம்பது ரூவா வேணும்னு கேட்டிருந்தா நான் ஐநூறு ரூவா உங்களுக்கு குடுத்திருப்பேன் சார்,,"

"சார் அக்சுவலி,, நீங்க பேசுறது எல்லாம் இப்ப ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு,,"

"ரெம்ப நன்றி சார்,, அப்படியே அத டி.வில ரோடியோல ஒலி/ ஒளி பரப்புங்க,, எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும்,,"

(டொயிங்.... டொயிங்.... டொயிங்,,, லைன் கட்டாகிடுச்சு )
Share |

Show commentsOpen link

Wednesday, September 18, 2013

உடல் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்! Reason for Body pain

உடல் வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் வலி. பொதுவாக இந்த உடல் வலியானது ஒருசில கடுமையான எடை கொண்ட பொருட்களை நீண்ட நேரம் தூக்குவதாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை மேற்கொள்வதாலோ சந்திக்க நேரிடும். ஆனால், சில நேரங்களில் இந்த உடல் வலி சில நோய்களுக்கான அறிகுறியாகவும் உள்ளது.

உடல் வலி எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடியது. அனைத்து வயதினரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இத்தகைய உடல் வலியில் பல வகைகள் உள்ளன. அதில் தலை வலி, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தசை வலி போன்றவை பொதுவானவை. மற்றொரு வித்தியாசமான வலி தான் நரம்புகளில் ஏற்படக்கூடிய வலி. இந்த வலியானது நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் பலவீனமடையும் போது ஏற்படும். இதற்கு நரம்புநோய் வலி (Neuropathic Pain) என்று பெயர்.

இப்போது அத்தகைய உடல் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்...

உடல் வலி ஏற்படுவதற்கான காரணங்களுள் ஒன்று தான் காய்ச்சல். அதிலும் காய்ச்சல் வந்தால், உடலில் எந்த பகுதி வலிக்கிறது என்று சொல்லவே முடியாது. அந்த அளவில் உடல் முழுவதும் வலி ஏற்படும். ஏனெனில் உடலில் கிருமிகளை எதிர்த்துப் போராடக்கூடிய கெமிக்கல் குறைவாக இருப்பதால், அந்த கிருமிகளை உடலை தாக்குவதால் வலி ஏற்படுகிறது.

கொசுக்களால் ஏற்படும் மலேரியா என்னும் தொற்றுநோயின் காரணமாகவும் உடல் வலி ஏற்படும். அதிலும் மலேரியா தான் உள்ளது என்று எளிதில் அறியும் வகையில், உடலில் கடுமையான வலியை உணரக்கூடும்.

நீரிழிவு நோய் இருந்தால், அடிவயிறு மற்றும் கால்களில் கடுமையான வலி ஏற்படும். இவ்வாறு நீரிழிவு நோயால் ஏற்படும் வலியை கட்டுப்படுத்த, சரியான மருந்துகள் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

உடல் வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் முதன்மையானவை ஆர்த்ரிடிஸ். எப்படியெனில் ஆர்த்ரிடிஸ் வந்தால், குறுத்தெலும்புகளில் தோய்வு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி, கடுமையான வலியை உண்டாக்கும். மேலும் இந்த ஆர்த்ரிடிஸ் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அது சிறியவராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி.

ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia): இந்த நாள்பட்ட வலியின் முக்கிய அறிகுறி தான் உடல் வலியுடன் கூடிய, சோர்வு மற்றும் தூக்கமின்மை. இது பெரும்பாலும் பெண்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

நாள்பட்ட சோர்வு நோய்த்தாக்கம்: இந்த நோய்த்தாக்கத்தின் அறிகுறிகளில் முக்கியமானது தான் கடுமையான உடல் வலி. இந்த நோய் வந்தால், உடல் வலியுடன், அதிகப்படியான சோர்பு மற்றும் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும்.

நாள்பட்ட உடல் வலியை சந்தித்தால், அது லைம் நோய்க்கான அறிகுறியாகும். குறிப்பாக உடலில் ஆங்காங்கு சிவந்து காணப்பட்டு, அத்துடன் உடல் வலி இருந்தால், அது லைம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.

தற்போது மன அழுத்தத்தினால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவருக்கு கடுமையான தலை மற்றும் தசை வலியுடன், சோர்வு, தூக்கமின்மை, அத்துடன் சில நேரங்களில் மார்பு வலியும் ஏற்படும்.

காசநோயானது ஒரு தொற்றுநோய். இந்த நோய் வந்தால் கல்லீரலானது அளவுக்கு அதிகமாக பாதிக்கப்படும். மேலும் ஆய்வு ஒன்றிலும், கடுமையான இருமலுடன், நாள்பட்ட உடல் வலியும் இருந்தால், அது காசநோய்க்கான முக்கியமான அறிகுறிகளுள் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

காரணமின்றி அளவுக்கு அதிகமாக உடல் வலி இருந்தால், அது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். ஏனெனில் புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதால், அவை கடுமையான வலியை உண்டாக்குகின்றன.

லூபஸ் (Lupus): என்ன பெயர் புதுசா இருக்கா? ஆம், இது ஒரு கொடிய நோய். ஏனெனில் பொதுவாக உடலில் கிருமிகளை எதிர்த்துப் போராடும் செல்கள், உடலில் உள்ள நல்ல செல்களை அழிக்க ஆரம்பிக்கும். இவ்வாறு அழிக்க ஆரம்பிக்கும் போது, உடலில் பல பிரச்சனைகளுடன், அளவுக்கு அதிகமான மற்றும் கடுமையான உடல் வலியை சந்திக்க நேரிடும்.

பொதுவாக உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். ஆனால் இரைப்பை குடல் அழற்சி இருந்தால், அத்துடன் உடல் வலியும் ஏற்படும்.

நாள்பட்ட மூட்டுவலிகள் என்பது மூட்டுகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, அதனை அசைக்க முடியாத அளவில் வலியை உண்டாக்குவதாகும். இந்த நோய் வந்தால், உடலில் உள்ள மூட்டுகளில் தாங்க முடியாத அளவில் வலி ஏற்படும்.

டெங்கு வைரஸால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்படும் ஒரு வகையான காய்ச்சல் தான் டெங்கு காய்ச்சல். இந்த காய்ச்சல் இருந்தால் மூட்டு வலி, தசை வலி மற்றும் தலை வலி ஏற்படும்.

உடலில் பொட்டாசியம் குறைபாடு இருந்தால், அடிக்கடி உடல் வலி ஏற்படும்.

டாக்சோபிளாஸ்மோஸிஸ் (Toxoplasmosis) ஒரு ஒட்டுண்ணி நோய். இந்த நோய் பெரும்பாலும் பூனைகளின் மூலம் தான் பரவும். இந்த நோய் இருந்தாலும், நாள்பட்ட உடல் வலி உண்டாகும்.

உடற்பயிற்சியை அளவுக்கு அதிகமாக மேற்கொண்டால், தசை மற்றும் மூட்டு வலி ஏற்படும். அதிலும் உடற்பயிற்சியில் ஈடுபடும் முன், ஸ்ட்ரெட்சிங் உடற்பயிற்சியை செய்யாவிட்டாலும், உடல் வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக நரம்புகள் அல்லது தசைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டால், உடல் வலி ஏற்படும்.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொடிய நோயான எய்ட்ஸ் இருந்தாலும், கடுமையான உடல் வலியை சந்திக்கக்கூடும்.
Thatstamil
Share |

Show commentsOpen link

Why crow is black in colour? - காகம் எப்படிக் கருப்பானது?

Why crow is black in colour? - காகம் எப்படிக் கருப்பானது???

முன் காலத்தில் உலகமெங்கும் பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அப்போது ஒரு நாள் உலகமெங்கும் திடீரெனத் தாளமுடியாத வெக்கை உண்டானது. அதைத் தொடர்ந்து நெருப்புச் சுவாலைகள் எழுந்தன. இந்தச் சூடு பரவியதைக் கண்டு பறவைகள் கத்தத் தொடங்கின.

கடவுள் உடனே காகத்தினை வரச் சொன்னார். அச்சமற்ற போர் வீரர்களாக அப்போது காகங்கள் இருந்தன. அதுவும் வெண்ணிறக் காக்கைகளாகவே அவை இருந்தன.

'பாதாள உலகில் இரும்பு உருக்குகிறார்கள். அதனாலேயே தீச்சுவாலைகள் எழுகின்றன. அதனை நிறுத்தி விடச் சொல்' என்றார். காகம் நீண்ட நாள் பயணம் செய்து பாதாள லோகத்தின் இரும்புக்குழாய் உருக்குமிடத்துக்குச் சென்று, கடவுள் கட்டளையைச் சொன்னது. அங்கிருந்த அசுரர்கள் இதைக் கேட்டுச் சிரித்துக் கேலி செய்ததுடன், அதன் மீது இரும்புக் கரித்தூளையும் எடுத்து வீசினார்கள்.

அந்த வெக்கை தாளாமல் காகத்தின் உடம்பெங்கும் கரித்துகள் ஒட்டிக் கொண்டது. அதனாலேயே காகம் தன் அழகிய வெண்ணிறத்தை இழந்து கருமை நிறமாக மாறிப்போனது.

கடவுள், காகம் நிறம் மாறித் திரும்பி வருவதைப் பார்த்துக் கோபம் கொண்டு, இரும்பு உலையைப் பாதாளத்தின் வெகு ஆழத்தில் கொண்டு போய்ப் புதைத்துவிட்டார். அச்சமற்ற காகம் கருப்பாக இப்போதும் தைரியமாகக் கத்தியலைகிறது.

- thanks to Mr. Siva -

Attached Images
index.jpg (13.4 KB)
Show commentsOpen link

Tuesday, September 17, 2013

காந்தி கணக்கு என்றால் என்ன?

காந்தி கணக்கு என்றால் என்ன?

by tnkesaven
New Tamil - Penmai.comYesterday,

காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட 'நாமம்' என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.
மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் "நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்" என்றார்களாம் அந்த வியாபாரிகள்.
அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்

nandri;''the hindu-tamil''

Show commentsOpen link

ஆரோக்கியமான வாழ்க்கை healthy life

ஆரோக்கியமான வாழ்க்கை
by ramyaraja

New - Penmai.com

பெற்றோர்கள் தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும்.

அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது.

ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.

எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின் பற்றுவார்கள்

இருமுறை பல் துலக்குதல்..

நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப் படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள்.

அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைச் சொன்னால், அவர்களே தினமும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்களை தேடி வருவார்கள்.

அடித்து எழுப்ப வேண்டாம்…

நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள்.

உண்மையில் அவ்வாறு எழுப்புவது நல்ல பழக்கமல்ல. சொல்லப் போனால் அது அவர்களது உடலுக்கு கெட்டதைத்தான் விளைவிக்கும். எப்படியெனில், சிறு குழந்தைக ளுக்கு 8-9 மணி நேரத்தூக்கம் மிகவும் இன் றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம் . அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்கவிடக்கூடாது . இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகி விடும்.

சாப்பிடும் பழக்கம்…

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்ப டி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.

சுத்தம் செய்தல்…

குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

உதாரணமாக, பால் குடிக்கும்போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண் டும்.

மரியாதை…

குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக்கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது, 'நன்றி' மற்றும் ' தயவு செய்து' போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

பகிர்ந்து கொள்ளுதல்…

பகிர்ந்து கொள்வது என்பது ஒருவிதமான சந்தோஷம். ஆனால் தற்போது ள்ள குழந்தைகள் இதனை செய்வதில்லை. மேலும் தற்போதைய பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்களுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொடக்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பொறுப்பு…

சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் கொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்க ளை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும்.

இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.

ஆரோக்கிய உணவுகள்…

தற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங்கிக் கொடுத்து பழக்கி விட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற் காலத்தில் ஆரோக்கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள்.

ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.

அளவான டிவி, அதிகமான விளை யாட்டு…

குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக் கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக் கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம்.

குழந்தைகள் பள்ளியைவிட்டு வந்ததும் அவர்களுக்கு சாப்பிட சுண்டல், போன்றவைகள் கொடுங்கள். பின்பு அவர்களை விளையாட அனுப்பி வையுங்கள். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.

நல்ல பழக்கம்..

பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழு து கண்டித்து, அதனை குப்பைத்தொட்டியி ல் போடவேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின்மீது அக்கறை கொண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டு வார்கள்.

உதவி…

சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், நீங்க ள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத்து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.

சரியான படுக்கை நேரம்

குழந்தைகளுக்கு தினமும் இரவில் 9 மணிக்குள் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். காலை 6 மணிக்குள் எழுந்து கொள்ள அவர்களை பழக்கி விடுங்கள். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்கல் .

Show commentsOpen link

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?! Your mobile imei number

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!

by Marikumar
ஆண் பெண் செக்ஸ்: சில டிப்ஸ்Today,

நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.

இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.

இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்,தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.
Share |

Show commentsOpen link

Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

by Subhasreemurali
New Tamil Jokes - Penmai.comToday,

உடல் உறுப்பு தானம்என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டுபரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்துகாப்பாற்றுவதாகும்.

உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள்:
ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.

இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள்:
இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).

உடலிலுள்ள உறுப்புக்களை பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்:
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றி , பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்

Show commentsOpen link

அடையாறு ஆலமரம் adayaru aalamaram

அடையாறு ஆலமரம் 450வயதை

by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday, 11:28
அடையாறு ஆலமரம் 450 வயதை தொட்டது..!

சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்திற்கு அருகே உள்ள 'அடையாறு ஆலமரம்' இந்தியாவிலேயே மிக பழமையான ஆலமரம் என்ற பெருமையோடு, தற்போது தனது 450வது வயதையும் தொட்டு மேலும் பெருமை சேர்த்துள்ளது.


aval vikatan/fb

Show commentsOpen link

Monday, September 16, 2013

என் ஆசை மச்சான் en aasai matchan

என் ஆசை மச்சான் .

ஈச்சமர சோலைக்குள்ள 
இதயம் வாடுற என் ஆசை மச்சான் !

ஆத்துக்காரி இங்கிருக்க 
ஒத்தையில அங்க வாடுரதென்ன ?

நேத்து வச்ச மீன்குழம்பும் 
நெய்மணக்கும் முருங்களையும் 
நேரத்துக்கு சாப்பிட்டிங்க 
உங்க தாரத்துக்கும் ஊட்டினீங்க !

ஆத்தங்கரை காத்து வாங்கி 
ஆறு ஏழு தம்மடிச்சு 
நேரத்தோட தூங்க்கினீங்க 
ராகம் சொல்லி பாடினீங்க !

நாடுவிட்டு நாடு போயி 
காஞ்சு போன ரொட்டியில 
வெண்ணைபூசி தின்னுரீங்க 
நெஞ்சு வெம்பி வேதும்புரீங்க !

இராப் பகலா உழைக்கிறீங்க 
பின்பு 
தூக்கம் கெட்டு அலையிறீங்க !

சுட்டெரிக்கும் சுடும் வெயிலில் 
சுக்கு வத்தல் ஆனவரே ...

குளிர் பனிக் காலத்துல 
போரவைக்குள்ளாகிபோரவரே ...

மீசைவச்ச என் பாச மச்சான் 
நாட்டுக்கு நீங்க வாரதெப்போ ?

நாலுபுள்ள நாம பெத்து 
நாட்டுக்கு நன்மை செய்வதெப்போ ?

பாலைவன பூமியில நீங்க 
பட்ட பாடு போதும் மச்சான் !

நாட்டுக்கு வார வேலைகள 
சீக்கிரமா பாரு மச்சான் !
Show commentsOpen link

தன் குரலால் உலகை ஈர்த்த எம்.எஸ். சுப்புலெட்சுமியின் பிறந்த நாள் இன்று! M.S. subbu laxshmi

குரலால் உலகை ஈர்த்த எம்.எஸ். சுப்புலெட்சு

by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,

தன் குரலால் உலகை ஈர்த்த எம்.எஸ். சுப்புலெட்சுமியின் பிறந்த நாள் இன்று!

செப்டம்பர் 16 1916 அன்று பிறந்த இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடி மக்களின் அன்பை பெற்றவர்.

பல நாடுகளுக்கும் பண்பாட்டு தூதராக சென்று நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
ஐ.நா அவையிலும் இவரது நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

இவருக்கு பத்மபூஷன்,
சங்கீத கலாநிதி, இசைப்பேரறிஞர், மக்சேசே பரிசு
பத்ம விபூசண், காளிதாச சன்மான்
நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது என அரசும் பல்வேறு அமைப்புகளும் தந்து கெளரவப்படுத்தி இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரமாய் 1988 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அளித்தது இந்திய அரசு.

இவரைப் பற்றிய மிக முக்கிய செய்தி

இவர் நடித்து வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது.

அதே போல கேதாரி நாத்திலிருந்து கன்னியாகுமரி வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது.

1944 இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார்.

மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது.

இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.

இத்தகு சிறப்பு வாய்ந்த எம்.எஸ். சுப்புலெட்சுமியின் பிறந்த நாள் இன்று!






chuttivikatan/fb

Show commentsOpen link

Sunday, September 15, 2013

தமிழின் சிறப்பு tamilin sirappu

தமிழின் சிறப்பு

தமிழ்குடும்பம்.காம், இது உங்கள் குடும்பம்Today,

---

பப் பறித்தல், பூக் கிள்ளுதல், பூக் கொய்தல்

என்ற பல சொற்கள் பழக்கத்தில் இருப்பினும்,
ஒவ்வொன்றும் ஒரு தனிப் பொருளைப் பெற்றுள்ளது.
-
ரோஜா முதலிய செடிகளில் பூக்கும் பூவை எடுப்பதைப்
பூப்பறித்தல் என்று கூறுவர்.
-
தரையில் படர்ந்திருக்கும் கொடிகளில் உள்ள பூவை
எடுப்பதனைப் பூக் கிள்ளுதல் என்று கூறுவர்.
-
மரம், பந்தல் ஆகியவற்றில் உயர்ந்து படர்ந்திருக்கும்
கொடிகளில் உள்ள பூவை எடுப்பதைப் பூக் கொய்தல்
என்று கூறுவர்.

சொன்னவர்; பேரா.அ.ச.ஞானசம்பந்தன்
Show commentsOpen link

செப்.,16"சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்' ozone day

செப்.,16"சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்'

by tnkesaven
New Tamil Jokes - Penmai.comToday,

சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு மண்டலத்தில்' தான் ஓசோன் உள்ளது.

1840ல் ஜெர்மன் அறிஞர் பிரடரிக் ஸ்கான் பெயின், ஓசோனைக் கண்டறிந்தார். ஓசோனின் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம்.

பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதை அறிஞர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.,16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரியல் ஒப்பந்தம்' எனும் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, செப்.,16ல் "சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

என்ன காரணம் :ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு ,நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் தான் முக்கியக் காரணம். குறிப்பாக, குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி.,) எனும் குளிரூட்டிப் பொருளே ஓசோனைச் சிதைத்து, அதன் அளவைக் குறைப்பதில் முதல் இடத்தில் உள்ளது. ஏ.சி., "நெயில் பாலீஷ்', "லிப்ஸ்டிக்', தீயணைப்புக் கருவி, "பாடி ஸ்பிரே' போன்றவற்றில் இக்கார்பன், குளிரூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சி.எப்.சி., ஓசோன் பகுதியை அடைந்ததும், புற ஊதாக் கதிர்களால் தாக்கப்பட்டு, குளோரினைத் தோற்றுவிக்கிறது. இந்தக் குளோரினே, ஓசோன் மூலக்கூறுகளை அழிக்கிறது. ஒரு சி.எப்.சி., மூலக்கூறு, ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியது. அதனால் இதை "ஓசோன் கொல்லி' என்கின்றனர்.

ஓசோன் பாதிப்பால்...ஓசோன் அளவு குறைந்தால் பூமியின் வெப்பம் உயரும்.

துருவப் பகுதிகளில் பனி உருகி, கடலின் நீர் மட்டம் உயரும்.

தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும்.

ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

இக்கதிர்கள், கடல் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்டான் எனும் மிதவை உயிரினங்களை எளிதில் கொல்லும். இவை அழிவதால், மற்ற கடல் உயிரிகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகும்.

courtesy;''dinamalar

Show commentsOpen link

உயில் எழுதுவது எப்படி? Uyil azhuthuvathu eppadi

உயில் எழுதுவது எப்படி?

by தமிழ் உலகம்
தமிழ் உலகம்Yesterday, 23:14

ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதே உறவுகளைச்
சிதறவிடாமல்பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச்
சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. 

உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது! 

இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்! 

உயில் --- கட்டாயம் என்ன ? 

உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது. 

''தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்'' என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா. 

உயில் - எப்படி எழுதுவது? 

''உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை. 

உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும். 

உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்'' 

உதாரணமாக 

எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்' என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம். 

''சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்'' என்றும் சொன்னார். 
உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ''உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!'' என்றார். 

உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார். 

• நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும். 
• உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. 

உயில்கள் பலவிதம்!

குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும். 

உயில் எப்போது செல்லாமல் போகும்? 

குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை. 

சில டெக்னிக்கலான வார்த்தைகள்! 

Will உயில் (விருப்ப ஆவணம்) 
Testator உயில் எழுதியவர் 
Executor உயில் அமல்படுத்துநர் 
Codicil இணைப்புத் தாள்கள் 
Attested சரிபார்க்கப்பட்டது. 
Probate 
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல். 
Beneficiary, Legatee வாரிசு 
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர் 
Succession Certificate வாரிசு சான்றிதழ் 
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம் 
Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம் 
Guardian முஸ்லிம் தனிநபர் சட்டம் 
Witness சாட்சி 

'ஆன் லைன்' உயில் 

உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை. 

ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள். 

உயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்! 

ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள். 

ஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.
www.tamilinternational.co.cc

Show commentsOpen link

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு thevathaigal vaazhum veedu

தேவதைகள் வாழும் வீடு

அன்பு முத்தம்.


ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்.

அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம் கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும் இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.

யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் டப்பாவை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.

அந்த குழந்தை அழுது கொண்டே சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள குடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.

அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மண்ணிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல் உன்னை திட்டிட்டேன் என்றார்.

அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

via Ilayaraja Dentist

Show commentsOpen link

ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு mother advice

ஒரு தாயின் அறிவுரை திருமணமாகப் போகும் தன

by sudhavaidhi
New Tamil Jokes - Penmai.comToday,

ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!

பெஸ்ட் அம்மா பெஸ்ட்!

இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!

இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.

தாய்க்குப் பின் தாரம்!

நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?

காபியை சர், புர் என்று உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!

அம்மாவின் கட்டளைகள் ஆறு!

உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:

1. அம்மா புராணம் பாடாதே!

2. அம்மாவோடு ஒப்பிடாதே!

3. அம்மாக் கோண்டு என்ற பட்டம் பயன் தராது!

4. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!

5. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!

உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்!

பி.கு.

மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி... நீடூழிவாழ வாழ்த்துக்கள்.

Show commentsOpen link

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts