Thursday, October 31, 2013

தீபத்திருநாள் Happy Deepavali

தீபத்திருநாள்

நாளாம்  நாளாம் திருநாளாம் 
தீபாவளி  இன்று திருநாளாம் 

தீப ஒளி இங்கு  ஏக இல்லத்தில் 
பிரகாசிக்கும்  நன் நாளாம் 

நாளாம் நாளாம்  திருநாளாம் !

வெடிகளின்  முழக்கம்  ஒரு புறம் 
விடியும்  வரை  ஒலித்திடும் 

புத்தாடை உடுத்தி  மகிழ்ந்திடும் 
பலகாரம்  சுவைகள்  தந்திடும் 

இது ஒருவரல்லவே  இருவரல்லவே 
உலகே  போற்றி  கொண்டாடிடும் 

நாளாம் நாளாம்  திருநாளாம் !

நரகாசுரன்  இந்த  அரக்கனை 
துவம்சம் செய்த இந்த தினத்தினை 

பார்  முழுதும்  போற்றி  கொண்டாடும் 
பாங்கான  இந்த தீப நாள் 

இதில் ஒருவரல்லவே  இருவரல்லவே 
உலகே  போரடி கொண்டாடிடும் 

நாளாம் நாளாம்  திருநாளாம் 
தீபாவளி இன்று  திருநாளாம் 

அணைத்து  அன்பு  உள்ளங்களுக்கும் 
இனிய  தீபாவளி  நல் வாழ்த்துக்கள் !

shared via

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள் success points 20

வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்

எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ, சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.

 

* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும், திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.

***********************************

shared via

எருமை மாடுமாதிரி tamil facebook comedy tamil facebook jokes

அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்த இளைஞன்.....

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக்கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி

நோய் வாய்ப்பட்டுக்கொண்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து,
மருந்து, இஞ்செக்‌ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி

ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு,

ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே(மிருக டாக்டர்)போய்உடம்பைக் காட்டுங்க!

அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள்.

என்னது
மிருக டாக்டர்கிட்டேயா?

உனக்கென்ன மூளைகெட்டுப் போச்சா?'ன்னு சீறினான் கணவன்.
'எனக்கொண்ணும் கெட்டுப் போகல!

உங்களுக்குத்தான் எல்லாமேகெட்டுப் போய் கிடக்கு!

காலாங் காலத்தாலே கோழி மாதிரிவிடியறதுக்கு
முன்னமேயே

எழுந்திருக்கீங்க!

அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,

குரங்கு மாதிரி' லபக் லபக்'னு ரெண்டு வாய்தின்னுட்டு,

பந்தயக் குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப்போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!

உங்களுக்கு கீழேவேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!

அப்புறம் ஆபிஸ்விட்டவுடனே,

ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு வீட்டுக்குவர்றீங்க!

வந்ததும்வராததுமா,நாள்பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே

நாய் மாதிரி என் மேலே சீறி விழறீங்க!

அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை 'சரக் சரக்'னு முழுங்கிட்டு,

எருமை மாடுமாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சாஅதேமாதிரி

கோழி கதைதான்!இப்படி இருக்கிறவங்களை

மனுஷ டாக்டர் எப்படிங்க குணப்படுத்த முடியும்?

அதனாலதான் சொல்றேன், நாளைக்கே

ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!

"என்று ஒரே மூச்சில்சொல்லி முடித்தாள் மனைவி.

என்னபதில்சொல்வதென்றுதெரியாமல்

கணவன் முழிக்க,

மனைவி சொன்னள்`

கோட்டான் மாதிரி முழிக்காதீங்க'.

Source: Facebook

வெங்காயம் vengayam tamil kavithai

வெங்காயம்

உரித்து பார்த்தால்,
வாழ்க்கையின் ,
அர்த்தம்  நீ !

உணராதவர்களுக்கு
கண்ணின்
எரிச்சல்  நீ !

அசுர வளர்ச்சியில்
அமெரிக்க டாலருக்கு
போட்டி  நீ !

திகட்டாத
பல்சுவை உணவு
கொடுத்தாய் நீ !

தேர்தல் களத்தில் 
எதிர் கட்சிகளின் 
நாகஸ்திரம் நீ !

வெங்காயமே !
வீழாதே எதிரியின் கூடாரத்தில் 
விதைக்காதே வெறுப்பை  !
மக்கள் மனதில் !

shared via

தீபாவளி சிறுவர் கவிதை deepavali kavithai

தீபாவளி சிறுவர் கவிதை

இந்தியத் திருநாட்டின் 
வாண வேடிக்கை திருவிழா!
படபடவென்று
 பட்டாசு வெடித்து 
இனிப்பு பலவற்றை
 நாவில் சுவைத்து 
அரக்கனை அழித்த
 நாளை நினைத்து 
நல்லதை மட்டுமே 
மனதில் இருத்து! 

நல்லவர் நடுவே 
தீயவர் சிலர் 
அந்தக்காலம்! 
தீயவர் நடுவே
நல்லவர் சிலர் 
இந்தக்காலம்! 

சீட்டு மோசடியும் 
கோழி மோசடியும் 
செல்போன் திருட்டும்  
செயின் பறிப்பும்
பஞ்சமே இல்லாமல் 
பரவிக் கிடக்கின்றன! 

பள்ளிக் கூடங்கள் 
தனியாரிடமும் 
மதுக்கூடங்கள் 
அரசாங்கத்திடமும் 
தலைகீழாக 
தவம் செய்கின்றன! 

படிக்க வேண்டிய 
இளம் பட்டாம்பூசசிகள் 
கந்தக குவியலில் 
கிழிந்த காகிதமாய்!

ஆயிரம் இருந்தாலும் 
இந்த நாட்டில்தான்  
நாம் வாழப் போகிறவர்கள்! 
நம்மில் சிலபேர்தான் நாளை 
நாட்டை ஆளப்போகிறவர்கள்!

உண்மையாய் ஒழுக்கமாய்  
நல்லவனாய் வாழுவோம்!
நாளைய பாரதத்தை 
 நேர்மையாய் ஆளுவோம்!

shared via

Wednesday, October 30, 2013

விவாகரத்து vivakarathu tamil kavithai

விவாகரத்து

காதலித்தார்கள்..
கரம் பிடித்தார்கள்...
கவலையின்றி...
கரை சேர்ந்தார்கள்..!

இது இயல்பு வாழ்க்கை...

இருமனம் இணைந்து...
திருமணம் முடிந்து..
கணம் கணம் கடிந்து...
வனம் போல முடிந்தால்...

அது என்ன வாழ்க்கை?

ஈன்ற பிஞ்சுகளின்
ஈர விழிகளுக்கும்...
பார மனதிற்கும்.. 
கோர வாழ்க்கை ஏன்?

பத்து பேர் முன்னிலையில்..
முத்து முத்தாய் சிதறிய 
ரத்து செய்யப்பட்ட உறவு 
செத்து தொலைந்துவிட்ட மகிழ்வு!!

ஒரு நாள் தகப்பனோடு
மறுநாள் தாயோடு..
இன்னொரு நாள் துயரத்தோடு..
ஒவ்வொரு நாளுமே துக்கத்தோடு..!!

தவறிழைத்தது யார்?
தண்டனைப் பெறுவது யார்?
தவமாய் ஈன்றவரோ...
தனியாய் தவிப்பவரோ? 

பந்தாடும் அலைச்சல் ஒரு பக்கம்..
வந்தாடும் உளைச்சல் ஒரு பக்கம்...
இசைப்பாடும் இரைச்சல் ஒரு பக்கம்..
பாடு படும் மனம்தான் எப்பக்கம்????

shared via

Speciality of the number 108 - 108 என்ற எண்ணின் சிறப்பு

Speciality of the number 108 - 108 என்ற எண்ணின் சிறப்பு

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள்.

பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்.

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.

* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.

* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.

* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்

* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.

* சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.

ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண்ணிக்கையில் பல விஷயங்களும் அமைகின்றன.

* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.

* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108

* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.

* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.

* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.

* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.

* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.

* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜபமாலையையே பயன்படுத்துவார்கள்.

* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் "0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்த எண்ணிக்கைகளைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

​தினமலர்

shared via

Monday, October 28, 2013

varutha padatha valbar sangam lyrics-varutha padatha valibar sangam tamil song lyrics ஊற காக்க உண்டான சங்கம்

varutha padatha valbar sangam lyrics-varutha padatha valibar sangam tamil song lyrics  ஊற காக்க உண்டான சங்கம்

Movie Name:Varutha padatha valibar sangam
Song Name:Oora kaakka
Singers:Sivakarthikeyan
Music Director:D.Imman
Lyricist:Yuga bahrathi
Cast:Sivakarthikeyan,Divya
Year of release:2013

Lyrics:-

Sillaavooru dhingukallu
Sinnaalam patti pakkam sollu
Namma silukkuvar patti singam
Sembu kalakkaatha thangam
Adhu vachiruppatho varuthapadaatha valibar sangam

Anne anbukku annai theresa
Arivukku abdul kalaam
Adakkathula nelson madela
Namma bose pandi anne kudutha ainooru rubaai
Anju latchama nenachukittu
Namma alli nagarathu adiya
Konjam adichu thaan kaattuvoma

Oora kaakka undaana sangam
Uyirai kudikka uruvaana sangam
Illa ithu illa
Naanga ellaarum vilaiyaattu pulla

Varuthapadaatha valibar sangam
Ivanga varuthapadatha valibar sangam

Needhi nermai kaakkindra sangam
Nenja nimirthi poraadum sangam
Illai ithu illa
Ithukku mela ennaththa solla

Varuthapadaatha valibar sangam
Ivanga varuthapdatha valibar sangam

Aazham theriyaama kaala vachu
Adiyum sarukkiruvom
Hey ooru naduvula banner vachi
Pattaya kilappiruvom

Pora vazhip povom
Perum pulliya pola than vaazhvom
Kanda edathula vethala poduvom
Kaasu panathukku sandaiya poduvom
Sanda nadakkaiyil kattaya poduvom
Santhadi saakula aattaya poduvom
Naanga

Adukku mozhiyil vasanam pesuvom
Azhagu ponnunna kavitha solluvom
Inainja kaadhala pirikka ennuvom
Engala naangale pugazhnthu thalluvom
Naanga ..
Sema vaalu seiyum settaiku kidayaathu rule-lu
Sontha veettukke adangaatha aalu

Varuthapadatha valibar sangam ingaaru
Ivanga varuthapadatha valbar sangam
Kondruven paathukko

Modhum puliyaaga lanthadippom
Muraicha payanthuruvom
Neram theriyaama thoongiruvom
Neraiya pesiruvom (2)

Veyil adikkuthu mazhai adikkuthu
Alai adikkuthu puyal adikkuthu
Para parakkuthu kuru kurukkuthu
Paruvap ponnunna shock adikkuthu
Yenga ...

Kodi parakkuthu vedi vedikkuthu
Kulunga kulunga kili sirikkuthu
Parai adikkuthu thavul adikkuthu
Mansukkullaara mani adikkuthu
Naanga..
Sema vaalu seiyum settaiku kidaiyaathu rule-lu

Varutha padatha valibar sangam adiye aaththa
Varutha padatha valibar sangam

Inime ellam appadith than

சில்லாவூரு  திண்டுகல்லு
சின்னாளம் பட்டி  பக்கம்  சொல்லு
நம்ம  சிலுக்குவார்  பட்டி  சிங்கம்
செம்பு  கலக்காத தங்கம்
அது  வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அண்ணே  அன்புக்கு  அன்னை தெரசா
அறிவுக்கு  அப்துல் காலம்
அடக்கதுல நெல்சன் மண்டேலா
நம்ம  போஸ்பாண்டி அண்ணே குடுத்த  ஐந்நூறுரூபாய
அஞ்சு  லட்சமா  நினைச்சுகிட்டு
நம்ம  அல்லி நகரத்து  அடிய
கொஞ்சம்  அடிச்சு  தான் காட்டுவோமா

ஊற  காக்க  உண்டான  சங்கம்
உயிரை  குடுக்க  உருவான  சங்கம்
இல்ல  இது  இல்ல
நாங்க  எல்லாரும்  விளையாட்டு  புள்ள

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

நீதி  நேர்மை  காக்கின்ற  சங்கம்
நெஞ்ச  நிமிர்த்தி  போராடும்  சங்கம்
இல்ல  இது  இல்ல
இதுக்கு  மேல என்னத்த  சொல்ல

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

ஆழம்  தெரியாம  கால  வச்சு
அடியும்  சருக்கிருவோம்
ஹேய் ஊரு  நடுவால  பேனர் வச்சி
பட்டய  கிளப்பிருவோம்

போற  வழி  போவோம்
பெரும்  புள்ளிய  போல  தான்  வாழ்வோம்

கண்ட  எடத்துல  வெத்தல போடுவோம்
காசு  பணத்துக்கு  சண்டைய  போடுவோம்
சண்ட  நடக்கையில்  கட்டய போடுவோம்
சந்தடி  சாக்குல  ஆட்டய போடுவோம்
நாங்க..

அடுக்கு  மொழியில்  வசனம்  பேசுவோம்
அழகு  பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணைஞ்ச காதல  பிரிக்க  எண்ணுவோம்
எங்கள  நாங்களே  புகழ்ந்து  தள்ளுவோம்
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம் .. இங்காரு
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்..
கொன்றுவேன் பாத்துக்கோ

மோதும்  புலியாக  லந்தடிபோம்
முரைச்ச  பயன்திருவோம்
நேரம்  தெரியாம  தூங்கிருவோம்
நெறைய  பேசிருவோம் (2)

வெயிலடிக்குது  மழையடிக்குது
அலையடிக்குது  புயலடிக்குது
பற பறக்குது  குறு  குறுக்குது
பருவ  பொண்ணுனா  ஷாக்  அடிக்குது
ஏங்க?

கொடி பறக்குது  வெடி  வெடிக்குது
குலுங்க  குலுங்க  கிளி  சிரிக்குது
பறை  அடிக்குது  தவுல்  அடிக்குது
மனசுக்குள்ளார மணி  அடிக்குது
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்.. அடியே  ஆத்தா
வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

இனிமே  எல்லாம்  அப்டித்தான்..

http://www.youtube.com/watch?v=HuSxftQY43I

shared via

Sunday, October 27, 2013

வாழைப்பழத் தோலில் உள்ள வியக்க வைக்கும் 10 நன்மைகள்!!! Banana top 10 benefits

வாழைப்பழத் தோலில் உள்ள வியக்க வைக்கும் 10 நன்மைகள்!!!

ஒரு படத்தில் நம் செந்தில் வாழைப்பழத்தை கீழே போட்டு விட்டு தோலில் தான் சத்து உள்ளது என சொல்லி தோலை உண்ணுவார். அருகில் உள்ளவர்கள் அவரை பார்த்து சிரிப்பார்கள். நாமும் சிரித்திருப்போம். ஆனால் உண்மையிலேயே வாழைப்பழத் தோலில் வியக்கத்தக்க பல நன்மைகள் அடங்கியுள்ளது. என்ன நண்பர்களே, கேட்பதற்கு புதிராக உள்ளதா? ஆனால் உண்மை அது தான்.

வாழைப்பழம் என்பது நம் நாட்டில் சீரழியும் ஒரு பழவகை. அதனால் தான் என்னவோ, அதன் மகத்துவத்தை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. வாழைப்பழத் தோலை குப்பையில் போடும் முன், இந்த கட்டுரையை படித்து வாழைப்பழத் தோலில் உள்ள நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் அது வியக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் வளமையாக உள்ளது. மேலும் அதில் வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தின் தோல் கருமையடையும் போது, பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

சரி, இப்போது இயற்கையின் இந்த அரிய அன்பளிப்பு உங்களுக்கு அளிக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாமா...

வாழைப்பழத் தோலைக் கொண்டு தினமும் பற்களில் ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். இது பற்களை பளிச்சிட வைக்கும். இதற்கு சிகிச்சை எல்லாம் மேற்கொண்டால், அதற்கான செலவை பற்றி யோசித்துப் பாருங்கள்.
மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும் வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.
வாழைப்பழத் தோலை உண்ணலாம். அதிலும் அதனை கொண்டு அருமையான இந்திய உணவுகளை தயார் செய்யலாம். குறிப்பாக கோழிக்கறியை அதன் மீது வைத்து, அதனை மென்மையாக்கவும் இதை பயன்படுத்தலாம்.
வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.
வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்.
வாழைப்பழத் தோலை உடலில் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக தடவும். வலி போகும் வரை ஒரு 30 நிமிடத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் சேர்த்து காய்கறி எண்ணெயையும் கலந்து கொண்டால், இன்னும் சிறப்பாக செயல்படும்.
சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி, நல்ல முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்.
கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.
ஷூ, லெதர் மற்றும் சில்வர்களில் வாழைப்பழத் தோலை தேய்த்தால், அவைகளை பளபளக்கச் செய்யும்.
வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும். Thatstamil

shared via

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts