Monday, November 4, 2013

காதலித்து ஓடிப்போவதை தவிர்க்க குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை போதியுங்கள்: பெற்றோர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை Impart moral education to curb elopment Court to parents

காதலித்து ஓடிப்போவதை தவிர்க்க குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை போதியுங்கள்: பெற்றோர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை Impart moral education to curb elopment Court to parents

புதுடெல்லி, நவ. 4-

பக்குவமடையாத வயதில் உருவாகும் காதல் காரணமாக, இளம் ஜோடிகள் ஊரைவிட்டு ஓடிப்போவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர்கள் தங்களின் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதும், சில சமயங்களில் பிரச்சினையில் சிக்கி கொலை செய்யப்படுவதும் உண்டு. நாட்டில் நடைபெறும் கவுரவக் கொலைகள் பெரும்பாலும் காதல் திருமணங்களால்தான் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, தங்கள் குழந்தைகளை பொறுப்புள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் வசித்த பீகாரை சேர்ந்த ஒரு பெண், தனது 13 வயது மகளை காணவில்லை என்று கடந்த 2010-ம் ஆண்டு போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் பீகாரில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த சிறுமி, தனக்கு 18 வயது ஆகிவிட்டது என்றும் எனது விருப்பப்படியே நான் காதலனுடன் ஓடினேன் என்று கூறினார். மேலும் வெவ்வேறு மதத்தை சேர்ந்த எங்களை பிரிக்க பார்ப்பதாகவும் அந்த சிறுமி பெற்றோர்கள் மீது குறை கூறினாள்.

ஆனால், சிறுமியை மீட்டபோது அந்த சிறுமி கர்ப்பமடைந்து இருந்ததால், அவளது தாயார், தனது மகளை கடத்தி கற்பழித்து விட்டார் என்று போலீசில் காதலன் மீது புகார் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காதலனை போலீசார், நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி விரேந்தர் பட் கூறியதாவது:-

இன்றைய காலகட்டத்தில், இங்கே, மொபைல் போன்கள், இன்டர்நெட், கேபிள் டிவி என பல்வேறு வசதிகளை நமது வீடுகளில் பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில், பெற்றோர்கள் தான், தனது பிள்ளைகளுக்கு சமுதாய ஒழுக்க நெறிமுறைகளையும் நீதிக் கல்வியையும் கற்பிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

ஏனெனில், அப்போதுதான் அவர்கள் அந்த நெறிமுறைகளின் படி நல்லது, கெட்டது மற்றும் கவர்ச்சி எது என்பது பற்றி தெரிந்துகொண்டு நடந்துகொள்ள ஏதுவாக இருப்பார்கள். கவர்ச்சியாக தெரிவது எல்லாம் எப்பொழுதும் நல்லதாக இருக்கவில்லை என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். போதிக்க வேண்டும்.

நல்லது தரக்கூடிய விசயங்களுக்கு மதிப்பளித்து அதன்படி நடப்பது நல்லது. தவறான கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதால், காதலனோடு ஓடிப்போவது, ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது போன்ற மோசமான நிலையை குறைக்க முடியாது.

பாலிய பருவ சிறுவர்களின் நடவடிக்கையை கண்காணிப்பது, அவர்களிடத்தில் நல்லொழுக்க நெறிமுறை கல்வியை போதிப்பது நல்ல விளைவுகளை கொடுக்கும். எனவே எந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாத காதலனை சில முடிவுகளின் பேரில் விடுவிக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.  

...

shared via

சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை seeman request must protect Sivaji Ganesan statue

சிவாஜி கணேசன் சிலையை பாதுகாக்க வேண்டும்: சீமான் கோரிக்கை seeman request must protect Sivaji Ganesan statue

சென்னை, நவ. 4–

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நடிகர் திலகம் சிவாஜி கணசேன் தமிழ் கலையுலகின் அரிய அடையாளம். நடிப்பின் வழிநின்று தமிழ்ச் சமூகத்தை நல்வழிப்படுத்திய மாபெரும் கலைஞன். சிவாஜி கணேசனை ஒரு நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் தமிழ்ப் பேரினத்தின் பண்பாட்டு அடையாளம். தமிழ்க் கலை இலக்கிய வடிவத்தின் பெருமைமிகு குறியீடு. தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜிகணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாத படி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

Sunday, November 3, 2013

eduda antha sooriya melam lyrics-pudhiya mannargal tamil song lyrics எடுடா அந்த சூரிய மேளம்

eduda antha sooriya melam lyrics-pudhiya mannargal tamil song lyrics எடுடா அந்த சூரிய மேளம்

Movie Name:Pudhiya mannanrgal
Song Name:Eduda antha sooriya
Singers:Minmini,S.P.Balasubramanium
Music Director:A.R.Rahman
Lyricist:Pazhani bharathi

Lyrics:-

Eduda antha soooriya melam
Adida nalla vaaliba thaalam
Ezhunthu vittom imayam pole
Uyarnthu nirkum sigaram elaam namaku keezhe

Eduda antha sooriya melam
Adida nalla vaaliba thaalam
Ezhunthu vittom imayam pole
Uyarnthu nirkum sigaram ellaam namakku keezhe
Aanai ittaal vinnum kooda
Vanthu nirka vendum namathu kaalin keezhe (2)

Charanam - 1

Megathai kaiyil pizhinthu paarkkalaam
Paalaiyin thaagam theerthu vaikkalaam
Nilavukkum meesai varainthu paarkkalaam
Sorgathin jannal thiranthu paarkalaam
Bhoomiyaith tholil sumathu sellalaam
Poovukkul puyalaip pootti vaikkalaam
Vaanathil perai ezhuthi vaikkalaam
Sooriyan thottu mutham ketkalaam
Vaazhkai inge nadhigal pole
Vaazhvatharku vaa vaa inge neechal adi

Eduda antha sooriya melam ....

Charanam - 2

Kanneerai inith thalli vaikkalaam
Punnagaip poovai alli vaikkalaam
Paravaigal kootti virunthu vaikkalaam
Rekkaigal kettu paranthu paarkkalaam

Devathai thesam sendru varalaam
Vannangal thoovi kudhoogalikkalaam
Imalaith thulla ani vagukkalaam
Kavithai solli kai kulukkalaam
Innum ennainbamundu
Kandeduthu vaa vaa inge anubavikkalaam

Eduda andha sooriya melam ....

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லம் நமக்கு கீழே

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்
எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே
ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே (2)

சரணம் - 1

மேகத்தை கையில் பிழிந்து பார்க்கலாம்
பாலையின் தாகம் தீர்த்து வைக்கலாம்
நிலவுக்கும் மீசை வரைந்து பார்க்கலாம்
சொர்க்கத்தின் ஜன்னல் திறந்து பார்க்கலாம்

பூமியைத் தோளில் சுமந்து செல்லலாம்
பூவுக்குள் புயலைப் பூட்டி வைக்கலாம்
வானத்தில் பேரை எழுதி வைக்கலாம்
சூரியன் தொட்டு முத்தம் கேட்கலாம்
வாழ்க்கை இங்கே நதிகள் போலே
வாழ்வதற்கு வா வா இங்கே நீச்சல் அடி

எடுடா அந்த சூரிய மேளம் ....

சரணம் - 2

கண்ணீரை இனி தள்ளி வைக்கலாம்
புன்னகைப் பூவை அள்ளி வைக்கலாம்
பறவைகள் கூட்டி விருந்து வைக்கலாம்
றெக்கைகள் கேட்டு பறந்து பார்க்கலாம்

தேவதை தேசம் சென்று வரலாம்
வண்ணங்கள் தூவி குதூகலிக்கலாம்
இளமைத் துள்ள அணிவகுக்கலாம்
கவிதை சொல்லி கை குலுக்கலாம்
இன்னும் என்ன இன்பமுண்டு
கண்டெடுத்து வா வா இங்கே அனுபவிக்கலாம்

எடுடா அந்த சூரிய மேளம் ....

http://www.youtube.com/watch?v=snYjax4yCJw

shared via

Labels

Ajith (1) Beauty Tips (1) Computer (5) kavithai (1) Politics (1) Sivaji Ganesan (1) Tamil (11) Tamil Blogs (11) Tamil News (68) Tamil Topics (26) அப்பா (2) அமலபால் (1) அம்மா (1) அலெக்சாண்டர் (1) அறிவியல் (1) ஆண்கள் (2) ஆண்மை (1) இந்திய வரலாறு (1) இந்தியா (1) இயற்கை (3) இலங்கை (1) இஸ்லாம் (1) உணவு (1) உண்மை (3) உலகம் (1) எச்சரிக்கை (2) ஒலிம்பிக் (1) கட்டுரை (2) கண்டக்டர் (1) கவிதை (1) காங்கிரஸ் (3) காதல் (1) கேள்வி (2) கொள்ளை (1) சண்டை (1) சிறுகதை (3) சினிமா (1) சினிமா செய்திகள் (1) சினிமா விமர்சனம் (1) சுபாஷ் சந்திரபோஸ் (1) சென்னை (1) சோனியா காந்தி (1) தகவல் (3) தஞ்சை (1) தத்துவம் (1) தமிழன் (2) தமிழன் வரலாறு (1) தமிழ் (16) தமிழ் பாடல் (1) தற்கொலை (1) திருப்பூர் (1) திரைவிமர்சனம் (1) நகைச்சுவை (2) நடிகர் (1) நண்பன் (1) நேதாஜி (2) பத்தாம் வகுப்பு (1) பழ வகைகள் (1) பற்கள் (1) பஸ் (1) பாடல் வரிகள் (1) பிச்சைக்காரர் (1) பெண்கள் (1) பெற்றோர்கள் (1) பேஸ்புக் (1) பொருளாதாரம் (1) மருத்துவம் (1) மனைவி (1) மன்மோகன் (1) மின்னஞ்சல் (1) வங்கிகள் (1) வரலாறு (1) வாழ்த்துக்கள் (1) விவேகானந்தர் (1) விளையாட்டு (1) விஜய் (1) வெற்றி (1) வைகோ (1)

Popular Posts