Saturday, July 27, 2013

இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார் - உண்மையை சொல்றேன்

1.சஞ்சீவி மலைய அனுமார் மலைய
தூக்கிட்டு போகும்போது பலான
மூலிகை விழுந்த இடம் தான் சேலம்..

2.கள்ளுண்ணாமை போதித்த காந்தியின் படம்
போட்ட நோட்டுக்கள் டாஸ்மாக் கல்லாவில்
நிரம்பி வழிகின்றன.!

3.ரியாலிட்டி ஷோக்களில் கெமிஸ்ட்ரி வந்த
உடனேயே தமிழ் வெளியேற்றப்பட்டுவிட்டது,
மன்னிக்கவும் எலிமினேட் செய்யப்பட்டுவிட
்டது..

4.ஒருவர்
போனை காதில்வைத்து அரைமணிநேரம்
எதுவும் பேசாமல் தலையை ஆட்டிக்கொண்டிரு
ப்பாயின், மனைவியிடம் பேசிக்கொண்டிருக்கிறார்
என்று பொருள் .

5.ஏழை அப்பாக்களை கூனி குறுக
வைப்பதாகவே இருக்கின்றன பல
பண்டிகைகள்.. !!

6.மெசேஜ்
அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டம
மட்டும் தான்..

7.காதலித்து பார்....கழிவறையில்
கவிதை வரும்.....காதலிக்காமல்
இருந்து பார்...அங்கே வர
வேண்டியது நிம்மதியாக வரும்...!!

8.கடைசி தோசை சாப்பிடும்
போது சட்னியை வேண்டும் என்றே அதிகமாக
வைத்து சட்னியை காலி செய்ய
சொல்லி இன்னொரு தோசை வைக்கிறதுதான்
அம்மாவின் பாசம்..

9.இலங்கையில்
எண்ணை கிணறு இருந்து இருந்தால் இன்று ராஜ
பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார்
அமெரிக்காவால் .

10.இலவசத்தை நம்பி ஒட்டு போடும்
மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம்
வருவது என்பது பிச்சைகாரன்
சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல..

11.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குபின்னாடியும்,
அவனிடம் தோற்ற பல ஆண்கள்
கொலை வெறியோடு இருப்பார்கள் ..

12.ஆண்களுக்கு அத்தை பெண்ணை பிடிக்கும்
அளவுக்கு,
பெண்களுக்கு மாமா பையனை பிடிப்பதில்லை..

13.பெண்களுக்கு பொய் சொல்ல தெரியாது.
ஆனால் நான் சொல்வது பொய்யாக இருக்கலாம்..

14. 60
வயதிற்கு மேற்பட்டவர்களை அரசு பதவி மற்றும்
அரசியலில் இருந்து , வீட்டுக்கு அனுப்பும்
வரை இந்தியா உருப்பட வழி இல்லை ..

15.காதலி அருகில் இருந்தால்''Hotel Bill"
"காதலி தூர இருந்தால் "Phone Bill"
காதலியை மிஸ் பண்ணினால் 'Bar Bill'
காதலி எங்க இருந்தாலும் செலவுதான்....!!

16.ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ்
மாற்றவேண்டுமென்றால், பணக்காரனாக
இருக்கவேண்டிய அவசியமில்லை..கை
க்குழந்தையாக இருந்தாலே போதும் !

17. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என
எவரேனும் கேட்டால், நேர்மையாக
இருப்பதே இங்கு சாதனை தான் என சொல்ல
வேண்டியுள்ளது..

18.பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள்
என்பதை ஔவையாரின்
பெயரிலிருந்தே அறியலாம் =How ? Why ? யார் ?

19.பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள்
"அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு..

20.ஸ்பென்சர் பிலாசா ல
1998ரூ பில்லுக்கு 2000ரூபாய் தருகிர நாம்,
பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர தயங்குகிரோம்.

@ களவாணி பய

கருப்பு நிலா - தமிழ் பாடல்


கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
துளித்துளியா கண்ணீர் விழுவது ஏன்
சின்ன மானே மாங்குயிலே
உன் மனசில என்ன குறை
பெத்த ஆத்தா போலிருப்பேன்
இந்த பூமியில் வாழும் வர எட்டு திசை யாவும்
கட்டி அரசாள வந்த ராசா நீ தானே,...

பத்து மாசம் மடியேந்தி
பெத்தெடுத்த மகராசி
பச்சபுள்ள உன்ன விட்டு
போனதென்னு அழுதாயா
மாமன் வந்து என்னை காக்க
நானும் வந்து உன்னை காக்க
நான் விரும்பும் இன்பம் எல்லாம்
நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம்
பூவிழி இமை மூடியே சின்ன பூவே கண்ணுரங்கு

வண்ண வண்ண முகம் காட்டி
வானவில்லின் நிறம் காட்டி
சின்ன சின்ன மழலை பேசி
சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே
சொக்க வெள்ளி மணி போலே
கன்னம் ரண்டும் மின்ன மின்ன
கண்மனியே மடிமேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட
அத கேட்டு ஆடிடும் விளையாடிடும்
அந்த தேரே நீதானே..

காதலில் தற்கொலைகள் ஏன் ?

பாவம் எத்துணை கனவுகளோடு
ஆரம்பம் ஆயிருக்கும் இவர்களது காதல்
முதன் முதலில் காதலை சொல்லும் போது
அவர்களின் மனதில் எதுணை பட்டாம் பூச்சிகள்
பறந்திருக்கும்
அதற்க்கு அளவே இருக்கமுடியாது
எத்துன நண்பர்களை கூப்பிடு மச்சான் என் லவ்

அவள்ட சொல்லிட்டேண்டா அவளும் ஓகே
பண்ணிடாடானு சொல்லி சந்தோஷ
பட்டிருபாங்க
காதலிக்கும் போது செல்லம்(தங்கம் ) உன்கூட
ஆயுரம்
வருடம் வழனும் போல இருக்கு உன்ன
எப்டியெல்லாம்
பாத்துபேன் தெரியுமா சொல்லி சந்தோச
பட்டிருபாங்கா
பையன் சொல்லுவான் முதல் குழந்தை
உன்ன போல ஒரு பொண் குழந்தைதான்
வேணும்னு பொண்ணு சொல்லுவா உன்ன
போல
ஒரு ஆண் குழந்தைதான் வேணும்னு
ஓகே ஓகே நமக்குள்ள சண்ட வேணாம்
இரட்டை குழந்தையே பிறக்கும் போதுமானு
சொல்லி சந்தோசபட்டிருபா
ங்கா இப்படியெல்லாம்
பேசி சந்தோஷ
பட்டுடு நடக்காதுணு தெரிஞ்சதும்
எவளோ அழுதிருபாங்க இதெல்லாம் தாங்கிக
முடியாமதான் இறந்துபோய்டுறாங்க
ஆயுரம் வருடம் வாழணும்னு தொடங்கிய
காதல் ஒரு சில வருடங்களிலே முடிந்து
போகிறதது......

Friday, July 26, 2013

அப்பாக்கள் பலவிதம்..!

இரண்டு நாட்களுக்கு முன் மதியம் புரசைவாக்கத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். அடையார் ஆனந்த பவனுக்கு எதிராக செல்லும் சுந்தரம் தெருவில் ஒரு சிறு கூட்டம். ஒரு சிறுமியின் அழுகுரல். வண்டியை ஓரமா நிறுத்திவிட்டு கிட்டே சென்றேன்.

கூட்டத்துக்கு நடுவே தாடியும்

பிரதமர் சோனியா காந்தி ரூ.33 ரொக்கத்தை வைத்து ஒருநாளை கழிக்கட்டும் பார்க்கலாம் ?

தினமும் ரூ.33 இருந்தால் நகர் புறங்களிலும் , ரூ 27 இருந்தால் கிராமபுரங்களிலும் ஒருவரால் வாழமுடியும் என்று திட்டக்கமிஷன் கூறியுள்ளது. இதையடுத்து ரூ.33ல் ஒருநாள் வாழ்ந்துகாட்டுங்கள் என்று கூறி அந்ததொகையை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான விஜய்கோயல். இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும், கிராமங்களில் தினமும் 27 ரூபாயிலும், நகர் புறங்களில் 33 ரூபாயிலும் வாழமுடியும் என்று திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது.

இதற்கு அரசியல் தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லி பா.ஜ.க தலைவர் விஜய்கோயல் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திட்டக்கமிஷன் துணை தலைவர் மான்டெக்சிங் அலுவாலியா மற்றும் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் ஆகியோருக்கு ரூ.33 பணத்தை மணி ஆர்டர் அனுப்பி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோயல் கூறுகையில், பிரதமர், சோனியா, அலுவாலியா மற்றும் ஷீலாதீட்சித் ஆகியோர் ரூ.33 ரொக்கத்தை வைத்து ஒருநாளை கழிக்கட்டும் பார்க்கலாம் என்றார்

வங்கிகளில் தமிழ் மொழியின் தேவை

தமிழ் - Tamil:

வங்கிகளில் வாழாத #தமிழ் மொழி . #தமிழர்கள் மீட்டெடுப்பார்களா ?
இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் நடுவண் அரசின் ரிசெர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட முடியும். தனியார் வங்கிகளும் நடுவண் ரிசெர்வ் வங்கியின் ஆணைப்படி தான் கேட்டு இயங்க வேண்டும்.

இந்த நடுவண் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கியில் இந்தி மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த விடயமே . ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் #இந்தி மொழியை பயன்பாட்டில் வைக்க உத்திகளை கையாளுகிறார்கள் என்பதை அறிந்தால் தலையே சுற்றிவிடும் . கீழ் உள்ள இணைப்பில் சென்று பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.

http://www.rbi.org.in/Scripts/BS_CircularIndexDisplay.aspx?Id=8205

இந்தி மொழியை இந்தியா முழுவதும் வேர்பரப்ப அவர்கள் சிறப்பு இந்திப் பயிற்சி, இந்திப் பெயர் பலகைகள், இந்தி விளம்பரங்கள், இந்தி துறைகள், இந்தி குமாஸ்தா வேலை வாய்ப்புகள், இந்தி போட்டிகள், இந்தி வகுப்புகள் என நீண்டு கொண்டே போகிறது பட்டியல் . அந்த அளவிற்கு அரசு எல்லா துறைகளிலும் இந்தியை வளர்க பாடுபடுகிறது. (பின்பு இந்தியா தமிழை வளர்க்கவா பாடுபடும் ?). இந்திக்கு கொடுக்கும் உரிமைகள் மற்ற மொழிகளுக்கு இந்தியா கொடுப்பதில்லை. அதுமட்டுமல்ல எல்லா மொழிகளையும் திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது என்றே சொல்லலாம்.

தீமையிலும் ஒரு நன்மை உள்ளது. அதாவது நடுவண் ரிசெர்வ் வங்கியின் ஆணைப்படி எல்லா வங்கிகளும் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் மாநில மொழியை கட்டாயம் அனைத்து அச்சு பொருட்களிலும் பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த ஆணை.

http://www.rbi.org.in/commonman/Upload/English/Notification/PDFs/56LD300611FL.pdf

இதை சோதிக்க அருகில் உள்ள எச்.டி.எப்.சி வங்கிக்கு சென்று பார்வையிட்டேன் . அங்குள்ள பணம் செலுத்தும் படிவங்கள் , வைப்புத் தொகை படிவங்கள், வங்கிக் கணக்கு தொடங்க விண்ணப்பப் படிவங்கள் எதிலும் தமிழ் இல்லை . இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இருந்தது . இது குறித்து வங்கி மேலாளரிடம் புகார் அளித்தேன் . அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார் . ஆனால் அடுத்த வாரம் அவரை சந்திக்கும் போது , எங்கள் வங்கிக்கு அப்படி ஒரு நிபந்தனை இல்லை என்று மேலிடம் சொல்கிறது அதனால் இரு மொழி கொள்கை தான் இங்கு கடை பிடிக்கப்படும் என்று கூறினார். நீங்கள் ரிசெர்வ் வங்கியின் ஆணையை படியுங்கள் சட்டப்படி மூன்று மொழிகளில் இருக்க வேண்டும் என்று கூறி நடுவண் ரிசெர்வ் வங்கியிடம் புகார் அளித்தேன்.

அதே காலத்தில் ஐ.சி.ஐ.சி ஐ வங்கியிலும் புகார் கொடுத்தேன். அவர்கள் புகாரை பெற்றுக் கொண்டு படிவங்கள் அனைத்தும் தமிழிலும் இருக்கும் படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாம் எழுதும் காசோலை தமிழில் எழுதிக் கொடுத்தால் அதை அவர்கள் பெற்றுக் கொண்டு தான் தீர வேண்டும் என்ற விதி இருக்கிறது. அதை அவர்கள் நிர்வாகத்திடம் கூறியபோது , தமிழில் காசோலை எழுதினால் அதை நாங்கள் பெற்றுக் கொள்வோம், பிரச்சனை இல்லை என்றனர்.

தனியார் வங்கிகளில் நிலைமை இப்படி இருக்க அரசின் பொதுத் துறை வங்கிகள் பலவற்றில் தமிழில் யாரும் படிவங்கள் பயன்படுத்துவது இல்லை. பல தானியங்கி காசு இயந்திரங்களில் தமிழ் இல்லை. இந்த நிலையையும் நாம் மாற்ற வேண்டி உள்ளது. தமிழை வாழவைக்க தமிழர்கள் குறைந்த பட்சம் இந்த வங்கிகளுக்கு தலைவலியை கொடுக்க வேண்டும். அதாவது எல்லா படிவங்களிலும் , காசோலை உட்பட தமிழில் மட்டுமே எழுத வேண்டும் .

இவ்வாறு செய்வதால் அங்கு தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவரை மட்டுமே வங்கிகள் வேலைக்கு அமர்த்தும். மேலும் படிவங்கள் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை வங்கிகள் நடைமுறை படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றால் தமிழில் அச்சு வேலைகள் தமிழ் படித்தோருக்கே கிடைக்கும். வங்கியின் எல்லா பயன்பாட்டிலும் தமிழ் மொழி ஊடுருவினால் தமிழ் மொழிக்கென ஒரு துறையை இந்த வங்கிகள் தொடங்க வேண்டிய சூழல் உருவாகும். இதன் மூலம் தமிழும் வாழும் தமிழர்களும் வாழ்வார்கள். தமிழை புறக்கணிக்கும் வங்கிகளுக்கு நாம் இடித்துக் கூறுவோம். தமிழில் தான் காசோலை எழுதுவோம் , பணம் செலுத்துவோம் என்று அழுத்திக் கூறுவோம். அவர்கள் இதை ஏற்பதை தவிர வேறு வழியில்லை.

ஆகவே தமிழர்களே, வங்கிப் பரிவர்த்தனை அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கும் படி நாம் பார்த்துக் கொள்வோம். வங்கிகளில் தமிழ் வாழ்வது என்பது நம் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் அது பயனுள்ளதாக அமையும். இன்றிலிருந்து அதை செய்வோம்.

#வாழ்க தமிழ் வளர்க #தமிழர் நாடு.

5 ரூபாய்க்கு எப்படி சாப்பிட முடியும் ? காங்கிரஸ் கட்சிக்கு பிச்சைக்காரர் கேள்வி

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் தொடர்பான புதிய புள்ளி விவரத்தை சமீபத்தில் திட்டக்கமிஷன் வெளியிட்டது. அதில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 21.9 சதவீதமாக குறைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் தினமும் ரூ.33 செலவு செய்பவர்களும், கிராமப்பகுதிகளில் தினமும் ரூ.28 செலவு செய்பவர்களும் ஏழைகள் அல்ல என்றும் திட்ட கமிஷன் கூறியுள்ளது. இது கடும் விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகி இருக்கிறது.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ்பப்பர் மும்பையில் ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கு கிடைப்பதாக கூறினார். காங்கிரஸ் மேல் சபை எம்.பி. ரஷீத் மசூத், ‘‘டெல்லியில் ரூ.5–க்கு சாப்பாடு கிடைக்கிறது’’ என்றார்.
காங்கிரஸ் தலைவர்களின் இந்த பதிலும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. காங்கிரஸ் தொடர்ந்து தவறான தகவலை கூறி மக்களை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

பூக்காரக் கிழவி

பெரிய அங்காடியிலும், 

பெரிய திரையரக்கிலும்,

பெரிய துணிக்கடையிலும், 
பெரிய நகைக்கடையிலும் 
பேசாமல் பெருந்தொகை நீட்டும் பெருந்தகைகள்....

..
...


பேரம் பேசுவதென்னவோ 

பிளாட்பார பூக்காரக் கிழவியிடம் தான், 
பத்து ரூபாயில் 
ரெண்டு ரூபாய் குறைக்க சொல்லி....!

Thursday, July 25, 2013

அடி ராக்கம்மா கையத் தட்டு

பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாமின்போது, தமிழ் முதல் தாளில் கேட்கப்படும் மனப்பாட செய்யுளில் பல்சுவைப் பாடல்கள் (அப்படித்தான் நினைவு) என்ற தலைப்பில் கடைசியாய் சில செய்யுள்கள் இருக்கும்.


அவற்றைத் தவிர மற்ற பகுதிகளின் செய்யுள்களை கடம் அடித்தாகிவிட்டது. தேர்வின் முதல் நாள் திடீரென பயம், எங்கே அவற்றிலிருந்து ஏதேனும் பாடலை கேட்டுவிட்டால் என்று, அந்தப் பகுதியில் மொத்தம் நான்கு பாடல்கள் மனப்பாடச் செய்யுளாக இருந்தன. எல்லாமே கடினமான சொற்களாகவும்,அவசரத்திற்கு மனதில் பதிய வைக்க

உங்கள் மனைவி மீது அவ்வளவு பிரியமா ?

ஒரு கணவனும் மனைவியும் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். 

அப்படி செல்லும் போது ஜெருசலேமில் எதிர்பாராத விதமாக திடீரென மனைவி இறந்து விடுகிறார்.

அங்குள்ள போலிஸ்காரர் சொல்கிறார்,

“இங்கேயே புதைக்க வேண்டுமென்றால் 1000 ரூபாய் தான் ஆகும். உங்கள் ஊருக்கு அனுப்பி அங்கு நீங்கள் புதைக்க வேண்டுமென்றால் 50000 ரூபாய் ஆகும்”

அதற்கு கணவன் சொல்கிறார்,

“இங்கு புதைக்க வேண்டாம். 50000 ரூபாய் தருகிறேன். ஊருக்கு அனுப்பி விடுங்கள்”

போலிஸ்காரருக்கு ஆச்சரியம்,

“உங்களுக்கு உங்கள் மனைவி மீது அவ்வளவு பிரியமா” என்று கேட்கிறார்.

அதற்கு அந்த கணவர் சொன்னார்,

“2000 வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒருவரை புதைத்தார்கள். அவர் திரும்ப வந்து விட்டார். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை”

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts